Pages

Tuesday, November 23, 2010

இறந்து கிடந்த பெண் யானை

பவானிசாகர் வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை

பவானிசாகர், நவ.23-
http://dailythanthi.com/article.asp?NewsID=608993&disdate=11/23/2010&advt=2

பவானிசாகர் வனப்பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது.

பெண் யானை சாவு

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹடா செல்லும் வழியில் பவானிசாகர் வன ரேஞ்சர் ராஜுமோகன் வனத்துறையினருடன் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது தெங்குமரஹடாவில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுக்குள் பெண் யானை ஒன்று செத்துக்கிடந்தது.

இதுகுறித்து உடனே மாவட்ட வன அதிகாரி (சத்தியமங்கலம்) சதீசுக்கு தகவல் கொடுத்தார்கள். அவருடைய உத்தரவின் பேரில் கால்நடை மருத்துவர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

நோய் தாக்கியது

வனப்பகுதியில் செத்துக்கிடந்த யானையை கால்நடை மருத்துவர் மனோகரன் பிரேத பரிசோதனை செய்தார். அந்த யானைக்கு 36 வயது இருக்கும் என்றும், குடற்புழு நோய் தாக்கி இறந்ததாகவும் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தெரிவித்தார். பின்னர் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.