Pages

Monday, February 28, 2011

45 stray dogs killed and buried in Tambaram village.


TNN, Feb 26, 2011, 12.58am IST
http://timesofindia.indiatimes.com/city/chennai/45-stray-dogs-killed-and-buried-in-Tambaram-village/articleshow/7577075.cms

CHENNAI: A large number of stray dogs were culled and buried at Perumbakkam village near Tambaram on Friday. Animal activists said around 45 dogs were suspected to be culled after being administered lethal injections and buried at Jaya Nagar in Perumbakkam. 

Dawn Williams, residential general manager of Blue Cross, Chennai, told The Times Of India that he went to the spot on Friday after receiving calls about the incident from residents. "Initially they were forthcoming and helpful but later backtracked when the police arrived'' he said. 

He said the dogs were buried in a mass grave and fresh garbage thrown over it. "The carcass was decomposed and we suspect at least 45 dogs to have been culled and buried there'' Williams said. 

Residents had noticed suspicious activity late on Thursday night and in the early hours on Friday and one of them saw the carcass and informed Blue Cross. 

"After receiving information we went there on Thursday evening and since there was no proper lighting we returned. However, again on Friday morning, we went to the spot and found carcass of dogs," Williams added. 

Members of Blue Cross then decided to approach the police for help and registered a complaint at Pallikaranai police station. A team of policemen accompanied the Blue Cross members and in their presence, the carcasses were exhumed. Due to a large presence of stray dogs, staff of many local bodies in the suburbs choose to kill them. "It is unfortunate that such a large number of dogs were killed. Such practice simply reflects poor awareness on animal welfare," said S Kumar, a resident of Perumbakkam. 

Police officials said the cause of deaths is being investigated. Last year, around 75 dogs were killed in Mowlivakkam near Poonamallee. The practice of catching dogs, culling and burying them is a violation of Supreme Court guidelines and punishable under Prevention of Cruelty to Animals Act and also under Indian Penal Code, Williams said. 

Sunday, February 27, 2011

Several stray dogs killed, buried


Sunday, Feb 27, 2011
http://www.hindu.com/2011/02/27/stories/2011022752890600.htm



TAMBARAM: Several stray dogs were killed and buried in a residential locality in Perumbakkam Village Panchayat near Tambaram. Members of animal welfare organisations, who were shocked at the incident, said at least 40 dogs were killed, reportedly through lethal injections and buried in Jaya Nagar.

Dawn Williams, Residential General Manager of Blue Cross, Chennai, said residents of Jaya Nagar, Perumbakkam, had informed their city office about the burial of the dogs on a piece of vacant plot over the past couple of days.

While the residents were not sure about the number of animals buried, Mr. Williams suspected at least 40 dogs to have been buried.

Complaint lodged

“We reached the spot in the morning today. The carcasses of a few dogs were partly visible. On digging the spot, we noticed the carcasses of three dogs,” he said. As they wanted to involve the police, Blue Cross members also lodged a formal complaint at Pallikaranai police station.

A team of policemen accompanied the Blue Cross members and in their presence, the carcasses were exhumed.

The exact cause of the deaths and who was behind the killing could be established only after detailed investigations, police said. It was only in October last year that nearly 60 community dogs were killed in Mowlivakkam Village Panchayat, a western suburb near Poonamallee. The practice of catching community dogs, killing and burying them was a clear violation of Supreme Court guidelines and punishable under Prevention of Cruelty to Animals Act and also under Indian Penal Code.

Saturday, February 19, 2011

30 cows and bulls found dead


Sunday, Feb 20, 2011
http://www.hindu.com/2011/02/20/stories/2011022064190500.htm



MADURAI: At least 30 cows and bulls died after drinking water from a tank suspected to have poisonous substance near Madurai Airport on Saturday night.

The cattle head, part of a herd of over 1,000 animals reared by a group of people, were seen lying dead with swollen stomach at many spots of a sprawling grazing land along Ring Road. The animals started dying after 5.30 p.m. when they started walking back to the open ground stable.

“The animals profusely salivated and started running helter skelter. They developed fits, fell down and died,” B. Kannan, one of the herders, said. He is one of the many persons herding the ‘kidai maadu' (cows and bulls herded for their dung to be used as natural manure) belonging to different people from Virudhunagar and Madurai districts. The cattle have been grazing on the area for nearly four months. “It all started after they consumed water from the nearby Sengulam tank,” Mr. Kannan said. The number of animals dead was not known immediately as they had fallen dead in darkness at different places, he added.

The panic-stricken herders delayed informing people outside about the tragedy. “We were informed only by the police and arrived here now (after 9.45 p.m.),” said an Assistant Veterinary Surgeon, M.S. Saravanan, said. Pointing to the quick successions in which the animals succumbed, Dr. Saravanan said it should be because of contaminated water. Collector, C. Kamaraj, supervised treatment given to the animals by veterinary doctors, led by Joint Director, Haja Mohideen.

ஐந்தறிவுக்குள் இருக்கும் விசுவாசம்


மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் நாய் : ஐந்தறிவுக்குள் இருக்கும் விசுவாசம்

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2011,22:03 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=191282



சேலம் : "நன்றி மறப்பது மனிதர் குணம்; நன்றியை நினைப்பது நாய்களின் குணம்' என, உண்மையை உலகத்துக்கு எடுத்துக் கூறும் வகையில், எஜமானின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, வீட்டுக்கு அழைத்து வரும் அபூர்வ பணியை மேற்கொள்கிறது, சேலத்தைச் சேர்ந்த மாது என்பவரின் பாசக்கார, "மொட்டுவால்' நாய். ஐந்தறிவுக்குள் இருக்கும் உண்மை, விசுவாசம், அங்கிருப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

"கோழியை பாரு; காலையில் விழிக்கும். குருவியை பாரு; சோம்பலை பழிக்கும். காக்கையை பாரு; கூடிப் பிழைக்கும். நம்மையும் பாரு; நாடே சிரிக்கும்' என, மனிதர்களின் மன நிலையைப் பற்றி அப்போதே கவிஞர் ஒருவர், வரிகளால் தாக்கியிருக்கிறார். பறவை, விலங்குகள் எப்போதும் மனிதனுக்கு உதவியாக தான் இருக்கும். நாய்களை வீட்டு பாதுகாப்புக்கு வைத்துக் கொள்வோர் ஏராளம். பாதுகாப்புக்கு மட்டுமின்றி, நன்றியையும் அவர்களுக்கு எடுத்துரைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, திரும்ப வீட்டுக்கு அழைத்து வரும் வரை, எஜமானுக்கு விசுவாசமாக இருந்து வருகிறது நாய் ஒன்று. சேலம் பேர்லண்ட்ஸ் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது. பால் உற்பத்தி தொழில் செய்து, பிழைப்பு நடத்தி வருகிறார். ஐந்து கறவை மாடுகள்,10 ஆடுகள், ஆறு கோழிகள், மூன்று கன்றுகள், இரண்டு நாய்களையும் வளர்த்து வருகிறார். மனைவி, மகன்களுக்கு அடுத்தபடியாக, அவருடைய உலகம், இந்த வாயில்லா ஜீவன்கள் தான்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், குட்டியாக கொண்டு வந்த நாயை, பாசத்துடன் இன்றளவும் வளர்த்து வருகிறார். அவற்றுக்கு வழங்கும் உணவை, சுத்தமானதாகவும், சுகாதாரமான முறையிலும் வைத்து, ஆரோக்கியத்தை பேணுகிறார். தினமும், மாலை 4 மணிக்கு, தான் வளர்க்கும் ஐந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவார்.

சேலம் மாநகரின் முக்கியப் பகுதிகளில், வலம் வரும் மாடுகளை யாராவது பிடிக்க நினைத்தாலோ, தொட முயன்றாலோ, அவைகளுக்கு பாதுகாப்பாக, "மொட்டுவால்' நாய் பாய்ந்து வருகிறது. மாலையில் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்பும். இந்த காட்சியை தினமும் பேர்லண்ட்ஸ் பகுதியில் காணமுடியும்.

ஒரு முறை மாநகராட்சி நாய் பிடிப்பவர்கள் வலைவிரிக்க, அவர்களிடமிருந்து தப்பி வந்து எஜமானின் காலடியில் படுத்துக் கொண்டது. எஜமான் விசுவாசத்தையும், மாடுகள் மீது நாய் கொண்ட அக்கறையையும் பார்த்து, காட்டூர் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மாது குடும்பத்தினர் கூறியதாவது: காலம், காலமாக பால் உற்பத்தி தொழில் செய்து தான் பிழைத்து வருகிறோம். விவரம் தெரிந்தது முதல் கறவை மாடுகளுடன் தான் வாழ்க்கை கழிகிறது. ஐந்து மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவை தான் சோறு போடுகின்றன. ஐந்து வருஷத்துக்கு முன், நாய் குட்டி ஒன்றை எடுத்து வந்து வளர்த்தோம்.

அதற்கு, "மொட்டுவாலன்' என, பெயரிட்டு, நாங்கள் எல்லாரும் பாசமாக பாதுகாத்து வருகிறோம். மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதற்கு, நான், என் பையன் கூட அதிகமாக சென்றதில்லை. தினசரி மாடுகளை அவிழ்த்து விட்டால், அந்த மாடுகளுக்கு முன்னாடியே சென்று, வீடு திரும்பும் வரை இந்த நாய் பார்த்து கொள்கிறது. அதை பிரிந்து நாங்கள் வெளியூர் சென்றாலும், எங்கள் நினைப்பெல்லாம் அந்த மொட்டுவாலன் மீது தான் இருக்கும். இவ்வாறு மாது குடும்பத்தினர் கூறினர்.

நாய்க்குட்டிகளை வயிற்றில் சுமந்து ஈன்ற விசித்திர நரி

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2011,00:15 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190232



புதுச்சேரி: நாய்க்குட்டிகளை வயிற்றில் சுமந்து ஈன்ற விசித்திர நரி பிடிபட்டது. புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அடுத்த ஜி.என். பாளையத்தில் வீடுகளில் இருந்த கோழிகள் நள்ளிரவில் அடிக்கடி திருடு போனது. இரவு நேரங்களில் நரி ஒன்று ஊருக்குள் உலா வருவது கிராம மக்களுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் ஜி.என். பாளையத்தில் முகாமிட்டு நரியை தேடினர். அப்போது ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் படிக்கட்டு கீழ்பகுதியில் நரி அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. நரி இல்லாத சமயத்தில் வனத்துறை ஊழியர்கள் அங்குபோய் பார்த்தனர். அப்போது மூன்று நாய்க்குட்டிகளை நரி ஈன்று பாலூட்டி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனையடுத்து குட்டிகளுடன் நரியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

நாய்க்குட்டிகளைப் பொறியில் பிடித்து போட்டு நரிக்காக கடந்த 3 நாட்களாக காத்திருந்தனர். ஆனால் சமார்த்திசாலியான நரியிடம் இந்தத் திட்டம் பலிக்கவில்லை. கூண்டுக்குள் சிக்காமல் நரி அவ்வப்போது வந்து புத்தசாலித்தனமாக குட்டிகளைக் காப்பாற்ற போராடியது. இதனையடுத்து வனத்துறை ஊழியர்கள் தங்களது திட்டத்தை மாற்றினர். வீட்டு அறைக்குள் குட்டிகளை மாற்றி வைத்து நரிக்கு தெரியாமல் பொறி வைத்தனர். இந்த முறை கூண்டுக்குள் வசமாக நரி சிக்கி கொண்டது. பிடிபட்ட நரியும் அதன் குட்டிகளையும் வனத்துறை அலுவலகத்திற்கு ஊழியர்கள் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். நரி ஈன்ற நாய்க்குட்டிகளை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

வனத்துறை டாக்டர் குமரன் கூறுகையில் "பிடிபட்ட பெண் நரி, நாட்டு ஆண் நாயுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததால் 3 பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. நாய், ஓநாய், நரி, குள்ள நரி அனைத்தும் கேனிடா என்னும் முதுகெலும்புள்ள குடும்பத்தைச் சேர்ந்வை. இவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அந்தந்த இனத்தில் மட்டுமே இனப்பெருக்க காலத்தில் உறவு கொள்ளும். சில நேரங்களில் ஒரு இனத்துடன் மற்றொரு இனம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கும் போது இது போல் அரிதாக நடந்து விடுகிறது. நரி ஈன்ற குட்டிகளுக்கு இன்னும் கண் திறக்கவில்லை. கண் திறக்க 5 நாட்கள் பிடிக்கும். முழுமையாக வளர்ந்தால் தான் எந்த விலங்கினுடைய பண்பு வெளிப்படுகிறது என்பது தெரியவரும். நரியை வளர்த்தவர்கள் அதனைப் பராமரிக்க முடியாமல் வெளியேவிட்டுவிட்டதால் நாயுடன் பழகி குட்டிகளை ஈன்றுள்ளது' என்றார்.

நவீன ஆட்டிறைச்சிக்கூடம்


பெரம்பூர் நவீன ஆட்டிறைச்சிக்கூடம் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் திறந்து வைக்கிறார்

சென்னை, பிப்.20-

பெரம்பூர் நவீன ஆட்டிறைச்சிக்கூடம் கட்டும் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்து கூறுகையில், 47 கோடி ரூபாய் செலவில் டி.பி.ஒ.டி. என்கிற தனியார் வடிவமைப்பும், கட்டுமானம், செயல்பாடு மற்றும் ஒப்படைத்தல் முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெறுகின்றன. இதுவரை 20 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன. சுமார் ஒன்பதரை ஏக்கர் நிலப்பரப்பில், மூன்று ஏக்கரில் இந்த நவீன ஆட்டிறைச்சிக்கூடம் கட்டப்படுகிறது. நவீன ஆட்டிறைச்சிக்கூடத்தை இந்த மாத இறுதிக்குள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.

இந்த நவீன ஆட்டிறைச்சிக்கூடத்தில் ஒரு மணி நேரத்தில் சுமார் 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டப்பட்டு, இறைச்சிகள் பதப்படுத்தப்படும். இது ஆசியாவிலேயே மிகுந்த தொழில்நுட்பத்துடனும், சுகாதார மேம்பாட்டுடனும் கட்டப்படுகிறது. ஆட்டிறைச்சிக்கூடத்தை சுற்றி மீதியுள்ள இடங்களில் அழகிய புல்வெளிகள் கொண்ட பூங்காவும், நடைப்பாதை அமைக்கும் பணிகளும் இன்னும் 4 மாதத்தில் முடிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் வி.எஸ்.பாபு, சேகர்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர்.

சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலம் விடப்படும் கமிஷனர் பால்சாமி எச்சரிக்கை


சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலம் விடப்படும்
கமிஷனர் பால்சாமி எச்சரிக்கை

திருச்சி, பிப்.19-
http://dailythanthi.com/article.asp?NewsID=628350&disdate=2/19/2011&advt=2

திருச்சியில் சாலைகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் ஆடு-மாடுகளை பிடித்து பொது ஏலம் விடப்படும் என மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலை மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்று சுற்றி திரியும் ஆடு, மாடு மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக போலீஸ் துறை, தீயணைப்பு துறை, வனத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் பால்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் கேட்பாரற்று சுற்றிதிரியும் ஆடு, மாடு மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுப்பதும் குறித்தும், சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடிய பன்றி களை அப்புறப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

சட்டப்பூர்வ நடவடிக்கை

அதன்படி திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் தெருக்கள் சந்தைகள் மற்றும் பஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடைïறு விளைவித்து சற்றி திரியும் கால்நடைகளான ஆடுகள், மாடுகள், நாய்கள், குதிரைகள் மற்றும் கழுதைகளை போலீசார், தீயணைப்பு துறை, வனத்துறை பணியாளர்கள் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு மேற்படி கால்நடைகளை பிடித்து அன்றைய தினமே பொது ஏலம் விடப்படுவதோடு சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நீதிமன்ற மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

எனவே ஒருவார காலத்திற்குள் பொது இடங்களில் சுற்றி திரியும் பன்றிகள், ஆடுகள், மாடுகள், நாய்கள், குதிரைகள் மற்றும் கால்நடைகளை அவரர்கள் தங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்துக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. தவறினால் கால்நடைகளை பொது ஏலம் விடப்படும் என கமிஷனர் பால்சாமி தெரிவித்தார்.

அதிகாரிகள்

கூட்டத்தில் நகர் நல அலுவலர் டாக்டர் கே.சி.சேரன், போலீஸ் உதவி கமிஷனர் (போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு) ரவீந்தரன், தீயணைப்பு துறை அலுவலர் பிச்சைமணி, வனத்துறை அலுவலக ரேஞ்சர் சார்லஸ் ஸ்டீபன், உதவி ஆணையர் (பணிகள்) தயாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Wednesday, February 16, 2011

21 dogs found dead in Akola


Published: Tuesday, Feb 15, 2011, 21:18 IST 
http://www.dnaindia.com/mumbai/report_21-dogs-found-dead-in-akola_1508432

As many as 21 dogs were found poisoned to death in the old city over the last few days, according to police.

While some were stray dogs, some were pets and a dog lover Suresh Raut filed complaint with the police after he came across the dying dogs.

Akola municipal corporation has also taken cognisance of the incident and sent the relevant samples to Government Medical Laboratory in Nagpur to determine the cause behind the death of so many dogs.

Sources said it could be the work of some people who were not able to bear with the dog menace in the area and might have poisoned the dogs.

Wednesday, February 2, 2011


பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் 35 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி ஆர்.டி.ஓ. கூட்டத்தில் முடிவு

பழனி, பிப்.2-
http://dailythanthi.com/article.asp?NewsID=624519&disdate=2/2/2011&advt=2

பழனி அருகே நெய்க்கா ரப்பட்டியில் 35 நிபந்த னைகளுடன் ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பெரியகலை யம்புத்தூரில் வருகிற 6-2-2011 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப் படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பழனி ஆர். டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பழனி துணை போலீஸ் சூப் பிரண்டு பாண்டியராஜன், தாசில்தார் குணசேகரன், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பாபுஜி, அரசு மருத்துவமனை டாக்டர் பூங்கொடி, சுகாதாரத் துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கந்தசாமி, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாக்கண்ணு, பிராணிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், உறுப்பினர்கள் லோக ராஜன், பழனிச்சாமி, நெய்க் காரப்பட்டி பேரூராட்சி அலுவ லர் முருகேசன், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொடனர்.

35 நிபந்தனைகள்

கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட் டுதல் நெறிமுறைகள் படித்து காட்டப்பட்டது. அங்கீகரிக் கப்பட்ட 37 காளைகள் மற் றும் காளைகளை அடக்க அனு மதிக்கப்பட்ட 9 நபர்களை வைத்து உச்சநீதிமன்ற வழி காட்டுதல்களின்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்து வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிபந்தனைகள் விவரம் வரு மாறு;-

பெரிய வகை விழா அமைப் பாளர்கள் ரூ.5 லட்சமும், சிறிய வகை விழா அமைப்பாளர்கள் ரூ.2 லட்சமும் முன் பணம் செலு த்த வேண்டும், இதன் மூலம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கல ந்து கொள்ளும் நபர்களுக்கு ஏற்படும் விபத்துகளுக்கோ, காயங்களுக்கோ இழப்பீட் டுத் தொகை வழங்கப் படும். பங்கேற்கும் பயிற்றுவிக்கப்பட்ட காளைகள் பதிவு செய் யப்பட்டவையாக இருக்க வேண்டும். பிராணிகள் நல அமைப்பு சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கு நிகழ்ச்சி குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

மத்திய பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்து தகுதியானது என சான்றளிக் கப்படும் காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். காளைகளின் பிறப்பு உறுப்பு களில் மிளகாய் பொடி தூவு தல், வேறு சக்தி பிறவற்றைக் கொண்டு பூச்சு செய்து வெறுப் பூட்டவோ, வெறிïட்டவோ கூடாது. ஒரு காளையினை 4 நபர்களுக்கு மேல் அடக்க முய ற்சி செய்யக்கூடாது.

காளைகளை விரட்டி அட க்க முயலும் வீரர்களுக்கு போதுமான இட வசதி இருக் கும் வகையில் களம் இருக்க வேண்டும். அனைத்து காளை களையும் ஒரே சமயத்தில் விடக்கூடாது. ஒவ்வொரு காளைக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்க வேண்டும். போட் டியின் போது காளைகள் காயம்பட்டால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் ஏற்படுத்த வேண்டும். பங்கேற்கும் வீரர்கள் காயம்பட்டால் சிகிச்சை அளிக்க அருகிலேயே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

மரக்கவசம்

மாடுகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டு இருந்தால் கூர்மையான பகுதிக்கு மரக்கவசம் அமைக்க வேண்டும். விளை யாட்டுத் திடலுக்கும், பார் வையாளர்கள் அமரும் இடத்திற்கும் இடையே போதுமான இடைவெளி இருத்தல் வேண்டும். விளை யாட்டில் பங்கேற்கும் நபர் போதைப்பொருள், ஊக்க மருந்து உட்கொண்டிருக்க கூடாது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் வருவாய்த்துறையினரிடம் பதிவு செய்து அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஜல்லிக் கட்டு முழுவதையும் வீடியோ எடுக்க வேண்டும். மிருக வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறாமல் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். பங்கேற்க வரும் காளைகளுக்கு போதிய உணவளித்து தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 35 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூட்ட முடிவின் அடிப்படையில் பழனி ஆர்.டி.ஓ. மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளி த்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த முறையான அனுமதி பெறப்பட்டு நிகழ்ச்சி நடத்தப் படும்.

நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம்


திருச்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம் அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி, பிப்.2-
http://dailythanthi.com/article.asp?NewsID=624590&disdate=2/2/2011&advt=2

திருச்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

ஆய்வுக்கூட வாகனம்

திருச்சி பாலக்கரையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமை தாங்கினார்.

விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்து 283 மதிப்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில் மேயர் சுஜாதா, அன்பில் பெரியசாமி எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் பால்சாமி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் இப்ராகீம், உதவி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை பாதுகாப்பு முகாம்

நடமாடும் கால்நடை மருத்துவ ஆய்வுக்கூட வாகனம் திருச்சியை தலைமையிடமாக கொண்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. கிராமங்களுக்கு சென்று அதே இடத்தில் கால்நடைகளிலிருந்து ரத்தம், சாணம், சிறுநீர், சளி போன்ற மாதிரிகளை சேகரித்து உடனடியாக பரிசோதனை செய்து நோய்களை பற்றி ஆய்வு செய்யவும், நோய் கிளர்ச்சி ஏற்படும் சமயங்களில் உடனடியாக கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும்.

அவசர காலங்களில் கிராமங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட தேவையான ஊநீர் உடனடியாக எடுத்து செல்லவும், கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று பால் மாதிரிகளை சோதனை செய்யவும், தரம், தன்மைகளை பரிசோதனை செய்யவும், கிராமங்களில் நடைபெறும் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம்களுக்கு சென்று மாதிரி சேகரித்தல் மற்றும் பரிசோதனை செய்யவும் பணி மேற்கொள்ளவும் பயன்படுத்தப்
படும்.

நோய் தன்மை கண்டறிய...

மேலும் பறவை காய்ச்சல் நோய் தொடர்பான ஆய்வு செய்வதற்கு கரைவெட்டி பறவைகள் சரணாலயம் மற்றும் தனியார் கோழிப்பண்ணைகளில் மாதிரி சேகரித்து பரிசோதனை செய்யவும், கால்நடைகளுக்கு செலுத்தப்படும். தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு திறன் கண்டறியவும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும். இந்த வாகனம் செல்லும் இடம் குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்படும்.

அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட புள்ளிமான், வெள்ளை மயில்கள் பறிமுதல்


பெருந்துறை அருகே, அனுமதி இன்றி தோட்டத்தில் வளர்க்கப்பட்ட புள்ளிமான், வெள்ளை மயில்கள் பறிமுதல் விவசாயி கைது

ஈரோடு, பிப். 2-
http://dailythanthi.com/article.asp?NewsID=624603&disdate=2/2/2011&advt=2

பெருந்துறை அருகே அனுமதி இன்றி தோட்டத்தில் வளர்க்கப்பட்ட மான், வெள்ளை மயில், வெளிநாட்டு புறா மற்றும் கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவைகளை வளர்த்த விவசாயியும் கைது செய்யப்பட்டார்.

தோட்டத்தில் மான்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள புலவர்பாளையத்தில் பழனிசாமி என்ற விவசாயி அவருடைய தோட்டத்தில் அனுமதி இன்றி புள்ளிமான் ஒன்றை வளர்த்து வருவதாக ஈரோடு வன பாதுகாவலர் அருணுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் வனத்துறை ஊழியர்கள் ரவிந்திரநாத், மதிவாணன், தேவராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட விவசாயியின் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தார்கள்.

புள்ளிமான், வெள்ளை நிற மயில்கள்

அப்போது அங்கு 3 வயது உள்ள பெண் புள்ளிமான், 2 வெள்ளை நிற மயில்கள், ஆஸ்திரேலியா நாட்டு மஞ்சள் நிற கிளி, வெள்ளை நிற புறா ஆகியவை வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வன ஊழியர்கள், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட புள்ளிமான், வெள்ளை நிற மயில்கள், வெளிநாட்டு புறா மற்றும் கிளிகளை வளர்க்க வனத்துறையில் எந்த விதமான அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது.

மான்-வெளிநாட்டு பறவைகள் பறிமுதல்

எனவே வனத்துறை ஊழியர்கள் புள்ளிமான், வெள்ளை நிற மயில்கள் இரண்டு, வெளிநாட்டு கிளிகள் 4, வெள்ளை நிற புறா ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள். இதை வளர்த்து வந்த விவசாயி பழனிசாமியையும் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட விவசாயி பழனிசாமி பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து ஈரோடு வனபாதுகாவலர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

1,250 யானைகள்

ஈரோடு மாவட்டம் அதிக வனப்பகுதியை கொண்டது. இங்கு 1,250 யானைகள், 18 முதல் 50 புலிகள், 5 வகையான மான்கள், அரிய வகை விலங்குகள் உள்ளன.

வனவிலங்குகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால், அதற்கு வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும்.

பெருந்துறை புலவர்பாளையத்தில் விவசாயி பழனிசாமி வனத்துறையின் அனுமதி இன்றி வீட்டில் புள்ளிமான், வெள்ளைநிற மயில், வெளிநாட்டு புறா மற்றும் கிளிகளை வளர்த்து வந்தார். எனவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

வனவிலங்குகளை அனுமதி இன்றி வளர்த்தால், அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். விவசாயியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்படும்.

இவ்வாறு ஈரோடு வன பாதுகாவலர் அருண் கூறினார்.