Pages

Thursday, November 25, 2010

கிணற்றில் விழுந்த 4 நாய்கள்

சண்டை போட்டுக்கொண்டு கிணற்றில் விழுந்த 4 நாய்கள் தீயணைக்கும் படையினர் மீட்டனர்

சென்னை, நவ.26-
http://dailythanthi.com/article.asp?NewsID=609706&disdate=11/26/2010&advt=2

சென்னை மேத்தா நகர், ஆபீசர்ஸ் காலனி அருகே ஒரு பெண் நாயை விரட்டிச்சென்ற 3 ஆண் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக்கொண்டன. சண்டையின் உச்ச கட்டத்தில், அருகில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் பெண் நாய் விழுந்துவிட்டது.

மற்ற நாய்களும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் விழுந்தன. தண்ணீரில் நீந்தியபடி கிணற்றுக்கு உள்ளேயும் நாய்களுக்கு இடையே சண்டை நீடித்தது. சிறிது நேரத்தில் அந்த நாய்கள் சோர்ந்து போய் உயிருக்கு போராடியபடி தத்தளித்தன.

உடனே பொதுமக்கள் இதுபற்றி தீயணைக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைக்கும் படையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி உயிருக்கு போராடிய நாய்களை வலையை போட்டு மீட்டனர்.