Pages

Sunday, May 20, 2012

தொல்லை தீருமா?


http://www.dailythanthi.com/article.asp?NewsID=731732&disdate=5/20/2012
20 May, 2012

ஞாயிறு கட்டுரை : தொல்லை தீருமா?

நாய்...

`நன்றி' என்ற மூன்றெழுத்து வார்த்தையின் நடமாடும் உதாரணம்.

எஜமான விசுவாசத்தை பற்றி குறிப்பிடும் போது, ``நாயாக இருப்பேன்'' என்று சொல்வார்கள்.

அந்த அளவுக்கு நன்றியும், விசுவாசமும் உள்ள பிராணி நாய். மனிதர்களோடு எளிதில் ஐக்கியமாகிவிடும் பிராணி இது. இதனால்தான் வளர்ப்பு பிராணிகளில் நாய் முதல் இடத்தை வகிக்கிறது. நாய் வீட்டை காக்கும். கொஞ்சம் பழக்கப்படுத்தி விட்டால் எஜமானர் சொல்லும் கட்டளைகளை ஏற்று சின்ன சின்ன வேலைகளை கூட செய்யும். நாய் வளர்த்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அது நல்ல விளையாட்டு தோழனாகவும் இருக்கும்.

மோப்ப சக்தியின் மூலம் எதையும் அடையாளம் கண்டுபிடிப்பதில் நாய்கள் கில்லாடி. அதனால்தான் குற்றவாளிகளை பற்றி துப்பறிவதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்துகிறார்கள்.

இப்படியாக நாய் பலவகைகளிலும் நமக்கு நெருக்கமாகவும் உபகாரமாகவும் இருந்து வருகிறது.

இதனால்தான் செல்லப் பிராணிகள் வளர்ப்பில் நாய்களுக்கு மக்கள் முதல் இடம் அளிக்கிறார்கள். நாய்க்கு அப்புறம்தான் பூனை, கிளி, அணில் எல்லாம்...

சிலவகை நாய்களை பார்த்தாலே கை, கால் உதறல் எடுக்கும். அந்த அளவுக்கு வாட்டசாட்டமாக பயில்வான் போல் இருக்கும். அப்படிப்பட்ட நாய்கள் உள்ள வீட்டுப்பக்கம் திருடர்கள் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள்.

இன்னும் சில நாய்கள் இருக்கின்றன.. பஞ்சு மிட்டாய் சைசுக்கு `புசுபுசு' என்று பொம்மை மாதிரி இருக்கும். அந்த நாய் வீட்டை பாதுகாக்க உதவாது; நாம்தான் அதை பாதுகாக்க வேண்டும்.

தனக்கு ஆபத்து கருதினாலோ அல்லது யாரையாவது விரோதி என்று கருதினாலோ அவர்கள் மீது பாய்ந்து கடித்து குதற நாய்கள் தயங்குவது இல்லை. சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் `ரொம்ப ராசி'. தெருவில் கல்லைக் கண்டால், உடனே நாயைத்தான் தேடுவார்கள். இதனால் நாய்களும், அறிமுகம் இல்லாத சிறுவர்களை பார்த்தால், ``எதற்கு வம்பு?'' என்று பம்மியபடியே அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடும்.

சில நாய்களை சீண்டிப்பார்த்தால் சற்று முறைக்கும். எதிர்த்து போராட முடியாது என்று தெரிந்தால் வாலை சுருட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் இடத்தை காலி செய்து விடும்.

மனிதர்களை சார்ந்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதால், நாய்கள் மனிதர்களை நன்றாக அறிந்தே வைத்து இருக்கின்றன. அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப நடந்து கொண்டு வயிற்றை கழுவி வருகின்றன.

மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருக்கும் பிராணியான நாய் சில சமயங்களில் அவர்களுக்கு பாரமாகவும், தொல்லை தருவதாகவும் அமைந்து விடுகிறது. சில சமயங்களில் விரோதியாக கூட அமைந்து விடுகிறது.

நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மரணத்தில் முடியலாம்.

வீட்டில் வளர்க்கும் நாய்கள் மனிதர்களை கடிப்பது அரிது. ஆனால் தெரு நாய்கள் அப்படி அல்ல. தீனி போடுபவர்களை பார்த்து வாலை ஆட்டும். மற்றவர்களை பார்த்து முறைக்கும். அறிமுகம் இல்லாதவர்களை தெருநாய்கள் கடிக்க தயங்குவது இல்லை. சில நாய்கள் ஆவேசம் தீரும் வரை விரட்டி விரட்டி கடிக்கும். சும்மா போனால் கூட திரும்பி பார்த்து குரைக்கும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை காரணம் இல்லாமல் துரத்திச் சென்று குரைக்கும். கடிக்கவும் முயற்சிக்கும்.

இதனால் நாய்கள் என்றாலே சிலருக்கு வெறுப்பு, சிம்மசொப்பனம். வீட்டின் அருகே வந்தாலே அவற்றை துரத்தி அடிப்பார்கள்.

சென்னையிலும் மற்றும் சில நகரங்களிலும் சமீப காலமாக இதுபோன்ற தெருநாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து உள்ளது. தெருக்களில் சகட்டுமேனிக்கு தெருநாய்கள் அலைகின்றன. இதனால் குழந்தைகளை கடித்து விடுமோ? என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். பஸ், ரெயில் நிலையங்களிலும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இரவில் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேம்பாலத்திலும், நடைமேடைகளிலும் நாய்களின் ராஜ்ஜியம்தான். சர்வ சாதாரணமாக அங்கும் இங்குமாக ஓடியபடி போவோர் வருவோரையெல்லாம் பயமுறுத்துகின்றன.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் நாய் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்போதெல்லாம் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டனர். தெருக்களில் சுற்றித் திரியும் வெறி நாய்களை அவ்வப்போது பிடித்து சென்று அப்புறப்படுத்திவிடுவார்கள்.

அப்போது, வீடுகளில் நாய் வளர்க்க விரும்புகிறவர்கள், மாநகராட்சியிடம் தனியாக அனுமதி வாங்க வேண்டும். அதற்கான வரியை பெற்றுக் கொண்டு மாநகராட்சியினர் வழங்கும் வில்லைகளை (டோக்கன்) நாய்களுடைய கழுத்தில் கட்டி தொங்க விட வேண்டும். இல்லையெனில், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளர்கள், அனுமதி வில்லை கட்டப்படாத வீட்டு நாய்களையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துக் கொண்டு போய் குடும்பக் கட்டுப்பாடும் செய்து விடுவது வழக்கம். தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இதுதான் சிறந்த வழியாக கருதப்படுகிறது. இப்படி செய்வதால் நாய்கள் துன்புறுத்தப்படுவதோ, அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோ கிடையாது.

சில சமயங்களில் விஷ ஊசி போட்டு நாய்களை கொன்று புதைத்த சம்பவங்களும் நடைபெற்றன. அப்படி செய்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விஷ ஊசிகளில் இருந்து நாய்கள் தப்பின.

ஆனால் இப்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால், அவற்றின் மீது மக்கள் கடும் வெறுப்பாக இருக்கிறார்கள்.

வீட்டு நாய்கள் தெருநாய்களாக மாறும் அவலநிலை அதிகரித்து உள்ளது. பலர், ``நானும் நாய்க்குட்டி வளர்க்கிறேன்'' என்ற பெயரில் நாய்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அப்புறம் பிடிக்காமல் தெருக்களில் விட்டு விடுகின்றனர். அந்த நாய்கள் குட்டி போட்டு பல மடங்கு இனப்பெருக்கம் செய்து விடுகின்றன. முறையான பராமரிப்பு இல்லாததால், தெருவில் அலையும் நாய்கள் கிருமி பிடித்து சொறிநாய்களாகவும், வெறி நாய்களாக வும் மாறி விடுகின்றன.

எவ்வளவுதான் செல்லமாக வளர்த்து வந்தாலும், தங்களுடைய வீட்டில் உள்ள நாய்களுக்கு சிறு பிரச்சினை என்றால், சிலர் அவற்றை கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கொண்டு போய், விட்டு விடுகின்றனர். வெகு நாட்கள் வீட்டுச் சூழ்நிலையிலேயே வளர்ந்துவிட்டு, திடீரென தனிமையில் தள்ளப்பட்டதால், அந்த நாய்கள் தங்களுடைய வசிப்பிடம் எது என்பது தெரியாமலேயே அங்கும் இங்குமாக தெருக்களில் சுற்றித் திரிகின்றன. குப்பைக் கூளங்களில் கிடக்கும் உணவுகளை சாப்பிட்டு தங்களுடைய பசியை போக்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. வெளியில் உள்ள சூழ்நிலையில் வசிப்பதும் அந்த நாய்களுக்கு சிரமமானதாக மாறி விடுகிறது. நான்கு சுவர்களுக்குள் பாதுகாப்பாக வளர்ந்த அந்த நாய்களுக்கு வீட்டின் உரிமையாளர்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் போவோர் வருவோரையெல்லாம் பார்த்து குரைக்க ஆரம்பித்து விடுகின்றன. வெறி கொண்ட சில நாய்கள், பொதுமக்களை கடிக்கவும் பாய்கின்றன.

வேப்பேரி, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், போரூர், வில்லிவாக்கம், பல்லாவரம், வடபழனி உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இரவு நேரங்களில் நாய்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வெளியில் தனியாக செல்ல பெண்களும் குழந்தைகளும் பயப்படுகிறார்கள். நாய்கள் விடும் ஊளை சத்தத்தால், நிம்மதியாக தூங்கவும் முடிவதில்லை என்று புலம்புகிறார்கள்.

மேலும் சென்னை நகர தெருக்களில் சிற்றுண்டி விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளுக்கு பஞ்சம் இல்லை. வயிற்றை நிரப்ப ஏதாவது மிச்சம் மீதி கிடைக்காதா? என்று தெருநாய்கள் அந்த கடைகளை சுற்றி வருவதை சாதாரணமாக பார்க்கலாம். மேலும் ஓட்டல்கள் மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் உள்ள கழிவுகளை அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் வீசிவிடுகிறார்கள். அவற்றை தேடியும் நாய்கள் அங்கு உலவுகின்றன. உணவு போட்டியில் சில சமயங்களில் அவை தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் உண்டு. அந்த சமயத்தில் யாராவது அந்த இடத்தில் சிக்கிக் கொண்டால் அவற்றின் கடியில் இருந்து தப்புவது சிரமம்.

தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியதால், சமீபத்தில் சென்னை அம்பத்தூரில் சிறுவன் ஒருவன் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மனதில் தெருநாய்களை பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தெரு நாய்களை ஒழிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இதனால் விழித்துக் கொண்ட மாநகராட்சி ஊழியர்கள், சில நாட்களுக்கு முன்பு சுமார் 25 தெரு நாய்களை பிடித்து கொன்று புதைத்து விட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெரு நாய்களை கொன்ற 3 மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் செல்லப் பிராணிகள் மீது அன்பு செலுத்துபவர்களுடைய எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், தொல்லை கொடுக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சென்னை நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.

வெறிநாய்களுக்கு கருணை காட்டி வரும், புளூகிராஸ் போன்ற விலங்குகள் நல ஆர்வலர்களை பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். வெறிநாய்களை கொன்றால் எதிர்க்கும் இவர்கள், அந்த நாய்களை பிடித்துக் கொண்டுபோய் தங்களுடைய வீடுகளில் வைத்து வளர்க்க வேண்டியதுதானே என்று கேள்வி கேட்கின்றனர்.

"புளூகிராஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர், தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கறிச் சோறும், பிஸ்கெட்டும் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், அந்த நாய்கள் தெருக்களை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றி திரிகின்றன. அவர்களுக்கு நாய்கள் மீது இரக்கம் இருந்தால், வீட்டுக்கு கொண்டு சென்று சோறு போட்டு வளர்க்கட்டும். தெருக்களில் போட்டு, அங்கேயே திரிய விட வேண்டாம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தெரு நாய்களுக்கு ஆதரவு ஒருபுறம், எதிர்ப்பு ஒருபுறம் என்று இருக்கும் நிலையில், மாநகராட்சி நடுநிலையோடு செயல்பட்டு இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண்பதோடு, நாய் தொல்லையில் இருந்து சென்னைவாசிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

***

நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

சென்னை மாநகராட்சி பகுதியில், தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

வீடுகளில் நாய்களை வளர்ப்போர், முறையாக தடுப்பூசி போட்டு அதை வெளியில் விடாமல் பாதுகாத்து வருகின்றனர். ஆனால், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சரியான பராமரிப்பு இல்லாததால், அவை கிருமி தொற்று ஏற்பட்டு வெறி நாய்களாகி விடுகின்றன.

அந்த மாதிரியான நாய்கள் கடித்தால், `ரேபிஸ்' என்ற நோய் ஏற்படுகிறது. எனவே, நாய் கடித்து விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில் நாய்க்கடி விஷத்தால் தலைவலி போன்றவை உண்டாகி மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

சென்னை நகரில் தினமும் 75-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதாகவும், அம்பத்தூர் சிறுவனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 4 பேர் நாய்க்கடிக்கு பலியாகி இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் 21 பேரும், அதற்கு முந்தைய ஆண்டில் 12 பேரும், 2009-ம் ஆண்டில் 13 பேரும் நாய்க்கடிக்கு பலியாகி உள்ளனர்.

ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கென்று தனியாக 6 வாகனங்கள் வைத்திருப்பதாகவும், நாய்கள் தொல்லை குறித்து பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர்.

***
நாய் வளர்க்க லைசென்சு

வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என்றால் பல நாடுகளில் லைசென்சு வாங்க வேண்டும்.

மும்பை நகரில் கூட அந்த கட்டுப்பாடு உள்ளது. மும்பை மாநகராட்சி சட்டத்தின் 191-ஏ பிரிவின்படி, 6 மாதத்திற்கு மேற்பட்ட வயது கொண்ட நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், ரூ.100 செலுத்தி உரிமம் வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அந்த நாய் உயிருடன் இருக்கும் வரை ஒவ்வொரு வருடமும் ரூ.100 செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

எப்படியெனில், ஒருவர் 7 வயதான நாய் ஒன்றை வைத்திருக்கிறார் என்றால், முதல் தடவை அவர் ரூ.700 செலுத்தி உரிமம் பெற வேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 செலுத்தி அந்த உரிமத்தை புதுப்பித்து வர வேண்டும்.

உரிமம் வாங்குவதற்கு நாய்களின் அடையாள புகைப்படங்களையும், கொண்டு செல்ல வேண்டும்.

Wednesday, May 16, 2012

கடல்வளம் காக்க நண்டு குஞ்சுகளை சேகரித்து கடலில் விடும் மீனவர்


பதிவு செய்த நாள் : மே 16,2012,00:04 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=468056

மண்டபம்: மீன்வளத்தை அழித்து வரும் சில மீனவர்கள் மத்தியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர் கோரிமுகமது, கடல் வளத்தை காக்க நண்டு குஞ்சுகளை கடலில் விடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், "ஒமேகா மெரைன்' மையம் என்ற பெயரில் கோரிமுகமது என்ற மீனவர் நண்டு, ஆக்டோபஸ் குஞ்சுகளை வளர்த்து கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீனவர்கள் பிடிக்கும் உயிர் நண்டுகளில் கருமுட்டையுடன் இருக்கும் நண்டுகளை வாங்கி குஞ்சுகளை பொரிக்க வைத்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குஞ்சுகளை, மீன்வளத்துறையினர் மூலம் நேற்று கடலில் விட்டார்.

இவர் கூறியதாவது: கடல் வளம் அழிந்து வருகிறது. குறிப்பாக நண்டுகள் போதிய அளவு பிடிபடுவதில்லை. இதனால் கருமுட்டையுடன் இருக்கும் நண்டுகளை வாங்கி தொட்டிகளில் விட்டு குஞ்சு பொரிக்க வைக்கிறேன். இவற்றை சேகரித்து கடலில் விட்டு வருகிறேன். ஒரு நண்டு 5 லட்சம் வீதம், ஆண்டிற்கு 150 டன் குஞ்சுகளை இடும். 48 மணி நேரம் ஆன பின் அவற்றை கடலில் விட்டால், ஆறு மாதங்களில் நன்றாக வளர்ந்து விடும், என்றார்.a

Tuesday, May 8, 2012

Stray dogs poisoned to death in Chennai




May 8, 2012 By C.S. Kotteswaran 
http://www.deccanchronicle.com/channels/nation/south/stray-dogs-poisoned-death-chennai-567

More than three dozen dogs have been poisoned to death in suburban Katuppakam on Monday.

As many as 29 carcasses were exhumed for investigation till Monday night, following an outcry from the public, as well as animal activists and members of the Blue Cross of India who lodged a police complaint seeking a probe into the issue.“This is not the first time such a inhumane act is happening.

The local bodies and vested interests continue to violate animal welfare norms and dogs have been killed using lethal injections,” said Dawn Williams, general manager, Blue Cross.

“The local body had itself indulged in the gruesome act and the irony is that even pet animals are not spared,” William said.

“Blue Cross has filed a case at the Poonamallee police station and two arrests have been made. Four more people are suspected behind the massive killing and the local panchayt supervisor has initiated the culling drive against the voiceless creatures,” William alleged.

“It has become routine for miscreants to kill stray dogs. As many as 70 stray dogs have been reportedly killed in the same manner in the area during the last few days.

This is the sixth incident of mass killing of stray dogs in the last one year,” said Sathya Radhakrishnan, honorary joint secretary, Blue Cross of India.As many as 14 police cases have been lodged against offenders for mass killing of dogs.

Of this, 10 cases have seen progress and four arrests have been made.

“Still a lot has to be done in this regard and the local bodies should be pulled up to ensure that barbaric acts do not recur,” he said.

“The failure of the local bodies to carry out animal birth control programmes has resulted in prolific breeding of dogs and it is high time government authorities woke up and handled the stray dog menace and the gruesome killing of canines,” said a government veterinary officer.

100 dogs killed, stealthily buried in village



http://www.thehindu.com/news/cities/chennai/article3394902.ece
KATTUPAKKAM (TIRUVALLUR), May 8, 2012

Residents had complained to panchayat about dog menace, but did not expect the animals to be killed

In an act of shocking brutality, over 100 dogs were culled and their bodies buried near a pond in this village, nearly 20 km from Chennai, over the last three days. The poisoning of the dogs, according to residents, was carried out at the orders of the Panchayat. Nearly 25 carcasses of dogs that were culled on Monday were recovered by the Blue Cross of India and brought to the Tamil Nadu Veterinary and Animal Sciences University in Vepery.

While villagers claim that nearly 200 dogs were killed, Blue Cross puts the number of the animals poisoned at around 100. Dogs from the areas of Sendurpuram, Vinayaganagar and Amman Nagar were killed and brought to nearby D.R.R Nagar, where they were buried near a neglected pond.

“On Saturday and Sunday, three men and a woman came in a tractor loaded with over a hundred bodies of dogs and buried them here. This happened at noon when most people were at work,” said a resident. “They told us it was as per panchayat instructions. Since the tractor bore the panchayat sticker, we did not interfere. They assured us the pit had been dug really deep so there would be no smell.”

The act came to light when the same tractor arrived at the same place, this time with 24 carcasses, on Monday morning and one of the residents informed Blue Cross. “When we rushed there, they had already injected the dogs with cyanide and some dogs were gasping for breath. We couldn't save them though we brought all the bodies to TANUVAS,” said Dawn Williams, General Manager, Blue Cross of India. Mr Williams also exhumed another carcass, buried much earlier, and brought it to TANUVAS for a post-mortem examination.

A complaint was lodged and Poonamallee police registered an FIR against six people, two of whom — Elangovan, supervisor of sweepers in Poonamallee panchayat and Kalainesan, driver of the tractor — have been arrested. The others, mostly people hired to catch the dogs with iron hooks and inject them with cyanide, ran away as soon as residents and Blue Cross workers raised an alarm.

“The panchayat president has been out of the city for the past three days and the workers took the action without consulting him. They did this only because the residents had complained of the dog menace,” said T. Mahesh, advocate for the accused party. Every family here owns dogs and most don't know how to take care of them. They are not sterilised and they bite us, he added.

Residents acknowledge the dog menace exists in the area. The slaughter houses and garbage in the area have increased the number of dogs in the last few months, they said.

“Many of us here are night shift workers in companies and it very difficult, to walk along or cycle past this stretch to get home at nights, because the dogs attack us or chase us. We had complained to the panchayat and the officials said they would take care of it,” said another resident. “But we never wanted them to be killed and dumped like this,” he added.

Some residents said they were told the injections would only drug the dogs and they would be dropped off on the outskirts. "Only when we saw the tractor lowering the bodies into the pit, did we realise they had lied to us. They had not even spared puppies,” said a student.

Police officials in Poonamallee said that investigations were on. “We have sent the cyanide bottles for examination to know how the panchayat workers procured them,” said Shankar, the investigating officer.

Some residents also say the culling here is not a new thing in the area and happens once in every few months. “But this is the first time they killed even dogs that were being taken care of by various families,” said Geetha, a resident.

“We did not visit our native village because our dog was to give birth. But a woman came today and injected my dog when she was sleeping near the gate. Before, we knew what was happening, the dog had died. They put the carcass on the tractor,” said Janaki, a resident.

“There are ways to deal with dogs,” said Mr. Williams said. "We urge residents to never kill dogs because that creates a vacuum and encourages dogs from other localities to come in. These new unfamiliar dogs often turn into nuisance."

விஷ ஊசி போட்டு 25 தெரு நாய்கள் படுகொலை: ஊராட்சி ஊழியர்கள் இருவர் கைது



பதிவு செய்த நாள் : மே 07,2012,22:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=463103

பூந்தமல்லி: தெரு நாய்களை ஊராட்சி ஊழியர்கள் பிடித்து விஷ ஊசி போட்டுக் கொலை செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இதே ஊராட்சியில் கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போரூரை அடுத்துள்ளது காட்டுப்பாக்கம் ஊராட்சி. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு தெருநாய்கள் அதிகம். இது குறித்து அடிக்கடி புகார் எழவே ஊராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து விஷ ஊசி போட்டு கொலை செய்து வந்தனர்.

25 தெருநாய்கள் கொலை: காட்டுப்பாக்கம், அம்மன் நகரில் தெரு நாய்களைப் பிடித்து, அவற்றை விஷ ஊசி போட்டு, கொலை செய்வதாக புளு கிராஸ் அமைப்புக்கு நேற்று தகவல் கிடைத்தது. அந்த அமைப்பின் பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது 25 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது.

ஒரு லிட்டர் விஷம் பறிமுதல்: சில நாய்களைப் பிடிக்க, ஊராட்சி ஊழியர்கள் நான்கு பேர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்களை புளு கிராஸ் அமைப்பினர் வளைத்து பிடித்தனர். இதில், இருவர் தப்பி ஓடினர். சுகாதார கண்காணிப்பாளர் இளங்கோ, குப்பை அள்ளும் டிராக்டர் ஓட்டுனர் கலைநேசன் ஆகியோரை பிடித்த புளூகிராஸ் அமைப்பினர், அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் "சைனைடு' விஷம், ஆறு ஊசி, நாய்களைப் பிடிக்க வைத்திருந்த இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இருவர் கைது: பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், பிடிபட்ட இருவரும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அழகு விசாரணை நடத்தினார். கலைநேசன், இளங்கோ மீது இந்திய தண்டனை சட்டம் 428, 470 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தார்.

புளு கிராஸ் பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் கூறியதாவது: காட்டுப்பாக்கம் ஊராட்சியில் தொடர்ந்து தெரு நாய்களைக் கொலை செய்துள்ளனர். நேற்று முன்தினம் தான், முதல் முறையாகத் தகவல் கிடைத்தது. நேற்று காலை உறுதியான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று நாய்களை கொலை செய்த ஊழியர்களை பிடித்தோம். மொத்தம் 25 நாய்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

100 நாய்கள் கொலை: வீட்டில் வளர்த்து வந்த நாய்களையும் ஊழியர்கள் பிடித்து கொலை செய்துள்ளனர். கடந்த சில வாரமாக இந்த ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொலை செய்யப்பட்டுள்ளன. அவற்றை அப்பகுதியில் உள்ள ஏரியில் புதைத்துள்ளனர். நாய்கள் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டு, அதில் ஒரு நாயின் உடலை மட்டும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி அனுப்பி வைத்துள்ளோம்.

தகவல் தெரிவிக்கலாம்: மற்ற நாய்களின் உடல்களை உடனடியாக வெளியே எடுக்க ஊராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளோம். இது சுற்றுச்சூழலுக்கு எதிரான காரியம். நாய்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க கு.க., அறுவை சிகிச்சை மட்டுமே அதற்கு செய்ய வேண்டும். கொலை செய்வது தண்டைக்குரிய குற்றம். வேறு எந்த பகுதியிலானது தெருநாய்களை கொலை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் புளு கிராஸ் அமைப்பிற்கு 22354959 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஜான் வில்லியம்ஸ் கூறினார்.

ஊராட்சி நிர்வாகம் மறுப்பு: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது: தெருநாய்களை பிடிக்கவோ, கொலை செய்யவோ ஊராட்சி மன்றமோ, ஒன்றிய நிர்வாகமோ உத்தரவு தரவில்லை. குப்பை அள்ளச் சென்ற ஊழியர்களிடம், பொதுமக்கள் நாய்த் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறவே, அவர்களாக நாய்களைப் பிடித்துக் கொன்றுள்ளனர். ஏற்கெனவே 100 நாய்கள் கொலை செய்யப்பட்டு, புதைத்ததாகக் கூறப்படும் இடத்தை ஜே.சி.பி., மூலம் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தான் அந்த நாய்களைக் கொலை செய்துள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Friday, May 4, 2012


கோவிலுக்கு மாவிளக்கு எடுத்த "நன்றியுள்ள ஜீவன்' : பம்பை முழங்க பவனி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=461610
பதிவு செய்த நாள் : மே 05,2012,00:05 IST

காரிமங்கலம்: காரிமங்கலத்தில், விபத்தில் கால் முறிந்த நாயை காப்பாற்ற, அதன் உரிமையாளர் கோவிலுக்கு வேண்டி கொண்டதை தொடர்ந்து, குணமடைந்த நாய் மாவிளக்கு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கீழ் தும்பலஅள்ளியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர், கால்நடைகள் வளர்த்து வருகிறது. மாடுகளில் பால் கறந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூட்டுறவு சங்க பால் விற்பனை நிலையத்துக்கு கொண்டு செல்வார்.கடந்த சில ஆண்டுக்கு முன் தங்கவேல் பால் ஊற்றி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, தெருவில் சுற்றிய சிறிய நாய் குட்டி அவரை பின் தொடர்ந்து வந்தது. அவர், அந்த நாய் குட்டியை வீட்டுக்கு தூக்கிச் சென்று, "மணி' எனப்பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.தினம் தங்கவேல் காலையும், மாலையும் சைக்கிளில் பால் கொண்டு செல்லும் போது, உடன் மணியும் சைக்கிள் பின்னால் சென்று வந்தது. ஒரு முறை தங்கவேலுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படவே, நாயின் வாயில் சிறிய கேனில் பாலை கொடுத்து அனுப்பி வைத்தனர். நாயும், கூட்டுறவு சங்கத்துக்கு செல்ல அங்குள்ளவர்கள் இதை புரிந்து கொண்டு பாலை வாங்கி கொண்டு காலி கேனை திரும்ப கொடுத்து அனுப்பினர். அதன் பின், மாட்டு வண்டி போல் சிறிய வண்டியை தயார் செய்து, அதில், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு கேனில் பால் ஊற்றி, மணியை வண்டியில் பூட்டி தினம் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். தினமும் மணியே பாலை எடுத்து சென்று காலி கேனுடன் வீடு திரும்பி விடும்.

ஓராண்டுக்கு முன் வீட்டின் முன் நின்ற போது, அந்த வழியாக வந்த பால் வேன், செல்லப்பிராணி மீது மோதியது. இதில், பின்னங்கால்கள் இரண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது. துடித்து போன தங்கவேல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். மேலும், நாயின் கால்கள் குணமடைந்தால், ராமசாமி கோவிலுக்கு மாவிளக்கு எடுப்பதாக தங்கவேல் குடும்பத்தினருடன் வேண்டி கொண்டனர்.
சிகிச்சை பெற்ற மணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, வழக்கம் போல் பால் கேனை எடுத்து சென்று வருகிறது. நேற்று காரிமங்கலம் ராமசாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேற்ற தங்கவேல் குடும்பத்தினரும், நாய் மணியும், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு, பம்பை முழங்க ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர்.
இதை பார்த்த பக்தர்கள் பலரும் வியந்து பாராட்டினர்.