Pages

Friday, November 5, 2010

பெரும்பாலானோர்க்கு இந்த ஆண்டு சைவ தீபாவளி தான்!

வெள்ளிக்கிழமை, நவம்பர் 5, 2010, 13:56[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/11/05/diwali-vegetarian-disappintment.html

சென்னை: வழக்கமாக தீபாவளி அன்று சிக்கன், மட்டன் என்று அசைவப் பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு தீபாவளி வெள்ளிக்கிழமை வந்துள்ளதால் பெரும்பாலான குடும்பங்களில் இந்த ஆண்டு சைவ உணவே.

சரி நாளையாவது சிக்கன், மட்டன் சாப்பிடலாம் என்று பார்த்தால் அதுவும் முடியாது. ஏனென்றால் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளையும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இறைச்சி விற்கும் மற்ற வியாபாரிகளும் நாளை கடைகளை மூட வேண்டும். மீறி விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.