Pages

Sunday, August 29, 2010

தோட்டத்தில் புதைக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகள் சிக்கின


சிவகிரி வனப்பகுதியில் வேட்டையாடிய 2 பேர் துப்பாக்கியுடன் தலைமறைவு ஆயுதங்கள், துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

http://www.dailythanthi.com/article.asp?NewsID=590694&disdate=8/30/2010&advt=2

சிவகிரி, ஆக.30-

சிவகிரி வனப்பகுதியில் வேட்டையாடிய 2 பேர் துப்பாக்கியுடன் தலைமறைவாகி உள்ளனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளின் எலும்புக்கூடுகள் ஒரு தோட்டத்தில் குவியலாக சிக்கின. அந்த தோட்டத்து பம்பு-செட்டில் பதுக்கப்பட்ட ஆயுதங் கள், துப்பாக்கி தோட்டாக்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வனவிலங்குகள் வேட்டை

நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு மேற்கே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. அதன் அடிவாரத்தில் கோம்பையாற்று வனப்பகுதியில், அவ்வப்போது வனவிலங்குகளை சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதை தடுக்க வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கோம்பையாற்று வனப்பகுதியில் வனவிலங்குகளை ஒரு கும்பல் வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் அம்புரோசுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், சிவகிரி வனச்சரகர் சாமுவேல் சாலமன் ராஜன் தலைமையில் வனத்துறையினரும், ராஜபாளையம் அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுத்துரை தலைமையில் போலீசாரும் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

எலும்பு குவியல்

கோம்பையாற்று பகுதியில் கன்னிமாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு இடத்தை தோண்டி பார்த்தபோது, அங்கு மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகளின் எலும்புகள் குவியலாக புதைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த தோட்டத்தில் உள்ள பம்பு செட் அறையிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அறை பூட்டிய நிலையில் கிடந்ததால், சிவகிரி கிராம நிர்வாக அலுவலர் ஷாகுல்அமீது வரவழைக்கப்பட்டார். அவரது முன்னிலையில் பம்பு செட் கதவு திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

துப்பாக்கி தோட்டாக்கள்
 
அப்போது அறைக்குள் துப்பாக்கி தோட்டா உள்பட வெடி மருந்துகள் பதுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி தோட்டாக்கள் 3, வெற்றுத் தோட்டாக்கள் 25 மற்றும் வெடி மருந்து, மின்சார ஒயர்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுங்களும் இருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது அந்த தோட்டம், சிவகிரி அய்யா கோவில் சந்திப்பு பகுதியை சேர்ந்த பொம்மி மாரியப்பதேவர் மகன் செல்வம் (வயது 40) என்பவருக்கு சொந்தமானது, என்பது தெரியவந்தது.
 
துப்பாக்கியுடன் தலைமறைவு

செல்வமும், அவருடைய கூட்டாளியான நெல்லையை சேர்ந்த மூக்கையா மகன் நயினாரும் (35) சேர்ந்து, மான், மிளா, முயல், வரையாடு உள்பட வனவிலங்குகளை வேட்டையாடியது அம்பலமாகி உள்ளது. வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.அவர்களை வனத்துறையினரும், அதிரடிப்படை போலீசாரும் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
 
சிவகிரி வனப்பகுதியில் வேட்டையாட முயன்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகிரி வன அலுவலர் சாமுவேல் சாலமன் ராஜன் எச்சரித்து உள்ளார்.

One held for killing wild animals

Online edition of The Hindu
Sunday, Aug 29, 2010
http://www.hindu.com/2010/08/29/stories/2010082962780600.htm

TIRUNELVELI: Forest Department personnel who were on the lookout for four persons in connection with poisoning of wild boars and killing of sambar (deer) near Papanasam in the district, have arrested one person while intensifying the search for the others.

Forest Department sources said that Arunachalam (45) of Vembaiyapuram was arrested on Saturday and were on the lookout for Mahendran, Narayanan and Paramasivan, all having farms close to the Western Ghats between Manimuthar Dam and Papanasam.

During interrogation, the forest personnel also came to know that Arunachalam had already hunted down a rare monkey variety six months ago. He reportedly told the interrogators that the live electric fence he had erected in his farm by illegally drawing power from the electric poles had killed the sambar while the wild boars succumbed to poison he had kept at various places in his farm.

When the forest personnel visited the farms of the four, they also saw water being illegally diverted from the Tamiraparani to their farms.

Saturday, August 28, 2010

தெருவில் திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை

தெருவில் திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்

குடியாத்தம், ஆக.29-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=590577&disdate=8/29/2010&advt=2

தெருவில் திரியும் குரங்குகளை பிடிக்க குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரமன்ற கூட்டம்

குடியாத்தம் நகரமன்ற கூட்டம், அதன் தலைவர் எம்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், பொறியாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தங்களது வார்டுகளில் அதிக அளவு உள்ளதாலும் விரைந்து ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும், தெருவிளக்குகள் சரியாக எரிவது இல்லை என்றும், அடிப்படை வசதிகள் மெத்தனமாக நடைபெறுகிறது என்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். அதற்கு தலைவர், `ஆழ்துளை கிணறுகள் விரைந்து அமைக்கப்படும். தெருவிளக்குகளுக்கு தேவையான மின்சாதன பொருட்கள் வந்துள்ளது. இந்த பிரச்சினை இனி இருக்காது` என்று தெரிவித்தார்.

குரங்குகளை பிடிக்க தீர்மானம்

பொதுமக்களுக்கு இடைஞ்சலாக நகரில் திரியும் நாய், பன்றி, மாடு, குரங்குகளை பிடிக்கவும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகரமன்ற உறுப்பினர்கள் எம்.என்.பாஸ்கர், ஆட்டோ மோகன், கேசவன், ஆர்.கே.அன்பு, ஜெயக்குமார், ரவி, பிரகாஷ்சவுத்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The Greatness os a Nation and its Moral Progress can be Judged by the way its Animals are Treated – Mahatma Gandhi

http://www.dinamalar.com/
ஞாயிறு ,ஆகஸ்ட்,29, 2010






Friday, August 27, 2010

None arrested for killing wild boars, sambar deer; surprise checks in forest ordered

The Hindu Online edition
Friday, Aug 27, 2010

TIRUNELVELI: Even after more than 20 wild boars have been poisoned and similar numbers of sambar deer killed and carcasses dumped in the reserve forest periphery and the Tamirabharani, no culprit has been arrested.

The matter came to light recently after a villager informed the media and the revenue officials about the gruesome killing of wild boar and sambar deer which invaded the farms close to the forest and caused severe destruction.

According to the villagers living close to the farm, from which the forest personnel recovered the hooves of the electrocuted sambar deer, the legs of these wild animals had been chopped off for preparing soup and the red meat in the thighs was taken for preparing a side-dish.

“The remaining portions were dumped in the river. It is happening for a long time and the forest officials in Papanasam know this,” a villager explained.

As the wild boars are being poisoned in most of the occasions, it is not consumed, he says. Meanwhile, a top Tamil Nadu Electricity Board official here has instructed his subordinates serving in the region between Papanasam and Cheranmahadevi to conduct surprise checks in the forest areas even during the night to detect power theft, if any, by the farmers for erecting electric fences.

Monday, August 23, 2010

பசுவதை தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பசுவதை தடை சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கக் கோரி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா ஆர்ப்பாட்டம் செப். 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடத்த முடிவு

பெங்களூர், ஆக.23-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=588978&disdate=8/23/2010&advt=2

பசுவதை தடை சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வற்புறுத்தி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜனதா முடிவு செய்து உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறி உள்ளார்.
நிர்வாகிகள் கூட்டம்

கர்நாடக மாநில பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பெங்களூர் அருகே உள்ள ரெசார்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஈசுவரப்பா, முதல்-மந்திரி எடிïரப்பா, அனந்தகுமார் எம்.பி. மற்றும் மந்திரிகள், கட்சியின் மேல் மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

பசுவதை தடை சட்டம்

சட்டசபை மற்றும் மேல்-சபையில் பசுவதை தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர், அதற்கு அனுமதி வழங்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து உள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி உடனடியாக கையெழுத்து போட்டு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி செப்டம்பர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்தியாகரக போராட்டம்

செப்டம்பர் 6-ந்தேதி பெங்களூரில் மாநில அளவிலான தர்ணா சத்தியாகரக போராட்டம் நடக்க உள்ளது. இதில் முதல்-மந்திரி எடிïரப்பா, கட்சியின் தலைவர் ஈசுவரப்பா மற்றும் முக்கிய நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குள் ஜனாதிபதி இந்த மசோதாக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Friday, August 20, 2010

பசுவதை தடை சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பசுவதை தடை சட்டத்தை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்
பெங்களூரில் நடக்கிறது

பெங்களூர், ஆக.21-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=588580&disdate=8/21/2010&advt=2

பசுவதை தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 24-ந் தேதி பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பசுவதை தடுப்பு சட்ட எதிர்ப்பு இயக்கம் அறிவித்து இருக்கிறது.

பசுவதை தடுப்பு சட்ட எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் நரசிம்மய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பசுவதை தடுப்பு சட்டத்தை கர்நாடக அரசு சட்டசபை, மேல்-சபைகளில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்று இருக்கிறது. இந்தநிலையில் மைசூரில் பா.ஜனதா கட்சி சார்பில் மாநாடு நடந்தது.

ஈசுவரப்பாவுக்கு கண்டனம்

இந்த மாநாட்டில் கட்சி தலைவர் ஈசுவரப்பா, பசுக்களை கொல்பவர்களின் கைகள் வெட்டப்படும் என்று ஆக்ரோஷமாக சொல்லி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. பசுக்களை கொல்லக்கூடாது என்ற சட்டம் சிறுபான்மை மக்களான முஸ்லீம்களுக்கு எதிரானது. அவர்களை குறிவைத்து தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது.

பா.ஜனதா கட்சிக்கு பித்து பிடித்துவிட்டது. அதனால்தான் அவர்கள் இவ்வாறு எல்லாம் செயல்படுகிறார்கள். அவர்களால் ஆட்சியை சரியாக நடத்த முடியாது. இந்த சட்டத்தால் விவசாயிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

24-ந்தேதி ஆர்ப்பாட்டம்

வயதான, நோய் கொண்ட மாடுகளை விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஓரளவுக்கு பணமும் கிடைக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்தினால் அந்த மாடுகளை யாரும் வாங்கமாட்டார்கள். இதை அரசு நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
 
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ஈசுவரப்பாவை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் வருகிற 24-ந் தேதி பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு நரசிம்மய்யா கூறினார்.

வனத்துறை அலட்சியத்தால் சிறுத்தை பலி

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2010,04:53 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=67185

மூணாறு: மூணாறு அருகே சிட்டிவாரை எஸ்டேட் என்.சி. டிவிசன் காய்கறி தோட்டத்தில் வைக்கப் பட்டிருந்த வலையில் நேற்று முன்தினம் மதியம், ஒரு சிறுத்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதன் வயிற்றில், வலைக் காக பயன்படுத்தப்பட்ட கம்பி குத்தியிருந்தது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை உயிருடன் இருந்ததால் பக்கத்தில் செல்ல பயந்தனர். உயிருடன் சிறுத்தையை மீட்க திருவனந்த புரத்தில் இருந்து கால்நடை டாக்டர் களையும், தமிழ்நாடு வால்பாறையில் இருந்து கூண்டும் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே நேரத்தில், சிறுத்தையின் உயிரை காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நேற்று காலை சிறுத்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனை கண்ட "மியூஸ்' என்ற சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு அமைப்பினர் சிறுத்தையை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களை வனத் துறையினர் தடுத்து விட்டனர். இந்நிலையில், காலை 8.30 மணிக்கு சிறுத்தை இறந்தது. அதன் பிறகே திருவனந்தபுரத்தில் இருந்து வந்த கால்நடை டாக்டர்கள் சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தினர். சிறுத்தையை காப்பாற்ற வனத்துறையினர் தவறியதை கண்டித்து மியூஸ் அமைப்பினர் மூணாறில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

செம்மறி ஆடு வளர்க்க ரூ.10 கோடி கடன்...!!!

நெல்லை மாவட்டத்தில் செம்மறி ஆடு வளர்க்க ரூ.10 கோடி கடன்

நெல்லை, ஆக.20-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=588377&disdate=8/20/2010&advt=2

நெல்லை மாவட்டத்தில் செம்மறி ஆடு வளர்க்க ரூ.10 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் மு.ஜெயராமன் கூறினார்.
 
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட இலவச மருத்துவ முகாம் பாளையங்கோட்டையை அடுத்த நொச்சிகுளத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் மு.ஜெயராமன் தலைமை தாங்கினார். அவர், சிறந்த கன்று குட்டிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்துக்கு 31 ஆயிரம் செலவில் 276 இலவச கால்நடை முகாம்கள் நடைபெற உள்ளது. நொச்சிகுளத்தில் முதலாவது முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

275 முகாம்கள்

மருத்துவ வசதியில்லாத 19 ஊராட்சி ஒன்றியங்களில் 275 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், செயற்கை கருவூட்டங்கள், குடற்புண் நீக்கம், சினை பரிசோதனைகள் போன்றவைகள் செய்யப்படுகிறது.

கால்நடைகளுக்கு தேவையான தீவன புற்களும் முகாம்களில் வழங்கப்பட உள்ளது. கால்நடை பராமரிப்பில் நவீன முறைகள் கையாளுவது குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 276 இலவச கால்நடை முகாம்களில் 34 ஆயிரத்து 688 விவசாயிகளின் 3 லட்சத்து 43 ஆயிரம் கால்நடைகளுக்கு ரூ.3 லட்சத்து 31 ஆயிரம் செலவில் பல்வேறு கிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.

கடந்த காலங்களில் கிராமங்களில் கால்நடைகளுக்கு பிரண்டை செடியுடன் உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து கால்நடைகளின் நாக்குக்கு இடையில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள். ஆனால், தற்போது கிராமங்களில் கால்நடை மருத்துவர்கள் மிக எளிதாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

குஜராத், உத்திரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் உள்ள கிராமங்களில் தலா ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. இந்த கால்நடைகள் கிராமப்புற முன்னேற்றத்துக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.

ரூ.10 கோடி கடன்

நெல்லை மாவட்டத்தில் வருமானம் உள்ள தொழிலாகிய செம்மெறி ஆடுகள் வளர்ப்பதற்கு ரூ.10 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள விவசாயிகள் இதுபோன்ற கால்நடை முகாம்களுக்கு சென்று சிகிச்சை அளித்து, கால்நடைகளை பேணி பாதுகாக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கால்நடை மருத்துவர்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.இவ்வாறு கலெக்டர் மு.ஜெயராமன் பேசினார்.

முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சிவானந்தம், துணை இயக்குனர் மணிவண்ணன், உதவி இயக்குனர் சங்கரசுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் ஜெபராஜ், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, August 19, 2010

தமிழகத்தில் 20 லட்சம் பசுக்களுக்கு மலட்டுத்தன்மை

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010,07:10 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=66523

காங்கயம்:பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கால்நடை இன விருத்தி தொடர்பான கருத்தரங்கு, "லைப் நெட் ஒர்க்' மற்றும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் சார்பில் காங்கயத்தை அடுத்துள்ள குட்டைபாளையத்தில் நடந்தது. அமைச்சர் பழனிசாமி பேசியதாவது:நமது நாட்டின் பாரம்பரியமிக்க கால்நடை இனங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆண்டுதோறும் 5,100 இடங்களில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக 300 முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முகாமிற்கும் 2,000 கால்நடைகள் வரை பயன்பெறுகின்றன.காங்கயம் இனத்தைச் சேர்ந்த மூன்று லட்சம் பசுக்களுக்கு இன விருத்தி ஊசி போடப்பட்டதில், 58 கன்றுக்குட்டிகள் மட்டுமே பிறந்துள்ளன. கால்நடைகளை முறையாக பராமரிக்காததாலும், கர்ப்பப்பை கோளாறுகளாலும் இதுபோன்று ஏற்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 20 லட்சம் பசுக்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் பழனிசாமி பேசினார்.
 

காக்கை கூட்டம்





சென்னை மெரீனாவிற்கு வருபவர்கள், அங்கு திரியும் காக்கை கூட்டத்திற்கு  ஆகாரமிட்டுச் செல்கின்றனர். சண்டை யின்றி, சமாதானமாக உணவினைத் தேடிக் கொள்கிறது இந்தக் காக்கை கூட்டம். உணவுப் பொருட்களை காகங்கள் தின்று விடுவதால், ஒரளவிற்கு மெரீனாவும் சுத்தமாகிவிடுகிறது. தொடரட்டும் இப்பணி.

Dinamalr Online Edition

Tuesday, August 17, 2010

ரெயிலில் அடிபட்டு யானை பலி

சென்னை ரெயிலில் அடிபட்டு யானை பலி
ஒரு மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

பாலக்காடு, ஆக.17-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=587740&disdate=8/17/2010&advt=2

கோவை அருகே சென்னை ரெயிலில் அடிபட்டு ஆண் யானை ஒன்று பலியானது. இதனால் ஒரு மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குட்டி யானை

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் பாலக்காடு சந்திப்புக்கு (ஒலவக்கோடு) இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தது. அதன்பிறகு அங்கிருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு பி லைன் பாதையில் வந்து கொண்டு இருந்தது.

கோவை அருகே கேரள வனப்பகுதியான கஞ்சிக்கோட்டில் இருந்து 11/2 மைல் தொலைவில் சென்னை ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு குட்டி யானை மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.

ரெயிலில் அடிபட்டு யானை பலி

ரெயிலில் அடிபட்ட குட்டி யானை தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. யானை பிளிறியபடியே அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனது. யானை மீது ரெயில் மோதியதால் ரெயில் லேசாக குலுங்கியது. நல்லவேளை ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரளவில்லை. என்ஜின் டிரைவர் சமயோஜிதமாக ரெயிலை நிறுத்தினார்.

பின்னர் ரெயில் என்ஜின் டிரைவர், கார்டு, மற்றும் ரெயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்கள். யானை அடிபட்டு இறந்து கிடந்த இடத்திற்கு அவர்கள் விரைந்து சென்றனர். தண்டவாளத்தை ஒட்டி இறந்து கிடந்த யானையை ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

ஒரு மணி நேரம் தாமதம்

இதனால் முக்கால் மணி நேரம் கழித்து சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையை நோக்கி புறப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தால் கோவையில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்தும் கோவைக்கும் வர வேண்டிய ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றன.

இறந்த கிடந்த யானை ஆண் குட்டி ஆகும். பிறந்து 3 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட வனப்பாதுகாவலர் பார்வையிட்ட பிறகு அந்த யானையை வனப்பகுதியில் வனஊழியர்கள் அடக்கம் செய்தனர்.

Monday, August 16, 2010

Milk Facts - What's Wrong with Milk?

Objections range from animal rights to the environment to health concerns.

It may be difficult to understand, at first, why vegans abstain from drinking milk. It’s supposedly wholesome and healthy, and if the advertising is to be believed, comes from “happy cows.” If you look beyond the image and examine the facts, you’ll find that the objections range from animal rights to the environment to health concerns.

Animal Rights
Because cows are sentient and capable of suffering and feeling pain, they have a right to be free of use and abuse by human. No matter how well the animal is cared for, taking breast milk from another animal violates that right to be free, even if cows were allowed to live out their lives on idyllic green pastures.

Factory Farming
Many believe that drinking milk is fine as long as the cows are treated humanely, but modern factory farming practices mean that cows do not live out their lives on idyllic green pastures. Gone are the days when farmhands just used their hands and a milk pail. Cows are now milked with milking machines, which cause mastitis. They are artificially inseminated as soon as they are old enough to become pregnant, give birth and produce milk. After two cycles of pregnancy and birth, when they are about four or five years old, they are slaughtered because they are considered “spent” and no longer profitable. When they are sent to slaughter, approximately 10% of them are so weak, they cannot stand on their own. These cows would normally live about 25 years.

Cows today are also bred and raised to produce more milk than in past decades.

Part of the increased milk production is due to breeding, and part of it is due to unnatural husbandry practices, such as feeding meat to the cows and giving rBGH to cows.

Environment
Animal agriculture is a very inefficient use of resources and is damaging to the environment. Water, fertilizer, pesticides and land are required to grow crops to feed to cows. Energy is needed to harvest the crops, turn the crops into feed, and then transport the feed to farms. The cows must also be given water to drink. The waste and methane from factory farms are also an environmental hazard. The US Environmental Protection Agency states, “In the U.S., cattle emit about 5.5 million metric tons of methane per year into the atmosphere, accounting for 20% of U.S. methane emissions.”

Veal
Another concern is veal. Approximately three quarters of the calves born in the dairy industry are turned into veal, because they are not needed or useful for milk production, and are the wrong breed of cattle for beef production.

What About “Happy Cows”?
Even on farms where the cows are not constantly confined, the female cows are slaughtered when their milk production drops and three-quarters of the calves are turned into veal.

Don’t We Need Milk?
Milk is not necessary for human health, and may be a health risk. Except for domesticated animals to whom we feed milk, humans are the only species that drinks the breast milk of another species, and the only species that continues to drink breast milk into adulthood. Furthermore, dairy consumption raises certain health concerns, such as cancer, heart disease, hormones and contaminants.

The Solution
The World Health Organization believes that prescriptions should be required for antibiotics for farmed animals, and several countries have banned the use of rBGH and sub-therapeutic doses of antibiotics, but these solutions consider only human health and do not consider animal rights. From an animal rights standpoint, the solution is to stop eating animal products and go vegan.

Plan to increase milk production in Tirupur district

Veterinary camps to be organised

Online edition of India's National Newspaper
Saturday, Aug 14, 2010
http://www.hindu.com/2010/08/14/stories/2010081454200600.htm
R Vimal Kumar

Tirupur: To increase milk production in the district, the Department of Animal Husbandry plans to conduct 171 rural veterinary camps, 100 infertility camps, 60 farmers' meet/training on cattle management and raise fodder on 1,500 acre during this fiscal at a total outlay of Rs. 16 lakh.

“The project cost will be met from the funds earmarked under the World Bank-funded Irrigated Agriculture Modernisation and Water-bodies Restoration and Management (IAMWARM) project and Kalnadai Padhukappu Thittam (KPT),” Joint Director of Animal Husbandry V. Thangavel told The Hindu.

Artificial insemination

Under the rural veterinary camps, the department would upgrade the local stock of cattle and buffaloes by artificial insemination using the exotic and crossbreeding varieties showing genetically superior milk production traits free of cost.

“We will use the frozen semen straws obtained from bull varieties like Jersey, Holstein Friesian and Murrah for artificial insemination,” Dr. Thangavel said.

Besides this, free medicines for de-worming would be distributed and pregnancy diagnostic tests carried out at the rural veterinary camps.

Fodder cultivation

With nutrition playing an important role towards good health of cattle, the department would bring about 617 ha under fodder cultivation this financial year.

“For this, we will distribute fodder slips of CO-3, and seeds of Kolukkattai grass and African Tall Maize varieties,” Dr. Thangavel said.

The Kolukattai grass would come up on 150 ha, African Tall Maize on 450 ha and CO-3 on 17 ha.

Assistance

The beneficiary farmers would also get technical assistance from the agricultural officials on ploughing and de-weeding to maintain the fodder farms. “Nutritive feeding alone can bring about a significant increase in milk production,” Dr. Thangavel said.

Sunday, August 15, 2010

Noise could sound the death knell of ocean fish

Growing levels of noise pollution in the ocean could drive fish away from their habitat into their deaths.

August 15, 2010
http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/article572548.ece?homepage=true

In this file photo, reef fish swim among the coral in Kimbe Bay off the coast of Papua New Guinea's New Britain island

After developing for weeks at sea, baby tropical fish rely on natural noises to find the coral reefs where they can survive and thrive.

However, researchers from the University of Bristol School of Biological Sciences, working in the Great Barrier Reef, Australia, found that short exposure to artificial noise attracts fish to inappropriate sounds.

In earlier research, Steve Simpson from the School of Biological Sciences discovered that baby reef fish use sounds made by fish, shrimps and sea urchins as a cue to find coral reefs, according to a University of Bristol statement.

With human noise pollution from ships, wind farms and oil prospecting on the increase, he is now concerned that this crucial behaviour is coming under threat.

He said, “When only a few weeks old, baby reef fish face a monumental challenge in locating and choosing suitable habitat. Reef noise gives them vital information, but if they can learn, remember and become attracted towards the wrong sounds, we might be leading them in all the wrong directions.”

Using underwater nocturnal light traps, Simpson and his team collected baby damselfish as they were returning to coral reefs.

The fish were then put into tanks with underwater speakers playing natural reef noise or a synthesised mix of pure tones.

The next night the fish were put into specially designed choice chambers (long tubes with contrasting conditions at each end in which fish can move freely towards the end they prefer) with natural or artificial sounds playing.

All the fish liked the reef noise, but only the fish that had experienced the tone mix swam towards it, the others were repelled by it.

Simpson said, “This result shows that fish can learn a new sound and remember it hours later, debunking the three-second memory myth.”

His collaborator, Mark Meekan, added, “It also shows that they can discriminate between sounds and, based on their experience, become attracted to sounds which might really mess up their behaviour on the most important night of their life.”

நாய்களை பிடித்து காட்டில் விட திட்டம்..!

சேலம் சூரமங்கலம் பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்த 25 நாய்கள் வேட்டையாடி பிடிப்பு

சேலம்,ஆக.15-
dailythanthi online edition
http://www.dailythanthi.com/article.asp?NewsID=587338&disdate=8/15/2010&advt=2

சேலம் சூரமங்கலத்தில் பொதுமக்களுக்கு இடைïறாக தெருவில் சுற்றித்திரிந்த 25 நாய்கள் வேட்டையாடி பிடிக்கப்பட்டது.

நாய்கள் வேட்டை

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இடைïறாக வீதிகளில் சுற்றித்திரியும் நாய்கள், சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் பன்றிகள் ஆகியவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சேலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நாய் மற்றும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தும் பணியை சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

25 நாய்கள் பிடிப்பு
இந்த நிலையில் நேற்று சூரமங்கலம் மண்டலத்துக்குட்பட்ட ஜங்ஷன், திருவாக்கவுண்டனூர் பைபாஸ், பள்ளப்பட்டி, மெய்யனூர் ஆகிய இடங்களில் சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், குணசேகரன், சேகர் ஆகியோர் தலைமையில் 8-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கண்ணி வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காலை முதல் பிற்பகல் வரை மொத்தம் 25 நாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில் ஆண்- பெண் நாய்கள் தனியாக பிரிக் கப்பட்டு `கருத்தடை` ஆபரேஷன் செய்யப்பட்டு வீராணத்தில் உள்ள நாய்களுக்கான செட்டில் விடப்பட்டது. அங்கு 2 நாட்கள் வைக்கப்பட்டு, அதன் பின்னர் ஊருக்கு அப்பால் காட்டுப்பகுதியில் விடப்படும் என சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தெரிவித்தார்.

விலங்குகளை பாதுகாக்க புதிய சட்டம்

விலங்குகளை பாதுகாக்க புதிய சட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010,23:44 IST
Dinamalar E Paper
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63079

புதுடில்லி : "விலங்குகளை பாதுகாப்பதற்கென பிரத்யேகமாக ஒரு புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். விலங்குகளை கொடுமைப் படுத்துவோருக்கு, தற்போதுள்ள சட்டத்தில் மிக குறைந்த தண்டனையே வழங்க முடியும். புதிய சட்டத்தில் தண்டனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என, மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: "விலங்குகளை கொடுமைப்படுத்துவோரை தண்டிக்க, தற்போதுள்ள சட்டத்தில் கடுமையான தண்டனை எதுவும் இல்லை'என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். விலங்குகளை கொடுமைப் படுத்துவோருக்கு, தற்போது 50 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் போதுமானது அல்ல. அபராதத்தை அதிகரிக்கும் வகையிலும், விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இதற்கான முயற்சிகள் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் விலங்குகள் பலி கொடுக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. சில மாநிலங்களில் இதற்கு தடை விதித்திருந்தாலும், வேறு சில மாநிலங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் ஆலோசனைக் குழு அனுப்பி வைக்கப்படும். மேலும் சில மாநிலங்களில், திருவிழாக் காலங்களில் யானைகள் வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதும் கவலை அளிக்கிறது.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Friday, August 13, 2010

நூற்றாண்டு விழாவுக்கு தயாராகிறது தெப்பக்காடு யானைகள் முகாம்

நூற்றாண்டு விழாவுக்கு தயாராகிறது தெப்பக்காடு யானைகள் முகாம்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010,23:16 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=61535
Dinamalar Online Edition

கூடலூர் :சுற்றுலா பயணிகள் மனம் கவர்ந்த, தெப்பக்காடு யானைகள் முகாம் நூற்றாண்டு விழா கொண்டாட தயாராகி வருகிறது.பிரசித்தி பெற்ற முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன விலங்குகள், உயிரினங்கள், பறவைகளை கண்டு ரசிக்க, உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள தெப்பக்காட்டில் யானைகள் முகாம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இங்கிருந்த விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி மரங்களை வெட்டி செல்லவும், வாகனங்களில் ஏற்றவும் யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை தங்குவதற்காக, 1910ம் ஆண்டு தெப்பக்காட்டில், யானைகள் முகாம் ஏற்படுத்தப்பட்டது.துவக்கத்தில் 40 யானைகள் வரை, இங்கு பராமரிக்கப்பட்டன. பிறகு, வன அழிவை தடுக்கும் நோக்கத்துடன், மரங்கள் வெட்ட தடை விதிக்கப்பட்டது. எனினும், யானைகள் முகாம் மட்டும் தொடர்ந்து செயல்படுகிறது.கூடலூரில் 13 பேரை கொன்ற மக்னா யானை, தெப்பக்காடு முகாமில் பெற்ற பயிற்சிக்கு பின், தற்போது சாதுவாக வலம் வருகிறது. கோவில் யானைகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கும் அரசின் திட்டமும், இந்த முகாமில் தான் செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2006ம் ஆண்டு, தாயை பிரிந்து காட்டில் தனியாக தவித்த மசினி, மே மாதம் தாயை இழந்து காட்டில் தவித்த செம்மொழியான் ஆகிய இரு குட்டி யானைகள், தற்போது இம்முகாமில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. முகாம் யானைகளை பார்ப்பதற்காக, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்குள்ள ஆண் யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, "கும்கி'யாக மாற்றி, சுற்றுலா பயணிகள் சவாரிக்கும், வன ரோந்து பணிக்கும் பயன்படுத்துகின்றனர். ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், பயிற்சி பெற்ற யானைகளை பயன்படுத்தி வருகின்றனர். 58 வயது நிறைவடைந்தால், முகாம் யானைகளுக்கு பணி ஓய்வு அளித்து பராமரிக்கின்றனர். முன்பு, முகாம் யானைகள் மூலம், அங்குள்ள விநாயகர் கோவிலில், மாலையில் தினமும் பூஜை நடத்தப்பட்டது.

தற்போது விநாயர் சதுர்த்திக்கு மட்டும் யானைகள் பூஜைக்கு பயன்படுத்தபடுகின்றன. தற்போது இந்த முகாமில், 2 (ஆண், பெண்) குட்டி யானைகள், 14 ஆண் யானைகள், 6 பெண் யானைகள், 2 மக்னா (தந்தமில்லாத ஆண்) யானைகள் என, மொத்தம் 24 யானைகள் உள்ளன. இதில், 7 கும்கி யானைகள். மேலும், சில யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.வனத்துறையினர் மற்றும் பாகன்களின் சிறப்பான பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றில் சிறப்பு பெற்று வரும் தெப்பக்காடு யானைகள் முகாம் துவங்கி, 100 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. விரைவில், நூற்றாண்டு விழாவை கொண்டாட, வனத்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Fanta குடிக்கும் யானை..!

மின் வேலியில் சிக்கி 2 யானைகள் பலி

இரை தேடி வந்து மின் வேலியில் சிக்கி 2  யானைகள் பலி
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 31, 2010, 11:42[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/01/31/two-elephants-dead-while-crossing.html

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே இரை தேடி வந்தபோது மின்சார வேலியில் சிக்கிய 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (56). இவரின் விளை நிலத்தில் பயிர்களை பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதிக்கு யானைக் கூட்டம் இரைத்தேடி வந்தன. மின்வேலி தெரியாமல் இரண்டு யானைகள் முனிகிருஷ்ணப்பாவின் நிலத்துக்குள் நுழைய முற்பட்டன.அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்து இரண்டு யானைகள் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி உயிரிழந்தன. முனி கிருஷ்ணப்பா நிலத்தை பார்வையிட நேற்று சென்றபோது 2 யானைகள் இறந்து கிடப்பதை பார்த்து அதை மறைக்க திட்டமிட்டார். எனினும், அக்கம்பக்கத்து விவசாயிகள் மூலம் யானைகள் இறந்த சம்பவம் வனத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தெரிந்துவிட்டது.இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் கணேசன் தலைமையில் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.பலியான இரண்டு யானைகளுக்கும் சுமார் 35 முதல் 40 வயது இருக்கும். அதில் ஒரு பெண் யானை கர்ப்பமாக இருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காளைகள் முட்டி 79 வீரர்கள் காயம்

திருமானூர் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 79 வீரர்கள் காயம் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 31, 2010, 11:34[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/01/31/79-wounded-thirumanoor-jallikkattu.html

திருமானூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 79 வீரர்கள் காயம் அடைந்தனர். கீழக்கொளத்தூர் கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 187 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. இதில் 18 காளைகள் தகுதி இல்லாததால் அவிழ்த்து விடப்படவில்லை.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடங்கியதும், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். அப்போது காளைகள் முட்டித் தள்ளியதில் 79 வீரர்கள் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த 9 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இறந்த நாய்க்கு திதி கொடுத்த குடும்பம்

இறந்த நாய்க்கு திதி கொடுத்த அதிசய குடும்பம் : கிராமத்தினருக்கு சாப்பாடு போட்டு பிரார்த்தனை

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2010,01:26 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?id=287

Dinamalar Online Edition


ராமேஸ்வரம் : வீட்டில் ஆசையாக வளர்த்த நாய் இறந்து ஒரு ஆண்டு ஆனதால், நாயின் ஆத்மா சாந்தியடைய, நாயை வளர்த்த குடும்பத்தினர் திதி கொடுத்து, கிராமத்தினருக்கே சாப்பாடு போட்டனர்.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலத்தை சேர்ந்தவர் மீனவர் கோட்டைமுனி (40). இவரது மகன், இரண்டு ஆண்டுக்கு முன், பிறந்து கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்றை தூக்கி வந்துள்ளார். அதற்கு "ஜானி' என பெயரிடப்பட்டு, வளர்த்தனர். தினமும் மீன், கறி, பால்கோவா என நாய்க்கு பிடித்தமான பொருட்களை வாங்கித் தந்துள்ளனர். நாய்க்கு வலிப்பு நோய் வந்ததால், ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2009 மார்ச் 25ல் தெருநாய்களின் தாக்குதலுக்குள்ளாகி "ஜானி' இறந்தது. இறந்து ஒரு ஆண்டுக்கு பின், அதே நாளில் (நேற்று)ஆசையாக வளர்த்த நாய்க்கு குடும்பத்தினர் திதி கொடுத்தனர். நாய் புதைக்கப்பட்ட இடத்தில் பல்வேறு தின்பண்டங்களை வைத்து, கும்பிட்ட கோட்டைமுனி குடும்பத்தினர், வீட்டில் நாயின் படத்திற்கு மாலையிட்டு படையல் (உணவு) போட்டு, அதன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். மேலும், அன்று கிராமத்தினருக்கே சாப்பாடு போட்டனர்.

கோட்டைமுனி கூறியதாவது: நான் கடலுக்கு சென்றால் திரும்பி வரும் வரை, இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடாமல் காத்திருக்கும். ஒரு ஆண்டுக்கு முன் என் மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால், ஆட்டோவில் மகளுடன் ராமேஸ்வரம் சென்றேன். ஆட்டோவை தொடர்ந்து நாய் வந்ததை கவனிக்கவில்லை. வழியில் திடீரென வலிப்பு வர, வழியில் படுத்துவிட்ட ஜானியை, தெருநாய்கள் சூழ்ந்து கடித்து குதறியதில் இறந்து விட்டது. பிள்ளைகள் எல்லாம் இறந்த நாயை பார்த்து அழுது விட்டனர். ஜானியை சுடுகாட்டில் புதைத்து மனிதர்களுக்கு செய்வது போல் 16 நாள் காரியமும் செய்தோம். தற்போது ஒருஆண்டு முடிந்ததால் திதி கொடுத்தோம், என்றார்.

மனிதர்களுக்கான மருந்து சோதனைக்கு இதுவரை 15 கோடி விலங்குகள் பலி

மனிதர்களுக்கான மருந்து சோதனைக்கு இதுவரை 15 கோடி விலங்குகள் பலி


பதிவு செய்த நாள் : ஜூன் 12,2010,23:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17916

Dinamalar Online Edition

மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள், ஆபத்தானவையா இல்லையா என்பது குறித்து சோதனை நடத்த விலங்குகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில், இதுவரை 15 கோடி விலங்குகள் ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

மனிதனின் பாரம்பரிய அமைப்பை ஆய்வு செய்வதற்கு வசதியாக இருப்பவை எலிகளே. இதனால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகளில் 90 சதவீதம் எலிகளும், சுண்டெலிகளுமே பயன்படுத்தப்படுகின்றன. "கார்டியோவாஸ்குலர்' பரிசோதனைகளுக்கு ஏற்ற விலங்கு நாய். நரம்பு மற்றும் நடத்தை தொடர்பான ஆய்வுகளுக்கு, சிம்பன்சிகளும், குரங்குகளும் உதவுகின்றன. "பராமரிப்பதும், கையாள்வதும் எளிதாக இருப்பதால் எலிகளும், சுண்டெலிகளும் ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம், வலிப்பு நோய் உள்ளிட்ட காரணிகளை கட்டுப்படுத்துவது குறித்து, விலங்குகளிடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விலங்குகளுக்கு பயன்படுத்தும் சோதனை, மனிதர்களுக்கு செய்யும் போது ஏன் தோல்வி அடைந்து விடுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. உடல் ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும் குரங்குகளும், சிம்பன்சிகளும் மனிதனை போல உள்ளதால் ஆய்வுகளுக்கு இவை பொருத்தமானவை' என்று பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனத்தின் நரம்பு உடற்கூறுவியல் துறை தலைவர் ராஜு கூறுகிறார். "ஆய்வுகளுக்கு விலங்குகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன' என்று கூறியுள்ளார் ஸ்காட்லாந்து, எடின்பரோ பல்கலைக்கழக நரம்பு அறிவியல் மையத்தலைவர் மால்கம் மெக்லியோட்.

இந்த ஆய்வு குறித்து மால்கம் கூறுகையில்,"நரம்பு பாதுகாப்பு குறித்து, 500க்கும் மேற்பட்ட மருந்துகள் கண்டுபிடித்து அவற்றை விலங்குகளிடம் சோதனை செய்யும் போது நல்ல பலன் தெரிகிறது. ஆனால், மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கும் போது தோல்வியடைந்து விடுகிறது. சோதனைக்கு பெண் மற்றும் வயதான விலங்குகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆண் மற்றும் குட்டி விலங்குகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன' என்கிறார். மனிதர்கள் அடிக்கடி உடல் நல பாதிப்பு அடைவது போல் விலங்குகள் இயற்கையாக பாதிக்கப்படுவதில்லை. அவற்றிற்கு செயற்கையாகவே பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உடல் உறுப்புகளில் அதிக வித்தியாசமுள்ளதால் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கு இடையே ஏற்படும் பாதிப்புகளை கணிப்பது கடினமாக உள்ளது. இதனால் ஆய்வின் போது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளன. "பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுத்து சோதிக்கும் போது, குணமடைவதற்கு நீண்ட காலம் ஆகிறது. இதனால் நோயாளியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதில் மிக தாமதம் ஏற்படுகிறது.

பர்கின்சன் நோய் குறித்து, விலங்குகளிடம் ஆய்வு செய்யும் போது விரைவில் அவற்றின் உடல் உறுப்புகளில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு முரண்பாடுகள் ஏற்படும் போது முடிவு தெரிவதில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. விலங்குகளுக்கு பரிசோதிக்கப்பட்ட 92 சதவீத மருந்துகள், மனிதர்களுக்கு அளித்து செய்யும் ஆய்வு வெற்றி பெறுகின்றன என்று, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கூறுகிறது. "கடந்த 1985ம் ஆண்டில், இது 86 சதவீதமாக இருந்தது தற்போது அதிகரித்துள்ளது. விலங்குகளை கொண்டு சோதனை செய்யும் போது, 8 சதவீத அளவு கண்டுபிடிக்க முடியாததால், கடும் பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது' என்று மூத்த மருத்துவ மற்றும் ஆய்வு ஆலோசகர் ஜான் பிபின் கூறுகிறார். பல்வேறு நோய்களுக்கு, மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் 15 கோடி விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுகளில் தவறான முடிவுகள் வரும் போது, விலங்குகளை ஆய்வுகளுக்கு பயன்படுத்த கூடாது என்று, விலங்குகள் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுகின்றன. புதியதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்வதற்கு முன்பாக, மனிதர்கள் அல்லாத உயிரினங்களிடம் சோதனை நடத்தப்பட வேண்டியது மிக அவசியமென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"கோடிக்கணக்கான விலங்குகளை பயன்படுத்தி ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு உள்ளதால், எதிர்காலத்தில் கம்ப்யூட்டரில் மாதிரிகளை தயாரித்து அதன் மூலமும், திசு வளர்ப்பு மூலமும் ஆய்வுகள் செய்யலாம். அரிய விலங்குகளை தவிர, மற்றவற்றை ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது' என்று மெக்லியட் தெரிவிக்கிறார்.

மாடுகளை வெட்டுவது குறித்து புகார்

மாட்டிறைச்சி கடைகளில் ரெய்டு : நகராட்சியினரின் அதிரடி

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2010,23:13 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=51809


ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடைகளில், அறுக்க முயன்ற மாடுகளை நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் நகராட்சியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பல இடங்களில் மாட்டிறைச்சி கடைகள் இருப்பதும் பகிரங்கமாக மாடுகளை வெட்டுவதும் குறித்து புகார் எழுந்தது. நகராட்சி சுகாதார அதிகாரி சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஹரிதாஸ் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை நான்கு மணி முதல் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். ஹாஜா பேலஸ் அருகே ஒரு கடையில் மாட்டிறைச்சிக்காக மாடு வெட்டியபோது, இறந்த நிலையில் இருந்த மாட்டை பறிமுதல் செய்தனர். மேலும் பதுபஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆடுகளை வெட்டுவதற்கு தனி இடம் (ஆடடிசாலை) உள்ள நிலையில், அக்ரஹாரம் ரோடு போன்று நகரில் பல இடங்களில் ரோட்டில் பகிரங்கமாக ஆடுகளையும் வெட்டுவதை காணமுடிகிறது. சில இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் கழிவுநீர் கால்வாயில் ஆடுகளை வெட்டுவதும், தவறி கால்வாயில் விழும் கறிகளை எடுத்து கழுவி மீண்டும் விற்பனை செய்வதுமாக உள்ளனர். வெட்டவெளியில் ஆடுகளை வெட்டுவதால் அதன்கழிவுகளை தின்பதற்காக நாய்கள் கூட்டமாக திரிகின்றன. கறிசண்டையில் நாய்களின் பிடியில் சிறிய குழந்தைகள் மாட்டும் அபாயமும் உள்ளது. மாட்டிறைச்சி வெட்டுவதற்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள் இதுபோன்ற திறந்த வெளியில், கழிவுநீர்கால்வாய் பகுதியில் ஆடுகளை வெட்டுவதை தடுக்கவும் முன்வரவேண்டும்.

தொற்று நோய் அபாயத்தில் ரோட்டோர கடைகள் : இறைச்சி கடைகளில் சரியான முறையில் அனுமதியுடன் வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறதா? மாலை நேர சிக்கன், சூப் கடைகளில் சுகாதாரமான முறைகளில் தயார் செய்து விற்கின்றனரா? இதன்மூலம் தொற்று நோய் பரவுமா என்பதை நகராட்சி சுகாதார துறையினர் நன்கு ஆய்வு செய்ய வேண்டும். விபரீத சம்பவங்கள் ஏற்படாவண்ணம் இருக்க ரோட்டோர ஓட்டல்களில் தொடரந்து அதிரடி சோதனை மேற் கொள்ளவேண்டும்.


dinamalar online edition

பசுவை லாரியில் ஏற்றி சித்ரவதை:

பசுவை லாரியில் ஏற்றி சித்ரவதை: கொம்பு உடைந்து ரத்தம் கொட்டிய பரிதாபம்

ஏப்ரல் 15,2010,00:00 IST
Dinamalar Daily Pondichery Edition

பண்ருட்டி : லாரியில் இருந்து கீழே விழுந்த பசுவை, மீண்டும் கயிறு கட்டி ஏற்றியபோது கொம்பு உடைந்து ரத்தம் கொட்டியது. பசுவை சித்ரவதை செய்து லாரியில் ஏற்றியதால் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. புதுச்சேரியிலிருந்து நாகர்கோவிலுக்கு, 25 பசுக்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த பசு ஒன்று கீழே விழுந்தது. பலத்த காயமடைந்த பசுவை கயிறு கட்டி மீண்டும் லாரியில் ஏற்றினர். இதனால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் - சித்தூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது.

அந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், பசுக்களை ஏற்றி வந்தவர்கள் போக்குவரத்தைப் பற்றி கவலைப்படாமல், பசுவை சித்ரவதை செய்து, கயிறு மூலம் கட்டி லாரியில் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தனர். அப்போது பசுவின் கொம்பு உடைந்து ரத்தம் கொட்டியது. லாரி வாடகையை கருதி, மாடு வாங்கி விற்பவர்கள் ஒவ்வொரு லாரிகளிலும் அளவுக்கு அதிகமான மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர். அதிக மாடுகளை வதைத்து ஏற்றி செல்வதை தடுக்க, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

BBMP runs after dogs at night

BBMP runs after dogs at night

Tired of protesting residents, dog-catchers will now hunt strays for sterilisation when people are asleep

Posted On Monday, August 02, 2010 at 08:48:56 PM
http://www.bangaloremirror.com/article/1/201008022010080220485671881089b66/BBMP-runs-after-dogs-at-night.html

If you’re the kind who can’t get sleep when street dogs bark, your life is about to get worse with louder howls, yelps and growls.

BBMP is planning a midnight assault to catch and sterilise stray dogs because residents hamper their efforts during the day.

Mayor S K Nataraj said, “Normally, the Bruhat Bangalore Mahanagara Palike (BBMP) personnel work during the day, but dog-catching becomes tough as dog-lovers unnecessarily argue with our men and do not allow them to catch the dogs. They resist even when they are told that dogs will only be sterilised and not culled. That is why we are thinking of catching stray dogs at night when people are asleep.”

According to a conservative estimate by the BBMP, there are about 2.5 lakh stray dogs in the city and a majority needs sterilisation and vaccination for rabies.

There have been several instances of dog attacks on people, the last major case being that of four-year-old Geetha who was attacked while playing near her residence in Chandra Layout a few weeks ago.

Job will get easier

BBMP officials expect the midnight operation to be easy for other reasons as well. Dr Parvez Ahmad Piran, BBMP joint director (animal husbandry), told Bangalore Mirror, “At night, there will be less traffic on the roads and dogs will not be able to hide under lorries and other vehicles to escape the dog-catchers. Also, dogs congregate at one place at night.”

Two Non Governmental Organisations from Maharashtra and Andhra Pradesh are interested in tackling the dog menace.

The file is before the BBMP finance committee for approval. Tenders will be awarded after discussions in the Council.

Other measures

The BBMP also plans to increase Animal Birth Control (ABC) initiatives in old CMC areas which are now a part of greater Bangalore. The BBMP earmarks crores of rupees to sterilise stray dogs but funds are not used satisfactorily. Last year, 2,909 cases of stray dog bites were reported in the city. There were more than 9,600 cases in 2008 and more than 500 cases in the last seven months.

Residents resist even when they are told that dogs will only be sterilised, not culled

S K Nataraj mayor, BBMP

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்-ஜெய்ராம் ரமேஷ்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 11:23[IST]

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியபள்ளார்.நாடாளுமன்றத்தில் மிருக வதை குறித்து பாஜக எம்பி மேனகா காந்தி எழுப்பிய கேளிவிக்கு பதிலளித்த ஜெய்ராம்,கடந்த 2007ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வவலியுறுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. உண்மையில், ஜல்லிக்கட்டு, தடை செய்யப்பட வேண்டிய ஒரு விளையாட்டு ஆகும்.
ஸ்பெயின் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த காளை சண்டை கூட நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, தமிழகத்தில் ஏன் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க கூடாது?.
சமுதாயத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. எனவே, ஸ்பெயினைப் போல நம் நாட்டிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

நடுவண் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் கூறிய மேற்கண்ட தகவலை thatstamil.com இணையம் பிரசுரித்திருந்தது. இதற்கு அதன் வாசகர்கள் அனுப்பிய பதில்களும் கீழே தரப்பட்டுள்ளது...

பதிவுகள்

பதிவு செய்தவர்: இந்திய தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:09 pmவர வர நான் தமிழன் என்று சொல்லுவதர்க்கே கூச்சமாக உள்ளது .. யார் வேண்டுமானாலும் comments அனுப்பலாம் என்பதால் .. கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் அனுப்புகிறீர்கள் ... என்னதான் படித்தாலும் வேலை பார்த்தாலும் நம் நாகரிகம் வளரவே இல்லை .. திராவிட கட்சிகள் விதைத்த விதை இன்று விஷ செடிகளாக மரங்களாக முளைத்து ஒரு அறிவு சார் சமுதாயமாக இல்லாமல் ஒரு விலங்கு கூட்டமாக திரிந்து கொண்டிருக்கிறோம் .. தயவு செய்து எதையும் ஆராய்ந்து பின்னர் உங்கள் கருத்துக்களை கண்ணியனமான முறையில் தெரியப்படுத்துங்கள் நன்றி ..
------------------------------------------------------------
பதிவு செய்தவர்: ஹய்யோபதிவு செய்தது: 12 Aug 2010 3:01 pmநாகரீகம் பத்தி பேச வந்திடுச்சு ஒரு நாயி. உன்னை யாரு தமிழன்-ன்னு சொல்ல சொல்லி கட்டாயப்படுத்துனாங்க ? ..க்காலி! உன் கலாசாரமே தெரியாதவன் உன்னைய காட்டுமிரான்டின்னு சொல்றான் ! நம்ம பிள்ளைக கொந்தளிப்போட ஞாயத்த பேசுறாங்க... தம்பி, கொல்லன் பட்டுத்துணியால் தூசு துடைக்கலாம். ஏன்னா சிந்திக்கிடப்பது தங்கம்! குப்பைகளை வெளக்குமாறால தான் பெருக்க முடியும்! புத்தி இருக்க வேண்டிய இடத்துல புழுத்தி இருந்தா இப்படி தான்...!

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: ஈரோட்டன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:04 pmமொதல்ல மாட்டு கரி திங்கறத நிறுத்துப்பா நீ
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: enemyபதிவு செய்தது: 12 Aug 2010 2:01 pmமாட்டுக்கு கமெண்ட் அடிக்க என்னடா தேவன் தேவன் இருக்கு பசும் பொன் ஒரு அலி நீங்களும் சொல்லுங்க பெருமையா நாங்க ஒரு அலி தான் என்று

----------------------------------------------------
பதிவு செய்தவர்: சங்கலி தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:07 pmஜாதி பேரையே போடா பயப்படும் நீதானட அலி, ஈனப்பயலே ..உன் ஜாதி சொல்லு உன் யோக்கிதையை நாங்க சொல்லுறோம்

--------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: enemyபதிவு செய்தது: 12 Aug 2010 6:38 pmஉன் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: கண்டிய தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:44 pmமுதல்ல மாட்ட கொன்னு அதன் கறியை திங்கும் பயலுவளுக்கு சொல்லு..கொய்யால..சிக்கன் மட்டன் பிஷ் எல்லாம் என்ன மிருகம் இல்லையா , எவ்வளவேனும்னுனாலும் கொள்ளலாமா?
-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: வாண்டையார்பதிவு செய்தது: 12 Aug 2010 1:36 pmoh இதற்ட்காதான் உறங்கி கிடந்த தமிழினத்தின் வீரத்தை தாங்கி பிடித்து கொண்டிருக்கும் ஈழ தமிழர்களை கொன்றீர்களோ..தமிழன் வேர் அறுப்பட்ட இனம் என்று முடிவு கட்டி விட்டீரோ..முதலில் மாட்டை கொன்று கறி சாப்பிடும் மலையாளி களுக்கு உன் கருத்தை சொல்..அதுதான் நன்று.ஜல்லிக்கட்டில் மனிதனுக்கு தான் ஆபத்து , மாட்டுக்கு அல்ல..ஈன பயலே ..தமிழனின் மயிராய் கூட புடுங்க முடியாது உன்னால்..

-------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:57 pmஎன்னடா தேவன் தேவன் இருக்கு பசும் பொன் ஒரு அலி நீங்களும் சொல்லுங்க பெருமையா நாங்க ஒரு அலி தான் என்று

-------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சங்கலி தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 2:09 pmஉனக்கு ஜாதியே கிடையாதா ஈனப்பயலே ? நீ தண்ட அலி வீரம் இருந்த உன் ஜாதி பேரே போட்டு எழுதுட அலி பயலே

------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: அலி தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 6:45 pmஉன் பெயரில அலி என்று வருது . அலி இனதன்வனே

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: G தொண்டைமான்பதிவு செய்தது: 12 Aug 2010 1:31 pmஒரு இனத்தின் அடையாளங்களையும் மொழியையும் அழித்து விட்டால் நிரந்தர அடிமையாக மாற்றலாம் என்ற எண்ணமா? பார்பார பரதேசி கடைசி தமிழன் இருக்கும் வரை உன் ஆரிய கூட்டம் தென்னகத்தில் தலை எடுக்க முடியாது.." சங்கு அறுபட்டு ஓடும் காலம் உங்களுக்கு வெகு தொலைவில் இல்லை

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:28 pmடை ரமேஷ் உன் ஜாதியில் போட்டு கொடுப்பது, கூட்டி கொடுப்பது போன்றவை பல ஆண்டுகளாக இருக்கிறது..உடனே அதை கை விட்டு ஒரு நல்ல தமிழ் சமுதாயமாக எல்லா பார்ப்பானும் மாறவேண்டும்..
-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: மாயத்தேவர்பதிவு செய்தது: 12 Aug 2010 1:23 pmதினமும் பாகிஸ்தான் காரன் நம்ம ராணுவ வீரர்களை சுட்டு கொல்றானே அப்போ ராணுவத வாபஸ் வாங்கிர்ல்லாமே அங்கேயும் தமிழன் தான் சாகடிக்கிரிங்க முதல்ல இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வூலளுடன் மற்ற நாட்டை ஒப்பிட்டு பாருங்கடா நாதாரிகளா

-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தேவர்பதிவு செய்தது: 12 Aug 2010 1:06 pmபரதேசி நாய்களா போயி குதிரை பந்தயத்த நிறுத்துங்கடா முதல்ல வந்துட்டங்கே ஜல்லிகட்ட நிருதனுமுண்டு வடக்க வுல்லவன் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழன கொன்று குமிசுடிங்க இனி அவனின் வரலாற கொல்ல முடிவு பண்ணிடிங்க இது தமிழ்நாட்டின் முதல்வன் கலைங்கருக்கு ரெம்ப சந்தோசமா இருக்கும் மனிசன கொண்ட கட்சிகளெல்லாம் மிருக வதை தடை சட்டத்தை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை தமிழ் வுள்ளவரை தமிழனும் அவனுடன் பிறந்த வீரத்தையும் எந்த கொம்பனாளையும் அழிக்க முடியாது ஜல்லிகட்டை நிறுத்த முயலும் போது இந்தியன் என்ற அடையாளமே எங்களுக்கு வே...
--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தேவர் மகன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:05 pmஇவன் ஹோலி பண்டிகை என்று ஊரை நார அடிப்பான், பான்பராக் போட்டு ரோட்டை நார அடிப்பான்..அதை கேட்க வக்கில்லை..தமிழன் அடையாளத்தை அழிக்க மட்டும் சிங்களவனை vida வேகமாக செயல்படுத்து பார் இந்த பாப்பார பண்ணி , உன் ஜாதிக்கு வீரம் நாளே என்ன வென்று தெரியாது..

-----------------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: மானமிகுமக்களாந்தாபதிவு செய்தது: 12 Aug 2010 12:41 pm"சமுதாயத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை"சரி பாரம்பரியாதை விட்டு விடு !நீ போகிற எல்லாம் பொண்டாட்டி வச்சிக்கோ!ஆடை உடுத்தாதே !! ஊழல் பண்ணு .. சாப்பாடு சாப்பிடாதே ..நீ அடிக்கும் ஊழல் பணத்தை சாப்பிடு !!.நீயெல்லாம்.??ஒரு. ஆளா ??தமிழகத்தின் பாரம்பரியம் இந்தியாவின் பெருமை என்பது கூட இந்த .மனிதனுக்கு ..தெரியாமல் போகிவிட்டதே ??? தேர்தலில் போட்டி இடாமல் மந்த்ரிபதவி வகிப்பவன் பாரம்பரியத்தை பேசுகிறான்.ஏனென்றால் அவன் பாரம்பரியம் அப்படி. பாவம் உளறுகி...
-------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:20 pmஇவனுக்கு மாட்டுமேல இருக்குற அக்கறை,, தமிழக மீனவர் மேல இல்ல.! வாழ்க தமிழ் ! ஒழிக தமிழன்!

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:14 pmYes, we will ban this like spain. but avoid electronic voting machines like USA, UK.

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: இயக்குநரபதிவு செய்தது: 12 Aug 2010 12:08 pmDon't let animals suffer and die just to entertain you associated with our culture. “Tradition doesn’t make something Right”. info@voiceforanimals .info

------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சோழ கங்கன்பதிவு செய்தது: 12 Aug 2010 1:39 pmமுதலில் மாட்டை கொன்று அதை கறியை சாப்பிடுவனுக்கு சொல்லுடா உன் கருத்தை..நாதரி..மாடு மட்டும் தான் மிருகமா, சிக்கன், மட்டன், மீன் எல்லாம் கேவலமா? பாப்பார பரதேசி நாய்களா முதல்ல அதை தடை பண்ணிட்டு வாங்கடா

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: ஜாலி ரமேஷ்பதிவு செய்தது: 12 Aug 2010 12:08 pmஜல்லிக்கட்டு கட்டாயம் நடத்தப்படவேண்டும். அதே சமயம் வீரர்களுக்கு "மாடு கொம்பு proof jacket " வழங்கப்படவேண்டும்.
--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: கண்ணன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:06 pmதம்பி ஜெய்ராம் ரமேசு அடி வாங்குவ பாத்துக்கோ..

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 12:05 pmநீண்ட நாள் கொண்டாடிவரும் கோலி பண்டிகையை ரத்து செய்ய முடியுமா . !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சந்தானம்பதிவு செய்தது: 12 Aug 2010 12:04 pmஇது தமிழகளின் தனித்துவத்தை அளிக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்க வேண்டும். இவனகேல்லாம் ஜல்லிக்கட்டு என்றாலே என்னனு தெரியாது..
-------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: மிருக வதைபதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amடேய் மாங்கா மண்டையா மிருக வதைனா தமிழனுக்கு என்னான்னு கூட தெரியாதுடா, எங்க ஊர்ல ஒரு மாடு இறந்தா கூட அந்த வீடே இழவு வீடு மாதிரி ஆயிடும். ஆனா நீங்க எல்லாம் மட்ட அடிச்சு தின்னுட்டு மிருக வதைனு சொல்றீங்க. முதல நீங்க சொல்லற மாதிரி மாட்ட வச்சு ஜல்லிக்கட்டு வைக்கறதுக்கு பதிலா உங்கள வச்சு பண்ணனும்டா.... அப்புறம் இன்னொன்னு ஸ்பெயின்ல 100 வருசமாதான் மாட்டுச் சண்டை நடக்குது ஆனா எங்க ஊர்ல எப்ப இருந்து ஜல்லிக்கட்டு ஆரம்பிச்சதுன்னு கூட தெரியாத காலத்துல இருந்து நடக்குது..

------------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: முகில்பதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amஜல்லிகட்டில் மாடுபிடிக்க வீரத்துடன் செல்லும் இளைஞர்களுக்கு சில சமயத்தில் ஏற்படும் விபரீதங்கள் அனைவரும் அறிந்ததே. கேரளாவில் கோயில் திருவிழாவில் யானை வளர்த்த பாகனை தூக்கி போட்டு பந்தாடுதே, இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறதே, அந்த நிகழ்ச்சியெல்லம் முதலில் தடை செய்யுங்கள். லெட்சகனக்க மக்கள் கூடும் இடத்தில் காட்டு விழங்குகளை வைத்து நடத்தும் விழாக்களை விட ஜல்லிக்கட்டு ஒன்றும் ஆபத்தானதல்ல. மாடு அருகில் வருபவனை மட்டுமே முட்டும் யானை மதம் பிடித்தால் ஆட்களை விரட்டி விரட்டி முட்டும்
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: முகில்பதிவு செய்தது: 12 Aug 2010 11:47 amஜல்லிகட்டில் மாடுபிடிக்க வீரத்துடன் செல்லும் இளைஞர்களுக்கு சில சமயத்தில் ஏற்படும் விபரீதங்கள் அனைவரும் அறிந்ததே. கேரளாவில் கோயில் திருவிழாவில் யானை வளர்த்த பாகனை தூக்கி போட்டு பந்தாடுதே, இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறதே, அந்த சிகழ்ச்சியெல்லம் முதலில் தடை செய்யுங்கள். லெட்சகனக்க மக்கள் கூடும் இடத்தில் காட்டு விழங்குகளை வைத்து நடத்தும் விழாக்களை விட ஜல்லிக்கட்டு ஒன்றும் ஆபத்தானதல்ல. மாடு அருகில் வருபவனை மட்டுமே முட்டும் யானை மதம் பிடித்தால் ஆட்களை விரட்டி விரட்டி வெட்டும்

--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: சிங்கை தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:47 amஇவன் போன்ற ராகுல் அடிவருடி கத்துக்குட்டி கேனக்கிருக்கன்களால் காங்கிரஸ் கட்சி காணாமலே போகும். எண்டா தேங்காய் தலை மண்டையா? ஸ்பெயினில் உள்ள மாடுச்சண்டைக்கும் , ஜல்லிக்கட்டுக்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்துகொள் முதலில் அப்புறம் நீ பார்லிமெண்டில் இதுபற்றி பேசலாம். ஜல்லிக்கட்டு , கராத்தே , குத்து சண்டை போன்ற தொரு வீர விளையாட்டு, ஸ்பெயினில் உள்ளது போல மாட்டை ஈட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுவதல்ல ஜல்லிகட்டுதல்.
--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:44 amஆமாம்.... ஆமாம்.... சமுதாயத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் பழக்க வழக்கங்களை நீடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை... அத சரி தான்..... ஜெய்ராம் ரமேஷ் அவர்களே.......... நீங்க ஏன் இன்னும் ஆடை உடுத்திக்கிட்டு வெளிய வாறீங்க அதையும் அவுத்து போட்டுட்டு அம்மணமா வெளிய வர வேண்டுயது தானே... இதுவும் பழங்காலத்து பழக்க வழக்கம் தானே.........

------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: வதைபதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amவிலங்குகள் வதை வதை நு சொல்லுறாங்களே .....இவரு மாட்டு கரிய தின்னு தின்னு தானே மாடு மேரி இருக்காரு ...டுபுக்கு ..பேச வந்துடங்காய

------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:51 amநல்ல இருக்கும் .... அந்த ஆளு பண்ணினாலும் பண்ணுவார் ...

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: மகாதேவன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:38 amஸ்பெயின் சண்டைக்கும் தமிழன் போடற சண்டைக்கும் முக்கிய வித்தியாசம், அங்கே ஈட்டியை வைத்து மாட்டை குத்துவார்கள். ஜல்லிக்கட்டு வெறுங்கை போராட்டம். சேதாரம் மனுஷனுக்கு தான், மாட்டுக்கு இல்ல

--------------------------------------------------------------------------------

பதிவு செய்தவர்: மக்கள்பதிவு செய்தது: 12 Aug 2010 11:37 amஅவர்கள் நாட்டில் ..ஊழல் இல்லை ...உங்களால் முடியுமா.. தவறை மன்னிப்பார்கள் ...உங்களால் பழிவாங்க தானே முடியும் .... காங்கிரஸ் தலைமையை ...வேறு நபுர்க்கு கொடுக்க முட்யுமா ....பஞ்சு முட்டை மண்டை

-------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தந்தை பெரியார்பதிவு செய்தது: 12 Aug 2010 11:34 amஏன்டா வீரமணி நாயே? உன் கருத்து என்னடா.
--------------------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: தமிழன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:32 amஅது ஏன்டா எல்லாவனுமே ..எங்க விசயித்திலே..மூக்க நுனைகிரிங்க .......என்னடா வேணும் எங்க கிட்ட இருந்து

-----------------------------------------------------------------------
பதிவு செய்தவர்: அனந்தன்பதிவு செய்தது: 12 Aug 2010 11:58 amமுதல்ல நம்ம மக்கள் இந்த மாதிரி அறிவில்லாத மடையர்களுக்கு மதிப்பதை நிறுத்தனும் ஜப்பானில் கூட இந்த விளையாட்டு இருக்கிறது அவன் ஏன் நிறுத்தல
--------------------------------------------