Pages

Thursday, September 30, 2010

Wednesday, September 29, 2010

விரியன் பாம்பை காலால் மிதித்து குழந்தையை காப்பாற்றிய நாய்

செப்டம்பர் 29,2010,23:56 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95940

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே குழந்தை இருந்த அறைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை வீட்டில் வளர்த்த நாய் காலால் மிதித்து, எஜமானருக்கு காட்டி கொடுத்தது. சேலம் பனமரத்துப்பட்டி அடுத்த களரம்பட்டி தண்ணிகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (43). அவருக்கு நிவேதிதா (13),நிரஞ்சனி (8) ஆகிய குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் நிவேதிதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நிரஞ்சனி டி.வி.,பார்த்துகொண்டிருந்தார். அப்போது, 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு, அறைக்குள் புகுந்ததை பார்த்து நிரஞ்சனி அலறினார். அவர்கள் வளர்க்கும் நாய் குழந்தையின் சத்தம் கேட்டு, அறைக்குள் வந்தது. கட்டுவிரியன் பாம்பை கண்ட நாய் குரைத்துள்ளது. இருப்பினும் நகர்ந்து செல்ல முயன்ற பாம்பின் தலை மீது, நாய் தனது முன் காலை வைத்து, அழுத்தி பிடித்துக்கொண்டது. நாயின் காலில் சிக்கிய பாம்பு, வாலை வேகமாக அசைத்து ஆவேசமாக சீறியது. பாம்புடன் போராடிய நாய், வினோதமாக சத்தம்போட்டு வீட்டு எஜமானரை அழைத்துள்ளது. அதைக்கேட்டு ஓடி வந்த பாலசுப்ரமணியும் மற்றவர்களும், கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை அடித்து கொன்றனர்.

பாலசுப்ரணியம் கூறுகையில்,""இப்பகுதியில் விவசாய நிலங்கள் நிறைய உள்ளதால், எலி, தவளை ஆகியவற்றை பிடித்து சாப்பிட நிறைய பாம்புகள் வருகின்றன. அவை சில நேரம் வீட்டுக்குள் நுழைந்து விடுகின்றன. இயற்கையாகவே நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் உள்ளதால், வீட்டுக்குள் பாம்புகள் வருவதை கண்டுபிடித்து விடுகின்றன. இதுவரை வீட்டுக்குள் நுழைய முயன்ற மூன்று பாம்புகளை இந்த நாய் தடுத்துள்ளது. இந்த நாய் வினோதமாக சத்தம் போட்டு, பாம்பு வருவதை எங்களுக்கு உணர்த்தி விடும். நன்றி உள்ள ஜீவன் என்பதை நாய் நிரூபித்துள்ளது,'' என்றார். 

மாடுகளை பிடிக்க மேயர் உத்தரவு

செப்டம்பர் 29,2010,02:49 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95652

மதுரை: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மேயர் தேன்மொழி தலைமையில், கமிஷனர் செபாஸ்டின் முன்னிலையில் நடந்தது. ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து, அபராதம் விதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர்  சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன் கலந்துகொண்டனர்.

மாட்டு வண்டி பந்தயம்

கோவில் திருவிழா; மாட்டு வண்டி பந்தயம் 61 ஜோடிகள் கலந்து கொண்டன

கள்ளந்திரி, செப்.29-
http://dailythanthi.com/article.asp?NewsID=597248&disdate=9/29/2010&advt=2

மதுரை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாட்டுவண்டி பந்தயம்

மதுரை அழகர்கோவில் அருகே அ.வள்ளாலபட்டி நான்கு வளைவில் உள்ள நாகம்மாள் கோவில் பாலாபிசேகத்தையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பெரிய மாட்டு வண்டிகளாக 21 ஜோடிகளும், சிறிய மாட்டு வண்டிகளாக 40 ஜோடிகளும் மொத்தம் 61 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசை கொட்டங்குடி ராஜேஸ்குமார், 2வது பரிசு சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் உமா ஜெயபாலகிருஷ்ணன், 3வது பரிசு கல்லணை விஸ்வா, 4வது பரிசு அவனியாபுரம் பசும்பொன் ஆகியோரது மாடுகளுக்கு கிடைத்தன.

சின்ன மாடுகள்

சின்னமாடுகளுக்கான பந்தயம் இரு பிரிவுகளாக நடந்தது. முதல்பிரிவில் பாண்டிகோவில் பாண்டிச்சாமி, 2வது பரிசு சின்னமனூர் எஸ்.இ.தங்கம், 3வது பரிசு மேலூர் எஸ்.வி.பி.முருகன், 4வது பரிசு மலம்பட்டி காயத்ரி ஆகியோருக்கு சொந்தமான மாடுகளுக்கு கிடைத்தது.

இரண்டாவது பிரிவில் முதல்பரிசு கொட்டகுடி அன்பரசன், 2வது பரிசு நொண்டிக்கோவில்பட்டி சின்னையாத்தேவர், 3வது பரிசு கொட்டகுடி பால்சாமி தேவர், 4வதுபரிசு தேனி மாவட்டம் உப்பார்பட்டி பிரேம்நாத் ஆகியோரது மாடுகளுக்கு கிடைத்தன. மாட்டுவண்டி பந்தயத்துக்கான ஏற்பாடுகளை அ.வல்லாளபட்டி நான்குவளவு அம்பல இளைஞர்கள் செய்து இருந்தனர்.

Tuesday, September 28, 2010

நீலகிரியில் மின்சார வேலியில் சிக்கி யானை பலி

செப்டம்பர் 28,2010,15:35 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=94891

ஊட்டி : நீலகிரி மாவட்டம் பிதர்காடு வனப்பகுதியில் மின்சார வேலியில் சிக்கி பெண் யானை ஒன்று பலியானது. இது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் நீலகிரி வனப்பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இன்று இறந்த ‌யானையையும் சேர்த்து 4 யானைகள் பலியாகியுள்ளன. நீலகிரி வனப்பகுதியில் யானைகளுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் நிலவுகிறது.

Monday, September 27, 2010

மனித இனத்திற்கு பேருதவிகள் புரியும் பாம்புகள்

செப்டம்பர் 27,2010,23:18 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=94357



சென்னை மற்றும் புறநகரில் கடந்த சில ஆண்டுகளாக பாம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால், மக்களுக்கு பாம்புகள் குறித்து பய உணர்ச்சி அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஆண்டிற்கு 300 நல்லப் பாம்புகள், 500 சாரைப் பாம்புகள் மற்றும் இதர பாம்புகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினரால் பிடித்து அடர்ந்து காப்புக் காடுகளில் விடப்படுகின்றன. இருப்பினும் பாம்புகள் பற்றிய அச்சம் மக்களிடம் குறையவில்லை.
உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளது. மற்றவை விஷமற்றது. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.

நல்லபாம்பு: பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.

கட்டுவிரியன்: இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை, கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.

கண்ணாடி விரியன்: இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது 1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.

சுருட்டை விரியன்: இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள், கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.

தங்கத்தை விட மதிப்பானது விஷம்: வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கிராம் நல்லபாம்பு விஷம் 28 ஆயிரம் ரூபாய்; கட்டுவிரியன் விஷம் 30 ஆயிரம் ரூபாய்; கண்ணாடி விரியன் விஷம் 40 ஆயிரம் ரூபாய், சுருட்டை விரியன் 45 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.

விஷமற்ற பாம்புகள்: சென்னை மற்றும் புறநகரில் விஷமற்ற பாம்புகளான சாரைப்பாம்பு, நீர்சாரை அதிகம் காணப்படுகின்றன. இது தவிர வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு போன்றவை சென்னை நகரில் சிறிதளவே காணப்படுகின்றன.

பாம்புகள் பற்றிய தகவல்கள்: மனித இனத்திற்கு முன்பே தோன்றியவை பாம்புகள். இவைகள் பெரும்பாலும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். ஆனால், கண்ணாடிவிரியன், பச்சை பாம்பு போன்ற சில வகைகள் குட்டி போடும். நல்ல பாம்பு முட்டையிட்டு குட்டிகள் வெளி வரும் வரை பாதுகாக்கிறது. பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது. அதற்கு வெளிக்காது மற்றும் நடுக்காது அமைப்புகள் இல்லை. அதன் உடல் வளர்ச்சி காரணமாகவே அதன் மேற்தோல்களை உரித்துக் கொள்கின்றன.

பாம்பு கடி முதலுதவி: பாம்புகளில் நச்சு சுரப்பி, உமிழ்நீர் சுரப்பியிலிருந்து தோன்றியதாகும். விஷமுள்ள பாம்புகளின் கடி அனைத்துமே உயிரிழக்க செய்வதில்லை. விஷப் பாம்பு கடியின் பாதிப்பு உடலில் செல்லும் விஷத்தின் அளவைப் பொருத்தே அமையும். பாம்புக் கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தினால் ஏற்படுவதில்லை. அதிர்ச்சியினால் ஏற்படுவதாகும். எனவே, பாம்பு கடி பட்டவரை அதிர்ச்சியடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கடிபட்ட இடத்திற்கு மேல் ரத்த ஓட்டம் தடைபடாத வகையில் கட்டு போட வேண்டும். பாம்பு கடிபட்டவரை விஷமுறிவு சிகிச்சையளிக்கு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள் கண்டறிவது எப்படி:

* பாம்பின் வால் குறுக்கு வாக்கில் தட்டையாக அமைந்து இறுதியில் அகன்று இருந்தால் அது விஷமுள்ள கடற்பாம்பு வகையாகும்.

* பாம்பின் வால் பகுதி உருளை வடிவில் அமைந்து, வயிற்று புற செதில்கள் விரிந்து காணப்பட்டு, தலையில் சிறு சிறு செதில்கள் இருந்தால் அது விஷமுள்ள விரியன் பாம்பு வகைகள்.

* கண்ணுக்கும், மூக்கு துவாரத்திற்கும் இடையே சிறு குழி காணப்பட்டால் அது விஷமுள்ள குழிவிரியன் வகையாகும்.

* பாம்பின் முதுகின் நடுவில் உள்ள செதில்கள் அறுங்கோண வடிவில் அமைந்து, பிற செதில்களை விட பெரியதாக இருந்து, கீழ் உதட்டு செதில் பெரியதாக இருந்தால் விஷமுள்ள கட்டுவிரியன் வகையை சேர்ந்ததாகும்.

* வயிற்றுபுறம் விரிந்து காணப்படாமல் இருந்தால் அது விஷமற்ற பாம்புகளாகும்.

* தலைப் பகுதியில் பெரிய கவசத்தால் தகடுகள் அமைந்து சாதாரணமாக காணப்பட்டால் அவைகள் விஷமற்றவைகள்.

பாம்புகள் பற்றிய மூட நம்பிக்கை:

* நல்ல பாம்பு மகுடியின் இசைக்கேற்ப படம் எடுத்து ஆடும்.

* நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் ஒரே இனத்தை சேர்ந்த ஆண், பெண் பாம்புகள்.

* நல்ல பாம்பு மிகவும் வயதானவுடன் தன் தலையில் மாணிக்ககல் வைத்திருக்கும்.

* நல்ல பாம்பையோ அல்லது வேறு வகை பாம்பையோ கொன்றுவிட்டால் அதன் ஜோடி கொன்றவரை பழி வாங்கும் என்பது.

* பாம்புகள் வழவழப்பாக இருக்கும்.

* பாம்புகள் பாலை விரும்பி குடிக்கும்.

* மண்ணுளிப் பாம்புகளுக்கு இரண்டு தலைகள் உண்டு. அவைகள் கடித்தால் தொழுநோய் வரும்.

* பச்சைப் பாம்பு கண்களை கொத்தும்.

* கொம்பேறி மூக்கன் மனிதனை கடித்து கொன்று விட்டு, மரத்தில் ஏறி அந்த மனிதன் உடல் எரிப்பதை பார்க்கும். இவ்வாறு கூறப்படும் அனைத்தும் கட்டுக் கதைகள். சிலரால் பரப்பப்பட்ட மூட நம்பிக்கைகள்.

Sunday, September 26, 2010

Understanding dynamics of marine animals

Monday, Sep 27, 2010http://www.hindu.com/2010/09/27/stories/2010092758010300.htm

RAMANATHAPURAM: A. Mohamed Sevukkammal (16), Xth standard student of Government Higher Secondary School, Mandapam camp, is one among the few persons particularly students, who have visited Kurusadai island in Gulf of Mannar, which is considered as a paradise for marine biologists.

The visit on Sunday has made her to understand the dynamics of marine animals, particularly corals, many wrongly believe that it is not a living organism. Moreover, it has attracted her to devote a considerable time to work for creating awareness among the fisherfolk to protect the marine eco systems.

It was not that Sevukkammal was the only one, who vowed to spread the awareness of on marine life and the importance of contributing something towards the conservation of marine animals. Thanks to the Gulf of Mannar Marine Biosphere Reserve Trust (GOMBRT), which arranged men, machine and materials, including boats, for taking the school children to the “marine system hotpots”, as many as 100 students studying in different schools got the exposure of rare marine animals including corals, dolphin, sea cucumber, star fish and others.

“It has given me a great chance to understand the basics of marine life and the need to protect them. It is awesome to see the spectacular corals,” said Sevukkammal.

S. Balaji, Chief Conservator of Forests and Director, GOMBRT, told The Hindu that it had decided to organise eco awareness visit to Kurusadai island.

It would continue to take school children of coastal areas. It would help the COMBRT to take the message to their parents, most of them fishermen, through their children.

He said the students were given chance to see corals and other animals through snorkeling and other materials. They also got first hand information on scuba diving, underwater camera and others.

உயர்ரக நாய்களின் கண்காட்சி

திருவனந்தபுரத்தில் அனைத்து இந்திய உயர்ரக நாய்களின் கண்காட்சி
நகர மேயர் ஜெயன்பாபு தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், செப்.27-
http://dailythanthi.com/article.asp?NewsID=596701&disdate=9/27/2010&advt=2

வீட்டில் வளர்க்கப்படும் உயர்ரக நாய்களின் கண்காட்சி நேற்று திரு வனந்தபுரத்தில் நடந்தது. இதில் 200 வகையான உயர்தர நாய் கள் கலந்து கொண்டன.

நாய் கண்காட்சி

திருவனந்தபுரம் நாய் வளர்ப்போர் சங்கம் சார்பில், 23-வது அனைத்து இந்திய உயர் ரக நாய்களின் கண்காட்சி, நேற்று திருவனந்தபுரம் சந்திர சேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நகர மேயர் ஜெயன்பாபு இதில் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

டி.பி. சென்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டார். சங்கத் தலைவர் ஜோஸ் சாலக்குடி தலைமையில் நடைபெற்ற இந்த கண் காட்சியில் இந்திய நாய் வளர்ப்போர் சங்க நிர்வாகி வி.வி. சுப்பிரமணியன், திரு வனந்தபுரம் நாய் வளர்ப்போர் சங்க செயலாளர் ரமேஷ் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

200 நாய்கள்

கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட உயர் தர விதவித மான அழகான நாய்கள் இடம்பெற்றன. மாலையில் நடைபெற்ற கண்காட்சி நிறைவு விழாவில் சிறந்த நாய்களை தேர்வு செய்து கேடயம் வழங்கப்பட்டது.

மின்னல் தாக்கி 5 மாடுகள் செத்தன

தலைவாசல் அருகே இடியுடன் பலத்த மழை பெய்தது; மின்னல் தாக்கி 5 மாடுகள் செத்தன

தலைவாசல், செப்.27-
http://dailythanthi.com/article.asp?NewsID=596722&disdate=9/27/2010&advt=2

தலைவாசல் அருகே இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5 பசு மாடுகள் செத்தன.

இடியுடன் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மதிய வேளையில் அதிக வெப்பமும், மாலையில் ஆங்காங்கே மழையும் பெய்து வந்தது. இதேபோல நேற்று தலைவாசல் பகுதியில் காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

ஆனால், மதியம் 1 மணியளவில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தலைவாசல், தேவியாகுறிச்சி, ஆறகளூர், சித்தேரி, வரகூர், புத்தூர், வீரகனூர் ஆகிய பகுதிகளில் இந்த மழை பரவலாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாது பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சிறிய குட்டைபோல காட்சியளித்தன.

5 மாடுகள் செத்தன

இந்த நிலையில் சிறுவாச்சூர் அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்த விவசாயி ரத்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் 2 பசு மாடுகளை கட்டி இருந்தார். மழை காரணமாக கண்ணை பறிக்கும் வகையில் தோன்றிய மின்னல் திடீரென தென்னை மரத்தை தாக்கியது. இதில் அந்த 2 பசுமாடுகளும் பரிதாபமாக செத்தன.

இதேபோல தேவியாகுறிச்சி தெற்குமேடு பகுதியை சேர்ந்த ராமசாமி தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் 2 கறவை மாடுகளை கட்டி இருந்தார். திடீரென மரத்தில் மின்னல் தாக்கி அந்த 2 மாடுகளும் செத்தன. நாவக்குறிச்சியை சேர்ந்த விவசாயி காமராஜ் என்பவருக்கு சொந்தமான ஒரு பசுமாடும் மின்னல் தாக்கி செத்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரிகள் அங்கமுத்து, முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டித்தரும் கல்லூரி விரிவுரையாளர்

செப்டம்பர் 26,2010,23:56 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=93592

சண்டிகார் : ஜலந்தர் கல்லூரியில் பணியாற்றி வரும் விரிவுரையாளர் ஒருவர், சிட்டுக் குருவிகளுக்காக கூடுகளை உருவாக்கி, வினியோகித்து வருகிறார்.

நகரங்கள் மட்டுமல்லாது ஊரகப் பகுதிகளிலும், தற்போது மொபைல்போன் கோபுரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு,சிட்டுக்குருவி,தேனீக்கள் உள்ளிட்ட உயிரினங்களை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக, சிட்டுக் குருவிகள் இனம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.       பஞ்சாப் மாநிலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  கடந்த 10 ஆண்டுகளில், சிட்டுக் குருவிகள் 70 முதல் 80 சதவீதம் வரை அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

சிட்டுக் குருவிகள், வயல்காட்டில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் கூடுகட்டி வாழ்பவை. தற்போது, விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் உருவாகி  வருவதால், சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கும் இடமில்லாமல் போகின்றன.இதை கருத்தில் கொண்டு, சமூக ஆர்வலர்கள் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகளை உருவாக்கி வழங்கி வருகின்றனர்.ஜலந்தரில், கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் சந்தீப் சாகால், மரத்தாலான சிட்டுக் குருவிகளின் கூடுகளை உருவாக்கி, பறவை ஆர்வலர்களுக்கு வழங்கி வருகிறார்.

இதுவரை 350 க்கும் மேற்பட்ட கூடுகளை செய்து அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:பஞ்சாபில், மொபைல்போன் டவர்களால் சிட்டுக்குருவி இனம் தற்போது,அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுதவிர, தற்போது, விவசாயத்தில், பூச்சிக்கொல்லி உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை உண்ணும் பறவைகளும் அழிகின்றன. மேலும், பறவைகளுக்கு இயற்கையான வசிப்பிடங்கள் கிடைப்பதும் வெகுவாக குறைந்து வருகிறது.எனவே, சிட்டுக் குருவிகளுக்காக, மரத்தாலான  கூடுகளை  நானே செய்து, பறவையின  ஆர்வலர்களுக்கு அளித்து வருகின்றேன்.  இதை வாங்கி, வீடுகளிலோ, தோட்டங்களிலோ  வைக்கும் போது, சிட்டுக்குருவிகள் வந்து அதில் தங்கும். அவற்றிற்கு பாதுகாப்பான இருப்பிடம் கிடைக்கும்.இதை நானே செய்ய கற்றுக்கொண்டு,வாரத்திற்கு 10கூடுகள் வரை செய்து தருகிறேன்.மேலும்,சிட்டுக் குருவிகள் அழிவு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சந்தீப் சாகால் கூறினார்.

யானைகள் பலியான சம்பவம் : அமைச்சர் மம்தா வருத்தம்

செப்டம்பர் 25,2010,23:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=92836

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மோதி, யானைகள் பலியான சம்பவத்திற்கு, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே கடந்த புதன்கிழமை, வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி, ஏழு யானைகள் பரிதாபமாக பலியாகின. நாட்டையே அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், யானைகள் பலியான சம்பவத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது.இது என்னை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும் வனப்பகுதிகள் குறித்து ஆய்வு செய்து, அந்த இடங்களில் ரயில்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க ரயில் இன்ஜின் டிரைவர்கள் அறிவுறுத்தப்படுவர். மேலும் வனப்பகுதிகளில் ரயில்கள் 50 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வனத்துறை அமைச்சகத்துடன் இணைந்து ரயில்வே துறை செயலாற்றும். இந்த பிரச்னை தொடர்பாக ஆராய்வதற்கு விரைவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Saturday, September 25, 2010

வன விலங்குகளின் குடிநீர் தேவைக்கு வனப்பகுதியில் தடுப்பணைகள்

வன விலங்குகளின் குடிநீர் தேவைக்கு பழனி வனப்பகுதியில் 5 தடுப்பணைகள்

பழனி, செப்.26-
http://dailythanthi.com/article.asp?NewsID=596462&disdate=9/26/2010&advt=2

வன விலங்குகளின் குடி நீர் தேவைக்காக பழனி வனப்பகுதியில் 5 இடங் களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன.

தடுப்பணைகள்

பழனி வனப்பகுதியில் காட்டு யானைகள், கடமான்கள், புள்ளி மான்கள், காட்டு எரு மைகள், கேளையாடுகள், மயில்கள், செந்நாய்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக பழனி வனப்பகுதியில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் தடுப்ப ணைகள், குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இதன்தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் பழனியை அடுத்த தேக்கம்தோட்டம் வனப்பகுதியில் மூலிகை பண்ணையையொட்டி அமைந்துள்ள காட்டாற்றில் 3 இடங்களில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. இதே போன்று புளியம்பட்டி வனப் பகுதியிலும் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

மின்சார வேலி

மேலும் நடப்பு ஆண்டில் பழனி வனச்சரகம் பள்ளங்கி வனப்பகுதியில் காட்டு எருமைகள் மற்றும் காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க 2 கி.மீட்டர் தூரத்திற்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட உள்ளது.

இதே போன்று ஆண்டிப்பட்டி அருகிலும் யானைகள் அட்டகாசத்தை தடுக்க 2 கி.மீட்டர் தூரத்திற்கு சோலார் மின் வேலி அமைக்கப்பட உள்ளது. சோலார் மின்சார வேலி அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

யோகா செய்யும் பனிக்கரடி

செப்டம்பர் 25,2010,23:50 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=92942




லண்டன்:பின்லாந்து நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் பனிக்கரடி ஒன்று தினமும் 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. இதை பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.பின்லாந்து நாட்டில் உள்ள அட்டாரி மிருகக் காட்சி சாலையில், "சான்ட்ரா' என்ற ஆண் பனிக்கரடி ஒன்று உள்ளது.அந்த கரடி தினசரி காலை எழுந்ததும், 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. அது கால்களை நீட்டியும், கைகளை தரையில் ஊன்றியும், கண்களை ஒரே இடத்தில் நிலை நிறுத்தி யோகா செய்கிறது. பின்னர், கால்களை உயர்த்தி, கைகளால் காலை தொடுகிறது. பின்னர், கால்களை உயரே தூக்குகிறது. பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில், பல்வேறு கோணங்களில், கரடி செய்யும் இந்த யோகா பயிற்சி 15 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.இந்த அரிய காட்சிகளை பார்ப்பதற்கு, அந்த மிருகக் காட்சி சாலையில் தினமும் பெரும் கூட்டம் கூடுகிறது. ஆன்மிகம் சார்ந்த உடற்பயிற்சியான யோகாவை, கரடி எப்படி கற்றுக்கொண்டது என்றும், அதைப் பற்றி அதற்கு என்ன தெரியும் என்றும் பார்வையாளர்கள் வியப்போடு கேள்வி எழுப்புகின்றனர். 

ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம்-விளக்கம் கேட்கும் சுப்ரீம் கோர்ட்

தமிழக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம்-விளக்கம் கேட்கும் சுப்ரீம் கோர்ட்

சனிக்கிழமை, செப்டம்பர் 25, 2010, 9:59[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/09/25/tamilnadu-jallikattu-pongal-sc-law.html

டெல்லி: வருடத்தில் ஐந்து மாதங்கள் வரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் சட்டத்தில் தமிழக அரசு கூறியிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். கோகலே, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டை முறைப்படுத்துவதற்காக கொண்டு வந்த சட்டம் குறித்து நீதிபதிகள் சில கேள்விகளைக் கேட்டனர்.

அவர்கள் கூறுகையில், பொங்கல் பண்டிகை ஜனவரி மாதத்தோடு முடிந்து போகிறது. ஆனால் ஐந்து மாதங்கள் வரை ஜல்லிக்கட்டை நடத்த வகை செய்துள்ளீர்கள். அதாவது வருடம் முழுவதும் பொங்கலையும், ஜல்லிக்கட்டையும் கொண்டாட விரும்புகிறீர்கள். இது எப்படி சரியாகும்.

இந்த சட்டத்தில் அரசு சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று கூறினர். பின்னர் வழக்கை அக்டோபர் 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தல் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டை நடத்தலாம். அதற்காக அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகலை கடைப்பிடிக்க வேண்டும். ரூ. 2 லட்சம் காப்புத் தொகையை போட்டி அமைப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, September 24, 2010

3 எருமை மாடுகள் பலி

செண்பகராமன்புதூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 எருமை மாடுகள் பலி

ஆரல்வாய்மொழி, செப்.25-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=596270&disdate=9/25/2010&advt=2

செண்பகராமன்புதூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 எருமைமாடுகள் பலியாயின.

மின்கம்பி அறுந்தது

ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 42). இவர் 12 எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது பக்கத்து வீடுகளில் உள்ள சில மாடுகளையும் அழைத்துச் செல்வது வழக்கம்.

அதேபோல நேற்று காலையில் எருமைமாடுகளை மேய்ச்சலுக்காக அவ்வையாரம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோப்பிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எருமைமாடுகளும் கும்பலாக மேய்ந்து கொண்டிருந்தன.

மதிய வேளையில் திடீரென்று பலத்த காற்று வீசியது. அப்போது அந்த பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி மீது தென்னை மர மட்டை முறிந்து விழுந்தது. இதில் மின்சார கம்பிகள் உரசி அறுந்து விழுந்தன.

3 மாடுகள் பலி

அப்போது அந்த மின்சார கம்பி மேய்ந்து கொண்டிருந்த ஒரு எருமை மாடுமீது விழுந்தது. உடனே அலறியபடி அந்த எருமை மாடு கீழே விழுந்து இறந்தது. எருமைமாட்டின் சப்தம் கேட்கவே, அருகில் நின்ற 2 எருமை மாடுகள் ஓடிச்சென்று கீழே விழுந்து கிடந்த எருமைமாட்டை நாக்கால் வருடியது. இதில் அந்த 2 எருமைமாடுகள் மீதும் மின்சாரம் பாய்ந்து அவைகளும் இறந்தன.

இதை பார்த்துக்கொண்டிருந்த இசக்கியப்பன் மற்ற மாடுகளை அந்த பக்கம் செல்லவிடாமல் தடுத்து வெளியே ஓட்டிவந்தார். அதனால் மற்ற அனைத்து எருமை மாடுகளும் தப்பின. இதுபற்றி மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Wednesday, September 22, 2010

3 மலைப்பாம்புகள் சிக்கின

நாகர்கோவில், செப்.22-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=595615&disdate=9/22/2010&advt=2

இரணியல் பகுதியில் சுற்றித்திரிந்த 3 மலைப்பாம்புகள் பிடிபட்டன.

வலையில் மலைப்பாம்பு

இரணியல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் ஒரு மலைப்பாம்பு சிக்கிக் கிடந்தது. இதை நேற்று வேலைக்கு சென்ற தோட்டத் தொழிலாளர்கள் பார்த்து வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி சுந்தர்ராஜ் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வன அதிகாரி செண்பகராமன் தலைமையில் வன ஊழியர் சுந்தரதாஸ் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அங்கு வலையில் சிக்கிய மலைப்பாம்பை மீட்டனர். அது சுமார் 14 அடி நீளமும், 15 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

வில்லுக்குறியில் இதேபோல வில்லுக்குறி பாறையடி பகுதியில் இருந்தும் ஒரு மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். அது 11 அடி நீளமும், 14 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. அதேபோல வில்லுக்குறி சந்திப்பு பகுதியிலும் ஒரு மலைப்பாம்பு சிக்கியது. பிடிபட்ட 3 மலைப்பாம்புகளையும் வனத்துறையினர் பாதுகாப்பான மலைப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Monday, September 20, 2010

சிங்கம், புலிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது:சிங்கம், புலிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா வலியுறுத்தல்

பெங்களூர், செப்.21-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=595411&disdate=9/21/2010&advt=2

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலிகளின் இறப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெங்களூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா கூறினார்.

ஆர்ப்பாட்டம்

பெங்களூர் நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில், பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலிகள் இறப்பு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மல்லேஸ்வரத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா, பெங்களூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சோமசேகர், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனோகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பசுவதை தடை சட்டம்

இதைதொடர்ந்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் புலிகள், சிங்கங்கள் தொடர்ந்து இறந்து வருகின்றன. இந்த இறப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி கடந்த 15 நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகளிடம் நாங்கள் மனு வழங்கினோம்.

இந்த நிலையில் நேற்று கூட ஒரு புலி இறந்துபோய் உள்ளது. கர்நாடக அரசு பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் அந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. புலிகள் மற்றும் சிங்கங்கள் போன்ற மிருகங்கள் பசு மாடுகள் போன்றவற்றின் மாமிசத்தை தான் சாப்பிடுகின்றன.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில், அந்த காட்டு மிருகங்களுக்கு பசு மாடுகளின் மாமிசம் வழங்குவதை அரசு நிறுத்தி இருக்கிறது. புல்லை தான் அவைகளுக்கு போடுகிறார்கள். இப்படி செய்தால் அந்த மிருகங்கள் எப்படி உயிர் வாழும்?. பன்னரகட்டா பூங்காவில் சிங்கம், புலிகள் தொடர்ந்து இறந்து வருவதற்கு இது தான் முக்கிய காரணமாகும்.

எனவே, பன்னரகட்டா பூங்காவில் சிங்கம், புலிகள் இறப்பை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வனத்துறை அலுவலகத்தை நாங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராமச்சந்திரப்பா கூறினார்.

கிளியை தின்ன வந்தது கூண்டில் சிக்கிக் கொண்டது

பதிவு செய்த நாள் 9/21/2010 12:11:54 AM
http://dinakaran.com/chennaidetail.aspx?id=15877&id1=9

சென்னை : கிளிக் கூண்டில் புகுந்த நல்லபாம்பு கிளியை தின்றுவிட்டு, வெளியே வர முடியாமல் கூண்டில் சிக்கியது. கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வீட்டு முன்பு சிறிய கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ், கிளி மற்றும் பறவைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அங்கிருந்த கூண்டுக்குள் நல்லபாம்பு புகுந்தது. அது, கூண்டில் இருந்த 2 கிளிகளை தின்றுவிட்டது. இதனால் வயிறு பெருத்து, வெளியே வரமுடியாமல் கூண்டுக்குள் சிக்கியது பாம்பு. இதை கண்ட மற்ற பறவைகள் கூச்சலிட்டன.

இதுபற்றி வீட்டு உரிமையாளர், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரி முருகேசன் தலைமையில் வீரர்கள் வந்து, நல்லபாம்பை பிடித்தனர். அந்த பாம்பு 4 அடி நீளம் இருந்தது. பிறகு, வனத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் ஏடூர் காட்டில் பாம்பு விடப்பட்டது.

ஆறு குட்டி ஈன்ற அதிசய ஆடு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010,22:37 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88934


 
கருமத்தம்பட்டி: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, வெள்ளாடு ஆறு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்று ஆச்சரியப்படுத்தியது. கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் தட்டாம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். தனது வீட்டில் சில வெள்ளாடுகளையும், பசு மாடும் வளர்த்து வருகிறார். இவரிடமுள்ள ஒரு வெள்ளாடு, ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளை ஈன்றது. இந்த ஆட்டுக்கு இது தான் முதல் பிரசவம். பொதுவாக ஆடுகள் ஒரு பிரசவத்தில் இரண்டு குட்டிகள் ஈனும். அதிசயமாக, ஒரு சில ஆடுகள் மூன்று குட்டி வரை ஈன்றுள்ளன. ஆனால், முதல் பிரசவத்திலேயே ஆறு குட்டிகளை ஈன்ற இந்த ஆட்டையும், அதன் குட்டிகளையும் அப்பகுதியினர் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.

Sunday, September 19, 2010

புதிய நாட்டுக்கோழி... அடுத்தாண்டு குழம்புக்கு ரெடி

http://dinakaran.com/chennaidetail.aspx?id=15795&id1=9
பதிவு செய்த நாள் 9/20/2010 12:13:44 AM

சென்னை : கறிக்காக பிராய்லர் கோழிகளையும், முட்டைக்காக ஒயிட் லகான் கோழிகளையும் வளர்க்கின்றனர். உலக அளவில் இந்தியா முட்டை உற்பத்தியில் 3வது இடமும், கறிக்கோழி உற்பத்தியில் 4வது இடமும் பெற்றுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3 கோடியே 25 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பிராய்லர் கோழி, ஒயிட் லகான் கோழிகளை விட நாட்டுக் கோழிகளையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால், நாட்டுக் கோழிக்கு எப்போதுமே தட்டுப்பாடு உள்ளது. கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறைந்ததே இதற்கு காரணம். இதைப்போக்க கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் புதிய முயற்சி எடுத்துள்ளது. அதன்படி, கலப்பின நாட்டுக்கோழி உருவாக்கப்பட்டு வருகிறது.

அதாவது, அமெரிக்காவின் ‘ரோடு ஐலேண்ட்’ தீவில் வசிக்கும் சிவப்பு போந்தா கோழியையும், மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்துள்ள ஒயிட் லகான் கோழியையும் இணைத்து கலப்பின முறை மூலம் புதிய நாட்டுக்கோழியை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. இந்த கலப்பின உற்பத்திக்கான 5வது தலைமுறை இப்போது நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த புதிய நாட்டுக்கோழி அறிமுகப்படுத்தப்படும்.

இதுகுறித்து, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்
பிரபாகரன் கூறியதாவது:

நாட்டுக்கோழி ஆண்டுக்கு 60 முட்டைகளும், ஒயிட் லகான் கோழி 320 முட்டைகளும் இடும். இப்போது, உருவாக்கப்படும் புதிய கோழி ஆண்டுக்கு 220 முட்டைகள் இடும் திறன் கொண்டது. இவை சாதாரண நாட்டுக்கோழி முட்டையை போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும்.நாட்டுக்கோழியை போல் நிறமும், எடையும் சற்று அதிகமாக இருக்கும். புரத சத்தும் ஒரே அளவில் இருக்கும். கறியும், நாட்டுக்கோழி போன்றே சுவையாக இருக்கும்.

நாட்டுக்கோழி கறி மற்றும் முட்டை தட்டுப்பாட்டை போக்கவே இந்த புதிய கோழி உருவாக்கப்படுகிறது. எனவே, இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். கலப்பினத்தில் ஈடுபடுத்தக்கூடிய சிவப்பு போந்தா கோழிகள், எப்போதும் மந்தமாக நின்ற இடத்திலேயே இருக்கும். யார் வேண்டுமானாலும் பிடித்து விடலாம்.

இதை ஒயிட் லகான் கோழிகளுடன் இணைப்பதால், உருவாகக்கூடிய புதிய நாட்டுக்கோழி படு சுறுசுறுப்பாக இருக்கும். யாராலும், அவ்வளவு எளிதாக பிடிக்க முடியாது. இந்த புதிய கோழியை அடுத்த ஆண்டு முதல் சாப்பிடலாம். இவ்வாறு பிரபாகரன் கூறினார்.

முட்டை... சைவமா? அசைவமா?

எந்த கோழியாக இருந்தாலும், பருவம் வந்தவுடன் அதன் வயிற்றில் தானாகவே முட்டைகள் உற்பத்தியாகும். இந்த முட்டைகள் வளர்ச்சி அடைந்து தானாகவே வெளிவரும். கரு (உயிரணு) இருக்காது. இந்த முட்டைகளை தான் ‘சைவ முட்டை’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒயிட் லகான் கோழிகள் இதுபோலதான் முட்டைகளை இடுகின்றன.

கோழி சேவலுடன் (ஆண் கோழி) கலவையில் ஈடுபட்ட பின்பு உருவாகும் முட்டையில் கரு (உயிரணு) இருக்கும். இந்த முட்டைகள் தான் குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டது. இவற்றை ‘அசைவ முட்டைகள்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Saturday, September 18, 2010

Tiger joins the Dog Squad

Sunday, Sep 19, 2010
http://www.hindu.com/2010/09/19/stories/2010091953510200.htm




TIRUCHI: Five-month old ‘Tiger' is the new addition to the Dog Squad of the Tiruchi City Police.

The female dog, belonging to the Labrador Retriever breed, has been bought as a replacement for the aged ‘Rosy', a German Shepherd, which retired last year after putting in nine-and-half years of service.

A handler from the City Police has been exclusively assigned with the task of taking care of the ‘Tiger' at the modern kennel situated inside the sprawling Armed Reserve Ground in K.K. Nagar here.

The young canine is being given basic training in obedience at the kennel and would soon be imparted specialised training for a period of six months in “smell work” to detect narcotic substances.

Little ‘Tiger' would be inducted into active police work from April next year upon completion of specialised training and would be solely utilised for detecting narcotic substances just as its predecessor ‘Rosy'.

The training would be in such way that the dog is able to sniff and detect narcotic substances hidden inside a building or concealed inside a luggage / parcel, human body, in vehicle and beneath the ground, say handlers attached to the Dog Squad.

A systematic diet schedule is being followed for ‘Tiger' which is fed with half litre milk, about 100 grams of dog food and a boiled egg in the morning.

The afternoon diet comprises 250 grams of rice, little quantity of beef and vegetables.

The menu for dinner is half litre milk, two bread slices and a boiled egg. In addition to this, the puppy is being fed with vitamin tonics.

With ‘Rosy' retired from service and ‘Tiger' yet to be formally inducted in its place, the Dog Squad of the City Police has at present the lone ‘Julie', a German Shepherd sniffer dog specialised in detecting explosive substances. Though retired from service, Rosy is still being looked after at the kennel.

Tiger skin seized

http://www.hindu.com/2010/09/19/stories/2010091951340400.htm
Sunday, Sep 19, 2010

CHENNAI: Officials of the Air Cargo Intelligence Unit seized a tiger skin came in a parcel from London at Airport Sorting Office at Meenambakkam on Friday.

An official release said one post parcel from London was detained by the officials on suspicion. Examination of it revealed the presence of a tiger skin with a skull, measuring head to tail eight feet, leg to leg six feet with a body width of 2.10 feet.

கடல் அட்டை பிடித்தால் அடையாள அட்டை ரத்து

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88068
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010,06:02 IST 

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடலில் கடல் அட்டை பிடிக்கும் மீனவர்களின், அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில், கடல்வாழ் உயரினங்கள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. வனத்துறை, வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை, கடலோர காவல்படை, கடற்படையினர் ரோந்தையும் மீறி, கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இக்கடத்தல் பின்னணியில், மீனவர்கள் சிலர் இருப்பதே இதற்கு காரணம். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போர்வையில், மறைமுகமாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை அபகரிக்கும் கும்பல் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக தடையில் உள்ள கடல் அட்டைகள் சேகரிப்பில், உலக அளவில் பெரிய "நெட்வொர்க்' நடந்து வருகிறது. இதற்கு வனத்துறையினரும் முழு அளவில் உதவி வருகின்றனர். இதற்காக எவ்வளவு முதலீடு செய்தாலும், கடல் அட்டை சேகரிப்பு என வரும் போது, அதில் மீனவர்களின் பங்கு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதி மீனவர்களை கடத்தல் கும்பல் பயன்படுத்தி வருகிறது. சந்தேகத்தை திசை திருப்பும் விதமாக மீனவ பெண்களையும் இதில் பயன்படுத்தி வருகின்றனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் , கடல் அட்டை சேகரிப்பில் மீனவர்கள், ஈடுபட்டால் அவர்களின் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராமநாதபுரத்தில் நடந்த கடலோர பாதுகாப்பு கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Friday, September 17, 2010

புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் கருணாநிதி

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010,15:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86772

சென்னை : இந்தியாவில் மிகவும் அரிதான வெள்ளைப் புலிகள் தற்போது ஏறத்தாழ 100 மட்டுமே உள்ளன. புதுடில்லியிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு வழங்கி, ஓர் ஆண் வெள்ளைப் புலியும், ஒரு பெண் வெள்ளைப் புலியும் அங்கிருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பெறப்பட்டன. அந்த வெள்ளைப் புலிகள் மூலம் கடந்த ஜூன் மாதத்தில் ஓர் ஆண் வெள்ளைப் புலிக் குட்டியும், இரண்டு பெண் வெள்ளைப் புலிக் குட்டிகளும் பிறந்துள்ளன. அந்த வெள்ளைப் புலிக் குட்டிகளில் ஆண் புலிக் குட்டிக்கு சோழப் பேரரசின் சின்னமாகப் புலி விளங்கியதால், சோழப் பேரரசின் நினைவாக செம்பியன் என்ற பெயரும், ஒரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு - இந்திரா காந்தி நினைவாக இந்திரா என்றும், மற்றொரு பெண் வெள்ளைப் புலிக் குட்டிக்கு - காந்தியின் தென்னாப்பிரிக்க சுதந்திரப் போரில் தீரம் காட்டிய வீரப் பெண்மணி தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் நினைவாக வள்ளி  என்றும் முதல்வர் இன்று பெயர்களைச் சூட்டினார்.

சத்துணவு முட்டையில் கோழிக்குஞ்சு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010,17:41 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86777

நாகர்கோவில் : களியக்காவிளை அருகே, சத்துணவுடன் கொடுப்பதற்காக வேகவைக்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு இருந்ததால், ஒருநாள் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோட்டில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கான்ட்ராக்டர் மூலம் முட்டை சப்ளை செய்யப்படுகிறது. கடந்த 16ம் தேதி இந்த கான்ட்ராக்டர் கொடுத்த முட்டைகள் வேகவைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து ஆசிரியர்களும், சத்துணவு ஊழியர்களும் முட்டைகளை சோதனை செய்தனர். சில முட்டைகள் கெட்டிருந்தன. சில முட்டைகளில் குஞ்சு பொரிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. இதைத்தொடர்ந்து, அறையில் இருந்த பிற முட்டைகளையும் சோதனை செய்த போது, அதிலும் முட்டைகள் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து, அன்று ஒரு நாள் மட்டும் முட்டை "கட்' செய்யப்பட்டது. இது தொடர்பாக கான்ட்ராக்டர் மீது ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை தோலுடன் நான்கு பேர் கைது

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010,03:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=86690

சத்தியமங்கலம்: சத்தி ஆசனூரில் சிறுத்தை தோல் கடத்தப்படுவதாக அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை முதலே வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வாகன சோதனை நடந்தது. நேற்று மதியம் மாருதி ஆம்னி வேனில் நான்கு பேர் வந்தனர். சந்தேகத்தின் பேரில் காரை சோதனை செய்ததில் ஒரு சிறுத்தை தோல் இருந்தது.காரியில் இருந்த பெங்களூருவை ÷ச்ந்த கோவிந்தராஜ் (38), மதுக்கர் (36), உள்ளான் (34), பாலமுருகன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

Thursday, September 16, 2010

5 to 7 per cent growth in egg-laying birds projected

http://www.hindu.com/2010/09/17/stories/2010091751790500.htm
Friday, Sep 17, 2010



CHENNAI: Five to seven per cent of growth in egg-laying birds and 12 to 13 per cent of growth in meat-yielding birds has been projected for this year in the country said P.K. Shukla, Joint Commissioner (Poultry), Department of Animal Husbandry, Dairying and Fisheries, Government of India, here on Thursday.

Speaking to journalists at the annual conference and national symposium of the Indian Poultry Science Association, Dr. Shukla said the projection was the outcome of a preliminary analysis of the census data conducted by the Department. The nation-wide census was conducted in 2007 and the Department was getting data from every State. The census is conducted once in five years, he said.

The Department is also carrying out Avian Influenza Vulnerability Mapping throughout the country. The work began in 2006.

“It is an ongoing work, which is carried out in all the States in the country,” he said. To a question on whether there were any reports of Avian Influenza in the Southern states, Dr. Shukla said so far there have been no complaints in the region.

M.P. Nirmala, Secretary, Animal Husbandry, Dairying and Fisheries Department, said the leftovers from a poultry farm could be used for making bio-fuel and the poultry waste should be properly disposed of as compost.

The total value of poultry sector in the country is Rs.350 billion, which accounted for 10.5 per cent of the total value of the livestock output and 2.6 per cent of the agricultural sector as a whole, said P. Thangaraju, Vice Chancellor, Tamil Nadu Veterinary and Animal Sciences University.

More than three million people depend directly or indirectly on this sector for income and employment. The poultry sector was growing at a much faster rate than any other element of the crop and livestock sector, he added.

Renewed enthusiasm for Vandalur zoo's animal adoption programme

September 17, 2010

The Vandalur Zoo authorities were able to generate nearly Rs. 8.20 lakh in the last one-and-half-months through the animal adoption programme.

Talking to The Hindu K.S.S.V.P. Reddy, Chief Conservator of Forests and Zoo Director, said there was renewed enthusiasm about the programme after the adoption of a tiger by Rotaract Club of A.M. Jain College and the members adopted the big cat for a day by paying Rs. 393.25. Then one by one the animals were adopted by individuals.

In the first week of this month, the Tamil Nadu Tourism Development Corporation (TTDC) adopted three white tiger cubs by paying Rs. 3.78 lakh for a period of one year. The latest in the line was the adoption of an elephant, a leopard and a tiger by Velammal Schools. The school authorities on Thursday paid Rs. 3.22 lakh for adopting the three flagship species for a period of one year.

Mr. Reddy said the amount would be spent only to feed the animals. The zoo authorities have fixed amount for adopting different animals. They have worked out the feed expenses for each animal per day which would be – a lion or a tiger Rs. 393.25; for Asian elephant Rs. 267.65; birds (regular) Rs.15 and migratory birds Rs.18.

Actually the programme was launched last year when a person gave Rs. 300 and adopted an animal for a day. But, after that the programme did not evoke the expected response. Again in August this year the authorities put in extra efforts to popularise the programme, which evoked tremendous response from the people.

The idea of Animal Adoption programme is to create awareness among people and to develop compassion and bonding between the human beings and wildlife, Mr. Reddy said. The idea is certainly not to generate funds, he said.

புலி, சிறுத்தை, யானை தனியார் பள்ளி தத்தெடுப்பு

http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6891
17.09.2010

கூடுவாஞ்சேரி : வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, சிறுத்தை, யானை ஆகியவற்றை ஒரு ஆண்டுக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தத்தெடுத்துள்ளது.

வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை தனியார் தத்தெடுக்கும் திட்டத்தை கடந்த மாதம் அரசு அறிமுகப்படுத்தியது. சென்னையில் உள்ள  வேலம்மாள் கல்வி அறக்கட்டளை (வேலம்மாள் பள்ளி நிர்வாகம்) சார்பில், பூங்காவில் உள்ள புலி, சிறுத்தை, யானை ஆகிய விலங்குகளை ஒரு ஆண்டுக்கு தத்தெடுத்தது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கு தொகை 1 லட்சத்துடன் 3,22,533 க்கான காசோலையை, கல்வி அறக்கட்டளை நிர்வாக அதிகாரி வேல்முருகன் சார்பில் பள்ளியின் முதன்மை முதல்வர் கைலாசம் மற்றும் மாணவ, மாணவிகள்  உயிரியல் பூங்கா இயக்குனர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டியிடம் வழங்கினார்.

Tuesday, September 14, 2010

An addition to Fire Service dog squad



http://www.thehindu.com/news/cities/Chennai/article646161.ece

This fluffy canine may have its roots in the Swiss Alps but will soon be heading to the ‘Queen of Hill Stations' in the State on a rescue mission.

Meet Remo, a 45-day-old Saint Bernard that was christened and inducted into the Tamil Nadu Fire and Rescue Services (TNFRS) dog squad on Tuesday morning. The canine is the sixth and the only one of its breed in the dog squad which was formed in October last year to rescue people trapped in collapsed buildings and landslips.

Introducing Remo to mediapersons as a ‘wonderful addition' to the squad, TNFRS Director R.Nataraj said that the puppy was sourced after a long search for a pedigree Saint Bernard. “Initially, he will undergo training at our State Training Centre in Tambaram in an air-conditioned facility and will follow specific food regimes under the direct supervision of two dog trainers brought in from Ooty,” he said at his office in Egmore.

The new member of the dog squad was brought to the Director's office in a new air-conditioned jeep of the Fire department.

Belonging to a breed of working dogs used in rescue operations, Remo will do just that in the TNFRS dog squad in Ooty after the six-month training here.

“The weather there would be suitable for him and he will assist our personnel in rescuing victims in case of landslips and building collapses in the hills,” Mr. Nataraj added.

According to Remo's breeder Jeyaram of Pets Pedigree in Alwarpet, the canine would grow up to 34 inches in height, 92 kg in weight and can be fully trained for rescue in 120 days. After the training, Remo would be able to detect a human trapped even 20 ft below.

சோளக்காட்டுக்குள் யானைகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே சோளக்காட்டுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் தீப்பந்தம் காட்டி பொதுமக்கள் விரட்டினர்

புஞ்சைபுளியம்பட்டி, செப்.15-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=594190&disdate=9/15/2010&advt=2

புஞ்சை புளியம்பட்டி அருகே சோளக்காட்டுக்குள் புகுந்த 2 யானைகள் விடிய விடிய அட்டகாசம் செய்தன. தீப்பந்தங்களை காட்டி பொதுமக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

யானைகள் அட்டகாசம்

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உயிலம்பாளையத்தில் அங்கணகவுண்டர் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் அவர் சோளம் பயிரிட்டு இருந்தார். சோளக்கதிர் விளைந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.
உயிலம்பாளையம் பண்ணாரி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் உயிலம்பாளையம்- கள்ளிப்பட்டி ரோட்டை கடந்து அங்கணகவுண்டரின் சோளக்காட்டுக்குள் புகுந்தன. அங்கு நன்றாக விளைந்திருந்த சோளக்கதிர்களை பிடுங்கி நாசப்படுத்தியும், வேரோடு பிடுங்கி எறிந்தும் அட்டகாசம் செய்தன.

பொதுமக்கள் விரட்டினர்

சோளக்காட்டுக்குள் யானைகள் அட்டகாசம் செய்வது அறிந்த அங்கணகவுண்டர் தோட்டத்துக்கு விரைந்து வந்தார். இது பற்றி தகவல் பரவி உயிலம்பாளையம் பொதுமக்களும் அங்கு திரண்டு வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசுகளை வெடித்தார்கள் ஆனால் யானைகள் காட்டை விட்டு வெளியே போகாமல் அங்கும் இங்கும் ஓடி சோளப்பயிர்களை நாசம் செய்தது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சோளக்காட்டுக்குள் நுழைந்த யானைகள் இரவு முழுவதும் சோளப்பயிர்களை நாசம் செய்தன. அதன் பிறகு பொதுமக்கள் தீப்பந்தங்களை கொளுத்தி யானைகளை விரட்டி அடித்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு யானைகள் சோளக்காட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன.

இது பற்றி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். வனப்பகுதியின் ஓரத்திலேயே யானைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி கிராமத்துக்குள் வந்து விடுகின்றன. அதனால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் அப்போது கோரிக்கை விடுத்தார்கள்.

கால் ஒடிந்த நிலையில் கிடந்த மயில் குஞ்சு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கால் ஒடிந்த நிலையில் கிடந்த மயில் குஞ்சு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

ஈரோடு, செப்.15-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=594191&disdate=9/15/2010&advt=2

ஈரோடு கருங்கல்பாளையத்தில் கால் ஒடிந்த நிலையில் கிடந்த மயில் குஞ்சு மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கால் ஒடிந்த மயில் குஞ்சு

ஈரோடு கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்.நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் அந்தப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை கருங்கல்பாளையம் பகுதி வழியாக செல்லும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு ஏதோ பறவை ஒன்று பறக்க முடியாமல் சிறகுகளை அடித்து கொண்டு இருந்தது. உடனே லட்சுமணன் அருகில் சென்று அந்த பறவையை எடுத்து பார்த்தார். அப்போது அது மயில் குஞ்சு என்பதும், அதன் ஒரு கால் ஒடிந்து இருப்பதால், அதனால் நடக்கவும், பறக்கவும் முடியாமல் இருப்பது தெரியவந்தது.

வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

மயில் குஞ்சை எடுத்து வந்த லட்சுமணன் அதை அந்தப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கோபாலிடம் கொடுத்தார். அவர் மயில் குஞ்சின் காலில் மருந்து வைத்து கட்டு போட்டார். பின்னர் இது குறித்து அவர் ஈரோடு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் கருங்கல்பாளையத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், கால் ஒடிந்த நிலையில் இருந்த மயில் குஞ்சை பெற்று, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள். கால் ஒடிந்த இந்த மயில் குஞ்சுக்கு வனத்துறை அதிகாரிகள், கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கடலூர் கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் செத்து கிடக்கும் பன்றிகள்

கடலூர் கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் செத்து கிடக்கும் பன்றிகள்
நோய் பரவும் அபாயம்

கடலூர்,செப்.15-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=594070&disdate=9/15/2010&advt=2

கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் செத்து கிடக்கும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

5000 பன்றிகள்

கடலூரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பன்றிகாய்ச்சல் பீதியால் கடலூர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் அனைத்தையும் அழிக்கவேண்டும் என பொது மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பின் நகராட்சி கூட்டத்தில் பன்றிகளை அழிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கென தனி குழுக்களும் அமைக்கப்பட்டது. அதை அடுத்து அந்த குழுவினர் பன்றிகளை அகற்ற முற்பட்டபோது பன்றிகளை வளர்ப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி தொடங்கிய அன்றே நிறுத்தப்பட்டது. இதனால் பன்றிகளின் எண்ணிக்கை கடலூரில் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது கெடிலம் ஆற்றங்கரை ஓரம், புதுப்பாளையத்தில் இருந்து உண்ணாமலை செட்டி சாவடி வரை சுமார் 5000 பன்றிகள் சுற்றி திரிகின்றன. மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவைகளை சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் வளர்த்து வருகின்றனர்.

தூர்நாற்றம்

இந்நிலையில் புதுபாளையம் பகுதியில் நேற்று பயங்கர தூர்நாற்றம் வீசியது. ஏன் இப்படி நாற்றம் அடிக்கின்றது என்று அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பகவந்தசாமி மடத்துக்கு பின்னால் உள்ள கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் சென்று பார்த்தபோது அங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் அங்கும் இங்குமாக செத்து கிடந்தன இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பன்றி வளர்ப்பவர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாது:-

புதுப்பாளையத்தில் சுமார் 30 வீடுகளை சேர்ந்தவர்கள் பட்டிகளை வைத்து பன்றிகளை வளர்த்து வருகின்றோம். இதன் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக எங்களது பன்றிகளின் கண்களில் நீர் பொங்கி வருகிறது அதன் பின் அப்படியே செத்து செத்து விழுகின்றன. இது என்ன நோய் என்றும் எங்களுக்கு தெரியவில்லை.மேலும் செத்த பன்றிகளின் உரிமையாளர்கள் சிலர் மட்டுமே அதனை புதைக்கின்றனர் இன்னும் சிலர் அதனை அப்படியே இழுத்து சென்று கெடிலம் ஆற்றுக்குள் போட்டு விடுகின்றனர்.

செத்த பன்றிகள்

பலர் பன்றிகளை புதைக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் அழுகி தூர்நாற்றம் வீசுவதோடு மற்ற பன்றிகளுக்கும் இந்நோய் பரவிவருகின்றது. இது பற்றி சம்மந்த பட்டவர்களிடம் சொன்னால் செத்த பன்றி எங்களுடையது இல்லை என்று மழுப்பி விடுகின்றனர். எங்களால் இந்த தூர்நாற்றத்தில் சரியாக சாப்பிட கூட முடிவில்லை எனவே எங்களுக்கு மாற்று வேலை ஏதாவது அரசு செய்து கொடுத்தால் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். பன்றிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பன்றிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றி அறிய அதனுடைய ரத்த மாதிரி தேவை படுகிறது. ஆனால் ரத்த மாதிரி எடுக்க அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

100-க்கும் மேற்பட்ட பன்றிகள் அந்த பகுதியில் செத்து கிடக்கின்றன அப்படி இருந்தும் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துபோய் இது சம்பந்தமாக எங்களுக்கோ அல்லது நகராட்சிக்கோ இது வரை எந்த தகவலும் அவர்கள் தெரிவிக்கவில்லை இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால் பலருக்கு காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் நமக்கு பன்றி காய்ச்சல் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்று பீதியடைந்து வருகின்றனர்.

மாற்று வேலை

எனவே பன்றிகளுக்கு வந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் முன் பன்றிகளை சுகாதாரமான முறையில் வளர்க்க உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு மாற்று வேலை ஏதாவது அரசு ஏற்படுத்தி கொடுத்து பன்றிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

40 ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு தரும் ஆஞ்சநேய பக்தர்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2010,00:03 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84681

செஞ்சி : செஞ்சியில் ஆஞ்சநேய பக்தர் ஒருவர் 40 ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு சேகரித்து வழங்கி வருகிறார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை உள்ளே மலையும், காடுகளும் சூழ்ந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கில் குரங்குகள் உள்ளன. பக்தர்கள், குரங்குகளுக்கு பழங்கள், தின்பண்டங்களை கொடுக்கின்றனர்.

பகலில் பக்தர்கள் உணவளித்தாலும், அதிகாலையில் பசியோடு இருக்கும் குரங்குகளுக்கு செஞ்சி எம்.ஜி.ஆர்., நகரில் வசிக்கும் 80 வயது ஆஞ்சநேய பக்தர் பார்த்தசாரதி, கடந்த 40 ஆண்டுகளாக உணவு அளித்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் செஞ்சி தாலுகா பெரும்புகை கிராமம். தனது இளம் வயதில் செஞ்சிக் கோட்டையில் நடந்த சீரமைப்பு பணிக்கு கூலி வேலைக்கு வந்தார். அப்போது ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒற்றையடி பாதையாகவும், பக்தர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவும் இருந்தது. ஆஞ்சநேயர் பக்தரான பார்த்தசாரதி தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜைகளை செய்தார். சில ஆண்டுகளில் குரங்குகள் மீது பரிவு ஏற்பட்டு, கோவிலுக்கு செல்லும் போது வீட்டில் இருந்து தன்னால் முடிந்த உணவை குரங்குகளுக்கு கொண்டு சென்றார்.

நாளடைவில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பின், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை பழக்கடை, காய்கறி கடைகளில் விற்பனையில் இருந்து ஒதுக்கி வைக்கும் பழம், காய்கறிகளையும், பேக்கரியில் வீணாகும் பிஸ்கட்டுகளையும் சாக்குப்பையில் சேகரிக்கிறார். இவற்றுடன், வீட்டில் சமைக்கும் உணவுடன் அதிகாலை 6 மணிக்கு கோவிலுக்கு எடுத்து வருகிறார். அங்கு, இவர் எழுப்பும் ஒலியை கேட்டு மலையில் இருந்து குரங்குகள் கூட்டமாக வருகின்றன. சூழ்ந்து கொள்ளும் குரங்குகளைக் கண்டு சற்றும் பதட்டமில்லாமல், பழங்களையும், தின்பண்டங்களையும் வினியோகம் செய்கிறார். பின், கோவிலுக்குச் சென்று பூஜை செய்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் ஒரு நாள் கூட தடை இல்லாமல் இதை செய்துள்ளார்.

ஒரு முறை காசிக்கு யாத்திரை சென்ற போது இவரது மகன் திருமலை (40), இந்த பணியை செய்தார். கண்பார்வை மங்கி வருவதால், மகன் திருமலையை இப்போது உதவிக்கு அழைத்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (65) எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் குரங்குகளுக்கு உணவு சமைத்து தருவதையும், செஞ்சி கடைவீதியில் பழக்கடை நடத்தும் முஸ்லிம்கள் முக சுளிப்பில்லாமல் பழங்களை சேகரித்து வைத்திருந்து தருவதையும் பார்த்தசாரதி பெருமையாக குறிப்பிடுகிறார். தனது இறுதி மூச்சு வரை குரங்குகளுக்கு உணவு வழங்குவதை நிறுத்தமாட்டேன் என உறுதியாக கூறுகிறார் பார்த்தசாரதி. குரங்குகள் மீது இவர் காட்டும் பரிவும், அக்கறையும் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இவர் மீது தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது.

Saturday, September 11, 2010

Farmhouse owner shot at dogs, not Sri Sri Ravi Shankar: Police


 

HT Correspondent, Hindustan Times
Bangalore, June 05, 2010
http://www.hindustantimes.com/Farmhouse-owner-shot-at-dogs-not-Sri-Sri-Ravi-Shankar-Police/Article1-553608.aspx

The gunshot on May 30 suspected to have been aimed at spiritual teacher Sri Sri Ravi Shankar was meant to scare away dogs, and was not fired in the Guru's hermitage, police said on Saturday. The shots were fired from a farmhouse, whose owner, Mahadev Prasad, allegedly was shooting at dogs to related stories Claims, counterclaims over Sri Sri shooting Not a targeted attack on Sri Sri Ravishankar: police Firing incident puts spotlight on Art of Living Foundation prevent them from attacking his cattle.

He was detained for questioning and his licenced revolver was seized.

The farmhouse is just opposite the hermitage, 21 km south-west of Bangalore. Karnataka Director General of Police Ajai Kumar Singh reiterated his earlier position that it was not an assassination bid on the spiritual teacher.

The development vindicates the position of Union Home Minister P. Chidambaram, who had doubted the assassination theory. Sri Sri said he had confidence in the police and was satisfied with the investigation.

"I don't want cheap publicity," he said.

By all accounts, the bullet fired from Prasad's gun travelled more than 2,300 feet and, without causing harm, hit a devotee called Vinay Kumar at the hermitage.

Singh said no case had been filed against Prasad.

Prasad told reporters he was not aware that the bullet had hit someone and hence he did not approach the police.

"Too much has been spoken about one bullet," he told reporters adding the focus should now be on broader aspects as "so many other bullets are being showered in different parts of the country" referring to violence in several places.

Denying any hidden motive of trying to upgrade his security or seeking publicity for the ashram through the incident, he said the suspicion of an attack arose as an incident of such nature had not occurred in 30 years of the ashram's existence.

Moreover, the ashram's work in trying to reform and its success in getting several people to lay down arms had not gone down well with all, which gave rise to doubts of an attack, he said apparently referring to his efforts to reform naxals.

He said the incident revealed there was "so much of prejudice and bias against ashrams and swamis". It was sad swamis had to prove their innocence, he said and, in a witty remark, added that Bollywood could make a film titled 'I am a swami, but I am innocent'.

The DGP said Prasad had not been arrested as no offence had been made against him.