Pages

Saturday, October 30, 2010

250 ஆண்டுகளுக்கு முன்னரே கால்நடைகள், பறவைகள் மீது அன்பு

பழனி அருகே பொருளூர் பகுதியில் கால்நடைகள், பறவைகள் தண்ணீர் அருந்த அமைக்கப்பட்ட கிணறு, தொட்டி, பந்தல்கள் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை

பழனி, அக்.31-
http://dailythanthi.com/article.asp?NewsID=604004&disdate=10/31/2010&advt=2

பழனி அருகே பொருளூர் பகுதியில் கி.பி.17-ம் நூற் றாண்டில் கால்நடைகள் மற்றும் பறவைகள் நீர் அருந்த அமைக்கப்பட்ட கிணறுகள், தொட்டிகள், பந்தல்கள் குறித்த வியப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த மானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் நந்திவர்மன், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் திருமுருகன் மற்றும் மாணவர்கள் பழனி-கள்ளி மந்தையம் சாலையில் உள்ள பொருளூர் அருகே ஆய்வு நடத்தினர்.

அப்போது கி.பி. 17-ம் நூற் றாண்டில் கால்நடைகள், பறவைகள் தண்ணீர் அருந்த அமைக்கப்பட்ட கிணறுகள், தொட்டிகள், கல் பந்தல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவை கி.பி. 1,772-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை ஆகும்.

பொருளூர் அருகில் உள்ள தீர்த்தாக்கவுண்டன் வலசில் பெரு நிலக்கிழாராக வாழ்ந்த திம்ம நாயக்கன் என்பவருக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை. இதனால் தர்மகாரியங்கள் செய்ய எண்ணி தீர்த்தாக் கவுண்டன் வலசு, பொருளூர், அப்பியம்பட்டி ஆகிய 3 ஊர்களில் கால்நடைகள், விலங் குகள் தண்ணீர் அருந்த 3 கிணறுகளும், கல்லால் அமைக்கப்பட்ட 4 தொட்டிகளும் அமைத்துள்ளார்.

ஆடுகள் நீர் அருந்தும் தொட்டி

பொருளூரில் காணப்படும் 2 தொட்டிகளில் ஒன்று மிகப் பெரிய அளவில் அமைந்துள்ளது. நான்கு கற்களால் அடித்து சேர்க்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறாத வண்ணம் சுண்ணாம்பு, முட்டை, கடுக்காய் ஆகியவற்றின் கலவையால் நான்கு பக்கமும் பூசப்பட்டுள்ளது.

ஆடுகள் நீர் அருந்தும் தொட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்து கிடந்த இத்தொட்டியை தமிழ் ஆசிரியர்கள் நந்திவர் மன், திருமுருகன் மற்றும் மாணவர்கள் தோண்டி வெளி யில் எடுத்தனர்.

காடுகளில் மேய்ந்து விட்டு வரும் கால்நடைகளின் உடலில் உண்ணிகள், கொசுக்கள், முட்கள் போன்றவை இருக்கும். இதனால் உடலில் ஏற்படும் அரிப்பை போக்குவதற்கு கால்நடைகள் கற்களின் மீது உரசுவது வழக்கம். எனவே தண்ணீர் தொட்டிகள் அருகில் கால்நடைகள் தங்களது உட லை உராய்வதற்கு 2 மீட்டர் உயரமுடைய கல்லும் நடப்பட் டுள்ளது.

பறவைகள்

இதுதவிர பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைப்பதற்கு கல் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன. கற்களில் 12 இடங்களில் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நீர் நிலைகளை அழிப் பவர்களுக்கும், தனதாக்கிக் கொள்ள நினைப்பவர்களுக்கும் சாபங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த செய்திகள் கல் பந்தலில் பொறிக்கப்பட்டுள்ளன. கி.பி.1,772-ம் ஆண்டு (பிர சொபதி தமிழ் வருடம்) அமைக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகளை அழிப்பவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற சாபம், மாதா, குருவை நிந்தித்த தோஷத் திற்கு ஆளாவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தர்ம காரியங்களுக்கு துணை நிற்பவர்கள் மாவலி அரசன் பெற்ற சாபலம் பெறுவார்கள் என்றும், அவர்களது பாதம் என் தலை மேல் என்றும் திம்ம நாயக்கர் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னரே கால்நடைகள், பறவைகள் மீது அன்பு கொண்டு அவை நீர் அருந்த தொட்டிகள், கிணறுகள் அமைக்கப்பட் டுள்ளது வியக்கத்தக்க செய்தியாகும். பொருளூர் பகுதியில் அமைந்துள்ள இத் தொட்டிகள், கிணறுகள், பந்தல்கள் அரிய பொக்கிஷம் ஆகும். இவை தற்போது பராமரிப்பின்றி கிடக்கின்றன. எனவே இவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இடத்தில் இருந்து கல் தூண்களையும், கல்பலகைகளையும் எடுத்துச் சென்றவர்கள் இவற்றை பயன் படுத்திய போது பல வகை துன் பங்களுக்கு ஆளாகியதால் மீண்டும் கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர். விருப்பாட்சி கோபால் நாயக்கரும், திம்ம நாயக்கரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

புலியை வேட்டையாடுவோருக்கு கிடுக்கிப்பிடி

புலியை வேட்டையாடுவோருக்கு கிடுக்கிப்பிடி : ஒரு கோடி ரூபாய் அபராதம், 7 ஆண்டு ஜெயில்
 
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010,00:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117132
 
 
 
புதுடில்லி : அரிய வகை வன விலங்குகளை வேட்டையாடுவோருக்கு எதிராக, கடுமையான சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. புலி போன்ற வன விலங்குகளைக் கொன்றால், ஒரு கோடி ரூபாய் அபராதத்துடன், ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.வன விலங்குகளை வேட்டையாடுவோரை கட்டுப்படுத்த, வனத் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், அது பெரிய அளவுக்கு பயன் அளிக்கவில்லை. விலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க, தற்போது மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு, தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்ட மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்,  பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: புதிய சட்ட திருத்தத்தின்படி, வனவிலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் விற்பனையை முறைப்படுத்தவும் மேலாண்மை மற்றும் அறிவியல் துறை என்ற இரண்டு அமைப்புகள் உருவாக்கப்படும். புதிய சட்ட திருத்தம், சர்வதேச அளவிலான வனவிலங்கு சட்டத்துக்கு ஏற்றவகையில் இருக்கும்.விலங்குகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரைமுறைப்படி பிரிக்கப்பட்டு, அட்டவணைப் படுத்தப்படும். இதன்படி, புலி போன்ற விலங்குகள், முதல் பிரிவில் வரும். முதல் பிரிவில் உள்ள புலி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கொலை செய்வோருக்கு, ஐந்து லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஐந்தாண்டில் இருந்து அதிகபட்சமாக ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.இரண்டாவது பிரிவில் உள்ள அரிய வகை பறவைகள் போன்றவற்றை வேட்டையாடுவோருக்கு, மூன்றில் இருந்து ஐந்தாண்டு வரை, சிறை தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விலங்குகளை துன்புறுத்துவோருக்கும் தண்டனை உண்டு.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

Friday, October 29, 2010

Efforts on to ensure water for wildlife

Friday, Oct 29, 2010
http://www.hindu.com/2010/10/29/stories/2010102950320200.htm

Pollachi: Officials of the Anaimalai Tiger Reserve are trying out a new method to ensure drinking water for the wildlife in reserve forests.

At an outlay of Rs. 1.5 lakh, authorities have dug up 150-ft-deep bore well inside the reserve forests in Udumalpet. A solar-powered motor has been installed to pump water to it every day at a pre-set time. The
staff need to visit the place for occasional maintenance only.

The system is being tried out by the staff for the last three months under the guidance and direct supervision of Tirupur DFO, Rajkumar and Field Director H. Basuvaraju. The officials now plan to try the method at more areas in the sanctuary.

மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை சாவு

கோவை அருகே பரிதாபம்: மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை சாவு

கோவை, அக்.29-

மின்சார வேலியில் சிக்கி 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று பரிதாபமாக செத்தது.

மின்சார வேலியில் சிக்கி சாவு

கோவையை அடுத்த ஆலாந்துறை சாடிவயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சுற்றிலும் மின்சார வேலி போடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு ஒரு காட்டு யானை அந்த பகுதியில் சுற்றி விட்டு அதிகாலை மின்சார வேலியை கடக்க முயன்றது. அப்போது அந்த வேலியில் யானை சிக்கிக்கொண்டது. வேலியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கு பதில் நேரடியாக மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருந்ததால் மின்சாரம் தாக்கி யானை அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இறந்து போன ஆண் காட்டு யானைக்கு சுமார் 35 வயது இருக்கும்.

உடல் எரிப்பு

காட்டு யானையின் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக கால்நடை மருத்துவர் மனோகரன் அங்கு சென்று யானையின் உடல்களை வெட்டி பரிசோதனை நடத்தினார். யானையின் தந்தம் தனியாக வெட்டி எடுக்கப்பட்டது.

சட்டத்துக்கு விரோதமாக வேலியில் மின்சார இணைப்பு கொடுத்து யானையின் சாவுக்கு காரணமான நிலத்தின் உரிமையாளர், மற்றும் நில மேலாளர் உள்பட 4 பேர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Wednesday, October 27, 2010

விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை புதிதாக பொறுப்பேற்ற சத்தி வன மாவட்ட அதிகாரி சதீஷ் பேட்டி

பவானிசாகர், அக்.28-
http://dailythanthi.com/article.asp?NewsID=603516&disdate=10/28/2010&advt=2

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரி சதீஷ் கூறினார்.

புதிய வனமாவட்ட அதிகாரி

சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரியாக பணியாற்றிய ராமசுப்பிரமணியம், நீலகிரி வடக்கு மாவட்ட வன அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்டம் கூடலூர் வனமாவட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த சதீஷ், சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.

பிறகு இவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, யானைகள் உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீதும், வனக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகளில் பகல், இரவு என்று பாராமல் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பவானிசாகர் வனப்பகுதி கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வனப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தின்பண்டங்கள் போடுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குரங்கு போன்ற வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க முடியும். வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனப்பகுதிக்குள் யாரும் பிளாஸ்டிக் பொருட்களை வீச வேண்டாம்.
இவ்வாறு சத்தியமங்கலம் வனமாவட்ட அதிகாரி சதீஷ் கூறினார்.

வாழ்த்து

புதிதாக பொறுப்பேற்ற சத்தியமங்கலம் வனக்கோட்ட அதிகாரி சதீசுக்கு, சத்தியமங்கலம் கூடுதல் வனக்காப்பாளர் (பயிற்சி) அசோக்குமார், பத்மா, ரேஞ்சர்கள் ராஜ்மோகன், சண்முகம், சிவமல்லு, தங்கப்பழம் மற்றும் வனவர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு-நவ. 18க்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, அக்டோபர் 27, 2010, 17:33[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/10/27/tamilnadu-jallikattu-sc-nov.html



 
டெல்லி : தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை  யை நவம்பர் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம்  ஒத்திவைத்துள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகள் தொடர்பாக வாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கு.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுமாறன், ஏற்கனவே இதுதொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டதை சுட்டக் காட்டினார். மேலும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என பிராணிகள் நல வாரியத்தின் யோசனையை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதுபோக போட்டியாளர்களுக்கு காப்பீடு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றை நடத்தவும் தமிழக அரசு ஒப்புக்கொள்கிறது என்றும் தெரிவித்தார்.

பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரம், போட்டி நடைபெறும் இடத்தில் 6 அடி தடுப்பு வேலி, மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கால்நடை மருத்துவர்கள், பிராணிகளுக்கு பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் பட்டாசு வெடிக்க தடை

ஊட்டி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜிவ் ஸ்ரீவத்சவ் கூறியதாவது: இம்முறை தீபாவளியை ஒட்டி 3 நாள் விடுமுறை வருகிறது. சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காணவும், யானை சவாரி செய்யவும் இங்கு அதிகளவில் வருவர். சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வாகனங்களை நிறுத்தி பட்டாசு வெடித்து வன விலங்குகளை தொந்தரவோ அல்லது அச்சுறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

Monday, October 25, 2010

Forest officials catch 10 monkeys

Tuesday, Oct 26, 2010
http://www.hindu.com/2010/10/26/stories/2010102651760300.htm



THANJAVUR: With a view to put an end to the monkey menace in the west main street area in the town, forest department officials caught 10 monkeys using traps on Monday.

According to V.Thirunavukarasu, District Forest Officer and Udhayakumar, forest ranger, these animals have been keeping people on tenterhooks as some of them have bitten children.

People presented a memorandum to the state Commercial Taxes Minister S.N.M.Ubayathullah and Collector M.S.Shanmugham, who directed the forest officials to put an end to the menace.

Mr.Udhayakumar said eatables like fruits and cereals were used to lure the monkeys one by one into a trap and the operation was carried out since 5 a.m. These monkeys will be left out at Pachamalai hills near Tiruchi.

He also said that catching monkeys is a routine affair for forest department. Nearly 500 monkeys have so far been caught in Thanjavur town and left at Pachamalai hills and Kodiakarai near Vedaranyam in Nagapattinam district.

Besides monkeys, forest department officials also catch snakes which enter into human dwellings and return them to the wild. Birds like peacocks when wounded or trapped were also be rescued, Mr.Udhayakumar said.

Python rescued

Tuesday, Oct 26, 2010
http://www.hindu.com/2010/10/26/stories/2010102652350500.htm


VANIYAMBADI: Officials of the Forest Range office at Alangayam rescued a python from Vellakuttai village near Vaniyambadi on Sunday. Forest Range Officer, Alangayam D. Subramanian said the 12-feet long python was found at a pond near a temple at the village.

மகரந்த சேர்க்கை குறைவால் மனித குலத்துக்கு ஆபத்து

மகரந்த சேர்க்கை குறைவால் மனித குலத்துக்கு ஆபத்து : ஹாங்காங் பேராசிரியர் எச்சரிக்கை
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010,22:09 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=113607

கோவை : ""பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. மொபைல்போன் டவர், பூச்சி கொல்லிகளால் பறவையினம் அழிந்து வருவதால், மகரந்த சேர்க்கை குறைந்து தாவரங்கள் அழிந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கண்டாக வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது,'' என, ஹாங்காங் பேராசிரியர் ரோஜர் கென்ட்ரிக் பேசினார்."ஆசிய பட்டாம் பூச்சிகள் பாதுகாப்பு' குறித்த ஐந்து நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கம்,கோவை பாரதியார் பல்கலையில் நேற்று துவங்கியது.

பல்கலையின் விலங்கியல் துறை, "ஜூ அவுட்ரீச்' அமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கின் துவக்க விழாவில் துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியதாவது: உலகம் முழுவதும் பூச்சியினங்கள் உள்ளன. இதில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை நன்மை தருபவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இதன் பங்கு முக்கியம். பல மிருகங்களின் உணவாகவும் பூக்களில் மகரந்த சேர்க்கை நடக்கவும் இவை உதவுகின்றன. 1,500 பட்டாம்பூச்சிகள் இந்திய உபகண்டத்தில் உள்ள வட கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிப்பவை. இந்த அழகிய உயிரினம் தற்போது மெள்ள அழிந்து வருகிறது. சூழல் மாசு காரணமாக பல மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து வருகின்றன. பயிர்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகளை உண்ணும் பட்டாம் பூச்சிகள் அழிந்து வருகின்றன. மனிதர்களே இதன் அழிவுக்கு காரணம். பூச்சியினங்கள் அழிந்து விடாமல் தடுக்க விரைவில் தீர்வு காண்பது அவசியம். இவ்வாறு சுவாமிநாதன் பேசினார்.

ஹாங்காங்கை சேர்ந்த பேராசிரியர் ரோஜர் கென்ட்ரிக் பேசியதாவது: பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. இங்கிலாந்தில் 50 ஆண்டுகளில் 99 சதவீத பட்டுப்பூச்சிகளும், அமெரிக்காவில் 50 - 60 சதவீத பட்டுப்பூச்சிகளும் அழிந்து விட்டன. காடுகள் அழிப்பு, சல்பர் பை ஆக்சைடு மற்றும் நைட்ரிக் ஆக்சைடு அடங்கிய பூச்சி மருந்து பயன்பாடு ஆகியவை பூச்சி, பறவை அழிவுக்கு முக்கிய காரணங்கள். தொழில் நுட்ப உதவியால் தீர்வு காணலாம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதும் தீர்வு தரும். பட்டாம்பூச்சி உள்ளிட்ட பூச்சியினங்கள் அழிவதால் மகரந்த சேர்க்கை குறைந்து, தாவர இனங்களும் அழிந்து வருகின்றன. உலகம் முழுவதும் அடுத்த 30 ஆண்டுகளில் பெருகப் போகும் மக்கள் தொகையின் உணவுத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தீர்வை கண்டறிய வேண்டும். நகரமயமாதல் அதிகரிப்பு, விவசாய நிலங்கள் சுருங்குவது ஆகிய மாற்றம் தான், பறவைகளின் அழிவுக்கு முக்கிய காரணம். சீனாவில் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. மீண்டும் அதேபோன்ற காடுகளை கொண்டு வர முயற்சிப்பதை விட, இருக்கும் காடுகளையும் அவற்றை நம்பி வாழும் உயிரினங்களையும் பாதுகாப்பது நல்லது. இந்தியா மட்டுமல்லாமல், ஆசிய கண்டம் முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு ரோஜர் கென்ட்ரிக் பேசினார். 

Sunday, October 24, 2010

குளத்தில் விழுந்த யானைக்குட்டி பலி

பதிவு செய்த நாள் : அக்டோபர் 24,2010,23:29 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=113019



மூணாறு : ஏலத்தோட்டத்தினுள் உள்ள குளத்தில் தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யானைக்குட்டியை, காப்பாற்ற முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தது. இடுக்கி மாவட்டம், சாந்தம்பாறை அருகே போத்தொட்டி பகுதியில், சாக்கோ என்பவருக்கு சொந்தமான ஏலத்தோட்டத்தினுள் உள்ள சிறிய குளத்தில், யானைக்குட்டி தவறி விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்ததை தொழிலாளர்கள் கண்டனர்.

தேவிகுளம் டி.எப்.ஓ., மகேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினரும், சாந்தம்பாறை எஸ்.ஐ., சாக்கோ தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். குளத்தில் அகலம் குறைந்து, நீர்மட்டம் கூடுதலாக காணப்பட்டதால், யானைக்குட்டியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பின், பொக்லைன் இயந்திரம் மூலம், குளத்தின் கரையை வெட்டி, யானையை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், மீட்புப் பணியின் போது யானை பரிதாபமாக உயிரிழந்தது. அதன்பின்பு இரண்டு மணிநேரம் போராடி யானையின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடத்தி, தீ வைத்து எரிக்கப்பட்டது. யானை, எப்போது குளத்தில் தவறி விழுந்தது என்ற விவரம் சரிவர தெரியவில்லை.

தெரிந்துகொள்ளுங்கள்-III





விலங்கு பலி






Over 100 tigers spotted in three tiger reserves, says forest minister

Shantha Thiagarajan, TNN, Oct 24, 2010, 06.42am IST

UDHAGAMANDALAM: Over 100 tigers have been spotted in the three Tigers reserves of Kalakkad Mundanthurai in Tirunelveli district, Anamalai in Coimbatore district and Mudumalai in the Nilgiris, Tamil Nadu forest minister, N Selvaraj said on Saturday. While their numbers were dwindling nationwide, the big cats are thriving in Tamil Nadu, according to Selvaraj.

In a recent survey, 46 tigers have been sighted directly in Sathyamangalam forest area, Selvaraj said. According to a 2007 survey, the population of tigers in Tamil Nadu was between 62 and 76. Stating that the reason for their growing numbers is the healthy prey base, the forest minister said, "I happened to see a lot of bison and several herds of spotted deer in the Mudumalai reserve and its surroundings". Also, poaching activities are completely under control, he added.

Asked about the long-pending proposal for merging the Sigur reserve forest area with the adjacent Mudumalai Tiger Reserve in the Nilgiris, he said, "The proposal is under consideration." Many wild animals including tigers are being sighted in the Sigur forests. Recently, Union forest and environment minister Jairam Ramesh had written to the Tamil Nadu government urging it to declare the Sigur forest as a tiger reserve. The proposal for merging the reserve forest with the Mudumalai tiger reserve is pending with the government.

On several illegal resorts operating in the hill district in identified elephant corridors in the Sigur Plateau, Selvaraj said cases in this regard were pending in the courts. However, no fresh construction would be allowed in these areas, he said, adding that protecting wildlife would be the first consideration in any kind of development projects in the hill district, including laying of new roads. The penalty fee against cutting trees illegally in private lands, presently a very nominal amount, would be revised soon, said the minister.

The forest department will ensure there are no encroachments on the traditional elephant paths in the forests. The elephants move in herds and on a particular trajectory. When this is disturbed they stray into unknown zones and end up entering human habitats, affecting residents, he said. To a question regarding monitoring of the neutrino project to be set up in Theni, the minister said, "Once the project is set up, arrangements will be made to monitor the project".

Elephant corridor: Govt. to go by court's directions

Sunday, Oct 24, 2010
http://www.hindu.com/2010/10/24/stories/2010102450730300.htm

Udhagamandalam: The government will go by the directions of the court, said Forest Minister N.Selvaraj when a question relating to the proposed acquisition of land to protect elephant corridors was asked at a press conference here on Saturday.

He said no new resorts had come up after the notification of the elephant corridor in the Bokkapuram area. A decision on the existing resorts would be taken after the court gives its verdict.

The government was according high priority to conservation.

On account of its efforts the population of tigers had increased significantly in the State, he added.
The merger of the Sigur and Singara ranges of the Nilgiris North division with the Mudumalai Tiger Reserve was under consideration.

Pointing out that in principle it had been decided to consider favourably a demand to open Sigur-Pudhupatti road near Mudumalai, he said that if it affected wildlife and hindered movement of elephants the decision would be re-considered.

He added that clearance for the road had to be obtained from the Central Government.
To a question on the proposed neutrino project at Theni, Mr.Selvaraj said that its implementation would be closely monitored.

Canine blood too in great demand

Sunday, Oct 24, 2010
http://www.hindu.com/2010/10/24/stories/2010102461770200.htm




CHENNAI: M. Seshasubramani's pet dog, Lindo, turned out to be a saviour when it donated blood to an ailing dog. Mr. Seshasubramani said he was filled with pride and joy on seeing the dog, which received the blood, healthy.

After Lindo donated blood, it was given a donor certificate and free dog food. The owner also got a special blood donor ID that permits him to bypass the long queues when he takes his pet to the veterinarians in the Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS).

But India's only animal's blood bank at TANUVAS here is in need of more canine blood to meet the demand. Around 35 voluntary donors have registered so far, according to sources in TANUVAS.
Though established about six months ago, the blood bank is yet to be formally inaugurated as at least 100 donors are required for the full-fledged functioning of the facility, sources in the university said. The awareness among youngsters is increasing though their apprehension about their pet's health continues to prevail, they added.

Being a blood donor herself, Pushpa Rajendran finds it equally important for animal blood to be donated. “I have enrolled three of my dogs so far, and my pets have been healthy and active after the entire procedure,” she said.

“We are in need of at least two bags per day. Accident cases, removal of cancerous growth, and surgeries on animals require blood transfusion,” said S. Prathaban, director of Clinics, TANUVAS. Besides the local demand, the hospital receives requests for different blood types from various parts of the country, including Jaipur, Delhi and Hyderabad. “Earlier when there was any emergency, the blood from community dogs used to be taken. But with increasing awareness on ethical treatment of animals, we now insist on voluntary donors,” he said. “The blood is screened for parasites before its components are separated, as a safety measure. We accept the blood from dogs that weigh more than 20 kg and are below seven or eight years of age, for transfusion,” said Dr. Prathaban.

யானைக்கு சுதந்திரம்

பதிவு செய்த நாள் : 10/24/2010 12:00:52 AM
http://dinakaran.com/masterdetail.aspx?id=18610&id1=15

யானை, இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு என்று மத்திய அரசு பிரகடனம் செய்துள்ளது. இந்த விஷயம் யானைகளுக்கு இன்னும் எட்டவில்லை போலிருக்கிறது. கொண் டாட்டம், அட்டகாசம் என்ற செய்திகள் எதுவும் வரவில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு எனும் கவுரவம் புலிக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது. அதனால் சிலருக்கு கவலை. தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட பின்னரே புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது என்று நினைக்கின்றனர். இன்றைய தேதியில் 1500 புலிகள் இருப்பதாக தகவல்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் முப்பதாயிரம் இருந்ததாக சொல்கின்றனர். மிகையாக தோன்றுகிறது. யானைகளை பொருத்தவரை ஆசிய கண்டத்தில் பாதிக்கு மேல் நம் நாட்டில். சுதந்திரமாக உலவுபவை 25 ஆயிரம். கோயில்கள் காட்சிசாலைகள் வீடுகள் கம்பெனிகள் ஆகியவற்றில் மனிதனுக்கு அடிமைகளாய் வாழ்பவை நாலாயிரம். தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டு விட்டதால், இனிமேல் யானையை தனியார் சொந்தம் கொண்டாட முடியாது. இருப்பதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மீறி எவராவது ரகசியமாக யானை வளர்த்தால் தண்டனைக்குரிய குற்றம். அரசின் அறிவிப்பு யானைகளுக்கான சுதந்திர பிரகடனம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் குதூகலிக்கின்றனர். உருவத்தில் மிகப் பெரிய விலங்காக இருந்தாலும் யானை மீது யாருக்கும் பயமில்லை. அதனால் சித்திரவதை செய்ய தயக்கமில்லை. தெருவில் பிச்சை எடுப்பது, காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம் நடுவே ஆபரணங்கள் சுமந்து நடப்பது, வரிசையில் நின்று கோரசாக பிளிறுவது, உருமி மேளத்துக்கு டான்ஸ் ஆடுவது, நாள் முழுக்க பாரம் தூக்குவது, சுற்றுலா பயணிகளையும் அதிகாரிகளையும் சுமந்து காடு சுற்றி காட்டுவது போன்ற வேலைகளை எந்த யானையும் சுய விருப்பத்தின் பேரில் செய்வதில்லை. யானை உருவம் கொண்ட கடவுளை நேசிப்பவர்கள் மிகுந்த நாட்டில் தந்தத்துக்காக வேட்டையாடி கொல்லும் வீரப்பன்களுக்கும் குறைவில்லை. ரயில் மோதி யானைகள் பலியாவதும் இங்குதான் அதிகம். இனி அதற்கெல்லாம் சரியான தண்டனை கொடுக்க முடியும். யானை இல்லாத பெரிய கோயில்களும் திருச்சூர் பூரம், மைசூர் தசரா போன்ற திருவிழாக்களும் சோபை இழந்துவிடும். என்றாலும், நமது வேடிக்கைக்காக வாயில்லா விலங்குகளை வதைப்பதில் எந்த நியாயமும் இல்லையே.

Saturday, October 23, 2010

‘Restore Kallar – Jakkanarai elephant corridor'

Saturday, Oct 23, 2010
http://www.hindu.com/2010/10/23/stories/2010102354660200.htm

Coimbatore: Rampant encroachments and shrinking width of the Kallar – Jakkanarai corridor are proving to be a disturbance for the movement of elephants from Western Ghats to Eastern Ghats.

This has resulted in the pachyderms being forced to cross the Mettuppalayam – Coonoor ghat road holding back the busy traffic on the National Highway.

Two days ago, an elephant and a calf was found waiting on the roadside for hours together.And finally they crossed the road after holding traffic for hours.

Joint Secretary of Tamil Nadu Green Movement, S. Jayachandran pointed out that already the Government has notified the stretch from Seegur to Singara via Bokkapuram as a corridor for ensuring the migration of pachyderms without any disturbance.

The corridor comprises land belonging to Forest Department, Revenue Department and patta land.

Crucial

The Kallar – Jakkanarai corridor is crucial for the migration of the jumbos. Its shrinkage has resulted in confining elephant population to a small pocket thereby causing instances of man-animal conflict when the jumbos stray into human habitations.

A number of private lands seen fenced at the foothills of western ghats are encroachments. Tamil Nadu Green Movement has a list of such encroachments. Now the corridor is just 800 m wide. The only way to help pachyderms and end man animal conflict is to declare the Kallar – Jakkaranari route an elephant corridor.

காட்டுக் குருவிகளை கடத்திய வியாபாரிக்கு 30 மாதம் சிறை

பதிவு செய்த நாள் 10/22/2010 1:05:12 AM

சென்னை : ஆந்திர மாநிலத்துக்கு காட்டுக் குருவிகளை கடத்த முயன்றவருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.


சென்னை கீழ்ப்பாக்கம், குட்டியப்பா கிராமணி தெருவைச் சேர்ந்தவர் முஜித் உசேன் (46). மூர் மார்க்கெட்டில் பறவைகள் விற்பனை கடையை வைத்திருந்தார். 1997ம் ஆண்டு 200 காட்டுக் குருவி, 3 காட்டுக் கோழி ஆகியவற்றை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த முயன்றார்.

அப்போது, அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பறவைகளை, வேளச்சேரியில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முஜித் உசேன் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், காட்டுக் குருவிகளை கடத்திய முஜித் உசேனுக்கு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, முஜித் உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொலைபேசியில் புகார் கொடுங்க

வேளச்சேரி வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், ‘‘குறிப்பிட்ட பறவை, விலங்குகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. அப்படி வளர்ப்பவர்கள் தாமாக முன்வந்து எங்களிடம் ஒப்படைக்கலாம். இல்லாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக 2220 0335 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

நாட்டு நாய்களுக்கு கடும் கிராக்கி

பதிவு செய்த நாள் 10/22/2010 1:19:31 AM
http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=18507&id1=4

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ஆடுகளை பாதுகாப்பதற்கும்,தோட்டங்களில் திருடர்கள் மற்றும் விலங்குகள் நுழைந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கும் நாட்டு நாய்களை காவலுக்கு பயன்படுத்தி வந்தனர்.நாளடைவில் வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலையில்,தோட்டங்களில் கோழிப்பண்ணைகளை நிறுவினர். நாய்கள் கோழிப்பண்ணைகளுக்குள் புகுந்து கோழிகளை கபளீகரம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், மாட்டின் இறைச்சியில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டன. படிப்படியாக நாட்டு நாய்களை அங்கு காண முடியாத நிலை ஏற்பட்டது.

விளைவு, விவசாய தோட்டங்களில் பாதுகாப்பற்ற நிலை உருவானது. காய்கறி, கிழங்கு பயிர்களை பன்றி உள்ளிட்ட விலங்குகள் சேதப்படுத்துகின்றன. தேங்காய், மோட்டார் திருடர்கள் கைவரிசையும் அதிகரித்து விட்டது. தற்போது நாட்டு நாய்களின் தேவை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நாட்டு நாய்களை தேடி அலைகின்றனர். ஆனால், நாய்கள் எங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு நாய்க்கு க்ஷீ1500 முதல் க்ஷீ2,000 வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. விவசாயி ஒருவர் கூறுகையில், ‘முன்பு கேட்பாரற்று சுற்றிய தெருநாய்களை விஷம் வைத்து கொன்றதற்கு பரிகாரமாக தற்போது பெரும் விலை கொடுக்க வேண்டியுள்ளது’ என்றார்.

தேசிய விலங்கு யானை

தேசிய விலங்கு யானை : வனத்துறை அறிவிப்பு

 பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010,23:38 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=111884

புதுடில்லி : யானையை தேசிய பாரம்பரிய விலங்காக மத்திய வனத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய கலாசார வரலாற்றையும், யானையையும் பிரித்துப் பார்க்க முடியாது. நம்நாட்டு பாரம்பரியத்தோடு ஒன்றி விட்ட இந்த விலங்கு சமீபகாலமாக அழிந்து வருகிறது. நாடு முழுவதும் 25 ஆயிரம் யானைகள் உள்ளன. யானைகளை பாதுகாக்க, இதை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்தது.

புலிகளை பாதுகாக்க சட்டரீதியான அமைப்பு இருப்பது போல யானைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என யானைகள் பாதுகாப்பு குழு, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் தங்கள் பரிந்துரையை சமர்ப்பித்தது. இந்த பரிந்துரையை தேசிய வனவிலங்கு வாரியம் அங்கீகரித்ததால், யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்து மத்திய வனத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது

வன விலங்குகளுக்கு சூரிய சக்தி மூலம் குடிநீர்

வன விலங்குகளுக்கு சூரிய சக்தி மூலம் குடிநீர் : புதிய முறை அமல்

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010,23:07 IST

உடுமலை : கோடை காலத்தில் வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க, உடுமலை வனப்பகுதியில் சூரிய சக்தி மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் புதிய முறை, சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் யானை, காட்டெருமை, புள்ளி மான், கடமான், சிறுத்தை, புலி உட்பட வன விலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் வனப்பகுதியிலுள்ள ஓடைகள் அனைத்தும் வறண்டு, வன விலங்குகள் குடிநீருக்கும் அலையும் நிலை ஏற்படுகிறது.

இதற்காக, வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, போர்வெல், கை பம்புகள் மூலம் தண்ணீர் இறைத்து தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வன ஊழியர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் மின் வசதி, மோட்டார் அமைக்க முடியாததால், வன விலங்குகள் பல கிலோ மீட்டர் தண்ணீருக்காக இடம் பெயரும் நிலை உள்ளது. வன ஊழியர்கள் வன பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையை சமாளிக்க, இந்தியாவில் முதல் முறையாக சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து, அதன் மூலம் மோட்டார் இயக்கி தண்ணீர் தொட்டிகளுக்கு அனுப்பும் முறை, ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தானியங்கி முறையும் உள்ளதால், தானாக இயங்கி, தண்ணீர் நிரப்பலாம். இதனால், வன ஊழியர்கள் தினமும் வனப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டியதில்லை. இந்த முறை நான்கு மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது: வறட்சி காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கும் நிலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. மின் வசதி இல்லாத பகுதிகளில் சூரிய சக்தி மூலம் விளக்கு மற்றும் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.

சூரிய சக்தி மூலம் வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் முறை முதன் முறையாக, உடுமலை வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 150 அடி ஆழ போர்வெல் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, சூரிய சக்தி மூலம் ஆற்றல் உருவாக்கப்பட்டு, மின்சாரமாக மாற்றி பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. பின்னர், ஒரு எச்.பி., திறனுள்ள சப்மெர்சபிள் பம்ப், மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு நீர் இறைத்து, தொட்டிக்கு விடப்படுகிறது.

தானியங்கி அமைப்பு உள்ளதால், குறிப்பிட்ட நேரம் தானாக மோட்டார் இயங்கி, தொட்டிக்கு தண்ணீர் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கன்வெர்ட்டர் அமைப்பு உள்ளதால், மோட்டாரும் பாதிக்காது. இந்த முறையால், அடர்ந்த வனப்பகுதிகளிலும் வன விலங்குகளுக்கு குடிநீர் எளிதாக வழங்க முடியும்.

1.50 லட்சம் ரூபாய் செலவில், கோவையைச் சேர்ந்த "கிரீன் வின்ட் அண்ட் சோலார் பவர் டெக்' என்ற தனியார் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. இதை நிறுவி, நான்கு மாதங்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு இயங்கி வருகிறது. தொடர்ந்து, அனைத்து வனப்பகுதிகளிலும் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார். உடுமலை வனச்சரகர் சரவணன், தனியார் நிறுவன இயக்குனர் ஹரிஹர மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Stray pony problem on the rise in Ooty

Saturday, Oct 23, 2010
http://www.hindu.com/2010/10/23/stories/2010102353420300.htm

In jest it is being said now that patients discharged from the Government Headquarters hospital here are reluctant to walk out of the gate.

Not because the conditions in the hospital are so good or the services offered so patient-friendly but on account of the danger that lurks near the gate and beyond in the form of stray ponies.

Rules

With the rules relating to stray ponies and other animals being observed more in the breach by both the owners and the authorities concerned and campaigns conducted off and on to rid this vacation destination of the menace not producing the desired results, the ponies have become ubiquitous. Whereas among their regular haunts are the Government Headquarters Hospital, the Collectorate Junction, the Commissioner's Road and the Spencer's Road, there is hardly a place in the town or its suburbs where one doesn't run into a pony.

With complaints mounting, the issue has figured prominently at a number of meetings of the Udhagamandalam Municipal Council but nothing tangible has been done so far to find a permanent solution.

Consequently, the problem is threatening to get out of hand.

While tourists opine that getting them off the roads will do them and the road users a world of good, locals feel that it is high time that the administration and the police join hands to put the ponies where they belong.
Enquiries reveal that there is a provision in the law to impose a fine on the owners of animals who allow them to stray.

Friday, October 22, 2010

34 stray dogs killed near city

Vivek Narayanan, TNN, Oct 21, 2010, 12.45am IST

CHENNAI: As many as 34 stray dogs were killed in the village of Mugalivakkam, 25 km south of Chennai, on Wednesday morning after repeated complaints from residents about their menace. It was too late when Blue Cross got the information, even though it managed to save a puppy.

The population of stray dogs as well as the threat posed by them to residents are on the rise in the suburbs unlike in the city where their numbers are under check with local bodies choosing to cull the canines. Late last month, about a dozen stray dogs were beaten to death in Redhills.

Stray dogs were such a menace in Mugalivakkam, that on October 2, it figured in the panchayat meeting. On Wednesday morning, panchayat officials went ahead and killed the dogs by injecting poison into their hearts. When Blue Cross of India general manager Dawn Williams got the information, he rushed to the village and intercepted the tractor carrying the carcasses.

"At around 9.30 am, a woman informed me about the killing of stray dogs in Mugalivakkam panchayat. I took the Blue Cross van and reached there by 10.30 am and intercepted the trailer carrying the carcasses. I saw one dog struggling for life," Williams said.

Around 1 pm, the tractor attached was brought to the Mangadu police station. The driver, Sambandam, and cleaner Anandan were nabbed by Williams, but three others, including a woman, managed to escape. The duo were handed over to the Mangadu police and an FIR was registered against Mugalivakkam panchayat president P S Palani, vice-president K Ramesh and two others from Lakshmi Nagar Residential Welfare Association.

Williams recovered three cords, a bottle of poison and a syringe. "They caught the dogs using the cords and then lifted their front left leg and injected the poison directly into their heart. In such cases, dogs suffer in pain for five minutes and then die. I managed to save one puppy," said Dawn.

Meanwhile, residents of Mugalivakkam said they had merely asked the panchayat officials to end the dog menace and not to have the animals killed. "The dogs had started biting people. Even my husband was bitten once. There are some 3,000 schoolchildren studying in a government school here, they were all frightened of the dogs. Even we do not like killing animals," said Rani, a resident and member of a women's committee in Mugalivakkam.

R Ramakrishnan, Mugalivakkam ward 1 councillor, said they were not aware of the sterilisation programme for dogs. "It was decided to catch the dogs after the gram sabha meeting held on October 2, but we had no intention to kill them. Perhaps they did not know what to do with the dogs after catching them. Snakes, cows and dogs have become a big headache in our locality. We want the government to help us in removing them," Ramakrishnan said.

Sathya Radhakrishnan, joint secretary of Blue Cross of India, said stray dogs must be caught, sterlised and left at the same place from where they were caught. "The Chennai Corporation follows this practice, but the panchayat has mercilessly killed the dogs," Radhakrishnan said.

In January 2009, the Supreme Court stayed a Bombay high court verdict allowing municipal authorities in Maharashtra to kill stray dogs causing nuisance. Since then, cities like Chennai have also stopped the killing stray dogs and instead have started sterilising them.

Dawn said the Blue Cross does not get any funds for sterilising the dogs. "If a panchayat sends us a requisition, we will go there and help them sterilise the dogs," he said.

Wednesday, October 20, 2010

Stray dogs poisoned to death in Mowlivakkam

Thursday, Oct 21, 2010
http://www.hindu.com/2010/10/21/stories/2010102160730300.htm



TAMBARAM: As many as 56 stray dogs were killed in Mowlivakkam village panchayat, a western suburb near Poonamallee in the past two days.

According to members of Blue Cross of India, they received a call from residents of Mowlivakkam that stray dogs and puppies were being rounded-up and killed by administering lethal injections since Tuesday evening.

Dawn Williams, Residential General Manager, Blue Cross, Chennai, said he visited Mowlivakkam around 9 a.m. on Wednesday and noticed a tractor trailer filled with carcasses of stray dogs. There were 34 carcasses, including 11 pups. The tractor trailer was operated by the village panchayat to collect and dispose garbage as part of its solid waste management project.

Personnel at Mangadu police station, where a case was registered following a complaint from Mr. Williams, told The Hindu that enquiries revealed that the village panchayat's conservancy staff had acted on oral instructions from elected representatives. A total of 22 dogs and pups were killed on Tuesday.

While none has yet been named as accused, police said they were conducting further investigations. The carcasses were sent to Tamil Nadu Veterinary and Animal Sciences University, Vepery, for post-mortem.

A ‘grama sabha' (village council) meeting of the panchayat was held on October 2 where the elected representatives promised to look into complaints of residents about the problems caused by stray dogs moving around in packs.

Mr. Williams said the animals were captured in a crude manner using rings made from steel strings attached to wooden poles. Once captured, the lethal injections were administered to them and the carcasses were loaded to the vehicle to be taken for mass burial. This practice was a blatant violation of Supreme Court guidelines and punishable under the Prevention of Cruelty to Animals Act and also under Indian Penal Code, he said.

Tuesday, October 19, 2010

ஓடையில் சிக்கிய மாடு: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2010,03:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=110256

தூத்துக்குடி பக்கீள் ஓடை சேற்று மண்ணிற்குள் புதைந்து சிக்கிக் கொண்ட மாடு ஒன்றினை தீயணைப்பு படைவீரர்கள் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தூத்துக்குடி மாநகர் பகுதி வழியாக செல்லும் பக்கிள் ஓடையை சீரமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது வேகமாக நடந்தது வருகிறது. இதற்காக பல இடங்களில் ஓடை பொக்லைன் வைத்து தோண்டப்பட்டு வருகிறது. தோண்டிய இடங்களில் எல்லாம் கான்கீரிட் தளமும், தடுப்பும் அமைக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தற்போது ஓடையை தோண்டி அதில் உள்ள கழிவு மண்ணை ரோட்டின் ஓரம் குவித்து வைத்துள்ளனர். சேறும், சகதியுமாக உள்ள மண்ணை அதில் உள்ள ஈரத்தன்மை போன பின்பு அங்கிருந்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில் மாலையில் மூன்றாம் கேட் மேம்பாலம் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சேற்று மண்ணில் பசுமாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அதன் வெளிப்பகுதி காய்ந்த நிலையில் இருந்தாலும் உள்ளே ஈரமாக இருந்துள்ளது. இதனால் அதன் வழியாக சென்ற மாடு திடீரென சேற்று மண்ணிற்கு புதைந்து சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் திணறியது. இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் சேற்றிற்குள் சிக்கிய மாட்டினை காப்பாற்றி வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் சேற்றில் இருந்து மாட்டினால் வெளியே வரமுடியவில்லை. உடனே இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புபடை வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்பு மாட்டினை பத்திரமாக வெளியில் கொண்டு வந்தனர். சேற்றிற்குள் பசு மாடு ஒன்று சிக்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Monday, October 18, 2010

உயிருக்கு போராடிய மான் மீட்பு

ஆதம்பாக்கம் அருகே சாலையில் உயிருக்கு போராடிய மான் மீட்பு

ஆலந்தூர், அக்.19-
http://dailythanthi.com/article.asp?NewsID=601428&disdate=10/19/2010&advt=2

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள கக்கன் நகர் பாலம் அருகே நேற்று காலை 8 மணிக்கு சாலையில் ஒரு மான் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கிண்டி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். கிண்டி வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில் ஊழியர்கள் சென்று அந்த மானை மீட்டு முதலுதவி அளித்து புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.
இது பற்றி வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், ``வாகனத்தில் அடிபட்டு காயம் அடைந்த மானுக்கு 5 வயது இருக்கும். மானை அடிப்பது, கொல்வது சட்டப்படி குற்றமாகும்'' என்றார்.

Thursday, October 14, 2010

பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு

அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு : விஞ்ஞானிகள் நூதன திட்டம்

பதிவு செய்த நாள் 10/14/2010 7:14:02 AM
http://dinakaran.com/sciencedetail.aspx?id=17939&id1=21

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன. அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது.

எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம். அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை ஹெலிகாப்டர் மூலம் வீசினர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே இதே திட்டத்தை பெருமளவில் செயல்படுத்த உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விஷ எலிகள் வீசப்பட உள்ளன. இதன் மூலம் அங்குள்ள விஷ பாம்புகளின் எண் ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வன விலங்குகள் தொட்டால் `ஷாக்' அடிக்கும் மின்வேலி

யானைகள் சேதப்படுத்துவதை தடுக்க விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின்வேலி வன விலங்குகள் தொட்டால் `ஷாக்' அடிக்கும்

குடியாத்தம்,அக்.15-
http://dailythanthi.com/article.asp?NewsID=600715&disdate=10/15/2010&advt=2

விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் சூரிய சக்தி மின்வேலி அமைத்துள்ளனர்.

யானை கூட்டம்

குடியாத்தம் அடுத்து 20 கி.மீ தொலைவில் ஆந்திர மாநில எல்லை உள்ளது. அந்த எல்லை காட்டுப்பகுதியாக உள்ளது. இந்த எல்லை பகுதியையொட்டி மோர்தானா, சைனகுண்டா, தனகொண்டபல்லி ஆகிய கிராமங்கள் உள்ளன.
ஆந்திர மாநில எல்லையில் சில கி.மீ. தூரத்தில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணலாய பகுதியில் உள்ள யானை கூட்டம் இரவு நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க மற்றும் உணவு தேடி எல்லை பகுதியில் அமைந்துள்ள மோர்தானா அணை பகுதிக்கு வருகிறது.

பயிர்கள் சேதம்

இதனால் சைனகுண்டா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, ஆம்பூரான்பட்டி, தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் உள்ள மாதோப்புகள், வாழை தோட்டம், கரும்பு தோட்டங்களில் யானைகள் நுழைந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை தீப்பந்தங்களை ஏந்தியும், தாரை, தப்பட்டங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் யானை கூட்டத்தை விரட்டி வந்தனர்.

சூரிய சக்தி மின்வேலி

ஆனால் மீண்டும் யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் தனகொண்டபல்லி பகுதியில் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிட்டில் 3.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரியசக்தி மின்வேலி அமைத்தனர்.

இந்த மின்வேலி அமைத்த பணிகளை தலைமை வனபாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் சுந்தர்ராஜன், வேலூர் மண்டல வன பாதுகாவலர் ஏ.வி.வெங்கடாசலம், மாவட்ட வன அலுவலர் டி.வி.மஞ்சுநாதா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த சூரியசக்தி மின்வேலி பயன்பாடு குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பாதிப்பு இல்லை

இந்த மின் வேலி 9.5 வாட்ஸ் மின்சக்தி கொண்டது. இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு ஷாக் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் வனவிலங்குகள் பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. ஷாக் அடிக்கும் போது வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியை தொட்டு விட்டால் ஷாக் அடிக்கும் .ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கால்நடைகளுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்

கால்நடைகளுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம்
கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் அறிக்கை

கடலூர், அக்.15-

கால்நடைகளுக்கு போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என்று கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார்.

கடலூர் மண்டல கால்நடைபராமரிப்புத்துறை இணைஇயக்குனர் இளங்கோவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புகார் தெரிவிக்கலாம்

கால்நடை பராமரிப்புத்துறையில், கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் சினை ஊசி போட மட்டும் பயிற்சி அளித்து கிராமத்தில் சினை ஊசி போட மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ள சிலர் அவர்கள் கிராமங்களில் கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை ஆய்வாளர் போல் சிகிச்சை போன்ற பணிகளை செய்கிறார்கள். எனவே பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை அரசு கால்நடை மருத்துவமனை, கால்நடைமருந்தகங்களில் பணிபுரியும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கிளைநிலையங்களில் பணிபுரியும் கால்நடை ஆய்வாளர்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற போலியாக மருத்துவம் அளிக்கும் நபர்களிடம் தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டாம் என்றும் போலி மருத்துவர்கள் சிகிச்சை செய்தால் அருகில் உள்ள கால்நடை ஆய்வாளர் அல்லது உதவி மருத்துவரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Wednesday, October 13, 2010

Forest officials save ensnared leopard

Thursday, Oct 14, 2010http://www.hindu.com/2010/10/14/stories/2010101451370300.htm




Udhagamandalam: An ensnared leopard was rescued by forest officials at Kotagiri on Wednesday.

On being informed that a leopard had got caught in a wire noose trap which had been illegally set among some tea bushes near a bungalow on the Club Road in Kotagiri, a team of forest officials including the Field Director, Mudumalai Tiger Reserve, Rajiv K.Srivastava the District Forest Officer, the Nilgiris North K.Soundarapandian and forest veterinarian Kalaivanan had rushed to the spot and launched an operation to save the struggling carnivore.

After assessing its weight, it was shot with a tranquilizer gun and released from the tight noose.It was treated for minor injuries and taken to Ombetta inside the MTR and released.Stating that it was a male aged about six years, Mr.Srivastava told The Hindu that fortunately it was in a very healthy condition and the noose had not affected its vital parts.

Pointing out that the bungalow owner was in Coimbatore, Mr.Srivastava said that the watchman Rathinam (51) had been arrested for violating wildlife rules.

Investigation
He added that instructions have been issued to conduct a thorough investigation.

50 pigeons burnt alive

Thursday, Oct 14, 2010
http://www.hindu.com/2010/10/14/stories/2010101462660400.htm



CHENNAI: Fifty pigeons were burnt to death when their house, on the terrace of a building on Mettu Street, Thiruvanmiyur, was set on fire by miscreants in the early hours of Wednesday.

A complaint has been lodged with the Thiruvanmiyur police by M.Kannan (44), a pigeon racing enthusiast who owned the birds. Twelve pigeons survived the fire.

“On Monday night, I locked all the pigeons in the cages on the terrace of my house and went to bed. I woke up around 4 a.m. hearing my neighbours scream that the cages were on fire,” Kannan said.Following this, he along with some neighbours, rushed to the terrace and put out the fire with water from the overhead tank.

Birds used for racing

Fifty pigeons including those used for racing died as they were locked in the wooden cages. Kannan and others managed to save 12 birds.

“I suspect that someone had climbed on to my terrace from the neighbouring building and doused the cages with petrol before setting them ablaze,” Kannan said.

Suspects

In his police complaint, he suspected two youngsters, who approached him to buy two of his pigeons on Tuesday night, behind the incident.

“They came through my friend and I refused their offer by telling them that the birds were not for sale,” said Kannan, who has been breeding the birds for the last three decades.

Thiruvanmiyur police have registered a case under Section 429 (Mischief by killing or maiming cattle, etc., of any value or any animal of the value of fifty rupees) of the IPC and are investigating.

NABARD assistance to promote meat industry in Tirupur

Thursday, Oct 14, 2010
http://www.hindu.com/2010/10/14/stories/2010101456510700.htm

Tirupur: To promote meat industry and thereby enhance the livelihood of the rural folks in the district, the National Bank for Agriculture and Rural Development (NABARD) will be extending financial assistance under capital subsidy mode for piggery development, sheep/goat rearing and backyard poultry this fiscal.

NABARD Assistant General Manager G. Santhanam told ‘The Hindu' that the meat industry had a significant potential but could not get adequate attention for its growth and hence, the scheme. Under the piggery development component, credit-linked back-ended subsidy at 25 per cent of the capital cost would be extended to the farmers/landless labourers and cooperatives to rear and fatten pigs as well as to set up breeding farms.

“The upper ceiling of project cost in the case of one rearing/fattening unit (three females and one male) has been pegged at Rs. 76,000, whereas the capital expenditure ceiling for setting up a breeding farm comprising 20 female pigs and four males is fixed at Rs. 6 lakh,” Mr. Santhanam said. The project cost includes the rearing/breeding and setting up of sheds and other sundry structures.

In the case of goats/sheep rearing and breeding farms, the credit-linked back-ended subsidy would be disbursed at the rate of 25 per cent of the capital cost for general farmers and 33.33 per cent for those beneficiaries from scheduled caste/scheduled tribe communities.

“One rearing unit should contain 40 female sheep/goat and two males with the capital cost not exceeding Rs. 1 lakh, while a breeding farm should have 500 female goats/sheep and 25 male goats/sheep with project cost pegged at a maximum of Rs. 25 lakh,” he said.

For the promotion of backyard poultry, it would extend interest-free loan up to Rs. 36,000 apart from the back-ended subsidy of Rs. 20,000 for each batch of chicks (1,500 country fowl) costing Rs. 1.36 lakh.

மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 1 லட்சம் மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு நடவடிக்கை ஆவின் ஒன்றிய அதிகாரி தகவல்

கோவை,அக்.14-
http://dailythanthi.com/article.asp?NewsID=600474&disdate=10/14/2010&advt=2

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சம் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆவின் ஒன்றிய பொது மேலாளர் சோ.சிராஜ் கூறினார்.

ஆவின் ஒன்றியம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை ஆவின் ஒன்றியம் மூலம் 595 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்களில் மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 199 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்க உறுப்பினர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது பற்றி கோவை ஆவின் பொது மேலாளர் டாக்டர் சோ.சிராஜ் கூறியதாவது:-

கோவை ஆவின் ஒன்றிய பகுதியில் கால்நடை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் கறவை மாடுகளுக்கு 50 சதவீத மானியத்தில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 1114 கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இனி வருகிற காலங்களில் 10 ஆயிரம் கால்நடைகளுக்கு காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தப்படும்.

1000 புல் வெட்டுகள் கருவிகள்

இது தவிர பசுந்தீவன புல் வளர்ப்பு திட்டத்தின் மூலம் 2010-11-ம் ஆண்டுக்கு சோளம், மற்றும் ஆப்ரிக்கன் மக்கா சோளவிதைகள் 11 ஆயிரத்து 920 கிலோ 100 சதவீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு, கோவை மற்றும் திருப்பூரில் உள்ள பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களும் நடப்பாண்டில் அவர்கள் இருப்பிடத்திலேயே 100 சதவீத மானிய அடிப்படையில் பச்சை பாசி தீவனம் மற்றும் குழிகள் அமைத்து கால்நடைகளுக்கு வேண்டிய தீவனத்தை வளர்த்திட திட்டமிடப்பட்டுள்ளது. பசும்புல் தீவனம் வீணாவதை கருத்தில் கொண்டு அவைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி கறவை மாடுகளுக்கு இடுவதற்கு 1000 எண்ணிக்கை புல் வெட்டும் கருவிகள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

செயற்கை கருவூட்டல்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் நுண்ணிய தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களின் சினை பிடிக்காத கறவை மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து இதுவரை கருத்தரிக்கும் முறையின் கீழ் ரூ.3.32 லட்சம் மதிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தின் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 200 மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பிரதம பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகள் ஆண்டுக்கு ஒரு கன்று ஈணுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.

சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2010,04:07 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=106359

கோத்தகிரி : கோத்தகிரி அருகே சிறுத்தைக்கு சுருக்கு வைத்தது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகத்தில் கிளப் ரோடு - மிஷன்காம்பவுண்ட் இணைப்பு சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுறுக்கு கம்பியில் சிறுத்தை சிக்கி இருந்தது தெரியவந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் எஸ்டேட் காவலாளி ரத்தினம் காட்டு பன்றியை பிடிப்பதற்காக தான் வைத்த சுருக்கு கம்பியில் சிறுத்தை சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் சவுந்திரபாண்டியன் மற்றும் உதவி வன அலுவலர் ஜெயராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தையை உயிருடன் காப்பாற்ற, கால்நடை மருத்துவர் கலைவாணன் மற்றும் புலிகள் காப்பக கள இயக்குனர் ஸ்ரீவத்சவா சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதன் பின், சிறுத்தைக்கு மயக்க ஊசி போடப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த சிறுத்தையின் வயிற்று பகுதியில் இறுக்கியிருந்த சுருக்கு கம்பியை அகற்றி, தயாராக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் அடைத்து, ஆனைகட்டி வனப்பகுதியில் விடப்பட்டது.
 
புலிகள் காப்பக கள இயக்குனர் ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது: பிடிபட்ட சிறுத்தை மருத்துவரின் ஆய்வுக்குப்பின், 5 முதல் 7 வயதிற்குள் உள்ள ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. சிறுத்தை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு என்பதால், கூண்டில் அடைத்து ஆனைகட்டி வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். சிறுத்தைக்கு சுருக்கு வைத்த ரத்தினம் (55) கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி

காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள்-மோடி புகார்

வியாழக்கிழமை, அக்டோபர் 7, 2010, 11:44[IST
http://thatstamil.oneindia.in/news/2010/10/07/delhi-commonwealth-games-narendra-modi-beef.html

வததோரா: காமன்வெல்த் போட்டியின்போது வெளிநாட்டு வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மாட்டுக் கறி போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

இது மகாத்மா காந்திக்கும், சர்வதோதய தலைவர் வினாபோபவேவுக்கும் இழைக்கும் அநீதியாகும். பசு வதைக்கும், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கும் எதிராக கடுமையாக போராடியவர்கள் இந்தத் தலைவர்கள். இவர்களை காமன்வெல்த் போட்டிக் குழு அவமதித்துள்ளது என்றும் கூறியுள்ளார்

மோடி.

வததோராவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மாட்டுக் கறி போடுவதில்லை என்பதை குஜராத் அரசு ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது. கடந்த 2003ல் நடந்த வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறியை நாங்கள் சாப்பிடக் கொடுக்கவில்லை.

அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் இப்போதோ,காமன்வெல்த் போட்டிக்காக வரும் வெளிநாட்டினருக்கு படு தாராளமாக மாட்டுக் கறியைப் போட்டுவருகின்றனர் காமன்வெல்த் போட்டிக் குழுவினர் என்றார் மோடி.
வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மாட்டுக் கறி தரப்படாது என்று கடந்த ஜூலை மாதம் சுரேஷ் கல்மாடி கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.