Pages

Thursday, December 29, 2011

குரங்கை காப்பாற்ற போராடிய சூளகிரி மக்களின் மனிதாபிமானம்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2011,00:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=375899


ஓசூர்: சூளகிரி கோவிலில், குரங்கு ஒன்றின் தொண்டையில் தேங்காய் சிக்கியதால், உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்ற, பக்தர்கள் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குரங்கு இறந்ததால், சோகமடைந்த பக்தர்கள், குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து அடக்கம் செய்தனர்.

சூளகிரி அருகே, பஜார் தெருவில், செல்லாபிரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில் வளாகத்தில், குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பூஜையில் படைத்த, பழங்கள், தேங்காய் மற்றும் உணவு பண்டங்களை குரங்குக்கு வழங்குவர். நேற்று, வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள், குரங்குக்கு, தேங்காய் வழங்கியுள்ளனர்; அவற்றை, குரங்குகள் எடுத்து சாப்பிட்டன. தேங்காய் சாப்பிட்ட ஒரு குரங்குக்கு, அது, தொண்டையில் சிக்கியதால், கீழே விழுந்து, கோவில் வளாகத்தில், துடிதுடித்து உயிருக்கு போராடியது. இதை பார்த்த மற்ற குரங்குகள், அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டன. இதனால், பக்தர்கள், உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு, காப்பாற்ற முயன்றனர். வாணியர் தெருவை சேர்ந்த சிவக்குமார் என்பவர், குளிர்பானம் வாங்கி வந்து குரங்கு வாயில் ஊற்றி, தனது மூச்சை அதன் வாயில் செலுத்தி காப்பாற்ற, பல்வேறு வகையில் முயற்சி செய்தார்.

குரங்கு மயக்கமடைந்ததால், கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். டாக்டர் சீனிவாசனும், உயிருக்கு போராடிய குரங்குக்கு ஊசி போட்டு காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறிது நேரத்தில் குரங்கு இறந்தது. இதனால் சோகமடைந்த பக்தர்கள், இறந்த குரங்கின் உடலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். அதன்பின், கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தில், இறந்த குரங்கின் உடலை அடக்கம் செய்தனர். இச்சம்பவம், சூளகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டுக்கு 77 நிபந்தனைகள்-ஒரு வீரர் 4 காளைகளை மட்டுமே அடக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

வியாழக்கிழமை, டிசம்பர் 29, 2011, 17:32 [IST]
http://tamil.oneindia.in/news/2011/12/29/tamilnadu-77-conditions-conducting-jallikattu-aid0091.html

மதுரை: உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு மதுரை மற்றும் சுற்று வட்டார மக்கள் தயாராகி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த 77 நிபந்தனைகளை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் அறிவித்துள்ளார். இந்த நிபந்தனைகளுக்கு மாடு பிடி வீரர்கள் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றவையாகும்.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. தற்போது உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி வழக்கு நிலுவையில் உள்ளது. இடைக்கால நிவாரணமாக பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 77 நிபந்தனைகளை, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் இன்று அறிவித்தார்.

நிபந்தனைகள் மிகக் கடுமையாகவே உள்ளன. அவற்றில் சில...

- ஜல்லிக்கட்டு நடத்துவோர் ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.
- புளூகிராசில் சான்றிதழ் வாங்க வேண்டும்.
- 4 காளைகளுக்கு மேல் ஒரு வீரர் அடக்கக் கூடாது.
- ஒரே நேரத்தில் எல்லா காளைகளையும் அவிழ்த்துவிடக் கூடாது.
- கொம்புகள் கூர்மையாக இருந்தால் மரக்கவசம் அணிய வேண்டும்
- போதை வஸ்துகளை காளைகளுக்கு கொடுக்கக் கூடாது
- காளையை அடக்கும் வீரர்கள் வருவாய் துறையினரிடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும்
- மாடு பிடி வீரர்கள் மதுபானங்கள் அருந்திருக்கக் கூடாது
- மைதானத்தில் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும், மருத்துவக் குழு இருக்க வேண்டும்
- வீரர்கள் அனைவரும் சீருடை அணிந்திருக்க வேண்டும்
- போட்டிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
- குடிநீர் வசதி, பார்வையாளர்களுக்கு போதுமான வசதிகளை செய்ய வேண்டும்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மாடு பிடிவீரர்கள் இந்த நிபந்தனைகள் மிகக் கடுமையானவை.மேலும் பல கிராமங்களில் இந்த நிபந்தனைகளில் உள்ள பல அம்சங்களைக் கடைப்பிடிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே இவற்றைப் பூர்த்தி செய்வது மிகக் கடினமானது என்று கூறியுள்ளனர்.

Saturday, December 17, 2011

கவுண்டம்பாளையத்தில் காகங்களிடம் சிக்கிய ஆந்தை


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=367715
பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2011,23:20 IST

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையத்தில் காகங்களிடம் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் சரவணா நகர் அருகே அத்வானி நகரில் உள்ள மரத்தில் இருந்த ஆந்தையை அப்பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட காகங்கள் துரத்தின. இதில், காயமடைந்த ஆந்தையை அப்பகுதியில் வசிக்கும் செந்தில்
குமார் மற்றும் லெவன் ஸ்டார் கிரிக்கட் குழுவை சேர்ந்த இளைஞர்கள் காப்பாற்றினர். ஆந்தையை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதல் உதவி அளிக்கப்பட்டு, தற்காலிகமாக கூண்டில் அடைக்கப்பட்ட ஆந்தை அடர்ந்த காட்டுக்குள் விடப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tuesday, December 13, 2011

முதுமலை யானைகள் சிறப்பு முகாம் இன்று ஆரம்பம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=367011
பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2011,23:01 IST

மேட்டுப்பாளையம் : முதுமலை யானைகள் சிறப்பு முகாமுக்கு சென்ற 37 யானைகளுக்கும், மேட்டுப்பாளையம் சிறப்பு நலவாழ்வு முகாமில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காட்டில் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு சிறப்பு முகாம் இன்று துவங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள யானைகளை, இம்முகாமுக்கு லாரிகளில் கொண்டு சென்றனர். மேட்டுப்பாளையம் வனத்துறை டிப்போவில், இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை இணைந்து "சிறப்பு நலவாழ்வு முகாமை' அமைத்திருந்தது. முகாமுக்கு சென்று 37 யானைகளுக்கும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். யானையுடன் வந்த பாகன்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரவு ஓய்வுக்கு பின் அதிகாலை 4.50 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக தெப்பக்காட்டுக்கு யானைகளை அனுப்பினர்.

இன்று துவக்கம்
யானைகள் புத்துணர்வு முகாம், முதுமலையில் இன்று துவக்கி, 48 நாட்களுக்கு நடத்தப்படுகின்றன. முதுமலையில், புத்துணர்வு முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அமீர் ஹாஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. யானைகளின் எடை பார்க்கப்பட்டது. யானைகளை நோய் கிருமிகள் தாக்காதவாறு, முகாம் நுழைவு வாயிலில், கால்நடை டாக்டர் கலைவாணன் தலைமையில், "சோடியம்- பை - கார்பைட்' கலந்த நீர் தெளிக்கப்பட்டது. பாகன்கள், ஊழியர்களுக்கான அறைகள், சமையலறை, ஓய்வறை அமைக்கும் பணிகளும், சோலார் மின்வேலி அமைக்கும் பணியும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் தனபால் கூறுகையில், ""யானைகள் முகாம் துவக்க விழா, காலை 9.05 -10.00 மணிக்குள் நடக்கிறது. வனத்துறை அமைச்சர் பச்சைமால், இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன், இந்து அறநிலையத் துறை ஆணையர் சந்திரகுமார் பங்கேற்க உள்ளனர். 48 நாட்கள் நடக்கும் முகாமில், யானைகளுக்கு உணவு, மருந்துகள், புத்துணர்வு சிகிச்சைகள் வழங்கப்படும்'' என்றார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் என்ன?


பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2011,23:13 IST
http://www.dinamalar.com/News_detail_ban_exclu.asp?Id=367026

"முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை போலவே, மிருக வதை சட்டத்தின் கீழ் யானைகளை சேர்க்காமல், ஜல்லிக்கட்டு காளைக்கு மட்டும் தடை விதித்ததற்கு, கேரளா மீதான பாசம் தான் காரணம்' என, மத்திய அரசின் மீது, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுக் குழு பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டுக் குழு மாநில நிறுவனர் அம்பலத்தரசு கூறியதாவது: கடந்த 1960ம் ஆண்டு, மிருக வதைச் சட்டத்தின்கீழ், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளை, காட்சிப் பொருளாக அடைத்து வைத்து வித்தை காட்டுவதை, மத்திய அரசு தடை செய்தது. தற்போது,
இச்சட்டத்தை விரிவு செய்து, "ஜல்லிக்கட்டில் காளைகள் வதை செய்யப்படுகின்றன' என, உண்மைக்கு புறம்பாகக் கூறி, ஜல்லிக்கட்டு காளைகளையும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து, 2011 ஜூலை 11ம் தேதி, ஆணை பிறப்பித்துள்ளார். கேரளாவில், வெளி மாநில, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், யானைகளை வைத்து, பல்வேறு வித்தைகள் காட்டப்படுகின்றன. 

சாகச நிகழ்ச்சிகளின்போது, யானைகளுக்கு மதம் பிடித்து, பார்வையாளர்கள், பாகன்களை துதிக்கையால் தூக்கி எறிந்து, கால்களால் மிதித்து
, துவம்சம் செய்வது தொடர் கதையாக இருக்கிறது. யானைகளை காக்க, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வதில், மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. 

கேரள மாநிலத்தின் கலாசாரத்தைக் காக்க, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள கேரளாவைச் சேர்ந்தவர்கள், யானைகளை இப்பட்டியலில் சேர்க்க, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே, யானைகளை இப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளை மட்டும் இப்பட்டியலில் சேர்த்தது, மத்திய அரசின் கேரள பாசத்தை, அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. 

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், ஒரு தாய் மக்களாக ஒன்று திரண்டு போராடும் தமிழக மக்கள், ஜல்லிக்கட்டு விஷயத்திலும், மத்திய அரசுக்கு நமது எதிர்ப்பை பலமாக பதிவு செய்து, ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்க வேண்டும். இவ்வாறு, அம்பலத்தரசு கூறினார்.

Saturday, December 10, 2011

ஏரிக்கரையில் அனுமதியின்றி படப்பிடிப்பு பறவைகளை விரட்டியடித்து அடாவடி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=365309
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2011,23:22 IST

புதுச்சேரி : ஏரிப் பகுதியில், சரமாரியாக குண்டுகளை வெடிக்கச் செய்து பறவைகளை விரட்டியடித்து, சினிமா படப்பிடிப்புக் குழுவினர் நடத்திய அடாவடி, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒன்றியம், கூனிமேடு அடுத்த கழுவெளி ஏரியில், மிகப் பெரிய உப்புநீர் கழிமுகப் பகுதி அமைந்துள்ளது. கோடியக்கரை மற்றும் இலங்கைக்கு ஆண்டுதோறும் வலசை செல்லும் பறவை இனங்கள், கழுவெளியில் இளைப்பாறி விட்டு செல்லுகின்றன. கழுவேலி ஏரியில் 120க்கும் மேற்பட்ட பறவையினங்கள் லட்சக்கணக்கில் முகாமிட்டுள்ளன. பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால், வனச் சரணாலயமாக அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கழுவெளி பகுதிக்குள் நேற்று காலை 7 மணிக்கு அத்துமீறி நுழைந்த, "வாடாமலர்' சினிமா படப்பிடிப்புக் குழுவினர், 2 கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பகுதிக்குச் சென்ற உள்ளூர் மக்களிடம் கெடுபிடி செய்து விரட்டியடித்தனர். ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டைக் காட்சிகளை படப்பிடிப்புக் குழுவினர் படமாக்கினர். இதற்காக அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. அமைதி குலைந்ததால், அதிர்ச்சியில் கழுவெளியில் முகாமிட்டிருந்த கூழைக்கடா, பூநாரை, கொக்கு, கடற்காகங்கள், உள்ளான், மடையான் உள்ளிட்ட பறவைகள் அந்த பகுதியை விட்டு பறந்தோடின.

இதையறிந்த பறவை ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். "இந்த பகுதியில் பறவைகள் உள்ளதால், குண்டு வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டனர். ஆனால், சினிமா படப்பிடிப்பு குழுவினர், எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து, சினிமா படப்பிடிப்பு குழுவினர் விரட்டியடித்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் அந்த கும்பல் விட்டு வைக்கவில்லை.

"நாங்கள் இப்படித்தான் படப்பிடிப்பு நடத்துவோம்... எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது... எடுத்த படத்தை டெலிட் செய்து விடு...' என, படத்தின் டைரக்டர் ஆனந்தராஜன், மிரட்டல் விடுத்து கேமராவை பறிக்க முயன்றார்.
இன்னொரு கும்பல், "பத்திரிகையாளர்களை வீடியோ எடுத்ததுடன், போட்டோகிராபரிடம் இருந்த அடையாள அட்டையை பிடுங்கிச் சென்றது. இதை கேள்விப்பட்ட நடிகர் நந்தா, "இப்பகுதியில் பறவைகள் இருப்பது எங்களுக்குத் தெரியாது. குண்டுகள் வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்துகிறோம். டைரக்டர் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' எனக் கூறி, போட்டோகிராபரிடம் பிடுங்கப்பட்ட அடையாள அட்டையை மீண்டும் ஒப்படைத்தார். அதேசமயம், மீண்டும் மீண்டும் குண்டுகளை வெடித்து, சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த பறவை ஆராய்ச்சியாளர்கள், மரக்காணம் போலீஸ் ஸ்டேஷனிலும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார், அனுமதி பெறாததால் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர்.

வனத்துறை அதிகாரி அண்ணாதுரை கூறும்போது, "கழுவெளியை ஒட்டியுள்ள பகுதிகளில் பறவைகளுக்கு இடையூறாக சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது. அதை மீறி அனுமதியில்லாமல் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அனுமதியின்றி படப்பிடிப்பு

சினிமா படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் சுற்றுச்சூழல், வனத்துறை, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த அனுமதியும் இல்லாமல், பறவைகள் முகாமிட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்து, சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கூனிமேடு ஊராட்சியில் 7,000 ரூபாய் செலுத்தி முன் அனுமதி மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதில், பறவைகளை தொந்தரவு செய்ய மாட்டோம், குண்டு வெடிக்க மாட்டோம் என எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மடத்துக்குளம் அருகே இலவச ஆடுகள் பலி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=364145
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011,00:26 IST

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கடத்தூரில் அரசு வழங்கிய இலவச ஆடுகள் தொடர்ந்து இறந்து வருவதால் பொது மக்களிடையே பீதி எற்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கி வரும் இலவச திட்டத்தில் ஆடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கிராம ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இலவச ஆடுகள் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் கடத்தூர் புதூர் பகுதியில் 18 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து இறந்து வந்துள்ளன. நேற்று இரவு வரை கடத்தூரில் மட்டும் ஆறு ஆடுகள் இறந்துள்ளன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பயனாளிகள் கூறியதாவது: என்ன காரணத்தினால் ஆடுகள் இறக்கின்றன என தெரியவில்லை. தொடர்ந்து ஆடுகள் இறப்பதால் புதியவகை நோய் இந்த பகுதியில் பரவியுள்ளதோ என அச்சமடைந்துள்ளோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு கடந்த வாரத்தில் முதல் ஆடு இறந்த உடனேயே தகவல் கொடுத்துள்ளோம். ஆனால் இது வரை ஆடுகள் இறப்பு குறித்து மருத்துவசோதனை எதுவும் நடத்தவில்லை. இறந்த ஆடுகளை தொடர்ந்து புதைத்து வருகிறோம். மீதமுள்ள ஆடுகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: ஆடுகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து ஆடுகள் இறந்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாக்கி உள்ள ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றனர்.

இது குறித்து கடத்தூர் ஊராட்சி தலைவர் ராசு கூறியதாவது: தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் இருந்தும் அரசு வழங்கிய இலவச ஆடுகள் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மடத்துக்குளம் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாதுரை கூறுகையில், ""ஆடுகள் இறந்தது வருத்தமானது தான். இதுகுறித்து உரிய துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்'' என்றார்.

சிறை வளாகத்தில் நாய்கள் சுட்டுக்கொலை : மர்ம நபர்களின் கைவரிசையால் பரபரப்பு


http://www.dinamalar.com//News_Detail.asp?Id=357101&
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011,21:52 IST

புழல் : மத்திய சிறை அருகே, துப்பாக்கியால் நாய்களை சுட்டுக் கொன்று, உடல்களை வீசியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்களின் கைவரிசையால், சிறை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை, புழல் மத்திய சிறையை ஒட்டி சிறை ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், நேற்று அதிகாலை 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டன. இது பற்றி வேளச்சேரி, "புளூ கிராஸ் அமைப்பு பொது மேலாளர் டான் வில்லியத்திற்கு தகவல் கிடைத்தது. அமைப்பைச் சேர்ந்தவர்கள், போலீசில் புகார் செய்தனர். புழல் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நாய்களின் உடல்களைக் கண்டுபிடித்தனர்.
நன்கு கொழுத்திருந்த நாய்களை, நேற்று அதிகாலை சிலர் விரட்டி சுட்டதாக, அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார், "புளூ கிராஸ்' அமைப்பினரிடம் தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிறை வளாகக் குடியிருப்புகள், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில், 8 ஆண் மற்றும் 5 பெண் உட்பட, 13 நாய்களின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. மற்ற நாய்களின் உடல்களைத் தேடும் பணி நடக்கிறது. அவை பழலேரியில் வீசப்பட்டதா என்று, போலீசார் விசாரிக்கின்றனர்.
மீட்கப்பட்ட நாய்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பலத்த மழையின் போது, நாய்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. நாய்களை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்தும், விசாரணை நடக்கிறது. சிறை வளாகத்தில் நடந்துள்ள இது போன்ற சம்பவத்தால், மத்திய சிறையின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

மான் கறி சமைத்த 5 ஜவான்கள்: விசாரணைக்கு ஆஜராக மறுப்பு


http://www.dinamalar.com//News_Detail.asp?Id=357614&
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011,02:07 IST

ஜோத்பூர்: ராஜஸ்தானில் அரியவகை சிங்காரா மான்களை வேட்டையாடி சமையல் செய்ததாக 5 ராணுவ வீரர்கள் ‌மீது தொடரப்பட்ட வழக்கில் நேற்று அவர்கள் வனத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் த‌லைமறைவாயினர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள நீம்பாலா வனப்பகுதியில் ராணுவ தளவாடத்தொழிற்சாலையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் சிலர் கடந்த 25-ம் தேதி சிங்காரா மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறை புகார் தெரிவித்தது. 


இதைத்தொடர்ந்து 5 ராணுவீரர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு அவர்களிடம் 3 மான்களின் தலைகள் மற்றும் மான்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக வனத்துறை அதிகாரி பி.ஆர்.பஹாதி, ராணுவ கோர்டில் 5 ஜவான்களையும் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். முன்னதாக அவர்கள் மீது இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச்சட்டம் 1972-ன் 9 ம்ற்றும் 51பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று வனத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது.


ஆனால் அவர்கள் 5 பேரும் ஆஜராகவில்லை. இவர்கள் வனத்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல்.எஸ்.டி. கோஸ்வாமி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து ராணுவ தலைமையகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர்களிடமிருந்து ச‌மைப்பதற்காக வைத்திருந்த மூன்று மான் தலைகள் கைப்பற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி. இதனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றார்.

சிறகடித்து பறந்த காகங்கள் செத்து விழுந்த சோகம் க.க.சாவடியில் பரிதாபம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=364850
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011,23:43 IST


கோவை:கோவை அருகே, க.க.சாவடி பகுதியில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் நேற்று திடீரென செத்து விழுந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார், அருகேயுள்ள ஓட்டல்களில் விசாரணை நடத்தினர்.க.க.சாவடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், நேற்று பிற்பகலில் பறந்து சென்ற காகங்கள் சில, தடுமாறி கீழே விழுந்தன. அவற்றால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. சற்று நேரத்திலேயே கால்களை இழுத்தபடி இறந்தன. தொடர்ந்து, இப்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த மேலும் பல காகங்கள், இதே போல் ஆங்காங்கே விழுந்தன. விழுந்த சில வினாடிகளில் இறந்தும் விட்டன.

இறக்கும் முன், வாயில் இருந்து வெள்ளையாக எதையோ கக்கி விட்டு, வாய் திறந்த நிலையில் அப்படியே இறந்தன. கொத்து கொத்தாக, 200க்கும் மேற்பட்ட காகங்கள், ஒரே நேரத்தில் இறந்து விழுந்த தகவலை அறிந்த க.க.சாவடி போலீசார், அங்கு வந்தனர்.பள்ளி வளாகம், தோட்டம், சாலை, புதர்களில் செத்து விழுந்திருந்த காகங்களை, இப்பகுதி மக்களின் துணையுடன் அள்ளி ஓரிடத்தில் குவித்தனர். அருகில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தினர். பரிசோதனைக்காக அதில் ஒரு சில காகங்களின் உடலை அனுப்பி வைத்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ""இவ்வளவு காகங்கள் ஒரே நேரத்தில் செத்து விழுவது இதுவே முதல் முறை. இறப்புக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. ஏதாவது விவசாயத் தோட்டத்தில் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்திருக்கலாம் அல்லது சாலைகளில் கொட்டப்படும் மருத்துவ, ரசாயன கழிவுகளை சாப்பிட்டிருக்கலாம். இதைத் தவிர, இவ்வளவு காகங்களை எவரும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை,'' என்றனர்.காகங்களின் மர்ம மரணத்தின் பின்னணி குறித்து இப்பகுதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tuesday, December 6, 2011

எல்லை தாண்டியதாக இந்திய குரங்கு பாகிஸ்தானில் சிறைபிடிப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=362933
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2011,00:29 IST

இஸ்லாமாபாத்: தெரிந்தோ தெரியாமலோ இந்திய எல்லையை தாண்டி சென்ற குரங்கு, பாகிஸ்தான் வனத்துறையிடம் சிக்கியது. அது உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். தற்போது அக்குரங்கு பாகல்பூர் மிருக காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லை பகுதியிலிருந்து எல்லை தாண்டிய குரங்கு, பாகிஸ்தான் மாநிலம் பாகல்பூர் பகுதிக்கு தாவியோடி விட்டது. அதை, அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து, பிடிக்க பல முறை முயன்றும், அவர்களுக்கு "பெப்பே' காட்டி விட்டு, மரம் விட்டு மரம் தாவியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து, குரங்கை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, குரங்கு வனத்துறையினரின் கண்களில் தென்பட்டது. அதை பிடிக்க வனத்துறையினர் நீண்ட போராட்டம் நடத்தி, ஒருவழியாக பிடித்தனர். உடனடியாக அதை அங்குள்ள மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டது. அதற்கு அங்குள்ள அதிகாரிகள் "பாபி' என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். அக்குரங்கு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்தாண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறாவை உளவு பார்க்க வந்த தூதர் என, இந்திய அதிகாரிகள் பிடித்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, December 3, 2011

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு


சனிக்கிழமை, டிசம்பர் 3, 2011, 14:44
http://tamil.oneindia.in/news/2011/12/03/tamilnadu-petition-given-cancel-the-ban-the-jallikattu-aid0176.html

மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பேராசிரியர் அம்பலத்தரசு தலைமையிலான பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிகட்டு விழா குழுவினர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு காளைகளுடன் வந்து மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல ஆண்டுகளாக தெடார்ந்து நடந்து வருகின்றது. இதனை தடை செய்ய கோரி விலங்குகள் நலவாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சில நிபந்தனைகளுடன் விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையேற்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்து வருகின்றது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யும்படி, நடிகை ஹேமமாலினி மத்திய அரசிடம் கோரி விடுத்தார். அதனை தொடர்ந்து மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விலங்குகள் நலவாரிய சட்டத்தை விரிவுபடுத்தி, ஜல்லிக்கட்டு காளையை காட்சிப் பொருளாக வேடிக்கை காட்டக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு எடுக்கும் போது எம்.பி.க்களையோ, எங்களை போன்ற குழுவினரிடமோ எந்த கருத்தும் கேட்கவில்லை. தன்னிச்சையாக விளையாட்டுக்கு தடை விதித்துள்ளார். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். எனவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

Friday, December 2, 2011

ஆண் யானையிடம் மடியை தேடிய குட்டி: வண்டலூர் பூங்காவில் பரிதாபம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=360087
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2011,01:04 IST

ஈரோடு: ஈரோட்டில் இருந்து, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை, அங்கிருந்த ஆண் யானையிடம் மடியை தேடியது, வனத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் சென்னம்பட்டி காப்புக்காட்டில் இருந்து வழி தவறிய குட்டியானை, ஜரத்தல் என்ற ஏரிக்கரை அருகே பரிதாபமாக நின்றது. ஒன்றரை மாதமேயான குட்டி யானையை, காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி யாவும் தோல்வியில் முடிந்தது. இதனால், மண்டல வன பாதுகாவலர் அருண் உத்தரவின் பேரில், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்ட வரப்பட்ட குட்டியானைக்கு, ராஜ உபச்சாரம் நடந்தது. வனத்துறை அலுவலர்களிடம் குழந்தை போல பழகிய குட்டியானை, 29ம் தேதி இரவு, 8.30க்கு நீண்ட நேர பாச போராட்டத்துக்கு பின், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பூங்கா ஊழியர்களுடன் முதலில் பழகவும், அவர்கள் வைக்கும் உணவையும் உண்ண மறுத்த குட்டியானை, அதன் பின் அவர்களிடம் நன்கு பழகியது. அதே பூங்காவில் உள்ள சற்று பெரிய யானையுடன், நேற்று காலை குட்டி யானையை பழக விட்டனர். ஆனால், தன் தாய் வந்து விட்டதாக எண்ணிய குட்டி யானை, ஆண் யானையின் உடல் முழுவதும், தன் துதிக்கையால் முத்தமிட்டது. அதன் பின் துதிக்கையை தூக்கி பால் குடிக்க ஆண் யானையிடம் மடியை தேடியது. மடி இல்லாததால் ஏமாற்றமடைந்த குட்டி யானை, சில மணி நேரத்தில் ஆண் யானையிடம் நன்கு பழகியது.

குட்டி யானை தங்களிடம் குழந்தை போல் பழகியதாகவும், அதை நன்கு பராமரிக்க வேண்டும் என்றும், ஈரோடு மாவட்ட வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குட்டி யானையை ஈரோட்டில் குளிக்க வைக்கும் போது காதில் ஏற்பட்ட காயத்துக்கு, வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளும், ஊழியர்களும் இரவு பகலாக குட்டியானையை கவனித்து வருகின்றனர்.

Monday, November 28, 2011

சரணாலயத்தை விட்டு இடம் பெயரும் வெளிநாட்டு பறவைகள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=356491
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2011,21:23 IST
 
ராமநாதபுரம் : சரணாலயங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், அடைக்கலம் தேடி வந்த வெளிநாட்டு பறவைகள், வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேல செல்வனூர், கீழ செல்வனூர், தேர்த்தங்கால் ஆகிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயங்கள் கண்மாயை அடிப்படையாக கொண்டு அமைந்தவை. ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் சைபீரியா மற்றும் கடுங்குளிர் பிரதேசங்களிலிருந்து, பிளமிங்கோ, உள்ளான் வகை பறவைகள், உள்பட ஏராளமான வெளிநாட்டு மற்றும் வடநாட்டு பறவைகள் வருகின்றன. நவம்பர், டிசம்பரில் வரும் பறவைகள், ஜூன், ஜூலை வரை தங்கியிருந்து, இரண்டு முதல் மூன்று முறை வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

இந்த கண்மாய்கள் தூர்வாரப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 100 செ.மீ.,க்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 30 முதல் 40 செ.மீ.,க்குள்தான் மழை பெய்துள்ளது. கடந்தாண்டு மாவட்டம் முழுவதும் அக்டோபர் வரை 1180 மி.மீ. மழை பெய்திருந்தது. இந்தாண்டு அக்டோபர் வரை 461.71 மி.மீ., மற்றும் அக்டோபரில் 265.32 மி.மீ., மழை பெய்தது. இதனால் கண்மாய்களில் சிறு குட்டை போன்ற அளவில்தான் தண்ணீர் உள்ளது. இங்கு கூடு கட்டாமல் ராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம், உச்சிப்புளி போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. சில பறவைகள் வெளிநாடுகளுக்கு திரும்பி செல்கின்றன.

அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப்போராட்டம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=357889
பதிவு செய்த நாள் : நவம்பர் 29,2011,00:47 IST
 

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் ரோட்டில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன.அப்போது, பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில் முட்டி எழுப்பியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது.மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழந்தனர்.

விபத்தில் சிக்கிய மாடு இறந்ததால், உடன் வந்த காளை மாடு பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்தது. சாலையில் இறந்த காளை மாட்டை பொதுமக்கள் அகற்றினர்.

Friday, November 25, 2011

நண்பேன்டா...! டீ மாஸ்டருடன் விளையாடும் அணில்: ஆச்சர்யப்பட வைக்கும் பாசப் பிணைப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354769
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,01:17 IST

விழுப்புரம் : விழுப்புரத்தில், ஒரு டீ கடைக்காரருடன் விளையாடியபடி நட்புடன் பழகி வரும் அணிலின் பாசப் பிணைப்பு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், கணபதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். திருச்சி நெடுஞ்சாலையில் மகளிர் கல்லூரி எதிரே, டீ கடை வைத்துள்ளார். எப்போதும் இவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் அணிலைப் பார்த்து, கடைக்கு வரும் மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.பங்க் கடையில் விற்பனை, டீ போடும் போதும், அவரது தோளிலும், கைகளிலும் திரிந்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த அணில். கண்ணில் பட்டவுடன் ஓடிவிடும் சுபாவம் கொண்ட அணில், ஒருவருடன் நட்புறவாக ஒட்டிக்கொண்டுள்ளது, அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.அவர் கொடுக்கும் உணவுகளை சுவைத்தபடி சுற்றி வரும் அந்த அணில், டீ கடை மேல் கூரை, பங்க் கடை பகுதிகளில் உலவுகிறது, காஞ்சன் என செல்லமாக அவர் அழைத்த குரலுக்கு, உடனே ஓடி வந்து, அவர் தோள் மீது உட்கார்ந்து விளையாடுகிறது. அவருடன் சண்டை கூட போடுகிறது.

அணிலுடன் ஏற்பட்ட நட்பு குறித்து வேல்முருகன் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கடையின் அருகே இருந்த மரத்தின் கூட்டிலிருந்து, இந்த அணில் குஞ்சு கீழே விழுந்து கிடந்தது. கண் திறக்காமல் இருந்த அணில் குஞ்சை எடுத்து, பால் வாங்கி ஊற்றி வளர்த்தேன்.பால், பிஸ்கட், சாதம் ஆகியவற்றை உணவாகக் கொடுத்து வந்தேன். அணில் என்னுடனே ஒட்டிக் கொண்டது. காலையில் கடை திறந்தவுடன், என் மீது அமரும். மாலை இருள் சூழ்ந்தவுடன், 6 மணிக்கு, கடையின் உள்ளே சென்றுவிடும்; வெளியே வராது. மறு நாள் காலை கடையைத் திறந்தவுடன், என்னுடன் வந்துவிடும்.பால், பிஸ்கட், சாதம், வறுகடலை, மணிலா பயிறு வடை என, நான் கொடுப்பது அனைத்தையும் சாப்பிடும். சிக்கன், மட்டன், மீன் உணவையும் இது ருசித்துள்ளது. நான் டீ போடும் போதும், விற்பனை செய்யும் போதும், என் மீது விளையாடிக் கொண்டிருக்கும். எந்த பொருளையும் வீணடிக்காது; நான் கொடுப்பதை மட்டுமே சாப்பிடும்.மற்றவர்கள் மீது விட்டால், நுகர்ந்து பார்த்து விட்டு, உடனே திரும்பி என் மீது ஒட்டிக் கொள்ளும். நான் வெளியூர் செல்லும் போதும், என்னுடன் பைக்கில் பலமுறை பயணித்துள்ளது. உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்ற போது, என் பாக்கெட்டினுள் பயணித்து, திரும்பி வந்துள்ளது.இவ்வாறு வேல்முருகன் கூறினார்.இந்த பாசப் பிணைப்பை பொதுமக்கள் பலரும் பாராட்டிச் செல்கின்றனர்.

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=355361
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011,00:37 IST

சென்னை: சுதந்திரமாக உலா வரும் எலி, நாய்களை பிடித்துக் கொடுத்தால், சன்மானமாக பணம் தரப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளோருக்கு எலிப்பிடிக்க பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில், தெருநாய்களின் ஆதிக்கம் மட்டுமல்ல, எலி மற்றும் பெருச்சாளிகளின் தொல்லை, அதிகமாகவே உள்ளது. தெரு நாய் கடியால் "ரேபிஸ்' நோய் பரவும் என்பதால், அவற்றைப் பிடித்து இனப்பெருக்கக் கட்டப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு, பிடித்த பகுதியிலேயே கொண்டு போய் விடும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது. பேசின்பாலம் சாலையில், நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாடு மையம் செயல்படுகிறது. புகார்களின் அடிப்படையில், தெருநாய்கள் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நாய் பிடிக்கும் வாகனங்கள் ஆறும், இதில் நிரந்தர பணியாளர்கள் நான்கு பேரும், ஒன்பது தனியார் தொழிலாளர்களும் உள்ளனர். சராசரியாக மாதத்திற்கு, 1,200 நாய்கள் வரை பிடிக்கப்படுகின்றன.

எலி மற்றும் பெருச்சாளிகளால் ஏற்படும் தொல்லைகளைக் கட்டுப்படுத்த, கிடங்குகள், காய்கறி அங்காடிகள், உணவு விடுதிகள், குப்பை கொட்டும் இடங்களில் எலியை ஒழிக்க விஷம் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தெரு நாய்கள் மற்றும் எலி, பெருச்சாளிகளைக் கட்டுப்படுத்த, பொது நோக்குடைய தனியாரை பயன்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவை தொடர்பான மாநகராட்சி அறிவிப்புகள்:

நாய் பிடிக்க இலவச பயிற்சி:
* தெரு நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் தனியாருக்கு, நாய் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, 25 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* தன்னார்வமுள்ளவர்களுக்கு, நாய் பிடிக்கும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். அவர்கள் பிடிக்கும் நாய்களுக்கு, 50 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* தன்னார்வம் கொண்டவர்கள் பிடித்துக் கொடுக்கும் பெருச்சாளி, மற்றும் நகர எலிகளுக்கு, எண்ணிக்கை அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த, "கிரேட்டர்' சென்னையில் முதல் கூட்டத்தில், இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

Monday, November 21, 2011

இறந்தது இந்தியாவின் கடைசி சைபீரிய புலி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=353155
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2011,09:27 IST


டேராடூன் : உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் உயிரியல் பூங்காவில், இந்தியாவின் கடைசி சைபீரிய புலியான குணால் மரணமடைந்துள்ளது உயிரியல் ஆர்வலர்களை பெரும் கலக்கமடைய செய்துள்ளது. 1997ம் ஆண்டு, குணால் மற்றும் மகேஷ் எனும் 2 சைபீரிய புலிகள், டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிலிருந்து நைனிடால் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இதில், ‌மகேஷ் பெயர் கொண்ட புலி, கடந்த 2001ம் ஆண்டில் மரணமடைந்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள கடைசி சைபீரிய புலி என்ற பெருமையை குணால் புலி பெற்றது. வயது மூப்பு காரணமாக, குணால் புலியும் மரணமடைந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்

Saturday, November 19, 2011

பூங்காவில் ஐந்து புலிக்குட்டிகள் இறந்தன


பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2011,06:02 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=352590

புவனேஸ்வர் : நந்தன்கண்ணன் விலங்கியல் பூங்காவில் ஒரு வெள்ளை புலி குட்டி உள்பட ஐந்து புலிக்குட்டிகள் இறந்தன. கடந்த புதனன்று பிறந்த இந்த புலிக்குட்டிகள், ஊழியர்களின் கவனக்குறைவால் பராமரிப்பில் ஏற்பட்ட குறையினால் இறந்தன. இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர், தாய் புலி, பால் தராததால் குட்டிகளுக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் இறந்ததாக கருத்து தெரிவித்தனர்

கிணற்றில் விழுந்த மாடு மீட்பு


பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2011,22:50 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=350927

குஜிலியம்பாறை : சின்னலுப்பை ஊராட்சி தோப்பாகவுண்டனூரை சேர்ந்தவர் கருணாநிதி, 45. இவர், வளர்த்து வந்த எருமை மாடு, தோட்டத்து கிணற்றில் விழுந்தது. வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையிலான வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

Monday, November 7, 2011

பக்ரீத் அன்று பசுக்களை கொல்லாதீங்க: துணைவேந்தர் நவ்மானி வேண்டுகோள்


பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011,21:47 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=344535

தியோபந்த்:""இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகைக்காக, பசுக்களை கொல்வதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்,'' என, தாரூல் உலூம் தியோபந்த் பல்கலைக்கழக துணை வேந்தர் மவுலானா அபு காசிம் நவ்மானி கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நவ்மானி கூறியதாவது: இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகைக்காக முஸ்லிம்கள் பசுக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும். பண்டிகையின் போது, சுகாதாரத்தை பேணி காக்க சுகாதாரத் துறையினருக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பிறந்த நாள் கொண்டாடுவது மேற்கத்திய கலாசாரம் என்பதால், அதை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். பிறந்த நாள் கொண்டாடுவது ஷரிஅத் சட்டத்திற்கு எதிரானது.இவ்வாறு அபு காசிம் நவ்மானி கூறினார்.

Saturday, October 29, 2011

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்


பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011,01:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339708

வதோதரா :தரையில் படுத்துக்கொண்டு மாடுகளை ஓடவிட்டு மிதிக்க செய்யும், வினோத நேர்த்திக் கடனை குஜராத் மாநில பழங்குடியினர் மேற்கொண்டனர்.

குஜராத்தின் தஹோத் மாவட்டம் கர்பதா கிராம மக்கள், தங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "காய் கவுரி விரதம்' மேற்கொள்கின்றனர். தங்கள் குல தெய்வமான பாபா கோடா, சாமுண்டா ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை தங்கள் மீது மிதிக்க செய்யும் சடங்கை செய்தனர். இதன் மூலம் மாடுகளுக்கு தாங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த விழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த கிராமத்தில் கூடினர். நேர்த்திக் கடனை செலுத்துபவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, மாடுகள் வரிசையாக இவர்களை மிதித்தப்படி ஓடுகின்றன. இந்த நேர்த்தி கடனை செய்தவர்களுக்கு மாடு மிதித்ததில் எந்த காயமும் ஏற்படவில்லை.

Thursday, October 27, 2011

பாம்புகளை பார்த்து அச்சப்பட தேவையில்லை : காணுயிர் சங்க உறுப்பினர் தகவல்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=338446
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2011,23:09 IST

சேலம்: பாம்புகளை கொல்வதை நிறுத்தணும். மக்களிடையே பயத்தை போக்கணும். எல்லா பாம்பும் விஷமல்ல, நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை ஆகிய நான்கு வகை பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை.

பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை பிளேடு மூலம் அறுக்கக்கூடாது. சிலர், கல் வைத்து மந்திரம் மூலம் சரி செய்வதாக கூறி, தந்திர வேலையில் இறங்குவர்; அங்கும் செல்லக்கூடாது. பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தில் இருந்து இரண்டு, "இன்ச்' தள்ளி துண்டோ அல்லது கயிறு மூலம் இறுக்கமாக கட்டாமல், லேசாக கட்ட வேண்டும். உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும்.

பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற எத்தனையோ மருந்துகள் வந்துள்ளன. சாரைப்பாம்பின் வாலில் விஷம் இருப்பதாக சிலர் கூறுவதுண்டு. அது தவறு. சாரைப்பாம்பு கடித்தாலும் விஷமில்லாதது. தோட்டத்தில் எலிகள், தவளைகள் வருவதை தடுக்கும் பணியில் சாரைப்பாம்புகள் ஈடுபடுகின்றன.

நீலகிரி மாவட்ட காணுயிர் சங்கத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினரும், பாம்புகளை பிடிக்கும் வல்லுனருமான சாதிக்அலி கூறியதாவது: நீலகிரி மாவட்ட காணுயிர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள், ஒவ்வொருவரும் விலங்கு, பறவை அல்லது ஊர்வன இனங்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். பாம்புகளை கையாள்வதில் சிரமம் இருக்கும் என, உறுப்பினர்கள் நினைத்ததால், நானே விருப்பப்பட்டு பாம்புகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டினேன்.

தற்போது, அனைத்து வகை பாம்புகளையும் பிடிப்பது எப்படி என்பது குறித்து அனைத்து விபரங்களும் தெரிந்துள்ளது. பாம்புகளின் போக்கு குறித்து வனத்துறைக்கும் பயிற்சி அளித்துள்ளேன். பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 20 ஆண்டாக இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், பாம்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்து வருகிறேன். பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்பது குறித்து, வனத்துறை பணியாளர்கள், இளைஞர்களுக்கு கற்று கொடுத்துள்ளேன். பாம்புகளை பிடித்தவுடன், அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டு விட வேண்டும். தமிழகத்தில், 20 ஆண்டுகளில் இதுவரை, 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளேன்.

சேலம் சுற்றியுள்ள பகுதிகளில், சமீப காலமாக பாம்புகளை பார்க்கும் மக்கள், அதை அடிக்காமல் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளிக்கின்றனர். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்கும் முருகன், சிவா போன்றவர்கள் பாம்புகளை பிடித்து, வனத்துறையின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விட்டு விடுகின்றனர்.

சமீபத்தில், சேலம் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் மாணவியர் கைகளில் சாரைப்பாம்புகளை கொடுத்து, அச்ச உணர்வை நீக்கினேன். சில நிமிடங்களில் அந்த மாணவியரும் சாரைப்பாம்பை மாலையாக அணிந்து கொண்டனர். பாம்புகள் எப்போதும் நம்மை தாக்க வராது; அதை நாம் தாக்க நினைத்தால், அது உயிருக்கு பயந்து நம்மை கொத்த வருகிறது.

வீடுகளில் பழைய இரும்பு சாமான்களை சேர்த்து வைப்பது, பழைய பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாம்புகள் வந்து தங்குவதற்கு உகந்த இடமாகும். எனவே, தட்டுமுட்டு சாமான்களை சேர்க்காமல் அவற்றை கழிப்பதே நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு சத்தம் இல்லாத கிராமம்: வவ்வால்களுக்காக "தியாகம்'

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=338472
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2011,00:25 IST


புதுச்சேரி:வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடினர்.தீபாவளி பண்டிகையென்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது விதவிதமான பட்டாசுகள்.

ஆனால், புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அருகில் தமிழக பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை . கழுப்பெரும்பாக்கம் ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்திண்ணி வவ்வால்களே கிராம மக்களின் இந்த தியாகத்திற்குக் காரணம். இந்த பழந்திண்ணி வவ்வல்களுக்காக தான் கடந்த 5 தலைமுறையாக இந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இரவில் உணவு வேட்டை நடத்திவிட்டு பகலில் மரக்கிளைகளில் தொங்கியப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்தால் பழந்திண்ணி வவ்வால்கள் கலைந்து சென்றுவிடும் என்பதால் யாரும் வெடிப்பதில்லை.தீபாவளி பண்டிகை என்றில்லாமல் பல காலமாகவே இங்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை. கிராமத்தில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என பொது விஷேச நிகழ்ச்சிகள் களைக்கட்டினால் கூட பட்டாசு சத்ததைக் கேட்க முடியாது. இப்பகுதிகளில் பட்டாசு புகை, நெடி கூட அண்ட விடாமல் பல ஆண்டுகளாக கவனத்துடன் பாதுகாத்து பாராமரித்து வருகின்றனர்.

வழக்கம்போல, இந்தாண்டு தீபாவளி பண்டிகையான நேற்றும் இந்த கிராமத்தில் மக்கள் பட்டாசுக்களை வெடிக்கவில்லை. மற்றப்படி இனிப்புகள் செய்து, புத்தாடைகள் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர். இந்த ஊர் மக்களுக்குப் பழந்திண்ணி வவ்வால்கள் தான் செல்ல குழந்தைகளாக விளங்குகின்றன. மரத்திற்கு அடியில் வவ்வால்கள் அடிப்பட்டு கீழே விழுந்து கிடப்பதை யார் கண்டாலும் அடுத்த நிமிடமே அக்கறையுடன் முதலுதவி சிகிச்சை கொடுத்து மீண்டும் மரக்கிளையில் ஏற்றிவிடுகின்றனர். இறந்துவிட்டால் சில நிமிட மவுன அஞ்சலிக்குப்பின் மண்ணில் புதைத்துவிடுகின்றனர். எந்தக் காரணத்தை வேட்டையாடுபவர்களை ஊருக்குள் நுழைய விடுவதே கிடையாது. மனிதனுக்கு மனிதனே மனிதநேயம் காட்ட தவறும் இந்த உலகில், வவ்வால்கள் மீது பாசம் வைத்து கடந்த 5 தலைமுறைகளாக பட்டாசுகளுக்கு "குட்-பை' சொல்லி வரும் கழுப்பெரும்பாக்கம் கிராம மக்களின் உயரிய பண்பு வியக்க வைக்கிறது.

Thursday, October 13, 2011

மளிகை சாமான் வாங்கி வரும் "நாய்'


பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2011,00:40 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329808

விழுப்புரம்:விழுப்புரத்தில் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் அதிசய நாயை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந் தவர் பாபு,42; தையல் தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா,37. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடந்த ஓராண்டாக தங்களது செல்லப்பிராணியாக லேபர் வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். இதற்கு "ஹனி' என பெயர் வைத்துள் ளனர். இந்த நாய் மளிகை கடைக்கு சென்று வீட்டின் உரிமையாளர் கொடுத்தனுப்பும் லிஸ்ட் படி கூடையில் பொருட்களை வாங்கி வருகிறது. இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று டிபன் மற்றும் சாப்பாடு, மெடிக்கல் கடையில் மருந்து வாங்கி வருவது உள்ளிட்ட வேலைகளை செய்கிறது. இந்த அதிசய நாயை பார்த்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அழகுக்காக நாய்க்குட்டி வாலை "கட்' செய்பவரா நீங்க? "கம்பி' எண்ண நேரிடும் எச்சரிக்கை!


பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2011,23:43 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=330377

கண்ணூர்: அழகு என்ற பெயரில், நாய்க்குட்டிகளின் வால் மற்றும் காதுகளை சிலர், "கட்' அல்லது "டிரிம்' செய்து வருகின்றனர். இனி, அவ்வாறு செய்தால், சிறையில் கம்பி எண்ண நேரிடும்.

நடுத்தர மற்றும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உயர் வகை நாய்க்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் நாய்க்குட்டிகளை, சிலர் அழகுக்காக என்று கூறி, அதன் வாலையும், சிலர் காதுகளையும், "கட்' அல்லது "டிரிம்' செய்து விடுகின்றனர். இது விலங்குகளை மிகவும் துன்புறுத்தும் செயலாக கருதப்படுகிறது. இதுபோன்று செய்வது சட்டப்படி குற்றம் என, பாரதிய உயிரின பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளது. நாய்க்குட்டிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே, அதன் வால் மற்றும் காதுகளை வெட்டுவதற்கு அனுமதி உள்ளது. அழகு என்ற பெயரில் செய்யக் கூடாது. சட்டத்திற்கு புறம்பாக, இவ்வாறு கொடுஞ்செயல் புரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில கால்நடை பராமரிப்பு துறை, கெனல் கிளப்புகள் மற்றும் உயிரின பாதுகாப்பு தொண்டு நிறுவனங்களை இக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. சட்டத்தை மீறி சில கால்நடை மருத்துவர்கள் செய்துவரும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

"வால் மற்றும் காதுகளை வெட்டி எடுத்த நாய்க்குட்டிகளை, கண்காட்சிகளில் பங்கேற்க அனுமதிக் கூடாது. அந்த நாய்க்குட்டிகளை எந்த கிளப்பும் பதிவு செய்யக் கூடாது. இதுகுறித்து, இந்திய கால்நடை கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள மாநில கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு கால்நடை மருத்துவமனைகள் உட்பட, அனைவருக்கும் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்' என்றும், பாரதிய உயிரின பாதுகாப்பு கழகம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இப்புதிய உத்தரவுகள் அமல்படுத்தப்படுகிறதா என, மாநில கிளைகள் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால், இதுகுறித்து போலீசாரின் உதவியைக் கோரவும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Saturday, October 8, 2011

மாடுகளுடன் லாரிகள் பறிமுதல்


பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2011,21:31 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=326649

கோவை : அதிக மாடுகளை ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளை, இந்து முன்னணிக் கட்சியினர் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். நேற்று அன்னூரில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளை, கணபதி அருகே இந்து முன்னணி அமைப்பினர் மடக்கினர். லாரிகள் ஒவ்வொன்றிலும் சுமார் 35 அடிமாடுகள், கன்றுக் குட்டிகள் மற்றும் கறவை மாடுகள் நெருக்கமாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் தராமல் ஏற்றி வந்ததால் ஏற்பட்ட தாகம் காரணமாக சில கன்றுக் குட்டிகளுக்கு நாக்கு வெளியில் தள்ளியது. லாரிகளையும் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்து முன்னணியினர் ஓட்டிச் சென்றனர். அதிக லோடு ஏற்றிச் சென்றதற்காக, மூன்று லாரி உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Monday, September 19, 2011

இறந்து கிடந்த பெண் யானை

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2011,21:42 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=315156

பழநி : கொடைக்கானல் மலையடிவாரத்தில் மாந்தோப்பு ஒன்றில் இறந்து கிடந்த பெண் யானை குறித்து பழநி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பழநி வரதமாநதி அணை அருகே ஆயக்குடியை சேர்ந்த நாச்சம்மாள் என்பவருக்குச் சொந்தமான, மாந்தோப்பு உள்ளது. இங்கு ஏழு வயதுள்ள பெண்யானை, மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் வேலுச்சாமி தலைமையிலான வனத்துறையினர், பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். "நான்கு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம்,' என கூறிய வனத்துறையினர், இதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Friday, August 12, 2011

முட்டையிட்ட கட்டுச்சேவல்


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2011,23:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=293807

ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது.
தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:உயிர்களில், ஆணிடம் எக்ஸ், ஒய் குரோமோசோம்களும், பெண்ணிடம் எக்ஸ், எக்ஸ் குரோசோம்களும் இருக்கும். ஆனால், இவ்வகை சேவல்களுக்கு எக்ஸ், எக்ஸ், ஒய் அல்லது எக்ஸ், ஒய், ஒய் குரோமோசோம்கள் இருக்கும்.இவை இரண்டும் கெட்டான் தன்மையுடன், கருப்பை மற்றும் விதைப்பை ஆகிய இரண்டும் கொண்டிருக்கும். எப்போதாவது அரிதாக முட்டையிடும்; கோழிகளுடன் இணையவும் செய்யும். இம்முட்டையை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

யானைகளை பாதுகாக்க உணவு வளையம் திட்டம்

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2011,01:20 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=291216


பழநி : யானைகள் பாதுகாப்பு திட்டத்தில், வனக்கோட்டம் வாரியாக 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு வளையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வனஎல்லை அருகேயுள்ள பகுதிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. வன உயிரின நடமாட்ட பகுதிகளும், பட்டா நிலங்களாக மாறியுள்ளன. இதனால் உணவு, தண்ணீர் தேவைக்காக, வனஎல்லையை கடந்து யானைகள் நடமாடுவது அதிகரித்து வருகிறது. 

இதனால் விளைநிலங்கள் சேதமடைவதுடன், உயிர் பலியும் ஏற்படுகிறது. இது தவிர யானைகள் வேட்டையாடுதல், துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. இவற்றை தவிர்க்க, வனஎல்லையை விரிவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகளின் நடமாட்ட பகுதிகளில், வெளிமண்டல பகுதியை 40 மீட்டராக இருந்ததை, 200 மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள நிலங்கள் குறித்த விபரங்களை, வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

யானைகள் பாதுகாப்பு திட்டத்தில், ஆண்டுதோறும் உணவு வளைய திட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானை பராமரிப்பில் உள்ள வனப்பகுதியில், கோட்டம் வாரியாக ஆண்டுதோறும் 125 ஏக்கர் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் யானைகளின் உணவு தேவைக்கான மூங்கில், விதவிதமான புல் வகைகள் வளர்க்கப்படும். குடிநீர் தேவைக்கு, அதிக பரப்பிலான பண்ணைக்குட்டையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதற்காக ஏக்கருக்கு நான்கு லட்சம் ரூபாய் வீதம் செலவிட அரசு திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Saturday, August 6, 2011

வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் : போலிகளை தடுக்க தேவை நடவடிக்கை


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2011,23:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=290056

ராஜபாளையம் : வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் செல்லும் நிலையில் , நாய்குட்டிகள் உற்பத்தியில் போலிகள் புகுந்துள்ளதால் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகில் உள்ள 350 இன நாய்களில் இந்திய வகையில் 6 இனங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை என நான்கு இனங்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவை. வீட்டு உணவை சாப்பிட்டு வளர்பவை. இதற்கு வெளிநாட்டு நாய்களை போன்று எஜமான் விசுவாசம், கீழ்படிதல், நுகர்வு தன்மை, சுறுசுறுப்பு உண்டு. வீட்டு காவலுக்கு ராஜபாளையம் நாய்கள், வேட்டைக்காக சிப்பிபாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் பயன்படுகின்றன.

எந்த இனத்தை சேர்ந்தவை நாய்குட்டி என சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான "கென்னல் கிளப்' ராஜபாளையத்திலும் செயல்படுகிறது. இங்கு தென் தமிழகத்தை சேர்ந்த நாய்களுடன் வெளிநாட்டு நாய் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ராஜபாளையம் வகை நாய்கள், மக்களை கவர்ந்து உள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாதம் 100 நாய்களுக்கு ஆர்டர் வருகின்றன . இங்குள்ள பண்ணை மூலம் மாதம் 20 முதல் 25 நாய்களே கொடுக்க முடிகிறது. இதன் குட்டிகள் 4000 ரூபாய் முதல் 8000 வரை விலை போகின்றன.

ராஜபாளையத்தில் "கென்னல் கிளப்' அங்கீகாரம் இல்லாத சில பண்ணைகளும் உள்ளன. இங்கு குடிசை தொழில் போல் நாய்குட்டி உற்பத்தியும் மாறி வருவதால் சிலர் லாப நோக்குடன் , தெருநாய்களை கலந்து, கலப்பின குட்டிகள் உருவாக்குகின்றனர். இந்த கலப்பின குட்டிகளோ பார்வை கோளாறு, காது கேட்கும் தன்மை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. குட்டியாக இருக்கும்போது தெரியாத இந்த குறைகள், வளரும்போது தான் தெரிகிறது. இதில் ஏமாறும் பலரும் எங்கு புகார் செய்வது என தெரியாமல் உள்ளனர். ராஜபாளையம் வகை நாய்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால், இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, நாய் உற்பத்தியை பெருக்கலாம்.

ராஜபாளையம் கான்டம்

பிளேட் கென்னல் கிளப் நாய்பண்ணை உரிமையாளர் சுரேந்திரன்பாபு கூறியதாவது: ராஜபாளையம் வகை நாய்கள் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு மாறும் தன்மை கொண்டவை. இதற்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு . ஜம்முவில் உள்ள பாராமுல்லா ராணுவ முகாம், அந்தமான் தீவிற்கு அனுப்பி உள்ளோம். வெளிநாட்டு மோகத்தால், நம்நாட்டு நாய்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கேரளாவில் வீடு, எஸ்டேட்களுக்கு இங்கிருந்து குட்டிகள் செல்கின்றன. ஆந்திரா, கர்நாடகாவிற்கும் குட்டி செல்கின்றன. இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்தால், வேலை இல்லா இளைஞர்கள் பலர் இத்தொழிலில் ஈடுபடுவர், என்றார்.

கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் முருகன் கூறுகையில், ""கென்னல் கிளப் ஆப் இந்தியா சான்றிதழ் தரும் நிறுவனத்தில் நாய்களை வாங்கலாம். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தான் அங்கீகாரம் பெறாதவர்கள், கலப்பின குட்டிகளை விற்கின்றனர். நாய்பண்ணை துவங்க விரும்புவர்கள், நாய் வாங்க நினைப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம்,'' என்றார். இவரை தொடர்பு கொள்ள 94440 42046.

Monday, July 18, 2011

உடுமலை அமராவதி ஆற்றில் முதலைக் குஞ்சுகள் வீச்சு:வனத்துறை திணறல்

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011,22:39 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=277783

அமராவதி முதலை பண்ணையில் உற்பத்தியாகும் முதலை குஞ்சுகளை பராமரிக்க முடியாத வனத்துறையினர் அவற்றை மறைமுகமாக நீர்நிலைகளில் வீசி வருகின்றனர். இதனால், அமராவதி அணை மற்றும் ஆறு, திறந்த வெளி முதலைப்பண்ணையாக மாறி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. உடுமலை அருகே அமராவதியில், கடந்த 1976ல் பவானிசாகர் அணைப்பகுதியிலிருந்து முதலை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டன.அமராவதி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, இந்த பண்ணையில் தற்போது 94 முதலைகள் உள்ளன. இதில் 8 முதல் 45 வயது வரையுள்ள 72 பெண்; 22 ஆண் முதலைகள் உள்ளன. நூறு வயது வரை வாழக்கூடிய இந்த நன்னீர் முதலை இனம் "இந்தியன் மக்கர்' என அழைக்கப்படுகிறது.

இந்த முதலைகளுக்கு நாள்தோறும் 26 கிலோ மாட்டிறைச்சி, 9 கிலோ மீன் உணவாக வழங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணமாக 50 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எப்போதாவது வரும் சுற்றுலா பயணிகளிடமும் குறைந்த கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதால் பண்ணையை பராமரிக்க வனத்துறையினர் கண்ணீர் விட வேண்டியுள்ளது.இந்நிலையில், பண்ணையில் 94 முதலைகள் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைக்காக வனத்துறையினர் பின்பற்றும் நடைமுறையே அமராவதி அணை மற்றும் ஆற்றுப்படுகைகளின் அருகில் வசிப்பவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளது.நன்னீர் முதலை இனம் ஆண்டுதோறும் பிப்., மாதம் முதல் ஏப்., மாதம் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இந்த காலத்தில் பெண் முதலைகள் 8 முதல் 45 முட்டைகளை இடும். சராசரியாக 10 முதல் 36 முட்டைகள் இனப்பெருக்க காலத்தில் இடுவது வழக்கம்.முதலை பண்ணையில் பெண் முதலைகள் முட்டைகளை இடுவதற்கு ஏதுவாக மணற்பரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 55 முதல் 75 நாட்கள் வரை முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் வரை பெண் முதலைகள் அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியானவுடன் அருகிலுள்ள நீர்நிலைக்கு குஞ்சுகளை தாய் முதலை கொண்டு சேர்த்து வளர்க்கும். இவ்வகை முதலைகள் 5 ஆண்டுகளில் 35 செ.மீ., வரை வளரும். பொறிக்கப்படும் முட்டைகளில் பல்வேறு காரணங்களினால் குஞ்சுகள் இறந்து விடும்.இவற்றையும் தாண்டி ஆண்டுக்கு 20 முதலை குஞ்சுகள் வரை உயிர் பிழைக்கும். முதலை பண்ணையில் கூடுதலாக முதலைகளை பராமரிக்க வழியில்லாததால் குஞ்சுகளை மறைமுகமாக அருகிலுள்ள அமராவதி அணையிலும், ஆற்றிலும் வீசி விடுவதை வனத்துறையினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வாறு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை பண்ணையிலிருந்து வீசி எறியப்பட்ட முதலை குஞ்சுகள், தற்போது அணை மற்றும் அமராவதி ஆற்றின் பல பகுதிகளை நிரந்தரமாக ஆக்கிரமித்து வசிப்பிடமாக மாற்றியுள்ளன.ஆற்றுப்படுகையிலும், அணையிலும் மீன் தவிர இதர உணவு கிடைக்காத நிலையில் முதலைகள், மனிதனை தாக்குவது அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது. முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அமராவதி அணைப்பகுதியில் இரவு நேரத்தில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளிலும் இரவு நேரத்தில் வலை விரிக்கப்பட்டு மீன் பிடி பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், முதலைகள் நடமாட்டத்தால் அமராவதி அணையில் மட்டும் அதிகாலையிலிருந்து காலை 10.00 மணி வரை மட்டும் மீன் பிடி பணி மேற்கொள்ளப்படுகிறது.அணையின் கரையோரப் பகுதிகளில் முதலை தாக்கி மலைவாழ் மக்கள் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.கரூர் வரை செல்லும் அமராவதி ஆறு, திறந்த வெளி முதலைப்பண்ணையாக மாறி, உணவுத்தேவைக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பீதி ஏற்படுத்துகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் தாராபுரம் அருகே ருத்ராவதியில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிய, இரண்டு முதலைகளை வனத்துறையினர் பிடித்து வேறு பகுதியில் விட்டனர். தற்போது மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் முதலை தென்பட்டதால், மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. விழிப்புணர்வுக்காகவும், அரிய வகை முதலை இனத்தை பாதுகாக்கவும் துவங்கிய முதலை பண்ணையை வனத்துறையினர் முறையாக பராமரிக்காததால், பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.முதலை பண்ணையை விரிவுபடுத்தி, ஆண்டுதோறும் உற்பத்தியாகும் முதலை குஞ்சுகளை பராமரிக்க வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"அமராவதி முதலைப்பண்ணையில் ஆண்டு தோறும் இனப்பெருக்க காலத்தில் பொறிக்கும் முதலை குஞ்சுகள் முறையாக வளர்க்கப்படுகின்றன. முதலை பண்ணையை மேம்படுத்த கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது', என்றனர்.-பி.செந்தில்ராமன்-

Monday, July 11, 2011

யானை சாவு ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்ற போது பரிதாபம்

தடாகம் பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த காட்டு யானை சாவு ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்ற போது பரிதாபம்

கோவை,ஜுலை.11-

கோவையை அடுத்த தடாகம் பகுதியில் ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்றபோது கால் தவறி விழுந்த யானை பரிதாபமாக இறந்து போனது.

யானைகளின் நடமாட்டம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் முழு அளவில் பலன் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காட்டு யானைகளில் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அந்த யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக காட்டு யானைகளை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், நஞ்சன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் உதவியுடன் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒரு பெண் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. இந்த யானையின் நடமாட்டம் ஜி.பி.எஸ். முறைப்படி செயற்கைகோள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குட்டி யானை

அதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து அடிக்கடி ஊருக்குள் புகும் காட்டு யானை ஒன்றுக்கு இந்த கருவியை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டபிள்ï. டபிள்ï.எப்.குழு மோகன்ராஜ் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் அஜய் தேசாய் மேற்பார்வையில் வனத்துறையின் கால் நடை மருத்துவர்கள் டாக்டர் மனோகரன், டாக்டர் கலைவாணன், மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் யானை முகாமை சேர்ந்த யானை காவலர்கள் அடங்கிய வனத்துறையின் சிறப்பு குழு மற்றும் வனக்காவலர்கள் 30-க்கும் மேலானவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள தடாகம் காப்பு காட்டுப்பகுதிக்குள் முகாமிட்டு காட்டு யானைகளை தேடிச்சென்றபோது, ஒரு குட்டியானை மட்டும் சுற்றித்திரிந்ததை பார்த்தனர்.

குட்டியானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தினால், கழுத்தில் இருந்து எளிதாக கீழே விழுந்து விடும் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

யானை சாவு

இதைத்தொடர்ந்து விடிய, விடிய வனத்துறையினர் சின்னதடாகம் காட்டுக்குள் முகாமிட்டிருந்தனர். யானையை கண்டுபிடித்து, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த 20 வயது மதிக்கதக்க காட்டு யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்த குறிபார்த்தனர்.

இதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது அந்த யானை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சிறிய பள்ளத்தில் தலை கீழாக உருண்டு விழுந்தது. இதனால் அந்த யானை பரிதாபமாக இறந்துபோனது.

அதைத் தொடர்ந்து அந்த காட்டுயானையை கால்நடை மருத்துவர் குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விதிமுறைகளின்படி சம்பவ இடத்திலேயே உடல் அடக்கம் செய்தனர்.

Thursday, July 7, 2011

Chennai: 20 rabies deaths in 6 mths, health workers worried

Pushpa Narayan, TNN | Jul 7, 2011, 05.44am IST
http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-20-rabies-deaths-in-6-mths-health-workers-worried/articleshow/9132104.cms

CHENNAI: At least 20 people have died of rabies at the Government General Hospital in the city in the last six months. Last month, three died of the virus, spread through dog bites. 

The increasing number of such deaths is worrying public health workers, who are coming together on July 9 to debate the topic, 'Why should anyone die of rabies in the 21 century?' The conference, organised by the Association for Prevention and Control of Rabies in India, will discuss strategies to eliminate rabies by 2020. 

"One big reason for rabies still being around is the lack of transparency and also severe underreporting of deaths,"said former director of public health Dr S Elango. For instance, though the records at the general hospital alone point to 12 deaths in 2010 and 13 deaths in 2009, none of these were recorded in the national registry. In 2009, Tamil Nadu recorded three deaths against 263 across the country and in 2010 it recorded two deaths against 162 nationally (source: National Health Profile 2010). 

"Had we reported all deaths, there would have been pressure on the civic authorities to initiate action. That would have pushed us to a stage where we can eliminate the disease. Instead, we choose to bury deaths under the carpet,"said Dr Elango. The Government General Hospital reported two rabies deaths each in April and May this year. 

Rabies is caused by a virus that is transmitted to humans through the infected saliva of a range of animals. In many cities, dogs have been the primary cause for spreading the virus. Officials at Chennai Corporation maintain that dog population in the city has not been on the rise. "We have outsourced dog population control to NGOs. They sterilise the animals, give them anti-rabies vaccines and let them out in the same area,"said a health department official. He said most dog bites took place in suburban areas outside city corporation limits.

Saturday, July 2, 2011

பறவையினங்கள் அழியும் அபாயம்!

முதுமலை வனத்தில் "மொபைல் டவர்' அமைக்க ஆய்வு: பறவையினங்கள் அழியும் அபாயம்!

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011,23:38 ISThttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=267944

முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் மொபைல் போன் டவர் அமைக்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன; "இந்த திட்டம் வந்தால், அப்பகுதியில் உள்ள பறவைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்,' என வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் சிறந்த உயிர்சூழல் மண்டலத்துக்குள் வருகிறது. இங்கு புலி, யானை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு விலங்கினங்களும், பருந்து, கழுகு, இருவாச்சி, மயில், குயில், மரங்கொத்தி, மைனா, புஷ்சாட், பீ-ஈட்டர், பிளாக் ஹெட் புல்புல், ரெட் விஷ்கள் புல்புல், திரஷ், டிராங்கோ உட்பட பல்வேறு சிறிய பறவை இனங்களும் உள்ளன. இந்நிலையில், புலிகள் காப்பகத்துக்குள் மொபைல் போன் டவரை அமைக்க, தொலைத் தொடர்புத் துறை (பி.எஸ். என்.எல்.,) முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணியும் நடந்து முடிந்துள்ளது. முதுமலையின் அடர்ந்த வனப்பகுதிகளில் டவர் அமைக்க அனுமதி கொடுக்க புலிகள் காப்பக நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனால், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி உள்ள பகுதிகளில் மட்டும் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதன்படி, முதுமலையில் உள்ள கார்குடி, அப்பர் கார்குடி ஆகிய பகுதிகளில் டவர் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த பணிக்கு வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முதுமலையில், சுற்றுலா பயணிகள் வரும் பகுதி, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியற்ற பகுதிகள் என்று வகைப்படுத்தினாலும், அவை அனைத்தும் வன உயிரினங்கள் நடமாடும் பகுதிகளாகும். இங்கு மொபைல்போன் டவர் வந்தால், இங்கு வாழும் பறவை இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, அந்த இனமே அழியும் நிலை ஏற்படும்.

இது குறித்து சி.பி.ஆர்., கல்வி மைய திட்ட அலுவலர் குமாரவேலு கூறியது:தேசிய அளவில் விவசாயத்துக்கான ரசாயனங்கள் பயன்படுத்துவதால், பல பறவை இனங்கள் அழிந்து விட்டன. மொபைல் டவரினால், சிட்டு குருவி உட்பட நகரங்களில் வசிக்கும் பறவை இனங்கள் குறைந்து விட்டன. இதற்கு கதிர்வீச்சு பாதிப்பு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதுமலையில் மொபைல் டவர் அமைத்தால், அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் பறவை இனங்களின் இனப்பெருக்கத்தை நிச்சயம் பாதிக்கும். பறவைகள் முட்டையிட்டாலும், அதில் குஞ்சு பொறிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து போகும். அழிவின் பிடியில் உள்ள பருந்து, கழுகு, ஆந்தை உட்பட பிற சிறிய பறவைகள் முழுமையாக அழிய இந்த வளர்ச்சி பணிகள் முக்கிய காரணியாக அமையும். வனத்துறை இந்த பணிக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பதே நல்லதாகும், என்றார்.

"புலிகள் காப்பக பகுதிகளில் எவ்விதமான வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளக் கூடாது,' என தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ள நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் மொபைல் டவர் போட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சையை கிளப்பி வருகிறது.-என்.பிரதீபன்-

மதுரையில் ஆட்டு இறைச்சி கிடைக்காது

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2011,02:06 ISThttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=268156

மதுரை : "கோரிக்கை நிறைவேறும் வரை, கடையடைப்பு தொடரும்,' என, ஆட்டு இறைச்சி வியாபாரிகள் அறிவித்துள்ளதால், மதுரையில் சில நாட்களுக்கு மட்டன் கிடைக்காது. கோர்ட் உத்தரவுப்படி, மதுரை நெல்பேட்டை ஆடுவதை கூடத்தை, ஜூன் 24ல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுப்பானடி நவீன ஆடுவதை கூடத்தை பயன்படுத்த, இறைச்சி வியாபாரிகளை அறிவுறுத்தினர். "ஷாக்' கொடுத்து ஆடு வதை செய்வதற்கு, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜூன் 25 முதல், இறைச்சி வியாபாரிகள், கடையடைப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மதுரை மாநகர் ஆட்டு இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் 1500 கடைகளும் நேற்று போராட்டத்தில் பங்கேற்றன. புறநகர் இறைச்சி கடைகள், இன்று முதல் கடையடைப்பில் பங்கேற்கின்றன. மதுரையில் நாள் ஒன்றுக்கு 2000 ஆடுகள் வதை செய்யப்படுகின்றன. ஞாயிறு அன்று 3000 ஆக உயரும். கடையடைப்பு காரணமாக, விடுமுறை தினமான இன்றும், நாளையும் ஆட்டு இறைச்சி கிடைக்காது.

Wednesday, June 29, 2011

காணாமல் போன பிரான்ஸ் நாட்டு நாயை தேடும் தம்பதியர்

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2011,23:59 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=266832

புதுச்சேரி:காணாமல் போன வளர்ப்பு நாயை, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண், வீதி வீதியாக தேடி வருகிறார்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் இருசப்பன், 50. இவரது மனைவி பஸ்தே பரிமளா, 47. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இருவரும், பிரான்ஸ் நாட்டில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன், இருவரும் புதுச்சேரியில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்தனர்.பிராணிகள் மீது அதிக பற்று கொண்ட பரிமளா, பிரான்சிலிருந்து வரும் போது, வளர்ப்பு நாய் ஒன்றை உடன் அழைத்து வந்தார். இதற்காக, சென்னையில் உள்ள மத்திய வன விலங்கு மையத்தில் அனுமதியும் பெற்றுள்ளார். புதுச்சேரியில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்த இந்த நாய், திடீரென கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போய் விட்டது.

இடது காலில் காயம்பட்ட நாயை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், காணாமல் போய் விட்டது. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.அந்த நாய் கழுத்தில் நெம்பர் பதித்த பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நாயை தேடியும் கிடைக்கவில்லை. நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என, (நாயின் படம் பதித்த) பிரசுரங்களை அச்சிட்டு, வீடு வீடாக கொடுத்து, தேடி வருகின்றனர்


Tuesday, June 28, 2011

பனப்பாக்கம் அருகே ஏரியில், லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன


பனப்பாக்கம் அருகே ஏரியில், லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன
விஷம் கலக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை

பனப்பாக்கம், ஜுன்.29-
http://dailythanthi.com/article.asp?NewsID=656341&disdate=6/29/2011&advt=2

பனப்பாக்கம் அருகே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. ஏரியில் விஷம் கலக்கப்பட்டதால் இது நடந்ததா? என்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏரியில் மீன் வளர்ப்பு

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். அந்த ஏரியை, அதே கிராமத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் ஒரு ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு எடுத்திருந்தார்.

அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, வாலாஜா அருகே உள்ள ஒரு தனியார் மீன் பண்ணையில் இருந்து சுமார் 85 ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கி வந்து, அந்த ஏரியில் விட்டு வளர்த்து வந்தார். நாளடைவில் குஞ்சுகள் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து, லட்சக்கணக்காக பெருகின. ஜிலேபி, கட்லா, ரோகு, சீசீ, புல்கந்த், கண்ணாடி போன்ற பலவகை மீன்கள் ஏரியில் இருந்து வந்தன.

செத்து மிதந்தன

தனசேகரன் தினமும் காலையில் வந்து, ஏரியில் இருந்து பெரிய மீன்களை பிடித்து விற்பனை செய்வது வழக்கம். நேற்று காலை 6 மணியளவில் தனசேகரன் வழக்கம்போல் தனது நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக ஏரிக்கரைக்கு வந்தார். அப்போது, ஏரியில் இருந்த மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சிறிய மீன் குஞ்சு முதல், சுமார் 2 கிலோ எடை வரை உள்ள லட்சக்கணக்கான மீன்கள் கரையில் ஒதுங்கி கிடந்தன. உடனே ஊருக்குள் சென்று, அதுபற்றி கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார். கிராம மக்கள் திரண்டு வந்து, ஏரியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்து வருத்தம் அடைந்தனர்.

பரிசோதனைக்கு

பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், நெமிலி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், கிராம நிர்வாக அதிகாரி குப்புராமன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏரிக்கரைக்கு வந்தனர்.

அவர்கள் ஏரியில் செத்து மிதந்த மீன்களை பார்வையிட்டு, அவை இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மீன்கள் செத்ததற்கான காரணத்தை அறிவதற்காக, ஏரி தண்ணீரை 2 பாட்டில்களில் சேகரித்தனர். அவை பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விஷம் கலப்பா?

விரோதம் காரணமாக விஷமிகள் யாரேனும் ஏரி தண்ணீரில் விஷம் கலந்து விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் மீன்கள் செத்து மிதந்தனவா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், செத்து மிதந்த மீன்கள் அனைத்தையும் சேகரித்து, அதே ஏரிக்கரையில் புதைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இளைஞர்கள் காவல்

ஏரி தண்ணீரின் பரிசோதனை அறிக்கை வரும்வரை ஆடு, மாடுகள் ஏரி தண்ணீரை குடித்து விடாதபடி பாதுகாப்பதற்காக, உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இஞைர்கள் சிலர், ஏரிக்கரையில் காவல் காத்து வருகின்றனர்.

கிராம ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம், அந்த கிராம மக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.