Pages

Saturday, April 30, 2011

Vets suggest dog culling to limit population in Chennai


TNN, Apr 27, 2011, 04.03am IST
http://articles.timesofindia.indiatimes.com/2011-04-27/chennai/29478321_1_anti-rabies-vaccines-dog-population-s-prathaban

CHENNAI: Veterinarians in the city may well have been triggering a controversy during the World Veterinarian Day celebrations on Monday when they suggested culling as a measure to control the dog population in the city.

"Dog population in the country has doubled from 25 million in 1996 to 50 million in 2002. In India, rabies is caused only by dogs. Dog culling must be taken up in addition to the birth control programme," said Dr S Prathaban, director of clinics at the Tamil Nadu Veterinary and Animal Sciences University.

Expressing concern over the growing dog population and the continuing prevalence of rabies in spite of vaccination and the animal birth control - anti-rabies programme, Dr S Prathaban said that the next census would not reflect a different picture because the measures taken to control the population haven't changed.

He said the work by NGOs make a difference, but it is not enough. Depending only on vaccination would not do. The university sells anti-rabies vaccines for about Rs 7 lakh annually, at a subsidised rate. Still rabies could not be eradicated. TOI has reported that in 2011 till date 15 people have died of rabies in the city. In 2010, 12 people and in 2009 13 died of rabies in the city.

Dr Prathaban said that between 2010 and 2011 the university had kept 33 dogs under observation for rabies. "We found that 17 of them were rabid, including 13 from north Chennai, three from south Chennai and one from Arakkonam. Two were captured from Mount Road," Dr Prathaban said.

But those associated with the animal birth control programme do not agree that culling could be a solution. Animal Welfare Board vice-chairman S Chinny Krishna said there was a perceived reduction in the number of puppies on streets. "The results of the birth control programme are not something that can be seen overnight. We need to cross the 70% threshold for results of the vaccination and the birth control campaign to show.

We need to intensify the campaign to achieve 70% success when there will be no 0% population growth. We cannot have a negative growth unless we start killing the animals, but killing is illegal. Instead we can ensure 85% success," Dr Krishna said.

Corporation health officer Dr P Kuganantham said it was also the responsibility of the public to ensure proper solid waste disposal so that strays don't feed on it.

Sunday, April 24, 2011

கழிவுநீர் குழாயில் சிக்கிய பூனைக் குட்டி மீட்பு


விமான நிலைய கழிவுநீர் குழாயில் சிக்கிய பூனைக் குட்டி மீட்பு
http://dailythanthi.com/article.asp?NewsID=642239&disdate=4/24/2011&advt=2

ஆலந்தூர், ஏப்.24-

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள கடைகளின் கழிவுநீர் செல்ல குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் பகுதியில் இருந்து கீச் கீச் என்று சத்தம் வந்து கொண்டு இருந்தது.

இதை கவனித்த விமான நிலைய ஊழியர்கள் எலியாக இருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சத்தம் வந்ததால் விமான நிலைய போலீசாரும், விமான நிலைய ஊழியர்களும் குழாயின் நடுப்பகுதியை உடைத்து பார்த்தனர்.

அப்போது பிறந்து சில நாட்களேயான பூனைக் குட்டி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே அந்த பூனைக்குட்டியை மீட்டு குடிப்பதற்கு பாலை ஊற்றினர். உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் அந்த பூனைக்குட்டி பாலை குடித்து விட்டு ஓடியது.


Friday, April 22, 2011

மானை கூறு போட்ட கும்பல் கைது : 40 கிலோ கறி, தோல் பறிமுதல்


பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011,22:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=229581

ராஜபாளையம் : மேற்கு தொடர்ச்சி மலையில் புள்ளிமானை வேட்டையாடிய கும்பலை ராஜபாளையம் வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கும்பலிடம் இருந்து கொம்புடன் கூடிய தலை, 40 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டன. ராஜபாளையம் பகுதியில் சேத்தூர் அசையாமணி விலக்கு அருகே ரேஞ்சர் ரவீந்திரன் தலைமையில் நேற்று வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிகாலை 3.30 மணிக்கு சைக்கிளில் தூக்குவாளியுடன் சென்ற நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணான பதிலளித்தனர். தூக்குவாளியில் மான்கறி வைத்திருந்தனர். அவர்கள் தந்த தகவல்படி, சேத்தூர் மலையடிவார பகுதிக்கு ரேஞ்சருடன், சிறப்பு அதிரடிப்படை அதிகாரி கார்த்திகேயன் குழுவினர் சென்றனர். அங்கு மான் தலை, தோல், கறியுடன் இருந்த இருவர் பிடிபட்டனர். வேட்டையில் ஈடுபட்டதாக அம்மையப்பபுரம் காசி(55), தொந்தியப்பன்(26), பிள்ளையார்(47), மல்லையசாமி(24), மாரியப்பன்(52), அய்யனப்பன்(30) ஆகியோரை கைது செய்தனர்.

ரேஞ்சர் கூறியதாவது: நாய்களை வைத்து மானை வேட்டியாடிய கும்பலிடம் இருந்து, 40 கிலோ மான்கறி, கொம்புடன் கூடிய தலை, தோல், நான்கு மொபைல்போன்கள் கைப்பற்றப்பட்டன. மலைப்பகுதி மட்டுமின்றி அடிவாரத்தில் உள்ள பட்டா நிலங்களையும் கண்காணித்து வருகிறோம். வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

வனவிலங்குகள் இடம் பெயரும் போது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுமா?


பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2011,22:53 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=229585

உடுமலை : உடுமலை-மூணாறு ரோட்டில் குடிநீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம் பெயரும் பகுதியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் இடையூறுகளால் அவற்றின் வழித்தடம் மாறி பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. நிரந்தர தீர்வாக இந்த ரோட்டில் குறிப்பிட்ட நேரம் போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும்.உடுமலை-மூணாறு ரோடு ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்தின் வழியாக செல்கிறது. வனசரகத்திற்குட்பட்ட மேற்கு கோம்பை, காமனூத்து, ஏழுமலையான் கோவில் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வனவிலங்குகள் மாலை நேரத்தில் ரோட்டை கடந்து அமராவதி அணை பகுதிக்கு செல்கிறது.கோடை காலத்தில் வனத்தில் நிலவும் வறட்சியால் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக விலங்குகள் ரோட்டை கடக்கின்றன. குறிப்பாக 40 க்கும் அதிகமான யானைகள், மான், காட்டெருமை உட்பட விலங்குகள் நாள்தோறும் மூணாறு ரோட்டை கடந்து சென்று வருகின்றன.

மூணாறு ரோட்டில் அதிகரித்துள்ள போக்குவரத்தால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் விலங்குகளுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.யானைகளை சத்தம் எழுப்பி விரட்டுவது, குச்சிகளை வீசுவது, அதிக வெளிச்சத்துடன் கூடிய ப்ளாஸ்களை பயன்படுத்தி போட்டோ எடுப்பது மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் ஸ்பாட் லைட் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் விலங்குகள் பாதிக்கப்பட்டு மனிதர்களை துரத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.

இது குறித்து வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் எந்த பயனும் இல்லை. தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் தங்கள் இயல்பான நடவடிக்கைகளை மறந்து மனிதர்களை பார்த்ததும் துரத்தும் நிலை ஏற்படலாம் என வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த ரோட்டில் கடந்த வாரத்தில் மட்டும் பல முறை பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்களை யானைகள் விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. மாலை நேரத்தில் இப்பகுதியில் காற்றோட்டத்திற்காக விலங்குகள் நிற்பதும் குறைந்துள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை-மூணாறு ரோட்டில் வனவிலங்குகள் ரோட்டை கடக்கும் பகுதியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பல முறை எச்சரித்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்லை. யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது; யாரும் கீழே இறங்க கூடாது ஆகிய விதிமுறைகளை சுற்றுலா பயணிகள் பின்பற்றுவதில்லை. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை சேர்ந்த ஏழு பேருக்கு வனவிலங்குகளை இடையூறு செய்ததற்காக 7 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்', என்றனர்.வன ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலை-மூணாறு ரோட்டில் யானை மற்றும் மான் கூட்டங்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மூணாறு ரோட்டில் விலங்குகள் ரோட்டை கடக்கும் நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும். போக்குவரத்து அதிகமுள்ள கோழிக்கோடு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் விலங்குகள் பாதுகாப்பிற்காக இரவு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இந்த வழித்தடத்தில் கேரள முத்தாங்காக தேசிய வன உயிரின சரணாலயமும், கர்நாடாகபந்திப்பூர் புலிகள் காப்பகமும், தமிழ்நாட்டின் முதுமலை வனசரகமும் உள்ளது. மூன்று மாநில அரசுகளும் இணைந்து இந்த ரோட்டில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. அதே போல் உடுமலை-மூணாறு ரோட்டில் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும்', என்றனர்.


‘நடக்க முடியல... கடிக்க பாயுது’ நாயுடன் வாக்கிங் வருபவருக்கு எதிராக போலீசில் பெண் புகார்


பதிவு செய்த நாள் 4/23/2011 1:47:43 AM
http://dinakaran.com/highdetail.aspx?id=34631&id1=13

சென்னை : வாக்கிங் செல்லும் நாயை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனியார் நிறுவன பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

தேனாம்பேட்டை சீத்தாம்பாள் காலனியை சேர்ந்தவர் ரம்யா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை நேற்று முன்தினம் அளித்தார். 

அதில், “அதே பகுதியைச் சேர்ந்த சீனு (50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தினமும் தான் வளர்த்து வரும் விலை உயர்ந்த வெளிநாட்டு நாயுடன் எங்கள் பகுதியில் வாக்கிங் வருகிறார்.  இந்த வெளிநாட்டு நாய் மிகவும் உயரமாக உள்ளது. மேலும், அந்த பகுதியில் செல்வோர் எல்லோரையும் பயமுறுத்துகிறது. எங்களால் நடக்கவே முடியவில்லை. எதிர்க்கும் நாய்களை கடித்து குதறுகிறது. இதனால், அந்த பகுதியில் மக்கள் நடமாடவே அச்சமாக உள்ளது. குழந்தைகளும், 

பெரியோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சீனுவை போலீசார் கண்டிக்க வேண்டும். அந்த பகுதியில் அவர் நாயுடன் வாக்கிங் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று கூறினார். இந்த புகாரைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நாங்கள் இதில் தலையிட முடியாது என்று ரம்யாவிடம் கூறினார். அவர் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால், போலீசார் வேறு வழியில்லாமல் சீனுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மெரினாவில் நாய்கள் கடும் தொல்லை அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களை கடித்து குதறுகின்றன


சென்னை, ஏப்.22-
http://dailythanthi.com/article.asp?NewsID=641774&disdate=4/22/2011&advt=2


மெரினா கடற்கரையில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அதிகாலையில் `நடைபயிற்சி' செல்பவர்களை விரட்டி, விரட்டி கடித்து குதறுகிறது.

நாய்கள் அதிகரிப்பு

சென்னை நகரில் தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக பெருகிவிட்டது. மாநகராட்சி அதிகாரிகள் இதை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை.

இரவு நேரத்தில் தெருக்களில் நின்று கொண்டு சத்தம் போட்டு குரைக்கின்றன. தெருவில் நடந்து செல்பவர்களையும் கடிக்க பாய்கின்றன. தெருக்களில் மட்டுமல்லாது, மெரினா கடற்கரையிலும் இரவு நேரத்தில் நாய்களின் தொல்லை கடுமையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

கடற்கரை மணலில் தூக்கம்

கோடைகாலம் தொடங்கி விட்டதால் வீடுகளில் படுத்து தூங்க முடியாதவர்கள், காற்றுக்காக மொட்டை மாடியில் படுத்து தூங்குகிறார்கள். மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் குடும்பத்தோடு கடற்கரையில் வந்து படுத்து தூங்குகிறார்கள்.

மெரினா காந்திசிலை பின்புறம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரை மணலில் படுத்து தூங்குகின்றனர். அவ்வாறு தூங்க வருபவர்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல நாய்களையும் தங்களோடு அழைத்து வந்துவிடுகின்றனர். இவ்வாறு வரும் நாய்கள்தான் கடும் தொல்லை கொடுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சி செல்பவர்கள்

மெரினா கடற்கரையில் அதிகாலை 4 மணியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செல்வது வழக்கம். வி.ஐ.பி.க்கள் கூட மெரினா கடற்கரை மணலில் நடைபயிற்சி செல்வதை பழக்கமாக வைத்துள்ளனர்.

இவ்வாறு நடைபயிற்சி செல்பவர்களை, இந்த நாய்கள் கூட்டம் குரைத்த படியே தொல்லை கொடுக்கின்றன. நேற்று முன்தினம் நடைபயிற்சி சென்ற 3 போலீஸ்காரர்களை இந்த நாய்கள் விரட்டி விரட்டி கடித்து குதறிவிட்டன. இது போல ஏராளமானோர் நாய்களிடம் கடிபட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை மணலில் படுத்து தூங்க வரும் பொதுமக்கள் தங்களது செல்ல நாய்களை அழைத்து வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நடைபயிற்சி செல்பவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஒருவேளை அழைத்து வந்தால் தங்கள் நாய்களை கட்டுப்பாட்டில் அதட்டி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

Saturday, April 2, 2011

பறவைகளுக்கு நீர்நிலை அவசியம்:


வலசை வரும் பறவைகளுக்கு நீர்நிலை அவசியம்:பறவையியலாளர் சுகுமார் பேச்சு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=215746
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2011,22:58 IST

கோவை : ""வெளிநாடுகளிலிருந்து இங்கு வலசை வரும் பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதில்லை,'' என, பறவையியலாளர் சுகுமார் தகவல் தெரிவித்தார்.கோவை "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் "சூழல்-சந்திப்பு' நிகழ்ச்சியில், "வலசை போகும் பறவைகள்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: காலநிலை மாறுபாடு, உணவுத்தேவை மற்றும் வாழிடம் தொலைந்து போதல் போன்ற காரணங்களால், பறவைகள் இடம் பெயர்ந்து வெகு தூரம் செல்கின்றன. இதைத்தான் "வலசை போதல்' என்கிறோம். பல நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் மைல்களைத் தாண்டி, இந்தியாவுக்கு வரும் பறவைகள் ஏராளம். சைபீரியா போன்ற குளிர் நாடுகளில், கடும் பனிப்பொழிவால் பறவைகளின் வாழ்விடங்கள் முற்றிலுமாக மறைந்து விடும். பறவைகள் உண்ணும் சிறு பூச்சிகள், தும்பிகள், வண்டுகளைக் கூடப் பார்க்க முடியாது. குளிரும் கடுமையாக இருக்கும். அதனால், ரோசி பாஸ்டர், காமன் ஸ்வாலோ, ஒயிட் வேக்டெயில் போன்ற பறவைகள், இதமான காலநிலையைத் தேடி பலுசிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் கடந்து, இந்தியாவுக்கு வருகின்றன; தமிழகத்தின் சிறு சிறு நீர் நிலைகளில் அடைக்கலமாகின்றன. செப்டம்பரிலிருந்து மார்ச் வரையிலும்தான், இந்த பறவைகள் வலசை வருவதுண்டு. கோடை துவங்கும் முன்பே தாயகம் திரும்பி விடும். வலசை வரும் பறவைகள் எதுவும், இங்கு முட்டையிடுவதோ, குஞ்சு பொரிப்பதோ கிடையாது. இவ்வாறு பறவைகள், இடம் பெயர்வதை செயற்கைக் கோள்கள், ரேடார்கள் மூலமாகக் கண்காணிக்க முடியும். கால்களில் வளையங்களை மாட்டி விடுவது, வண்ணங்களைப் பூசி அனுப்புவது போன்ற நடைமுறைகளும் கடை பிடிக்கப்படுகின்றன. வெகுதூரத்துக்கு இடம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கு, இயற்கை சில சாதகங்களைச் செய்து கொடுத்திருக்கிறது. பரிணாம வளர்ச்சியானது, பறத்தலில் தனிப்பட்ட உத்திகளைக் கற்றுத் தந்திருக்கிறது. ஓய்வு, உறக்கம், உணவு தேடல் என பல வேலைகளையும் பறக்கும்போதே இந்த பறவைகள் முடித்துக்கொள்ளும். பறவைகள் வெப்ப ரத்தம் கொண்டவை. கூர் உணர்வின் மூலமாக காலநிலை மாறுபாட்டை அவை உணர்ந்து கொள்ளும். போகும் வழியில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இரவு நேர பயணத்தை அவை தேர்ந் தெடுக்கின்றன. நீண்ட நெடிய பயணம் என்பதால், வலசை போவதற்கு முன்பாக பறவைகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதுண்டு. வழக்கமான உணவையே அதிகமாக உண்டு, தங்களது எடையை ஏற்றிக்கொள்கின்றன. உடலில் 55 சதவீதம் வரை கொழுப்புச் சத்தை ஏற்றிய பின்பே, பயணத்தைத் துவக்குகின்றன. நெடும் பயணம் செல்வதற்குப் பறவைகளுக்கு ஆற்றல் தருவது, இதுதான். வலம் வரும் பறவைகளை வேட்டையாடுவதற்காக வவ்வால்களும், ஆங்காங்கே துப்பாக்கிகளுடன் மனிதர்களும் காத்திருப்பார்கள்; கடும் மழையும் குறுக்கிடும். அவற்றையெல்லாம் தாண்டியே பறவைகள் வருகின்றன. வட துருவமான ஆர்க்டிக் துருவத்திலிருந்து அன்டார்டிகா துருவம் வரை 22 ஆயிரம் கி.மீ.,வரை வலசை போகும் பறவைகளும் இருக்கின்றன. கோல்டன் புளோவர் என்ற பறவை, வட அமெரிக்காவுக்கு அருகிலுள்ள அலாஸ்காவில் இருந்து இங்குள்ள பல நாடுகளுக்கு வலசை வருவதை பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவையிலுள்ள நீர் நிலைகளுக்கு சைபீரியா, பலுசிஸ்தான், இமயமலையிலிருந்து வுட் சேண்ட் பைப்பர், மார்ஷ் கல், ஒயிட் வேக்டெயில், கிரீன் ஷாங்க் உள்ளிட்ட பல பறவைகள் வருகின்றன. நீர் நிலைகளை மாசு படுவதிலிருந்து காப்பது, தொழிற்சாலைக் கழிவுகள் கலக்காமல் தடுப்பது, குளம், குட்டைகளை மூடவிடாமல் தடுப்பதன் மூலமாக வலசைப் பறவைகளை காப்பாற்ற முடியும். விருந்தினர்களைப் போல வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தப் பறவைகள், நமக்கு பல தகவல்களையும், பல வியப்புகளையும் விட்டுச் செல்கின்றன. எங்கிருந்தோ இங்கு நம்மைத் தேடி வரும் சிறகுள்ள நண்பர்களை, காலமெல்லாம் பார்ப்பதற்கான நல்ல சூழலை நாம் உருவாக்குவோம். இவ்வாறு பறவையியலாளர் சுகுமார் பேசினார். நிகழ்ச்சிக்கு, மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து லட்சுமி நரசிம்மன் விளக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள வைபவ் தேசாய் கவுரவிக்கப்பட்டார்; அமைப்பின் செயலாளர் அவை நாயகன் வரவேற்றார்; தலைவர் காளிதாசன் நன்றி கூறினார்.