Pages

Tuesday, November 9, 2010

கழுதையை பலி கொடுத்து பூஜை

``எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதி'' கழுதையை பலி கொடுத்து பூஜை செய்தனர் எடிïரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு

ராய்ச்சூர், நவ.9-

``நான் ரத்தம் கக்கி சாக வேண்டும் என்பதற்காக கழுதையை பலி கொடுத்து எதிர்க்கட்சியினர் பூஜை செய்தனர்'' என்று, முதல்-மந்திரி எடிïரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.

மாந்திரீக பொருட்கள்
கர்நாடகத்தில் எடிïரப்பா அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் முயற்சி செய்தன. அப்போது விதானசவுதா அருகே குங்குமம், எலுமிச்சை பழம் உள்பட மாந்திரீக பொருட்கள் கிடந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை செய்தது யார்? எதற்காக செய்தனர் என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வந்தனர்.

பரபரப்பு பேச்சு
இந்த நிலையில், முதல்-மந்திரி எடிïரப்பா ராய்ச்சூரில் பாக்கியலட்சுமி திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு இலவச சேலை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, மாந்திரீகம் செய்தது குறித்து பரபரப்பாக பேசினார்.

அவர் பேசுகையில், `நான் ரத்தம் கக்கி சாக வேண்டும் என்று நினைத்து, எதிர்க்கட்சியினர் கழுதை போன்ற விலங்குகளை பலி கொடுத்து எனக்கு எதிராக மாந்திரீகம் செய்து உள்ளனர். நான் கடவுளை நம்புகிறேன். தவறு செய்தால் கடவுள் என்னை தண்டிப்பார்' என்றார்.

முதல்-மந்திரியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.