Pages

Sunday, November 21, 2010

விஷம் கலந்து 18 நாய்கள் கொலை

பெங்களூரில் பரிதாபம் உணவில் விஷம் கலந்து 18 நாய்கள் கொல்லப்பட்டன
திருடர்களின் அட்டூழியமா? போலீசார் விசாரணை

பெங்களூர், நவ.22-
http://dailythanthi.com/article.asp?NewsID=608647&disdate=11/22/2010&advt=2

பெங்களூரில் உணவில் விஷம் கலந்து 18 நாய்கள் கொல்லப்பட்டன. நாய்களை கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

உணவில் விஷம்

பெங்களூர் மடிவாளா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஜக்கசந்திரா பகுதியில் நேற்று 18 தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், கால்நடை டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். கால்நடை டாக்டர்கள், இறந்த நாய்களை பிரேத பரிசோதனை செய்தனர். பரிசோதனையில், உணவில் விஷம் கலந்து நாய்களை கொன்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

திருடர்கள் இந்த நாய்களை கொன்றார்களா? அல்லது நாய்களின் தொல்லை தாங்க முடியாமல் குடியிருப்புவாசிகள் கொன்றார்களா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து இந்திய தண்டனை சட்டம் 429-வது பிரிவின் கீழ் மடிவாளா போலீசார் வழக்குபதிவு செய்து, நாய்களை கொன்றவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.