Pages

Monday, July 18, 2011

உடுமலை அமராவதி ஆற்றில் முதலைக் குஞ்சுகள் வீச்சு:வனத்துறை திணறல்

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011,22:39 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=277783

அமராவதி முதலை பண்ணையில் உற்பத்தியாகும் முதலை குஞ்சுகளை பராமரிக்க முடியாத வனத்துறையினர் அவற்றை மறைமுகமாக நீர்நிலைகளில் வீசி வருகின்றனர். இதனால், அமராவதி அணை மற்றும் ஆறு, திறந்த வெளி முதலைப்பண்ணையாக மாறி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. உடுமலை அருகே அமராவதியில், கடந்த 1976ல் பவானிசாகர் அணைப்பகுதியிலிருந்து முதலை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டன.அமராவதி வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, இந்த பண்ணையில் தற்போது 94 முதலைகள் உள்ளன. இதில் 8 முதல் 45 வயது வரையுள்ள 72 பெண்; 22 ஆண் முதலைகள் உள்ளன. நூறு வயது வரை வாழக்கூடிய இந்த நன்னீர் முதலை இனம் "இந்தியன் மக்கர்' என அழைக்கப்படுகிறது.

இந்த முதலைகளுக்கு நாள்தோறும் 26 கிலோ மாட்டிறைச்சி, 9 கிலோ மீன் உணவாக வழங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணமாக 50 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எப்போதாவது வரும் சுற்றுலா பயணிகளிடமும் குறைந்த கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுவதால் பண்ணையை பராமரிக்க வனத்துறையினர் கண்ணீர் விட வேண்டியுள்ளது.இந்நிலையில், பண்ணையில் 94 முதலைகள் மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைக்காக வனத்துறையினர் பின்பற்றும் நடைமுறையே அமராவதி அணை மற்றும் ஆற்றுப்படுகைகளின் அருகில் வசிப்பவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளது.நன்னீர் முதலை இனம் ஆண்டுதோறும் பிப்., மாதம் முதல் ஏப்., மாதம் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இந்த காலத்தில் பெண் முதலைகள் 8 முதல் 45 முட்டைகளை இடும். சராசரியாக 10 முதல் 36 முட்டைகள் இனப்பெருக்க காலத்தில் இடுவது வழக்கம்.முதலை பண்ணையில் பெண் முதலைகள் முட்டைகளை இடுவதற்கு ஏதுவாக மணற்பரப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 55 முதல் 75 நாட்கள் வரை முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் வரை பெண் முதலைகள் அடைகாக்கும் பணியில் ஈடுபடும்.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியானவுடன் அருகிலுள்ள நீர்நிலைக்கு குஞ்சுகளை தாய் முதலை கொண்டு சேர்த்து வளர்க்கும். இவ்வகை முதலைகள் 5 ஆண்டுகளில் 35 செ.மீ., வரை வளரும். பொறிக்கப்படும் முட்டைகளில் பல்வேறு காரணங்களினால் குஞ்சுகள் இறந்து விடும்.இவற்றையும் தாண்டி ஆண்டுக்கு 20 முதலை குஞ்சுகள் வரை உயிர் பிழைக்கும். முதலை பண்ணையில் கூடுதலாக முதலைகளை பராமரிக்க வழியில்லாததால் குஞ்சுகளை மறைமுகமாக அருகிலுள்ள அமராவதி அணையிலும், ஆற்றிலும் வீசி விடுவதை வனத்துறையினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.இவ்வாறு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை பண்ணையிலிருந்து வீசி எறியப்பட்ட முதலை குஞ்சுகள், தற்போது அணை மற்றும் அமராவதி ஆற்றின் பல பகுதிகளை நிரந்தரமாக ஆக்கிரமித்து வசிப்பிடமாக மாற்றியுள்ளன.ஆற்றுப்படுகையிலும், அணையிலும் மீன் தவிர இதர உணவு கிடைக்காத நிலையில் முதலைகள், மனிதனை தாக்குவது அதிகரிக்கும் அபாயம் நிலவி வருகிறது. முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அமராவதி அணைப்பகுதியில் இரவு நேரத்தில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், மாநிலத்திலுள்ள அனைத்து அணைகளிலும் இரவு நேரத்தில் வலை விரிக்கப்பட்டு மீன் பிடி பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், முதலைகள் நடமாட்டத்தால் அமராவதி அணையில் மட்டும் அதிகாலையிலிருந்து காலை 10.00 மணி வரை மட்டும் மீன் பிடி பணி மேற்கொள்ளப்படுகிறது.அணையின் கரையோரப் பகுதிகளில் முதலை தாக்கி மலைவாழ் மக்கள் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.கரூர் வரை செல்லும் அமராவதி ஆறு, திறந்த வெளி முதலைப்பண்ணையாக மாறி, உணவுத்தேவைக்காக குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பீதி ஏற்படுத்துகிறது. 

கடந்த சில மாதங்களுக்கு முன் தாராபுரம் அருகே ருத்ராவதியில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கிய, இரண்டு முதலைகளை வனத்துறையினர் பிடித்து வேறு பகுதியில் விட்டனர். தற்போது மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் முதலை தென்பட்டதால், மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. விழிப்புணர்வுக்காகவும், அரிய வகை முதலை இனத்தை பாதுகாக்கவும் துவங்கிய முதலை பண்ணையை வனத்துறையினர் முறையாக பராமரிக்காததால், பொதுமக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.முதலை பண்ணையை விரிவுபடுத்தி, ஆண்டுதோறும் உற்பத்தியாகும் முதலை குஞ்சுகளை பராமரிக்க வேண்டுமென மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"அமராவதி முதலைப்பண்ணையில் ஆண்டு தோறும் இனப்பெருக்க காலத்தில் பொறிக்கும் முதலை குஞ்சுகள் முறையாக வளர்க்கப்படுகின்றன. முதலை பண்ணையை மேம்படுத்த கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பபட்டுள்ளது', என்றனர்.-பி.செந்தில்ராமன்-

Monday, July 11, 2011

யானை சாவு ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்ற போது பரிதாபம்

தடாகம் பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த காட்டு யானை சாவு ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்ற போது பரிதாபம்

கோவை,ஜுலை.11-

கோவையை அடுத்த தடாகம் பகுதியில் ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்றபோது கால் தவறி விழுந்த யானை பரிதாபமாக இறந்து போனது.

யானைகளின் நடமாட்டம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் முழு அளவில் பலன் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காட்டு யானைகளில் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அந்த யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக காட்டு யானைகளை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், நஞ்சன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் உதவியுடன் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒரு பெண் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. இந்த யானையின் நடமாட்டம் ஜி.பி.எஸ். முறைப்படி செயற்கைகோள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குட்டி யானை

அதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து அடிக்கடி ஊருக்குள் புகும் காட்டு யானை ஒன்றுக்கு இந்த கருவியை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டபிள்ï. டபிள்ï.எப்.குழு மோகன்ராஜ் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் அஜய் தேசாய் மேற்பார்வையில் வனத்துறையின் கால் நடை மருத்துவர்கள் டாக்டர் மனோகரன், டாக்டர் கலைவாணன், மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் யானை முகாமை சேர்ந்த யானை காவலர்கள் அடங்கிய வனத்துறையின் சிறப்பு குழு மற்றும் வனக்காவலர்கள் 30-க்கும் மேலானவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள தடாகம் காப்பு காட்டுப்பகுதிக்குள் முகாமிட்டு காட்டு யானைகளை தேடிச்சென்றபோது, ஒரு குட்டியானை மட்டும் சுற்றித்திரிந்ததை பார்த்தனர்.

குட்டியானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தினால், கழுத்தில் இருந்து எளிதாக கீழே விழுந்து விடும் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

யானை சாவு

இதைத்தொடர்ந்து விடிய, விடிய வனத்துறையினர் சின்னதடாகம் காட்டுக்குள் முகாமிட்டிருந்தனர். யானையை கண்டுபிடித்து, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த 20 வயது மதிக்கதக்க காட்டு யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்த குறிபார்த்தனர்.

இதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது அந்த யானை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சிறிய பள்ளத்தில் தலை கீழாக உருண்டு விழுந்தது. இதனால் அந்த யானை பரிதாபமாக இறந்துபோனது.

அதைத் தொடர்ந்து அந்த காட்டுயானையை கால்நடை மருத்துவர் குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விதிமுறைகளின்படி சம்பவ இடத்திலேயே உடல் அடக்கம் செய்தனர்.

Thursday, July 7, 2011

Chennai: 20 rabies deaths in 6 mths, health workers worried

Pushpa Narayan, TNN | Jul 7, 2011, 05.44am IST
http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-20-rabies-deaths-in-6-mths-health-workers-worried/articleshow/9132104.cms

CHENNAI: At least 20 people have died of rabies at the Government General Hospital in the city in the last six months. Last month, three died of the virus, spread through dog bites. 

The increasing number of such deaths is worrying public health workers, who are coming together on July 9 to debate the topic, 'Why should anyone die of rabies in the 21 century?' The conference, organised by the Association for Prevention and Control of Rabies in India, will discuss strategies to eliminate rabies by 2020. 

"One big reason for rabies still being around is the lack of transparency and also severe underreporting of deaths,"said former director of public health Dr S Elango. For instance, though the records at the general hospital alone point to 12 deaths in 2010 and 13 deaths in 2009, none of these were recorded in the national registry. In 2009, Tamil Nadu recorded three deaths against 263 across the country and in 2010 it recorded two deaths against 162 nationally (source: National Health Profile 2010). 

"Had we reported all deaths, there would have been pressure on the civic authorities to initiate action. That would have pushed us to a stage where we can eliminate the disease. Instead, we choose to bury deaths under the carpet,"said Dr Elango. The Government General Hospital reported two rabies deaths each in April and May this year. 

Rabies is caused by a virus that is transmitted to humans through the infected saliva of a range of animals. In many cities, dogs have been the primary cause for spreading the virus. Officials at Chennai Corporation maintain that dog population in the city has not been on the rise. "We have outsourced dog population control to NGOs. They sterilise the animals, give them anti-rabies vaccines and let them out in the same area,"said a health department official. He said most dog bites took place in suburban areas outside city corporation limits.

Saturday, July 2, 2011

பறவையினங்கள் அழியும் அபாயம்!

முதுமலை வனத்தில் "மொபைல் டவர்' அமைக்க ஆய்வு: பறவையினங்கள் அழியும் அபாயம்!

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011,23:38 ISThttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=267944

முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் மொபைல் போன் டவர் அமைக்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன; "இந்த திட்டம் வந்தால், அப்பகுதியில் உள்ள பறவைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்,' என வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் சிறந்த உயிர்சூழல் மண்டலத்துக்குள் வருகிறது. இங்கு புலி, யானை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு விலங்கினங்களும், பருந்து, கழுகு, இருவாச்சி, மயில், குயில், மரங்கொத்தி, மைனா, புஷ்சாட், பீ-ஈட்டர், பிளாக் ஹெட் புல்புல், ரெட் விஷ்கள் புல்புல், திரஷ், டிராங்கோ உட்பட பல்வேறு சிறிய பறவை இனங்களும் உள்ளன. இந்நிலையில், புலிகள் காப்பகத்துக்குள் மொபைல் போன் டவரை அமைக்க, தொலைத் தொடர்புத் துறை (பி.எஸ். என்.எல்.,) முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணியும் நடந்து முடிந்துள்ளது. முதுமலையின் அடர்ந்த வனப்பகுதிகளில் டவர் அமைக்க அனுமதி கொடுக்க புலிகள் காப்பக நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனால், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி உள்ள பகுதிகளில் மட்டும் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதன்படி, முதுமலையில் உள்ள கார்குடி, அப்பர் கார்குடி ஆகிய பகுதிகளில் டவர் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த பணிக்கு வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முதுமலையில், சுற்றுலா பயணிகள் வரும் பகுதி, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியற்ற பகுதிகள் என்று வகைப்படுத்தினாலும், அவை அனைத்தும் வன உயிரினங்கள் நடமாடும் பகுதிகளாகும். இங்கு மொபைல்போன் டவர் வந்தால், இங்கு வாழும் பறவை இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, அந்த இனமே அழியும் நிலை ஏற்படும்.

இது குறித்து சி.பி.ஆர்., கல்வி மைய திட்ட அலுவலர் குமாரவேலு கூறியது:தேசிய அளவில் விவசாயத்துக்கான ரசாயனங்கள் பயன்படுத்துவதால், பல பறவை இனங்கள் அழிந்து விட்டன. மொபைல் டவரினால், சிட்டு குருவி உட்பட நகரங்களில் வசிக்கும் பறவை இனங்கள் குறைந்து விட்டன. இதற்கு கதிர்வீச்சு பாதிப்பு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதுமலையில் மொபைல் டவர் அமைத்தால், அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் பறவை இனங்களின் இனப்பெருக்கத்தை நிச்சயம் பாதிக்கும். பறவைகள் முட்டையிட்டாலும், அதில் குஞ்சு பொறிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து போகும். அழிவின் பிடியில் உள்ள பருந்து, கழுகு, ஆந்தை உட்பட பிற சிறிய பறவைகள் முழுமையாக அழிய இந்த வளர்ச்சி பணிகள் முக்கிய காரணியாக அமையும். வனத்துறை இந்த பணிக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பதே நல்லதாகும், என்றார்.

"புலிகள் காப்பக பகுதிகளில் எவ்விதமான வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளக் கூடாது,' என தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ள நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் மொபைல் டவர் போட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சையை கிளப்பி வருகிறது.-என்.பிரதீபன்-

மதுரையில் ஆட்டு இறைச்சி கிடைக்காது

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2011,02:06 ISThttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=268156

மதுரை : "கோரிக்கை நிறைவேறும் வரை, கடையடைப்பு தொடரும்,' என, ஆட்டு இறைச்சி வியாபாரிகள் அறிவித்துள்ளதால், மதுரையில் சில நாட்களுக்கு மட்டன் கிடைக்காது. கோர்ட் உத்தரவுப்படி, மதுரை நெல்பேட்டை ஆடுவதை கூடத்தை, ஜூன் 24ல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுப்பானடி நவீன ஆடுவதை கூடத்தை பயன்படுத்த, இறைச்சி வியாபாரிகளை அறிவுறுத்தினர். "ஷாக்' கொடுத்து ஆடு வதை செய்வதற்கு, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜூன் 25 முதல், இறைச்சி வியாபாரிகள், கடையடைப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மதுரை மாநகர் ஆட்டு இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் 1500 கடைகளும் நேற்று போராட்டத்தில் பங்கேற்றன. புறநகர் இறைச்சி கடைகள், இன்று முதல் கடையடைப்பில் பங்கேற்கின்றன. மதுரையில் நாள் ஒன்றுக்கு 2000 ஆடுகள் வதை செய்யப்படுகின்றன. ஞாயிறு அன்று 3000 ஆக உயரும். கடையடைப்பு காரணமாக, விடுமுறை தினமான இன்றும், நாளையும் ஆட்டு இறைச்சி கிடைக்காது.