Pages

Friday, October 5, 2012

குரங்குகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?.. ஜெ. தலைமையில் ஆலோசனை!


குரங்குகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?.. ஜெ. தலைமையில் ஆலோசனை!

Updated: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2012, 19:06 [IST]
http://tamil.oneindia.in/news/2012/10/05/tamilnadu-cm-chairs-meeting-on-controlling-the-stray-dogs-162681.html


சென்னை: அதிகரித்து வரும் குரங்குகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்ட்ம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் பச்சைமால், தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி, சுற்றுச்சூழல, வனத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தெருவில்திரியும் நாய்கள் மற்றும் குரங்குகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா.

Tuesday, July 17, 2012

மயில் இறகு விற்ற மூவர் கைது


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494574
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2012,02:32 IST

சென்னை: சென்னையில், மயில் இறகு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை, வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்த, மயில் இறகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில், தி.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில், மயில் இறகுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதுகுறித்து, வனத்துறைக்குப் புகார் வந்தது. வேளச்சேரி தலைமையிட வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில், வனக்காப்பாளர் கெஜபதி மற்றும் வன ஊழியர்கள், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மயில் இறகுகளை விற்பனை செய்த மூன்று நபர்கள் கையும் களவுமாகச் சிக்கினர். விசாரணையில், அவர்கள் ஆக்ராவைச் சேர்ந்த நவல்சிங்,24, ஜிஜேந்தர்,25, மற்றும் பவன்,20, என்பது தெரிந்தது. அவர்கள், ஆக்ராவில் உள்ள இறகுகள் விற்பனையகத்தில் இருந்து கொள்முதல் செய்துவந்து விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர். இருப்பினும், கைப்பற்றப்பட்ட மயில் இறகுகள், உதிர்ந்தவையா அல்லது மயில்களின் உடலில் இருந்து பிடுங்கப்பட்டவையா என்பதை உறுதி செய்யும் வகையில், ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரி தலைமையிட வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், ""மயில் தேசியச் சின்னம் என்பதால், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி, பாதுகாக்கப்பட்டு வரும் பறவையினம். அதைத் துன்புறுத்துவது, கொல்வது, வளர்ப்பது சட்டப்படி குற்றம். தமிழகத்தை பொறுத்தவரை, வன உயிரின பொருட்களை விற்பனை செய்வதற்கும், வைத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை,'' என்றார்

முயல் வேட்டையாடிய 12 பேருக்கு அபராதம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494595
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2012,02:35 IST

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அருகே முயல் வேட்டையாடிய 12 பேர் பிடிபட்டனர்.

ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள நரிப்பொத்தை மலைப்பகுதியில் வெளியூரில் உள்ள நபர்கள் சிலர் தொடர்ந்து முயல் வேட்டையாடுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் ஸ்ரீவத்சவா மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராஜேஷ் வஜீஸ், கவுதம்டே ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் ஆனந்தகுமார், வனவர் சிவக்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் ரத்னவேல், ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர்கள் முத்துக்குமார், வேல்சாமி, சத்தியமுருகன், ரமேஷ்பாபு, வனக்காப்பாளர் பரமசிவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு முயல் வேட்டையாடிக் கொண்டிருந்த மதுரை அருகேயுள்ள தாழ்வார்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி, சின்னமன்னன், செல்வம், கருப்பண்ணன், ராஜேந்திரன் உட்பட 11 பேர் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த வாகைக்குளம் சைலப்பன் ஆகிய 12 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களிடம் இருந்து முயல்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 440 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Saturday, June 16, 2012

குரங்குகளிடம் குறும்பு செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=488147
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2012,01:54 IST

குன்னூர்:"குன்னூர்-பர்லியாறு சாலையில், குரங்குகளுக்கு தீங்கு ஏற்படுத்தினால், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என, வனத்துறை எச்சரித்துள்ளது.
வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி குன்னூர்-பர்லியாறு மலைப்பாதை. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் செல்வதால், வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடக்கின்றன. சாலையில், குரங்குகள் கூட்டம் அதிகமாக உள்ளதால், இவற்றை காணும் சுற்றுலாப் பயணிகள் பலர், அவற்றுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, குன்னூர்-பர்லியாறு சாலையில் இருபக்கமும் உள்ள வனப்பகுதிகளில், தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உட்கொள்ளும் பொருட்களின் மீதியை வீசி விட்டு செல்கின்றனர். தவிர, கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களையும் விட்டுச் செல்வதால், இவற்றை ருசி பார்க்கும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால், குன்னூர்-பர்லியாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், குரங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அறிவிப்பு பலகையிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வன விலங்குகளுக்கு தீங்கு விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் வனத்துறை, சட்டத்தை கடுமையாக அமல்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இதுவரை குரங்குகளுக்கு உணவளிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.a

Thursday, June 14, 2012

பெரிய யானையின் உயிரையே உலுக்கும் சிறு புழுக்கள்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=485870
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2012,22:49 IST

ஈரோடு: ஈரோட்டில் குடற்புழுக்கள் நோயால் இறக்கும் யானைகள் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. யானையின் இனம் காக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு டிவிஷனில் பர்கூர், காங்கேயம், அந்தியூர், எப்.எஸ்., பெருந்துறை, சென்னம்பட்டியிலும், சத்தியமங்கலம் டிவிஷனில் பவானிசாகர், ஹாசனூர், தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளிலும், காப்புக் காடுகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில், 2,276 சதுர கி.மீ., பரப்பளவில், 27.72 சதவீதம், வனப்பகுதி உள்ளது. மாநிலத்திலேயே, அதிக வனப் பரப்பு மற்றும் வன விலங்குகளை கொண்ட மாவட்டமாக, ஈரோடு மாவட்டம் திகழ்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள, 3,867 யானைகளில், 1,200க்கும் மேற்பட்ட யானைகள், ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் தான் உலா வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், நூற்றுக் கணக்கான யானைகளை, ஈரோடு மாவட்ட வனப்பகுதி இழந்துள்ளது. இதில், குடற்புழுக்களால் இறந்த யானைகளின் எண்ணிக்கையே அதிகம். உரிய மருத்துவப் பரிசோதனை இல்லாமல், வனத்துக்குள் கால்நடை மேய்ப்பதால் பரவும் ஒட்டுண்ணியால், ஈரோடு வனப்பகுதியில், யானை இனமே முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மண்டல வனப் பாதுகாவலர் அருண் கூறியதாவது: கால்நடைகளை உரிய மருத்துவ பரிசோதனை செய்யாமல், வனத்துக்குள் மேய விடுவதால், கால்நடைகளின் சாணம் மூலம், பாரசைட் என்ற ஒட்டுண்ணி பரவுகிறது. இந்த ஒட்டுண்ணி, வன விலங்குகளின் உடலுக்குள் பரவி, அவற்றின் இறப்புக்கு காரணமாகிறது. சத்தியமங்கலம், மாக்காம்பாளையம் வனப் பகுதியில், சில தினத்துக்கு முன் இறந்த யானையின் உடலை, பிரேத பரிசோதனை செய்ததில், வயிற்றில் ஆயிரக்கணக்கான பாரசைட் புழுக்கள் இருந்தன. இந்த ஒட்டுண்ணி, யானையின் செரிமானத்தை குறைத்து, யானைக்கு, குடற்புண் ஏற்பட காரணமாகி உள்ளது. வனத் துறையினரின் வேண்டுகோளை ஏற்காமல், அத்துமீறி வனத்துக்குள் கால்நடையை மேய்ப்பதால், வன உயிர்கள் இறக்க நேர்கிறது. வனம் மற்றும் வன விலங்குகளைக் காக்க மக்களிடையே விழிப்புணர்வும், இரக்க குணமும் தேவை. இவ்வாறு அருண் கூறினார்.

Tuesday, June 12, 2012

மணல் கடத்தலுககு இடையூறாக இருந்த 15 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு


செவ்வாய்க்கிழமை, ஜூன் 12, 2012, 17:10 [IST]
http://tamil.oneindia.in/news/2012/06/12/tamilnadu-15-dogs-poisoned-death-155580.html

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்த இடையூறாக இருந்த 15 நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.

தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு பகுதி ஆற்றில் இருந்து அதிக அளவில் மணல் கடத்தப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இரவோடு, இரவாக லாரி, டிராக்டரில் மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு அப்பகுதி நாய்கள் இடையூறாக இருந்துள்ளன.

இந்நிலையில் மணப்பாடு வீடு அருகே நாய்களுக்கு மர்ம நபர்கள் மாமிசத்தில் விஷம் தடவி கொடுத்துள்ளனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், ஜான்சன், செல்லதுரை வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் உள்பட 15 பேருக்கு சொந்தமான நாய்கள் செத்து மடிந்தன. மேலும் விஷம் தடவிய மாமிசத்தை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட காக்கைகளும் இறந்தன.

மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் மணல் அள்ள வருபவர்களை பார்த்து நாய்கள் குறைப்பதால் அவர்கள் நாய்களை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிராணிகள் வதை தடுப்பு அமைப்பான புளூ கிராசிடம் அப்பகுதி மக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Monday, June 11, 2012

தெருநாய்களுக்கு கு.க., தேவை


பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012,07:01 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=484322

ஈரோடு: ஈரோடு மாநகரப் பகுதியில் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் பணி முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஈரோடு மாநகரப் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நாய் கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு நோய்களுக்கும் காரணமாகி சுகாதார சீர்கேட்டையும் தெருநாய்கள் ஏற்படுத்துகிறது. மிருகவதை தடை சட்டத்தின்படி நாய்களை கொல்வது நிறுத்தப்பட்டது.நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க மாநகராட்சி நிர்வாகம், கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. 

இதற்காக தனியே மையம் ஏற்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால், மத்திய அரசின் நிதியுதவி தாமதம், டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணத்தினால், கருத்தடை ஆப்ரேஷன் பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை. 2011-12ம் ஆண்டில் 275 நாய்களுக்கு கு.க., ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கணக்கு காட்டப்படுகிறது.உண்மையில் இன்னும் குறைவாகத்தான் கருத்தடை ஆப்ரேஷன் நடந்திருக்குமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், தெருக்களில் முன்பு இருந்ததை விட தற்போது அதிகளவில் நாய்கள் திரிவதை காண முடிகிறது. தெருநாய் தொல்லைக்கு முடிவு கட்ட கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன்காரணமாக மீண்டும் மாநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் பணிகள் கடந்த மூன்றாம் தேதி முதல் துவங்கியது. நாளொன்றுக்கு 25 நாய்கள் வீதம் இலக்கு நிர்ணயித்து பிடித்து ஆப்ரேஷன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், பணிகள் இன்னும் முழு வீச்சில் நடக்கவில்லை. களத்தில் போதுமான பணியாளர்கள் இறங்கி நாய்களை பிடிப்பதில்லை.இதனால், நாள்தோறும் இலக்கை விட குறைவான நாய்களுக்கே ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. எனவே, வழக்கம் போல் பெயரளவுக்கு இந்த பணிகளை மேற்கொள்ளாமல், இம்முறை மாநகரிலுள்ள அனைத்து நாய்களையும் பிடித்து கருத்தடை ஆப்ரேஷன் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதுமலை முகாம் யானைகளின் எடை அதிகரிப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=484412
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012,20:37 IST

கூடலூர்:முதுமலை புலிகள் காப்பக முகாமில் உள்ள, வளர்ப்பு யானைகளின் எடை, 100 முதல் 200 கிலோ வரை அதிகரித்துள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், மூன்று குட்டி யானைகள், இரண்டு "மக்னா' உள்ளிட்ட 25 யானைகள் உள்ளன. மூன்று மாதத்துக்கு ஒருமுறை, இவற்றின் எடை அளவிடப்படுகிறது. இதன் மூலம், யானைகளின் உடல்நிலை அறியப்பட்டு, அதற்கேற்ப உணவு முறையில் மாற்றம் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.முதுமலை முகாம் யானைகளுக்கு, கடந்த ஜனவரி மாதம், எடை பார்க்கப்பட்டது. தற்போது, முதுமலை அருகே உள்ள தொரப்பள்ளியில் உள்ள எடை மேடையில், வளர்ப்பு யானைகளின் எடை சோதனையிடும் பணி நடைபெற்றது. குட்டி யானை மசினி, இரண்டு மக்னா யானைகள், நான்கு பெண் யானைகள் உள்ளிட்ட 16 யானைகளின் எடை சோதனையிடப்பட்டன. இதில், யானைகளின் உடல் எடை, 100 முதல் 200 கிலோ வரை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகள் மாயம்: "மொபைல்போன் டவர்'களில் தஞ்சம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=483798
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2012,23:49 IST

கோவை : கோவையில் வெட்டி வீழ்த்தப்படும் மரங்களால், அதில் வாழ்ந்த வந்த பறவை இனங்கள், ஆபத்து நிறைந்த "மொபைல்போன் டவர்'களிலும், உயர் கோபுர மின்கம்பங்களிலும் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், கோவையில் பறவைகளை காண்பது மிகவும் அரிதாக போய்விடும்.

அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, மருதமலை ரோடு என, கோவையின் அனைத்து முக்கிய பகுதிகளும் மரங்கள் இல்லாமல், கட்டடங்களாய் காட்சியளிக்கின்றன. நகர வீதிகளில் புற்றீசல் போல் ஓடும் வாகனங்கள், தொழிற்சாலை புகை உள்ளிட்டவற்றால் காற்றும் பெருமளவு மாசடைந்துள்ளது. நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழல் மாசு அதிகரித்திருப்பதோடு, காற்றை சுத்திகரிக்கும் செயலை செய்யும் மரங்களும், அவற்றை நம்பி வாழ்ந்த பறவைகளும் மறைந்து வருகின்றன. இயற்கை கழிவுகளை அகற்றும் செயலையும், மரங்களின் விதைகளை பல இடங்களுக்கு பரப்பும் பணிகளையும் செய்த பறவைகள், கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன.

மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு, பூச்சி இனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வந்த, சிட்டு குருவி, தூக்கணாங் குருவி, கிளி, காடை, காகம் என நூற்றுக்கணக்கான சிறிய பறவை இனங்களை தற்போது காண அரிதாக போய்விட்டது. பறவைகளை பொறுத்தவரை, வசிக்க மரம் மற்றும் உணவு மட்டுமேதேவை. குருவி, காகம் உள்ளிட்ட சிறிய பறவைகளுக்கு சராசரி உயரமுள்ள மரங்களும், பருந்துகளுக்கு பல அடி உயரமுள்ள பனை மரமும் வேண்டும். கோவையில் பல இடங்களில் தற்போது மரங்களே இல்லாமல், வெறும் கட்டடங்கள் மட்டுமே உள்ளதால், பறவை இனங்கள் தங்க இடமில்லாமல் போய்விட்டது.

எஞ்சிய குறைந்தளவு பறவைகளும் ஆபத்தை உணராமல், "மொபைல்போன் டவர்'களிலும், உயர் கோபுர மின்கம்பங்களிலும் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

"ஓசை' அமைப்பின் தலைவர் காளிதாசன் கூறியதாவது:ஒரு மரத்தின் கிளை, உச்சி, தண்டு என அனைத்து பகுதிகளும் பலதரப்பட்ட பறவைகள் வாழ அடைக்கலமாக திகழ்கின்றன. சர்வதேச அளவில் 6,000 பறவை இனங்களும், குறிப்பாக இந்திய துணை கண்டத்தில் 1,250 பறவை இனங்களும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவை சந்தித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. டோடோ, பனங்காடை, இருவரிக்காடை என 25க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழிவை சந்தித்துள்ளன. பறவை சப்தங்களுடன் வாழும் மனிதனின் மனநிலை அமைதியாக இருக்கும் என்றும், நகரத்தில் வாகன சப்தங்களுடன் வாழும் மனிதனின் மனநிலை அமைதியற்று இருக்கும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.அதிகளவு எண்ணிக்கையில் காணப்பட்ட காகம், பருந்து ஆகியவை மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே தற்போது தென்படுகின்றன. பறவைகள் தானே என்று மெத்தனமாக இருந்தால், பிற்காலத்தில் பாதிப்பு மனிதர்களுக்கு தான்.இவ்வாறு, காளிதாசன் கூறினார்.

Saturday, June 9, 2012

வால்பாறையில் சிறுத்தை மர்மச்சாவு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=482519
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2012,22:52 IST


வால்பாறை: வால்பாறை டவுன் பகுதியில் மர்மமான முறையில் இறந்த சிறுத்தையை, பிரேதப் பரிசோதனை செய்ய முடியாமல், வனத்துறையினர் தவித்தனர். கோவை மாவட்டம், வால்பாறை டவுன் சிறுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர், பெரிய அக்கா. இவரது வீட்டின் பின்பக்கம் உள்ள சமையல் அறையில், இரண்டு வயது பெண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை, இப்பகுதி மக்கள் நேற்று காலை பார்த்தனர். இத்தகவலை வனத்துறைக்கு தெரிவித்தனர். வால்பாறை வனத்துறையினர் இறந்த சிறுத்தையை மீட்டு, அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து, பொதுமக்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மர்மமான முறையில் இறந்த சிறுத்தையை பரிசோதிக்க, வனத்துறையின் கால்நடை மருத்துவர் இல்லை. எனவே, வேறு மாவட்டத்தில் பணிபுரியும் வனத்துறை கால்நடை மருத்துவர் வரும்வரை, பிரேதப் பரிசோதனைக்காக காத்திருந்தனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பலியான சிறுத்தை, செந்நாய் விரட்டியோ அல்லது உடல் நலக்குறைவாலோ இறந்திருக்கலாம். கால்நடை மருத்துவர் வர தாமதமாகும் என்பதால், சிறுத்தையின் உடலை ஐஸ் கட்டி வைத்து, பத்திரமாக பாதுகாத்து வருகிறோம். இறந்த சிறுத்தை பிரேதப் பரிசோதனைக்கு பின், எரியூட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். வால்பாறையில் சமீப காலமாக, காட்டுப் புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான், சிங்கவால் குரங்கு போன்ற வனவிலங்குகள், மர்மமான முறையில் இறந்து வருவது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sunday, June 3, 2012

Animal rights activists stress on need to set up more ABC centres


COIMBATORE, April 9, 2012
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3295307.ece

Even while welcoming the Coimbatore Corporation's move to build an animal shelter in Vellalore, animal rights activists' cautioned against relocating dogs from their localities and stressed the need to set up more Animal Birth Control (ABC) centres.

Corporation Commissioner T. K. Ponnusamy said that the project would be finalised by April 2012. Diseased and aggressive dogs would be removed from the streets and kept in the shelter to be built on a 5,000 sq. ft. area on the Corporation's land in Vellalore.

According to Corporation officials, diseased dogs, dogs in heat and females with young puppies turned aggressive and caused problem to the public would be caught and kept in the shelter to be set up at a cost of Rs. 25 lakh. Details like the number of dogs to be housed, provisions for food and facilities to take care of them were yet to be decided. The officials said that similar projects in Masanagudi and Tirupur were successful. Mini Vasudevan, managing trustee, Humane Animal Society, and Kalpana Vasudevan (Managing Trustee), People for Animals Unit II and member of AWBI, said that the best way to deal with stray dog menace was to strengthen the ABC programme. All stray dogs could not be captured and put in the shelter. Both the organisations said that they were willing to provide assistance to the Corporation in sheltering sick and problematic animals.

Mr. Ponnusamy said that the Corporation would look into the possibilities of working with NGOs in running the programme.

Proposal for a similar project in Chennai has been met with protests from Animal Welfare Board of India (AWBI) and Blue Cross. According to the organisations, relocating dogs from their natural habitat was against the Animal Birth Control (Dogs) Rules, 2001, under Prevention of Cruelty to Animals Act.The animal right activists pointed out that prescribed methods should be followed while capturing and sheltering dogs. Dogs were territorial animals and removing them form their localities created problem. According to the activists, more ABC centres were required to effectively reduce the stray dog population in the district. The Corporation had only one centre functioning in Seeranaickenpalaym. At least, each zone of the Corporation should have a centre. Panchayats also should have facilities to sterilise dogs.

“AWBI is always ready to provide funds for the local bodies to carry out ABC programme. But, local authorities did not take much interest in this,” said Ms. Kalpana. There was a misconception among people that removing stray dogs from the area would solve the problem. But, that would not help address the issue, said Ms. Mini Vasudevan. She added that unethical practices like illegal breeding by pet shop owners should be curbed.

எல்லையில் "பிளாஸ்டிக்' கழிவுகள்:வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=479604
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012,03:21 IST

குன்னூர்:நீலகிரி வனங்களில் சுற்றுலா பயணிகள் வீசியெறிந்து செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை சமன்பாட்டை தக்க வைத்து கொள்ளவும், 18 மைக்ரானுக்கு குறைவான "பிளாஸ்டிக்' பொருட்களை பயன்படுத்த இங்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகளாலும், சில உள்ளூர் விற்பனையாளர்களாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சில இடங்களில் காணப்படுகின்றன.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட்டு அழகிய நினைவுகளை கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும், வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் "பிளாஸ்டிக்' பொருட்களை மட்டும் இங்கு விட்டு செல்கின்றனர். 
இதில் குறிப்பாக, குன்னூர்-பர்லியாறு சாலையில் இரு பக்கமும் உள்ள வனப்பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உணவு பொருட்களை அங்கு அமர்ந்து உண்கின்றனர். 

பின்பு, உணவு கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் இப்பகுதியிலேயே வீசிவிட்டு செல்வதால், பிளாஸ்டிக் கழிவுகள் இப்பகுதியில் குவிந்து கிடக்கின்றன.
இதனால், வன விலங்குகளுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் பர்லியாறு பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால் இதற்கு எவ்வித பயனும் கிட்டியதாக தெரியவில்லை. வனத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில், இத்தகைய குப்பைகளை அகற்ற முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் வனத்துறை ஊழியர்கள் சில இயற்கை ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு வனங்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுகின்றனர். குன்னூர் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. இவற்றை உண்ணும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றினால் மட்டுமே விலங்குகளை காக்க முடியும்

Sunday, May 20, 2012

தொல்லை தீருமா?


http://www.dailythanthi.com/article.asp?NewsID=731732&disdate=5/20/2012
20 May, 2012

ஞாயிறு கட்டுரை : தொல்லை தீருமா?

நாய்...

`நன்றி' என்ற மூன்றெழுத்து வார்த்தையின் நடமாடும் உதாரணம்.

எஜமான விசுவாசத்தை பற்றி குறிப்பிடும் போது, ``நாயாக இருப்பேன்'' என்று சொல்வார்கள்.

அந்த அளவுக்கு நன்றியும், விசுவாசமும் உள்ள பிராணி நாய். மனிதர்களோடு எளிதில் ஐக்கியமாகிவிடும் பிராணி இது. இதனால்தான் வளர்ப்பு பிராணிகளில் நாய் முதல் இடத்தை வகிக்கிறது. நாய் வீட்டை காக்கும். கொஞ்சம் பழக்கப்படுத்தி விட்டால் எஜமானர் சொல்லும் கட்டளைகளை ஏற்று சின்ன சின்ன வேலைகளை கூட செய்யும். நாய் வளர்த்தால் அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அது நல்ல விளையாட்டு தோழனாகவும் இருக்கும்.

மோப்ப சக்தியின் மூலம் எதையும் அடையாளம் கண்டுபிடிப்பதில் நாய்கள் கில்லாடி. அதனால்தான் குற்றவாளிகளை பற்றி துப்பறிவதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்துகிறார்கள்.

இப்படியாக நாய் பலவகைகளிலும் நமக்கு நெருக்கமாகவும் உபகாரமாகவும் இருந்து வருகிறது.

இதனால்தான் செல்லப் பிராணிகள் வளர்ப்பில் நாய்களுக்கு மக்கள் முதல் இடம் அளிக்கிறார்கள். நாய்க்கு அப்புறம்தான் பூனை, கிளி, அணில் எல்லாம்...

சிலவகை நாய்களை பார்த்தாலே கை, கால் உதறல் எடுக்கும். அந்த அளவுக்கு வாட்டசாட்டமாக பயில்வான் போல் இருக்கும். அப்படிப்பட்ட நாய்கள் உள்ள வீட்டுப்பக்கம் திருடர்கள் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள்.

இன்னும் சில நாய்கள் இருக்கின்றன.. பஞ்சு மிட்டாய் சைசுக்கு `புசுபுசு' என்று பொம்மை மாதிரி இருக்கும். அந்த நாய் வீட்டை பாதுகாக்க உதவாது; நாம்தான் அதை பாதுகாக்க வேண்டும்.

தனக்கு ஆபத்து கருதினாலோ அல்லது யாரையாவது விரோதி என்று கருதினாலோ அவர்கள் மீது பாய்ந்து கடித்து குதற நாய்கள் தயங்குவது இல்லை. சிறுவர்களுக்கும் நாய்களுக்கும் `ரொம்ப ராசி'. தெருவில் கல்லைக் கண்டால், உடனே நாயைத்தான் தேடுவார்கள். இதனால் நாய்களும், அறிமுகம் இல்லாத சிறுவர்களை பார்த்தால், ``எதற்கு வம்பு?'' என்று பம்மியபடியே அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடும்.

சில நாய்களை சீண்டிப்பார்த்தால் சற்று முறைக்கும். எதிர்த்து போராட முடியாது என்று தெரிந்தால் வாலை சுருட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் இடத்தை காலி செய்து விடும்.

மனிதர்களை சார்ந்துதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்பதால், நாய்கள் மனிதர்களை நன்றாக அறிந்தே வைத்து இருக்கின்றன. அவர்களுடைய மனநிலைக்கு ஏற்ப நடந்து கொண்டு வயிற்றை கழுவி வருகின்றன.

மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருக்கும் பிராணியான நாய் சில சமயங்களில் அவர்களுக்கு பாரமாகவும், தொல்லை தருவதாகவும் அமைந்து விடுகிறது. சில சமயங்களில் விரோதியாக கூட அமைந்து விடுகிறது.

நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மரணத்தில் முடியலாம்.

வீட்டில் வளர்க்கும் நாய்கள் மனிதர்களை கடிப்பது அரிது. ஆனால் தெரு நாய்கள் அப்படி அல்ல. தீனி போடுபவர்களை பார்த்து வாலை ஆட்டும். மற்றவர்களை பார்த்து முறைக்கும். அறிமுகம் இல்லாதவர்களை தெருநாய்கள் கடிக்க தயங்குவது இல்லை. சில நாய்கள் ஆவேசம் தீரும் வரை விரட்டி விரட்டி கடிக்கும். சும்மா போனால் கூட திரும்பி பார்த்து குரைக்கும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை காரணம் இல்லாமல் துரத்திச் சென்று குரைக்கும். கடிக்கவும் முயற்சிக்கும்.

இதனால் நாய்கள் என்றாலே சிலருக்கு வெறுப்பு, சிம்மசொப்பனம். வீட்டின் அருகே வந்தாலே அவற்றை துரத்தி அடிப்பார்கள்.

சென்னையிலும் மற்றும் சில நகரங்களிலும் சமீப காலமாக இதுபோன்ற தெருநாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து உள்ளது. தெருக்களில் சகட்டுமேனிக்கு தெருநாய்கள் அலைகின்றன. இதனால் குழந்தைகளை கடித்து விடுமோ? என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். பஸ், ரெயில் நிலையங்களிலும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. இரவில் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேம்பாலத்திலும், நடைமேடைகளிலும் நாய்களின் ராஜ்ஜியம்தான். சர்வ சாதாரணமாக அங்கும் இங்குமாக ஓடியபடி போவோர் வருவோரையெல்லாம் பயமுறுத்துகின்றன.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் நாய் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்போதெல்லாம் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டனர். தெருக்களில் சுற்றித் திரியும் வெறி நாய்களை அவ்வப்போது பிடித்து சென்று அப்புறப்படுத்திவிடுவார்கள்.

அப்போது, வீடுகளில் நாய் வளர்க்க விரும்புகிறவர்கள், மாநகராட்சியிடம் தனியாக அனுமதி வாங்க வேண்டும். அதற்கான வரியை பெற்றுக் கொண்டு மாநகராட்சியினர் வழங்கும் வில்லைகளை (டோக்கன்) நாய்களுடைய கழுத்தில் கட்டி தொங்க விட வேண்டும். இல்லையெனில், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடிக்க வரும் பணியாளர்கள், அனுமதி வில்லை கட்டப்படாத வீட்டு நாய்களையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்.

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துக் கொண்டு போய் குடும்பக் கட்டுப்பாடும் செய்து விடுவது வழக்கம். தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த இதுதான் சிறந்த வழியாக கருதப்படுகிறது. இப்படி செய்வதால் நாய்கள் துன்புறுத்தப்படுவதோ, அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோ கிடையாது.

சில சமயங்களில் விஷ ஊசி போட்டு நாய்களை கொன்று புதைத்த சம்பவங்களும் நடைபெற்றன. அப்படி செய்வதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், விஷ ஊசிகளில் இருந்து நாய்கள் தப்பின.

ஆனால் இப்போது தெருநாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால், அவற்றின் மீது மக்கள் கடும் வெறுப்பாக இருக்கிறார்கள்.

வீட்டு நாய்கள் தெருநாய்களாக மாறும் அவலநிலை அதிகரித்து உள்ளது. பலர், ``நானும் நாய்க்குட்டி வளர்க்கிறேன்'' என்ற பெயரில் நாய்களை வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அப்புறம் பிடிக்காமல் தெருக்களில் விட்டு விடுகின்றனர். அந்த நாய்கள் குட்டி போட்டு பல மடங்கு இனப்பெருக்கம் செய்து விடுகின்றன. முறையான பராமரிப்பு இல்லாததால், தெருவில் அலையும் நாய்கள் கிருமி பிடித்து சொறிநாய்களாகவும், வெறி நாய்களாக வும் மாறி விடுகின்றன.

எவ்வளவுதான் செல்லமாக வளர்த்து வந்தாலும், தங்களுடைய வீட்டில் உள்ள நாய்களுக்கு சிறு பிரச்சினை என்றால், சிலர் அவற்றை கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கொண்டு போய், விட்டு விடுகின்றனர். வெகு நாட்கள் வீட்டுச் சூழ்நிலையிலேயே வளர்ந்துவிட்டு, திடீரென தனிமையில் தள்ளப்பட்டதால், அந்த நாய்கள் தங்களுடைய வசிப்பிடம் எது என்பது தெரியாமலேயே அங்கும் இங்குமாக தெருக்களில் சுற்றித் திரிகின்றன. குப்பைக் கூளங்களில் கிடக்கும் உணவுகளை சாப்பிட்டு தங்களுடைய பசியை போக்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. வெளியில் உள்ள சூழ்நிலையில் வசிப்பதும் அந்த நாய்களுக்கு சிரமமானதாக மாறி விடுகிறது. நான்கு சுவர்களுக்குள் பாதுகாப்பாக வளர்ந்த அந்த நாய்களுக்கு வீட்டின் உரிமையாளர்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது என்பதால் தெருக்களில் போவோர் வருவோரையெல்லாம் பார்த்து குரைக்க ஆரம்பித்து விடுகின்றன. வெறி கொண்ட சில நாய்கள், பொதுமக்களை கடிக்கவும் பாய்கின்றன.

வேப்பேரி, அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், போரூர், வில்லிவாக்கம், பல்லாவரம், வடபழனி உள்ளிட்ட சென்னையின் சில பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இரவு நேரங்களில் நாய்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், வெளியில் தனியாக செல்ல பெண்களும் குழந்தைகளும் பயப்படுகிறார்கள். நாய்கள் விடும் ஊளை சத்தத்தால், நிம்மதியாக தூங்கவும் முடிவதில்லை என்று புலம்புகிறார்கள்.

மேலும் சென்னை நகர தெருக்களில் சிற்றுண்டி விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகளுக்கு பஞ்சம் இல்லை. வயிற்றை நிரப்ப ஏதாவது மிச்சம் மீதி கிடைக்காதா? என்று தெருநாய்கள் அந்த கடைகளை சுற்றி வருவதை சாதாரணமாக பார்க்கலாம். மேலும் ஓட்டல்கள் மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் உள்ள கழிவுகளை அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் வீசிவிடுகிறார்கள். அவற்றை தேடியும் நாய்கள் அங்கு உலவுகின்றன. உணவு போட்டியில் சில சமயங்களில் அவை தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் உண்டு. அந்த சமயத்தில் யாராவது அந்த இடத்தில் சிக்கிக் கொண்டால் அவற்றின் கடியில் இருந்து தப்புவது சிரமம்.

தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியதால், சமீபத்தில் சென்னை அம்பத்தூரில் சிறுவன் ஒருவன் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மனதில் தெருநாய்களை பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தெரு நாய்களை ஒழிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து இருக்கிறது.

இதனால் விழித்துக் கொண்ட மாநகராட்சி ஊழியர்கள், சில நாட்களுக்கு முன்பு சுமார் 25 தெரு நாய்களை பிடித்து கொன்று புதைத்து விட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெரு நாய்களை கொன்ற 3 மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் செல்லப் பிராணிகள் மீது அன்பு செலுத்துபவர்களுடைய எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், தொல்லை கொடுக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு சென்னை நகரில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.

வெறிநாய்களுக்கு கருணை காட்டி வரும், புளூகிராஸ் போன்ற விலங்குகள் நல ஆர்வலர்களை பாதிக்கப்பட்ட மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். வெறிநாய்களை கொன்றால் எதிர்க்கும் இவர்கள், அந்த நாய்களை பிடித்துக் கொண்டுபோய் தங்களுடைய வீடுகளில் வைத்து வளர்க்க வேண்டியதுதானே என்று கேள்வி கேட்கின்றனர்.

"புளூகிராஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர், தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கறிச் சோறும், பிஸ்கெட்டும் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், அந்த நாய்கள் தெருக்களை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றி திரிகின்றன. அவர்களுக்கு நாய்கள் மீது இரக்கம் இருந்தால், வீட்டுக்கு கொண்டு சென்று சோறு போட்டு வளர்க்கட்டும். தெருக்களில் போட்டு, அங்கேயே திரிய விட வேண்டாம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தெரு நாய்களுக்கு ஆதரவு ஒருபுறம், எதிர்ப்பு ஒருபுறம் என்று இருக்கும் நிலையில், மாநகராட்சி நடுநிலையோடு செயல்பட்டு இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு காண்பதோடு, நாய் தொல்லையில் இருந்து சென்னைவாசிகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

***

நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

சென்னை மாநகராட்சி பகுதியில், தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

வீடுகளில் நாய்களை வளர்ப்போர், முறையாக தடுப்பூசி போட்டு அதை வெளியில் விடாமல் பாதுகாத்து வருகின்றனர். ஆனால், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு சரியான பராமரிப்பு இல்லாததால், அவை கிருமி தொற்று ஏற்பட்டு வெறி நாய்களாகி விடுகின்றன.

அந்த மாதிரியான நாய்கள் கடித்தால், `ரேபிஸ்' என்ற நோய் ஏற்படுகிறது. எனவே, நாய் கடித்து விட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில் நாய்க்கடி விஷத்தால் தலைவலி போன்றவை உண்டாகி மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

சென்னை நகரில் தினமும் 75-க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதாகவும், அம்பத்தூர் சிறுவனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 4 பேர் நாய்க்கடிக்கு பலியாகி இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் 21 பேரும், அதற்கு முந்தைய ஆண்டில் 12 பேரும், 2009-ம் ஆண்டில் 13 பேரும் நாய்க்கடிக்கு பலியாகி உள்ளனர்.

ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், தெரு நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்வதற்கென்று தனியாக 6 வாகனங்கள் வைத்திருப்பதாகவும், நாய்கள் தொல்லை குறித்து பொதுமக்கள் 1913 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறி உள்ளனர்.

***
நாய் வளர்க்க லைசென்சு

வீட்டில் நாய் வளர்க்க வேண்டும் என்றால் பல நாடுகளில் லைசென்சு வாங்க வேண்டும்.

மும்பை நகரில் கூட அந்த கட்டுப்பாடு உள்ளது. மும்பை மாநகராட்சி சட்டத்தின் 191-ஏ பிரிவின்படி, 6 மாதத்திற்கு மேற்பட்ட வயது கொண்ட நாய்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், ரூ.100 செலுத்தி உரிமம் வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அந்த நாய் உயிருடன் இருக்கும் வரை ஒவ்வொரு வருடமும் ரூ.100 செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

எப்படியெனில், ஒருவர் 7 வயதான நாய் ஒன்றை வைத்திருக்கிறார் என்றால், முதல் தடவை அவர் ரூ.700 செலுத்தி உரிமம் பெற வேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 செலுத்தி அந்த உரிமத்தை புதுப்பித்து வர வேண்டும்.

உரிமம் வாங்குவதற்கு நாய்களின் அடையாள புகைப்படங்களையும், கொண்டு செல்ல வேண்டும்.

Wednesday, May 16, 2012

கடல்வளம் காக்க நண்டு குஞ்சுகளை சேகரித்து கடலில் விடும் மீனவர்


பதிவு செய்த நாள் : மே 16,2012,00:04 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=468056

மண்டபம்: மீன்வளத்தை அழித்து வரும் சில மீனவர்கள் மத்தியில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த மீனவர் கோரிமுகமது, கடல் வளத்தை காக்க நண்டு குஞ்சுகளை கடலில் விடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், "ஒமேகா மெரைன்' மையம் என்ற பெயரில் கோரிமுகமது என்ற மீனவர் நண்டு, ஆக்டோபஸ் குஞ்சுகளை வளர்த்து கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீனவர்கள் பிடிக்கும் உயிர் நண்டுகளில் கருமுட்டையுடன் இருக்கும் நண்டுகளை வாங்கி குஞ்சுகளை பொரிக்க வைத்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குஞ்சுகளை, மீன்வளத்துறையினர் மூலம் நேற்று கடலில் விட்டார்.

இவர் கூறியதாவது: கடல் வளம் அழிந்து வருகிறது. குறிப்பாக நண்டுகள் போதிய அளவு பிடிபடுவதில்லை. இதனால் கருமுட்டையுடன் இருக்கும் நண்டுகளை வாங்கி தொட்டிகளில் விட்டு குஞ்சு பொரிக்க வைக்கிறேன். இவற்றை சேகரித்து கடலில் விட்டு வருகிறேன். ஒரு நண்டு 5 லட்சம் வீதம், ஆண்டிற்கு 150 டன் குஞ்சுகளை இடும். 48 மணி நேரம் ஆன பின் அவற்றை கடலில் விட்டால், ஆறு மாதங்களில் நன்றாக வளர்ந்து விடும், என்றார்.a

Tuesday, May 8, 2012

Stray dogs poisoned to death in Chennai




May 8, 2012 By C.S. Kotteswaran 
http://www.deccanchronicle.com/channels/nation/south/stray-dogs-poisoned-death-chennai-567

More than three dozen dogs have been poisoned to death in suburban Katuppakam on Monday.

As many as 29 carcasses were exhumed for investigation till Monday night, following an outcry from the public, as well as animal activists and members of the Blue Cross of India who lodged a police complaint seeking a probe into the issue.“This is not the first time such a inhumane act is happening.

The local bodies and vested interests continue to violate animal welfare norms and dogs have been killed using lethal injections,” said Dawn Williams, general manager, Blue Cross.

“The local body had itself indulged in the gruesome act and the irony is that even pet animals are not spared,” William said.

“Blue Cross has filed a case at the Poonamallee police station and two arrests have been made. Four more people are suspected behind the massive killing and the local panchayt supervisor has initiated the culling drive against the voiceless creatures,” William alleged.

“It has become routine for miscreants to kill stray dogs. As many as 70 stray dogs have been reportedly killed in the same manner in the area during the last few days.

This is the sixth incident of mass killing of stray dogs in the last one year,” said Sathya Radhakrishnan, honorary joint secretary, Blue Cross of India.As many as 14 police cases have been lodged against offenders for mass killing of dogs.

Of this, 10 cases have seen progress and four arrests have been made.

“Still a lot has to be done in this regard and the local bodies should be pulled up to ensure that barbaric acts do not recur,” he said.

“The failure of the local bodies to carry out animal birth control programmes has resulted in prolific breeding of dogs and it is high time government authorities woke up and handled the stray dog menace and the gruesome killing of canines,” said a government veterinary officer.

100 dogs killed, stealthily buried in village



http://www.thehindu.com/news/cities/chennai/article3394902.ece
KATTUPAKKAM (TIRUVALLUR), May 8, 2012

Residents had complained to panchayat about dog menace, but did not expect the animals to be killed

In an act of shocking brutality, over 100 dogs were culled and their bodies buried near a pond in this village, nearly 20 km from Chennai, over the last three days. The poisoning of the dogs, according to residents, was carried out at the orders of the Panchayat. Nearly 25 carcasses of dogs that were culled on Monday were recovered by the Blue Cross of India and brought to the Tamil Nadu Veterinary and Animal Sciences University in Vepery.

While villagers claim that nearly 200 dogs were killed, Blue Cross puts the number of the animals poisoned at around 100. Dogs from the areas of Sendurpuram, Vinayaganagar and Amman Nagar were killed and brought to nearby D.R.R Nagar, where they were buried near a neglected pond.

“On Saturday and Sunday, three men and a woman came in a tractor loaded with over a hundred bodies of dogs and buried them here. This happened at noon when most people were at work,” said a resident. “They told us it was as per panchayat instructions. Since the tractor bore the panchayat sticker, we did not interfere. They assured us the pit had been dug really deep so there would be no smell.”

The act came to light when the same tractor arrived at the same place, this time with 24 carcasses, on Monday morning and one of the residents informed Blue Cross. “When we rushed there, they had already injected the dogs with cyanide and some dogs were gasping for breath. We couldn't save them though we brought all the bodies to TANUVAS,” said Dawn Williams, General Manager, Blue Cross of India. Mr Williams also exhumed another carcass, buried much earlier, and brought it to TANUVAS for a post-mortem examination.

A complaint was lodged and Poonamallee police registered an FIR against six people, two of whom — Elangovan, supervisor of sweepers in Poonamallee panchayat and Kalainesan, driver of the tractor — have been arrested. The others, mostly people hired to catch the dogs with iron hooks and inject them with cyanide, ran away as soon as residents and Blue Cross workers raised an alarm.

“The panchayat president has been out of the city for the past three days and the workers took the action without consulting him. They did this only because the residents had complained of the dog menace,” said T. Mahesh, advocate for the accused party. Every family here owns dogs and most don't know how to take care of them. They are not sterilised and they bite us, he added.

Residents acknowledge the dog menace exists in the area. The slaughter houses and garbage in the area have increased the number of dogs in the last few months, they said.

“Many of us here are night shift workers in companies and it very difficult, to walk along or cycle past this stretch to get home at nights, because the dogs attack us or chase us. We had complained to the panchayat and the officials said they would take care of it,” said another resident. “But we never wanted them to be killed and dumped like this,” he added.

Some residents said they were told the injections would only drug the dogs and they would be dropped off on the outskirts. "Only when we saw the tractor lowering the bodies into the pit, did we realise they had lied to us. They had not even spared puppies,” said a student.

Police officials in Poonamallee said that investigations were on. “We have sent the cyanide bottles for examination to know how the panchayat workers procured them,” said Shankar, the investigating officer.

Some residents also say the culling here is not a new thing in the area and happens once in every few months. “But this is the first time they killed even dogs that were being taken care of by various families,” said Geetha, a resident.

“We did not visit our native village because our dog was to give birth. But a woman came today and injected my dog when she was sleeping near the gate. Before, we knew what was happening, the dog had died. They put the carcass on the tractor,” said Janaki, a resident.

“There are ways to deal with dogs,” said Mr. Williams said. "We urge residents to never kill dogs because that creates a vacuum and encourages dogs from other localities to come in. These new unfamiliar dogs often turn into nuisance."

விஷ ஊசி போட்டு 25 தெரு நாய்கள் படுகொலை: ஊராட்சி ஊழியர்கள் இருவர் கைது



பதிவு செய்த நாள் : மே 07,2012,22:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=463103

பூந்தமல்லி: தெரு நாய்களை ஊராட்சி ஊழியர்கள் பிடித்து விஷ ஊசி போட்டுக் கொலை செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இதே ஊராட்சியில் கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போரூரை அடுத்துள்ளது காட்டுப்பாக்கம் ஊராட்சி. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு தெருநாய்கள் அதிகம். இது குறித்து அடிக்கடி புகார் எழவே ஊராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து விஷ ஊசி போட்டு கொலை செய்து வந்தனர்.

25 தெருநாய்கள் கொலை: காட்டுப்பாக்கம், அம்மன் நகரில் தெரு நாய்களைப் பிடித்து, அவற்றை விஷ ஊசி போட்டு, கொலை செய்வதாக புளு கிராஸ் அமைப்புக்கு நேற்று தகவல் கிடைத்தது. அந்த அமைப்பின் பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது 25 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது.

ஒரு லிட்டர் விஷம் பறிமுதல்: சில நாய்களைப் பிடிக்க, ஊராட்சி ஊழியர்கள் நான்கு பேர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்களை புளு கிராஸ் அமைப்பினர் வளைத்து பிடித்தனர். இதில், இருவர் தப்பி ஓடினர். சுகாதார கண்காணிப்பாளர் இளங்கோ, குப்பை அள்ளும் டிராக்டர் ஓட்டுனர் கலைநேசன் ஆகியோரை பிடித்த புளூகிராஸ் அமைப்பினர், அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் "சைனைடு' விஷம், ஆறு ஊசி, நாய்களைப் பிடிக்க வைத்திருந்த இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இருவர் கைது: பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், பிடிபட்ட இருவரும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அழகு விசாரணை நடத்தினார். கலைநேசன், இளங்கோ மீது இந்திய தண்டனை சட்டம் 428, 470 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தார்.

புளு கிராஸ் பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் கூறியதாவது: காட்டுப்பாக்கம் ஊராட்சியில் தொடர்ந்து தெரு நாய்களைக் கொலை செய்துள்ளனர். நேற்று முன்தினம் தான், முதல் முறையாகத் தகவல் கிடைத்தது. நேற்று காலை உறுதியான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று நாய்களை கொலை செய்த ஊழியர்களை பிடித்தோம். மொத்தம் 25 நாய்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

100 நாய்கள் கொலை: வீட்டில் வளர்த்து வந்த நாய்களையும் ஊழியர்கள் பிடித்து கொலை செய்துள்ளனர். கடந்த சில வாரமாக இந்த ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொலை செய்யப்பட்டுள்ளன. அவற்றை அப்பகுதியில் உள்ள ஏரியில் புதைத்துள்ளனர். நாய்கள் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டு, அதில் ஒரு நாயின் உடலை மட்டும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி அனுப்பி வைத்துள்ளோம்.

தகவல் தெரிவிக்கலாம்: மற்ற நாய்களின் உடல்களை உடனடியாக வெளியே எடுக்க ஊராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளோம். இது சுற்றுச்சூழலுக்கு எதிரான காரியம். நாய்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க கு.க., அறுவை சிகிச்சை மட்டுமே அதற்கு செய்ய வேண்டும். கொலை செய்வது தண்டைக்குரிய குற்றம். வேறு எந்த பகுதியிலானது தெருநாய்களை கொலை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் புளு கிராஸ் அமைப்பிற்கு 22354959 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஜான் வில்லியம்ஸ் கூறினார்.

ஊராட்சி நிர்வாகம் மறுப்பு: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது: தெருநாய்களை பிடிக்கவோ, கொலை செய்யவோ ஊராட்சி மன்றமோ, ஒன்றிய நிர்வாகமோ உத்தரவு தரவில்லை. குப்பை அள்ளச் சென்ற ஊழியர்களிடம், பொதுமக்கள் நாய்த் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறவே, அவர்களாக நாய்களைப் பிடித்துக் கொன்றுள்ளனர். ஏற்கெனவே 100 நாய்கள் கொலை செய்யப்பட்டு, புதைத்ததாகக் கூறப்படும் இடத்தை ஜே.சி.பி., மூலம் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தான் அந்த நாய்களைக் கொலை செய்துள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு திருநாவுக்கரசு தெரிவித்தார்.

Friday, May 4, 2012


கோவிலுக்கு மாவிளக்கு எடுத்த "நன்றியுள்ள ஜீவன்' : பம்பை முழங்க பவனி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=461610
பதிவு செய்த நாள் : மே 05,2012,00:05 IST

காரிமங்கலம்: காரிமங்கலத்தில், விபத்தில் கால் முறிந்த நாயை காப்பாற்ற, அதன் உரிமையாளர் கோவிலுக்கு வேண்டி கொண்டதை தொடர்ந்து, குணமடைந்த நாய் மாவிளக்கு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கீழ் தும்பலஅள்ளியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல். இவர், கால்நடைகள் வளர்த்து வருகிறது. மாடுகளில் பால் கறந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூட்டுறவு சங்க பால் விற்பனை நிலையத்துக்கு கொண்டு செல்வார்.கடந்த சில ஆண்டுக்கு முன் தங்கவேல் பால் ஊற்றி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, தெருவில் சுற்றிய சிறிய நாய் குட்டி அவரை பின் தொடர்ந்து வந்தது. அவர், அந்த நாய் குட்டியை வீட்டுக்கு தூக்கிச் சென்று, "மணி' எனப்பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார்.தினம் தங்கவேல் காலையும், மாலையும் சைக்கிளில் பால் கொண்டு செல்லும் போது, உடன் மணியும் சைக்கிள் பின்னால் சென்று வந்தது. ஒரு முறை தங்கவேலுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படவே, நாயின் வாயில் சிறிய கேனில் பாலை கொடுத்து அனுப்பி வைத்தனர். நாயும், கூட்டுறவு சங்கத்துக்கு செல்ல அங்குள்ளவர்கள் இதை புரிந்து கொண்டு பாலை வாங்கி கொண்டு காலி கேனை திரும்ப கொடுத்து அனுப்பினர். அதன் பின், மாட்டு வண்டி போல் சிறிய வண்டியை தயார் செய்து, அதில், 10 லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு கேனில் பால் ஊற்றி, மணியை வண்டியில் பூட்டி தினம் கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி வைத்தார். தினமும் மணியே பாலை எடுத்து சென்று காலி கேனுடன் வீடு திரும்பி விடும்.

ஓராண்டுக்கு முன் வீட்டின் முன் நின்ற போது, அந்த வழியாக வந்த பால் வேன், செல்லப்பிராணி மீது மோதியது. இதில், பின்னங்கால்கள் இரண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டது. துடித்து போன தங்கவேல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். மேலும், நாயின் கால்கள் குணமடைந்தால், ராமசாமி கோவிலுக்கு மாவிளக்கு எடுப்பதாக தங்கவேல் குடும்பத்தினருடன் வேண்டி கொண்டனர்.
சிகிச்சை பெற்ற மணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி, வழக்கம் போல் பால் கேனை எடுத்து சென்று வருகிறது. நேற்று காரிமங்கலம் ராமசாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேற்ற தங்கவேல் குடும்பத்தினரும், நாய் மணியும், காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு, பம்பை முழங்க ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர்.
இதை பார்த்த பக்தர்கள் பலரும் வியந்து பாராட்டினர்.

Sunday, April 29, 2012


மளிகை கடையில் சிதறும் தானியங்கள் சேகரிப்பு : பறவைகளுக்கு ஊட்டும் பெண்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=457964
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012,00:36 IST

மளிகை கடைகளில் சிதறும் தானியங்களை சேகரித்து, பறவைகளின் பசியை, போக்கி வருகிறார் ஒருபெண்.

இரைச்சல் மிகுந்த சென்னையில், பறவைகளை பார்ப்பது அரிதாகி விட்டது. நீர் நிலைகள் குறைந்து, மரங்கள் வெட்டப்பட்டு, நகரமே கட்டடமயமாகிவிட்டதால், பறவை எண்ணிக்கை குறைந்து விட்டது. சிலரது மனிதாபிமானமிக்க நடவடிக்கையால், அங்கொன்றும் இங்கொ ன்றுமாக சிறகசைப்பது தொடர்கிறது.

தானியம் சேகரிப்பு:புதுக்கோட்டை மாவட்டம் நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. ராமாபுரம் பாலாம்பிகை நகரில் வசிக்கிறார். சிறுவயதில் இருந்தே பறவைகள் மீது அலாதி ஆர்வம் கொண்டவர். வீடு தேடி வரும் பறவைகளுக்கு தானியங்களை வழங்கி பசியாற்றி வருகிறார். இதற்காக, மளிகை கடையில், தினமும் சிதறி வீணாகும் தானியங்களை கேட்டு வாங்கி பறவைகளுக்குப் போட்டு மகிழ்கிறார்.

தந்தை தந்த பரிசு: ரேவதி தெரிவித்ததாவது:பறவைகளை வளர்ப்பதில் அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். ஆனால், கூண்டுக்குள் வளர்ப்பதில் விருப்பம் இல்லாதவர். வீட்டுக்கு பறவைகளை வரவழைப்பதற்கென்று ஒரு மொழியை கற்று வைத்திருந்தார். குரல் உயர்த்தி கூப்பிடுவார்; பறவைகள் வீடு தேடி வந்துவிடும். தானியங்களை கொத்தி தின்னும் போது, குதூகலிப்பதை பார்த்து மகிழ்வார். அப்பாவின் மூச்சுக் காற்று பிரிந்து செல்லும் தருணம் வரை பறவைகளோடு வாழ்ந்து மறைந்தார்.

மகிழ்ச்சி:பறவைகள் வளர்ப்பில் இருக்கும் ஆர்வத்தை கணவரிடம் தெரிவித்தேன். வளர்க்கலாமே என்றார். ஆனால், இந்தளவுக்கு பாசக்காரியாக இருப்பேன் என, தெரியாது. பறவைகள் பயமின்றி வந்து செல்வதற்கு ஏதுவாக, வாசல் பகுதியில் தோட்டம் அமைத்தேன். அதில் பறவைகள் கொஞ்சி மகிழ்கின்றன. மளிகை கடைகளில் சிதறும் தானியங்களை வாங்கி வந்து பறவைகளுக்குப் போடுகிறேன். கொத்தி தின்று விட்டு சிறகசைத்து பறக்கையில் நன்றி சொல்லும். அவற்றை பார்க்கும் போது, என் அப்பா கூடவே இருப்பதுபோலவே உணர்கிறேன்.இவ்வாறு ரேவதி கூறினார்.

5,000 goats sacrificed at temple fest


http://timesofindia.indiatimes.com/city/coimbatore/5000-goats-sacrificed-at-temple-fest/articleshow/12904159.cms?intenttarget=no
TNN | Apr 28, 2012, 03.35AM IST


ERODE: At least 5,000 baby goats were slaughtered at a temple festival at Poosariyur near Anthiyur here on Friday and their blood was consumed by the priests and a number of devotees. Childless women too drink blood to invoke the blessings of the deity, regarded locally as the giver of fertility. 

The ritual was conducted to usher in prosperity to the local agrarian community. Friday was the 17th day of the Tamil calendar month of Chithirai and it was auspicious for Semmunisamy, presiding deity of the ancient temple. Devotees started gathering from the morning with baby goats and they were sacrificed at the temple altar. Priests drank the blood and handed over the rest to the devotees. The meat was distributed free of cost to all. 

As per local belief, eating the meat will protect them from chronic diseases. A few years ago, animal sacrifices were banned in temples. However, following protests from devotees, the ban was lifted. Those who sacrificed the goats are not supposed to consume it.

Friday, April 20, 2012

வன விலங்கு வேட்டை : சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது


பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2012,04:07 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=451153

திருவண்ணாமலை: தானிப்பாடி அருகே வன விலங்குகளை வேட்டையாடிய சிறுவன் உள்ளிட்ட ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தானிப்பாடி அடுத்த தென்பெண்ணையாறு காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது, வனச்சரகர் சக்தி கணேஷ், வனக்காவலர்கள் வடிவேல், மோகன், தாண்டவராயன், தாமோதரன், ஆகியோர் துப்பாக்கி சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் நாட்டு துப்பாக்கியால் மான், முயல் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்தனர். வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து, அவர்களிடமிருந்த மான் மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் புளியம்பட்டியை சேர்ந்த சேகர் (23), வேலு (23), ராதாகிருஷ்ணன் (20), முனியன் (30), குமரவேல் (30) மற்றும் 14வயதுக்குட்பட்ட சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். சிறுவனை செஞ்சி சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

வெயிலில் வதைபடும் பால்குடி மறவாத கன்றுகுட்டிகள்: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்


பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012,00:42 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=451534

மதுரை: மதுரையில் இருந்து பால்குடி மறவாத பச்சிளம் கன்றுக்குட்டிகளை, கேரளாவிற்கு அடிமாடாக அனுப்புவோர், கன்றுகளின் கால்களை கட்டிப்போட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் உயிருடன் வதைக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அனுப்பப்படுகின்றன. இதற்காக வியாபாரிகள் சந்தைகளுக்கு சென்று மாடுகளை விலைக்கு வாங்கி அடிமாடாக அனுப்புகின்றனர். கிடை மாடுகளை வளர்ப்போரிடம் காளை கன்றுகளை வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர்.

வெயிலில் வதைப்பு: பிறந்து மூன்று முதல் நான்கு மாதத்திற்குள் உள்ள, 25 கிலோ எடையுள்ள கன்றுக்குட்டி ஒன்றை ரூ.2,000 முதல் ரூ.3,000 விலைக்கு வாங்குகின்றனர். பால்குடி மறவாத நிலையிலும், அவற்றை பசுவிடம் இருந்து பிரித்து செல்கின்றனர். தாயை பிரியும் கன்றுகள் வியாபாரிகளுடன் செல்ல அடம்பிடிக்கும். எனவே அவற்றின் கால்களை ஒன்றாக சேர்த்து கட்டுகின்றனர். பின், சுட்டெரிக்கும் வெயிலில் வயல்காட்டில் உருட்டி விடுகின்றனர். வெயிலில் பல மணி நேரம் காயும் கன்றுகள், வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்கு போராடும். மயங்கிய நிலையில் கிடக்கும் கன்றுகளை அலேக்காக தூக்கி வேனில் போடுகின்றனர். கன்றைத்தேடி வரும் பசுவை குத்தி காயப்படுத்துகின்றனர். ரத்தம் வடியாமல் இருக்க காயத்தின் மீது மண்ணை தடவி முரட்டு வைத்தியம் பார்க்கின்றனர். "பணத்துக்காக எந்த கொடுமையையும் செய்யத் தயார்' என சிலர் இதுபோன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tuesday, April 17, 2012

Govt bans use of live animals for education, research


http://timesofindia.indiatimes.com/india/Govt-bans-use-of-live-animals-for-education-research/articleshow/12696452.cms
Linah Baliga, TNN | Apr 17, 2012, 02.10AM IST

MUMBAI: The Union ministry of environment and forests (MoEF) has banned the use of live animals in dissection and other experiments in educational and research institutions. But scientists conducting new molecular research will be exempted from the ban.

Based on the Prevention of Cruelty to Animals Act (1960), the MoEF has issued guidelines to the University Grants Commission, ministry of health and family welfare, Pharmacy Council of India and the Medical Council of India to discontinue dissection and experiments with live animals in universities, colleges, research institutes, hospitals, laboratories and instead use alternatives like computer simulation.

The MoEF says that the central government is duty-bound to use alternatives to avoid unnecessary suffering or pain to animals.

It states that effective alternatives in the form of CDs, computer simulations and mannequin models are available; they are not only effective as absolute replacements for animals in teaching anatomy or physiology but are also superior learning tools in teaching of pharmacy or life sciences.

The guidelines were framed based on the duties of the Committee for the Purpose of Control and Supervision of Experiments and Animals (CPCSEA), which has been constituted under the provisions of Section 15 of the Prevention of Cruelty to Animals Act (1960).

The committee comprises seven nominees - three nominees appointed by CPCSEA and the rem-aining four from educa-tional institutes.

"The animal experiments should be stopped in all institutes except for the purpose of new molecular research. Sometimes, in laboratories, a lot of work is repeated and animals become unnecessary victims. Only scientists researching on a new molecular theory can experiment on animals. In medical and pharmacy colleges, there is unwanted cruelty towards animals which can be avoided. These guidelines mention imprisonment for five years and monetary penalty," said Mangal Jain, a nominee of the Institutional Animal Ethics Committee (IAEC), which is appointed by CPCSEA.

Hoshang Bilimoria, also a nominee appointed by the CPCSEA, said the guidelines were a welcome change.

"CPCSEA should give the nominees the power to inspect animals housed in educational institutes, experimentation centres or technical laboratories without prior intimation to the institutes. Cross-checks should also be maintained through other members," said Bilimoria.

Tuesday, April 3, 2012

யானைகளை புரிந்து கொள்ள வேண்டும்!!


பதிவு செய்த நாள் : மார்ச் 28,2012,00:00 IST
http://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=436569

யானை - மனித இன மோதலுக்கு, எல்லையோர மக்களிடம் உள்ள, அறியாமையே முக்கிய காரணம்; மனித இனம், யானைகளை புரிந்து கொள்ளும் வரை, எதை கொண்டு விரட்டினாலும், வீண்தான், " என, கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் பேசினார்.

உலக வன நாளை முன்னிட்டு கோவை ஓசை சுற்றுச்சூழல் அடமப்பு சார்பில் சிறப்புச் சூழல் சந்திப்பு, தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் நடந்தது. மேற்கு வங்கத்தில் வன அதிகாரியாக பணியாற்றியவரும், தமிழகத்தைச் சேர்ந்த, அயற்பணியில், கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பணியாற்றியவரும், தமிழகத்தைச் சேர்ந்த, அயற்பணியில் கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பணியாற்றுபவருமான சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

Monday, April 2, 2012

Court clears duo arrested, humiliated for feeding dogs


http://www.mumbaimirror.com/article/2/2012040220120402074148526b20c003b/Court-clears-duo-arrested-humiliated-for-feeding-dogs.html?pageno=1

Posted On Monday, April 02, 2012 at 07:38:12 AM

Two animal lovers from Thane, who were arrested and humiliated two years ago after a stray dog they used to feed allegedly bit a resident, have finally been acquitted, with a magistrate court ruling that feeding strays was not a crime.

The order provides welcome relief for animal lovers in the city, many of whom are pulled up by their housing societies for taking care of strays. Only recently, well-known director Partho Ghosh had a quarrel with his society management when he was fined Rs 1000 in his maintenance bill for feeding two stray dogs. His family, incidentally, had been taking care of them since they were pups.

This order is only the first victory for Sanjeev Dighe and Yatin Mhatre, who are fighting a separate case in High Court against the State and the police for handcuffing them and parading them around their society. In this, they are being represented by Mahesh Jethmalani and have the backing of, among others, Maneka Gandhi.

For Dighe, a commercial artist, and Mhatre - both residents of Lok Puram complex in Thane - the nightmare started on September 20, 2009. The duo had been feeding strays in their locality for several years, something that had led to many altercations with society members. Dighe says the residents believed this would lead to an increase in the stray dog population in the area.

That night, Dighe was getting ready to go out and feed the strays around 10.45 pm when a posse of cops arrived in a private vehicle and asked him to accompany them to Vartak Nagar Police Station. Mhatre accompanied him there, and a few hours later, the duo were booked under Section 289 of the Indian Penal Code, which deals with animals in a particular person's care attacking someone.

The next morning, both were handcuffed and taken to their society, where they were paraded around, ostensibly to show other residents what happened to people who fed strays. They were then taken to a holiday court, which released them on bail.

In a recent order, Jaishree Poonawala, judicial magistrate first class, remarked that "feeding stray dogs is not a crime", adding that strays were not the same as pets and certainly not the sole responsibility of those who feed them.

"After our arrest, Maneka Gandhi personally got involved and helped us file the petition in HC through Mahesh Jethmalani," said Dighe.

This order itself has come as a huge relief to Mhatre and Dighe. "Finally justice has prevailed. Several people like me are often victimised by residents who do not like others feeding strays. We hope this order will help others like us," said Dighe.

Ajay Marathe, a noted animal rights activist, pointed out that incidents of animal lovers being victimised were common in Mumbai. "Those who feed dogs in their area are treated badly. Most residents are against such feeding and come up with random rules to stop them," said Marathe.

RK Joshi, convener of Committee to Monitor Animal Welfare Laws in Maharashtra, has recently written to the BMC commissioner highlighting the issue of societies trying to get rid of stray dogs.

He has pointed out that years after Bombay High Court laid down the guidelines for dealing with stray dogs - the HC has put an emphasis on animal birth control and sterilisation - people continued to harass dogs and animal lovers.

"There is growing tendency in housing societies not to permit stray dogs on the society premises or even in the vicinity. There have been instances when dogs are brutally assaulted by the society members or the watchmen," the letter states, adding that instances of animal lovers being assaulted were common.

The letter urges the commissioner, who is also the chairman of the Monitoring Committee, to urgently look at these issues and ensure that animal lovers and dogs were not harassed.

Saturday, March 31, 2012

சேற்றில் சிக்கி பலியான யானையை தேடி அணையை சுற்றிவரும் குட்டி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=438699
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2012,23:33 IST

உடுமலை: உடுமலை அமராவதி அணை சேற்றில் சிக்கி பலியான பெண் யானையின் குட்டி, தாயைத் தேடி அணைப் பகுதியைச் சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த பாசப் போராட்டத்தை பார்த்த பொதுமக்கள் கடும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணையில், கடந்த 29ம் தேதி பிற்பகல், குட்டியுடன் தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை, சேற்றில் சிக்கியது. யானையை மீட்கச் சென்றபோது, யானைக்குட்டி வனத்துறையினரை விரட்டியது. பின்னர், யானைக்குட்டி வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனில்லாமல் யானை இறந்தது. இந்நிலையில், தாய் யானையை தேடி, குட்டி யானை, அமராவதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. தாய் யானை இறந்த கோம்பு பீட் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக, யானைக்குட்டி தொடர்ந்து சுற்றி வருகிறது. கூட்டத்திலிருந்து பிரிந்து வந்துள்ள யானைக்குட்டி, அணைப்பகுதியில் தண்ணீர் அருந்தி விட்டு, அருகிலுள்ள புல்வெளியில் மேய்கிறது; தொடர்ந்து பல மணி நேரம், ஒரே இடத்தில் நின்ற படி உள்ளது. மாலை நேரத்தில், யானைகள் கூட்டம், அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க வரும் போதும், அவற்றுடன் யானைக்குட்டி செல்லவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும், வனத் துறையினர், கண்காணிப்பு பணிகளை துவக்கினர். இறந்து போன தாய் யானையைத் தேடி, குட்டி யானை நடத்தி வரும் பாசப் போராட்டம், அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. வனப்பகுதிக்குள் குட்டி யானை, தானாகச் செல்லும் வரை அதை விரட்டும் திட்டம் ஏதுமில்லை என்று வனத்துறையினர் கூறினர்.

Friday, March 23, 2012

கூடைக்குள் சிக்கிய, குறும்புக்கார குரங்கு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=433218
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012,23:20 IST

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, செங்காளிபாளையத்தில் துரத்தி, துரத்தி கடித்த குரங்கை, பொதுமக்கள் கூடையில் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த வாரம், நரசிம்மநாயக்கன்பாளையம், டீச்சர்ஸ் காலனியில், ஒரு குட்டியுடன், நான்கு குரங்குகள், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி, சுற்றி வந்தன. ஆட்கள் இல்லாத வீடுகளின், ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, உணவுப் பண்டங்களை எடுத்து, தின்று சேதப்படுத்தின.

துரத்த வரும், பொதுமக்களை குரங்குகள் கடிக்க பாய்ந்ததால், பொதுமக்கள் ஓடினர். சில நாட்களுக்கு முன், ஒரு வழியாக, இந்த நான்கு குரங்குகளையும், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து துரத்தினர். இக்குரங்குகள், இடிகரையில் இருந்து, துடியலூர் செல்லும் வழியில் உள்ள, செங்காளிபாளையம் கிராமத்துக்குள் நுழைந்தன. இங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து, உணவு பண்டங்களை சேதப்படுத்தின. இது குறித்து, பொதுமக்கள், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கூண்டு, கைவசம் இல்லாததால், குரங்கை பிடிக்க தாமதம் ஏற்பட்டது. அருகில் உள்ள காட்டுப்பகுதியில், சுற்றித் திரிந்த குரங்குகள், நேற்று முன்தினம் மாலை, மீண்டும் செங்காளிபாளையம் கிராமத்துக்குள், புகுந்தன. அங்கு, விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த், 4, என்ற சிறுவனின் காலை கடித்து விட்டு, தப்பியோடியது. குரங்குகளின் அட்டாகாசம் அதிகரித்ததால், பொதுமக்கள் குரங்கை பிடிக்க, முடிவு செய்தனர். தனியாக சிக்கிய ஒரு குரங்கை, கூடையால் மூடி, பிடித்தனர். பின், அதை, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். செங்காளிபாளையத்தில் சுற்றி வரும் மேலும் மூன்று குரங்களை பிடிக்கும் முயற்சியில், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tuesday, March 20, 2012

ஈரோடு அருகே தண்ணீர் தேடி வந்த மான் நீரில் மூழ்கி பலி


http://tamil.oneindia.in/news/2012/03/21/tamilnadu-thirsty-deer-gets-drowned-a-well-aid0128.html
புதன்கிழமை, மார்ச் 21, 2012, 7:53 [IST]

ஈரோடு: ஈரோடு அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது சேர்வராயன் என்னும் கிராமம். அந்தியூர் வனப்பகுதியில் இருந்து 5 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் அந்த கிராமத்திற்கு தண்ணீர் தேடி வந்தது. அது அங்குள்ள முருகன் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த அந்த கிரமாத்து இளைஞர்கள் சிலர் மானைக் காப்பாற்ற கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். ஆனால் அதற்குள் அது நீரில் மூழ்கி இறந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஈரோடு மாவட்ட வன அதிகாரி ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மானின் உடலை கைப்பற்றினார். பின்னர் அந்த இடத்திலேயே அதை கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். 

அழகான புள்ளிமான் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Thursday, March 15, 2012

Dog shelter proposal fails to find favour with animal rights activists


TNN | Mar 15, 2012, 04.34AM IST
http://timesofindia.indiatimes.com/city/chennai/Dog-shelter-proposal-fails-to-find-favour-with-animal-rights-activists/articleshow/12270459.cms

CHENNAI: The Corporation of Chennai's proposal to set up a shelter to take stray dogs off the streets has drawn criticism from animal welfare activists as it is against the Animal Birth Control (Dogs) Rules of 2001. "Stray dogs have to be sterilised and released in the same area according to the Animal Birth Control (ABC) rules, drawn up under the Prevention of Cruelty to Animals Act, 1960," said Chinny Krishna, vice chairman, Animal Welfare Board of India. 

"So they cannot be removed from the street and put in shelters." But officials say a shelter is the best way to curb the stray dog population. "We plan to set up a shelter that will house a minimum of 2,000 dogs. The aim is to remove stray dogs from streets and give them a home," said corporation commissioner P W C Davidar. "We have just made the announcement. The next step is to plan the shelter and identify the location."

Funds have not yet been allocated for the project, but it will not be capital intensive, he said. However, animal welfare activists said that setting up a shelter will not curb the stray dog population. According to official estimates, there are about 30,000 stray dogs within the old corporation limits. The number of stray dogs in any area is directly proportional to the availability of food, said Sathya Radhakrishnan, honorary joint secretary of Blue Cross. 

"If you remove dogs from one area, other dogs will come in," he said, adding that the only solution is strengthening the ABC programme. Such shelters have not been a success in other countries. "Similar projects have been tried out unsuccessfully in Taiwan, the US and many parts of eastern Europe," said Krishna. Shelters cannot house large numbers of dogs. "If the animals are kept in single kennels, they become unfriendly to human beings," he said. 

"If more than 15 or 20 dogs are kept together in open areas, they begin to display pack behaviour and attack each other." However, corporation officials say they have a viable plan. "We will put the animals in separate pens in numbers that are easy to handle," said Davidar, adding that they plan to implement the proposal before the next budget. "We have received positive feedback for our proposal from people living in areas that face stray dog menace." Animal activists do feel the shelter would be useful for pets that are abandoned. "The owners can instead leave them at the shelter," said Krishna. "The shelter can also rescue pups from streets and re-home them."