Pages

Wednesday, October 27, 2010

முதுமலை புலிகள் காப்பகத்தில் பட்டாசு வெடிக்க தடை

ஊட்டி: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜிவ் ஸ்ரீவத்சவ் கூறியதாவது: இம்முறை தீபாவளியை ஒட்டி 3 நாள் விடுமுறை வருகிறது. சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காணவும், யானை சவாரி செய்யவும் இங்கு அதிகளவில் வருவர். சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வாகனங்களை நிறுத்தி பட்டாசு வெடித்து வன விலங்குகளை தொந்தரவோ அல்லது அச்சுறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.