Pages

Monday, October 18, 2010

உயிருக்கு போராடிய மான் மீட்பு

ஆதம்பாக்கம் அருகே சாலையில் உயிருக்கு போராடிய மான் மீட்பு

ஆலந்தூர், அக்.19-
http://dailythanthi.com/article.asp?NewsID=601428&disdate=10/19/2010&advt=2

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள கக்கன் நகர் பாலம் அருகே நேற்று காலை 8 மணிக்கு சாலையில் ஒரு மான் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கிண்டி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். கிண்டி வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில் ஊழியர்கள் சென்று அந்த மானை மீட்டு முதலுதவி அளித்து புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.
இது பற்றி வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், ``வாகனத்தில் அடிபட்டு காயம் அடைந்த மானுக்கு 5 வயது இருக்கும். மானை அடிப்பது, கொல்வது சட்டப்படி குற்றமாகும்'' என்றார்.