Pages

Tuesday, October 5, 2010

2 மரநாய்கள் உயிருடன் மீட்பு

பாவூர்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 மரநாய்கள் உயிருடன் மீட்பு

பாவூர்சத்திரம், அக்.5-
http://dailythanthi.com/article.asp?NewsID=598417&disdate=10/5/2010&advt=2

கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்த 2 மர நாய்களை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

மரநாய்கள்

பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி சமுத்திரபுரம் தெரு பகுதியில் ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றில் நேற்று காலை 2 மரநாய்கள் தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தன.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, சுரண்டை தீயணைப்பு நிலையத்துக்கும்,கடையநல்லூர் வனசரகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அந்த நாய்கள் வீரர்கள் பிடியில் சிக்காமல் அங்குமிங்கும் நீந்தின.

மீட்பு

சற்று நேரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முருகன் என்பவர் கிணற்றில் தைரியமாக இறங்கி, மரநாயின் வாலைப்பிடித்து கயிறு மூலம் மேலே தூக்கி வந்து சேர்த்தார். இதையடுத்து தீயணைப்பு படையினர் அந்த 2 மரநாய்களையும், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.