Pages

Wednesday, February 1, 2012

வால்பாறையில் சிக்கியது சிறுத்தை


பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2012,07:12 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=397937

வால்பாறை: வால்பாறை பகுதியி்ல மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை ஒன்று வனத்துறையினர் வைத்திருந்த கூண்டிற்குள் சிக்கியது. வால்பாறை டவுன் பகுதியி்ல் கடந்த சில தினங்களாக ஆடு, கோழி போன்றவற்றை சிறுத்தை அடித்து கொன்று தின்று வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இதனையடுத்து சிறுத்தைய‌ை பிடிப்பதற்காக வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூண்டிற்குள் வைக்கப்பட்டிருந்த உணவை தேடி வந்த சிறுத்தை சிக்கியது. இதனால் இப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.