Pages

Monday, September 20, 2010

கிளியை தின்ன வந்தது கூண்டில் சிக்கிக் கொண்டது

பதிவு செய்த நாள் 9/21/2010 12:11:54 AM
http://dinakaran.com/chennaidetail.aspx?id=15877&id1=9

சென்னை : கிளிக் கூண்டில் புகுந்த நல்லபாம்பு கிளியை தின்றுவிட்டு, வெளியே வர முடியாமல் கூண்டில் சிக்கியது. கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் வீட்டு முன்பு சிறிய கூண்டுகளில் லவ் பேர்ட்ஸ், கிளி மற்றும் பறவைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அங்கிருந்த கூண்டுக்குள் நல்லபாம்பு புகுந்தது. அது, கூண்டில் இருந்த 2 கிளிகளை தின்றுவிட்டது. இதனால் வயிறு பெருத்து, வெளியே வரமுடியாமல் கூண்டுக்குள் சிக்கியது பாம்பு. இதை கண்ட மற்ற பறவைகள் கூச்சலிட்டன.

இதுபற்றி வீட்டு உரிமையாளர், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அதிகாரி முருகேசன் தலைமையில் வீரர்கள் வந்து, நல்லபாம்பை பிடித்தனர். அந்த பாம்பு 4 அடி நீளம் இருந்தது. பிறகு, வனத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் ஏடூர் காட்டில் பாம்பு விடப்பட்டது.