Pages

Monday, September 20, 2010

ஆறு குட்டி ஈன்ற அதிசய ஆடு

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2010,22:37 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88934


 
கருமத்தம்பட்டி: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே, வெள்ளாடு ஆறு குட்டிகளை ஒரே பிரசவத்தில் ஈன்று ஆச்சரியப்படுத்தியது. கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் தட்டாம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். தனது வீட்டில் சில வெள்ளாடுகளையும், பசு மாடும் வளர்த்து வருகிறார். இவரிடமுள்ள ஒரு வெள்ளாடு, ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளை ஈன்றது. இந்த ஆட்டுக்கு இது தான் முதல் பிரசவம். பொதுவாக ஆடுகள் ஒரு பிரசவத்தில் இரண்டு குட்டிகள் ஈனும். அதிசயமாக, ஒரு சில ஆடுகள் மூன்று குட்டி வரை ஈன்றுள்ளன. ஆனால், முதல் பிரசவத்திலேயே ஆறு குட்டிகளை ஈன்ற இந்த ஆட்டையும், அதன் குட்டிகளையும் அப்பகுதியினர் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.