Pages

Sunday, September 26, 2010

உயர்ரக நாய்களின் கண்காட்சி

திருவனந்தபுரத்தில் அனைத்து இந்திய உயர்ரக நாய்களின் கண்காட்சி
நகர மேயர் ஜெயன்பாபு தொடங்கி வைத்தார்

திருவனந்தபுரம், செப்.27-
http://dailythanthi.com/article.asp?NewsID=596701&disdate=9/27/2010&advt=2

வீட்டில் வளர்க்கப்படும் உயர்ரக நாய்களின் கண்காட்சி நேற்று திரு வனந்தபுரத்தில் நடந்தது. இதில் 200 வகையான உயர்தர நாய் கள் கலந்து கொண்டன.

நாய் கண்காட்சி

திருவனந்தபுரம் நாய் வளர்ப்போர் சங்கம் சார்பில், 23-வது அனைத்து இந்திய உயர் ரக நாய்களின் கண்காட்சி, நேற்று திருவனந்தபுரம் சந்திர சேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நகர மேயர் ஜெயன்பாபு இதில் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

டி.பி. சென்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டார். சங்கத் தலைவர் ஜோஸ் சாலக்குடி தலைமையில் நடைபெற்ற இந்த கண் காட்சியில் இந்திய நாய் வளர்ப்போர் சங்க நிர்வாகி வி.வி. சுப்பிரமணியன், திரு வனந்தபுரம் நாய் வளர்ப்போர் சங்க செயலாளர் ரமேஷ் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

200 நாய்கள்

கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட உயர் தர விதவித மான அழகான நாய்கள் இடம்பெற்றன. மாலையில் நடைபெற்ற கண்காட்சி நிறைவு விழாவில் சிறந்த நாய்களை தேர்வு செய்து கேடயம் வழங்கப்பட்டது.