Pages

Wednesday, January 12, 2011

இறைச்சிக் கூடங்கள் மூடப்படு

திருவள்ளுவர் தினம்: 16-ந் தேதி இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜன.13-
http://dailythanthi.com/article.asp?NewsID=620387&disdate=1/13/2011&advt=2

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் மூடப்படுகின்றன.

இதேபோல், ஆடு, மாடு மற்றும் இறைச்சி விற்பவர்கள் அவர்களது கடைகளை அரசு உத்தரவின்படி,அன்றைய தினம் கண்டிப்பாக மூடவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.