Pages

Monday, January 30, 2012

ஜல்லிக்கட்டு: ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல்


பதிவு செய்த நாள் : ஜனவரி 30,2012,13:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=395949

மதுரை: ஜல்லிக்கட்டு நடத்தியது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விலங்குகள் நல வாரியம் சார்பில் வினோத் குமார் என்பவர், காளைகளை காட்சிபொருளாக வைக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரி ராஜசேகரன் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி வழங்கியதுடன், ஜல்லிக்கட்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வசதியாக வழக்கை வரும் பிப்ரவரி 23ம் தேதி வரை ஒத்திவைத்து நீதிபதிகள் சித்ரா லட்சுமணன், கருப்பையா கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது