Pages

Friday, January 6, 2012

ஆண் யானை பலி : தந்தங்கள் மீட்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=380797
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2012,00:19 IST

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அத்தாணி வனச்சரகத்தில், வரக்கோம்பை வனப்பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. அத்தாணி பாரஸ்டர் ராமலிங்கம் தலைமையில், நேற்று வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். வனத்துக்குள் துர்நாற்றம் வீசியது. அங்கு, ஆண் யானை இறந்து கிடந்தது. அந்தியூர் கால்நடை மருத்துவர் அர்ஜூனன், யானையை பிரேத பரிசோதனை செய்தார். வயது மூப்பின் காரணமாக யானை இறந்தது தெரியவந்தது. யானையிலிருந்து எடுக்கப்பட்ட, தலா ஐந்தடி நீளமுள்ள இரண்டு தந்தங்களை, வனத்துறையினர் மீட்டனர். கடந்த ஆறு மாதத்தில், பத்துக்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது