Pages

Sunday, January 22, 2012

மான் வேட்டை 2 பேர் அதிரடி கைது மான் வேட்டை 2 பேர் அதிரடி கைது


பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2012,02:16 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=388703

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மான் வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி வன பகுதியில் வனச்சரகர் ஜெயரான், காப்பாளர்கள் ஏழுமலை, கோவிந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் மான் வேட்டையாடிய கட்டமடுவு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (34), பாண்டியன் (25), ஆகியோரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து வேட்டையாடிய மான், முயல், காட்டுப்பூனை ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரு நாட்டு துப்பாக்கிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.