Pages

Tuesday, December 6, 2011

எல்லை தாண்டியதாக இந்திய குரங்கு பாகிஸ்தானில் சிறைபிடிப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=362933
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2011,00:29 IST

இஸ்லாமாபாத்: தெரிந்தோ தெரியாமலோ இந்திய எல்லையை தாண்டி சென்ற குரங்கு, பாகிஸ்தான் வனத்துறையிடம் சிக்கியது. அது உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். தற்போது அக்குரங்கு பாகல்பூர் மிருக காட்சி சாலையில் அடைக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லை பகுதியிலிருந்து எல்லை தாண்டிய குரங்கு, பாகிஸ்தான் மாநிலம் பாகல்பூர் பகுதிக்கு தாவியோடி விட்டது. அதை, அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து, பிடிக்க பல முறை முயன்றும், அவர்களுக்கு "பெப்பே' காட்டி விட்டு, மரம் விட்டு மரம் தாவியது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து, குரங்கை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, குரங்கு வனத்துறையினரின் கண்களில் தென்பட்டது. அதை பிடிக்க வனத்துறையினர் நீண்ட போராட்டம் நடத்தி, ஒருவழியாக பிடித்தனர். உடனடியாக அதை அங்குள்ள மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டது. அதற்கு அங்குள்ள அதிகாரிகள் "பாபி' என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். அக்குரங்கு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்தாண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறாவை உளவு பார்க்க வந்த தூதர் என, இந்திய அதிகாரிகள் பிடித்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.