Pages

Saturday, December 3, 2011

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு


சனிக்கிழமை, டிசம்பர் 3, 2011, 14:44
http://tamil.oneindia.in/news/2011/12/03/tamilnadu-petition-given-cancel-the-ban-the-jallikattu-aid0176.html

மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பேராசிரியர் அம்பலத்தரசு தலைமையிலான பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிகட்டு விழா குழுவினர் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு காளைகளுடன் வந்து மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பல ஆண்டுகளாக தெடார்ந்து நடந்து வருகின்றது. இதனை தடை செய்ய கோரி விலங்குகள் நலவாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சில நிபந்தனைகளுடன் விளையாட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையேற்று ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்து வருகின்றது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யும்படி, நடிகை ஹேமமாலினி மத்திய அரசிடம் கோரி விடுத்தார். அதனை தொடர்ந்து மத்திய சுற்று சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விலங்குகள் நலவாரிய சட்டத்தை விரிவுபடுத்தி, ஜல்லிக்கட்டு காளையை காட்சிப் பொருளாக வேடிக்கை காட்டக் கூடாது என்று தடை உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு எடுக்கும் போது எம்.பி.க்களையோ, எங்களை போன்ற குழுவினரிடமோ எந்த கருத்தும் கேட்கவில்லை. தன்னிச்சையாக விளையாட்டுக்கு தடை விதித்துள்ளார். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். எனவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.