Pages

Saturday, December 17, 2011

கவுண்டம்பாளையத்தில் காகங்களிடம் சிக்கிய ஆந்தை


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=367715
பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2011,23:20 IST

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையத்தில் காகங்களிடம் சிக்கிய ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் சரவணா நகர் அருகே அத்வானி நகரில் உள்ள மரத்தில் இருந்த ஆந்தையை அப்பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட காகங்கள் துரத்தின. இதில், காயமடைந்த ஆந்தையை அப்பகுதியில் வசிக்கும் செந்தில்
குமார் மற்றும் லெவன் ஸ்டார் கிரிக்கட் குழுவை சேர்ந்த இளைஞர்கள் காப்பாற்றினர். ஆந்தையை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதல் உதவி அளிக்கப்பட்டு, தற்காலிகமாக கூண்டில் அடைக்கப்பட்ட ஆந்தை அடர்ந்த காட்டுக்குள் விடப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.