Pages

Saturday, December 10, 2011

சிறை வளாகத்தில் நாய்கள் சுட்டுக்கொலை : மர்ம நபர்களின் கைவரிசையால் பரபரப்பு


http://www.dinamalar.com//News_Detail.asp?Id=357101&
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2011,21:52 IST

புழல் : மத்திய சிறை அருகே, துப்பாக்கியால் நாய்களை சுட்டுக் கொன்று, உடல்களை வீசியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்களின் கைவரிசையால், சிறை பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை, புழல் மத்திய சிறையை ஒட்டி சிறை ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், நேற்று அதிகாலை 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டன. இது பற்றி வேளச்சேரி, "புளூ கிராஸ் அமைப்பு பொது மேலாளர் டான் வில்லியத்திற்கு தகவல் கிடைத்தது. அமைப்பைச் சேர்ந்தவர்கள், போலீசில் புகார் செய்தனர். புழல் போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நாய்களின் உடல்களைக் கண்டுபிடித்தனர்.
நன்கு கொழுத்திருந்த நாய்களை, நேற்று அதிகாலை சிலர் விரட்டி சுட்டதாக, அங்கிருந்தவர்கள் மற்றும் போலீசார், "புளூ கிராஸ்' அமைப்பினரிடம் தெரிவித்தனர். 50க்கும் மேற்பட்ட நாய்கள் சுடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிறை வளாகக் குடியிருப்புகள், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில், 8 ஆண் மற்றும் 5 பெண் உட்பட, 13 நாய்களின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. மற்ற நாய்களின் உடல்களைத் தேடும் பணி நடக்கிறது. அவை பழலேரியில் வீசப்பட்டதா என்று, போலீசார் விசாரிக்கின்றனர்.
மீட்கப்பட்ட நாய்களின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பலத்த மழையின் போது, நாய்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. நாய்களை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்தும், விசாரணை நடக்கிறது. சிறை வளாகத்தில் நடந்துள்ள இது போன்ற சம்பவத்தால், மத்திய சிறையின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.