Pages

Sunday, April 24, 2011

கழிவுநீர் குழாயில் சிக்கிய பூனைக் குட்டி மீட்பு


விமான நிலைய கழிவுநீர் குழாயில் சிக்கிய பூனைக் குட்டி மீட்பு
http://dailythanthi.com/article.asp?NewsID=642239&disdate=4/24/2011&advt=2

ஆலந்தூர், ஏப்.24-

சென்னை மீனம்பாக்கம் காமராஜர் உள்நாட்டு முனையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள கடைகளின் கழிவுநீர் செல்ல குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் பகுதியில் இருந்து கீச் கீச் என்று சத்தம் வந்து கொண்டு இருந்தது.

இதை கவனித்த விமான நிலைய ஊழியர்கள் எலியாக இருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சத்தம் வந்ததால் விமான நிலைய போலீசாரும், விமான நிலைய ஊழியர்களும் குழாயின் நடுப்பகுதியை உடைத்து பார்த்தனர்.

அப்போது பிறந்து சில நாட்களேயான பூனைக் குட்டி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனே அந்த பூனைக்குட்டியை மீட்டு குடிப்பதற்கு பாலை ஊற்றினர். உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் அந்த பூனைக்குட்டி பாலை குடித்து விட்டு ஓடியது.