Pages

Tuesday, July 17, 2012

முயல் வேட்டையாடிய 12 பேருக்கு அபராதம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494595
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2012,02:35 IST

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அருகே முயல் வேட்டையாடிய 12 பேர் பிடிபட்டனர்.

ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள நரிப்பொத்தை மலைப்பகுதியில் வெளியூரில் உள்ள நபர்கள் சிலர் தொடர்ந்து முயல் வேட்டையாடுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் ஸ்ரீவத்சவா மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராஜேஷ் வஜீஸ், கவுதம்டே ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் ஆனந்தகுமார், வனவர் சிவக்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் ரத்னவேல், ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர்கள் முத்துக்குமார், வேல்சாமி, சத்தியமுருகன், ரமேஷ்பாபு, வனக்காப்பாளர் பரமசிவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு முயல் வேட்டையாடிக் கொண்டிருந்த மதுரை அருகேயுள்ள தாழ்வார்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி, சின்னமன்னன், செல்வம், கருப்பண்ணன், ராஜேந்திரன் உட்பட 11 பேர் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த வாகைக்குளம் சைலப்பன் ஆகிய 12 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களிடம் இருந்து முயல்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 440 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.