Pages

Wednesday, June 29, 2011

காணாமல் போன பிரான்ஸ் நாட்டு நாயை தேடும் தம்பதியர்

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2011,23:59 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=266832

புதுச்சேரி:காணாமல் போன வளர்ப்பு நாயை, பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண், வீதி வீதியாக தேடி வருகிறார்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதியைச் சேர்ந்தவர் இருசப்பன், 50. இவரது மனைவி பஸ்தே பரிமளா, 47. பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இருவரும், பிரான்ஸ் நாட்டில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன், இருவரும் புதுச்சேரியில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்தனர்.பிராணிகள் மீது அதிக பற்று கொண்ட பரிமளா, பிரான்சிலிருந்து வரும் போது, வளர்ப்பு நாய் ஒன்றை உடன் அழைத்து வந்தார். இதற்காக, சென்னையில் உள்ள மத்திய வன விலங்கு மையத்தில் அனுமதியும் பெற்றுள்ளார். புதுச்சேரியில் உள்ள வீட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்த இந்த நாய், திடீரென கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போய் விட்டது.

இடது காலில் காயம்பட்ட நாயை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், காணாமல் போய் விட்டது. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.அந்த நாய் கழுத்தில் நெம்பர் பதித்த பெல்ட் இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நாயை தேடியும் கிடைக்கவில்லை. நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என, (நாயின் படம் பதித்த) பிரசுரங்களை அச்சிட்டு, வீடு வீடாக கொடுத்து, தேடி வருகின்றனர்