Pages

Tuesday, June 28, 2011

பூனைக்கு பால் கொடுக்கும் நாயின் தாய்ப் பாசம்


பூனைக்கு பால் கொடுக்கும் நாயின் தாய்ப் பாசம் கிராம மக்களை வியப்பில் ஆழ்த்திய பாசப் பிணைப்பு

அந்திïர், ஜுன். 29-
http://dailythanthi.com/article.asp?NewsID=656419&disdate=6/29/2011&advt=2

அந்திïர் அருகே பூனைக்கு பால் கொடுக்கும் நாயின் தாய்பாசத்தை பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கிறார்கள்.

நாயும்- பூனையும் நண்பர்கள்

ஈரோடு மாவட்டம் அந்திïர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். பழனியம்மாள் தன்னுடைய டீக்கடையில் ஒரு நாய் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஒரு பூனைக்குட்டியையும் எடுத்து வந்து வளர்த்தார்.

இயற்கையாகவே பூனையும், நாயும் எதிரிகள். ஆனால் இதற்கு மாறாக டீக்கடையை சுற்றிவந்த பூனைக்குட்டி நாயுடன் நெருக்கமாக பழகத்தொடங்கியது. நாயும் நட்புடன் பழகத்தொடங்கியது. அதன்பின்னர் நாயும், பூனையும் அடிக்கடி டீக்கடையில் விளையாடத்தொடங்கின. டீக்கடை வாசலிலும், அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் நாயும், பூனையும் எப்போது ஒன்றாக விளையாடியபடி இருக்கும்.

பூனைக்கு பால் கொடுக்கிறது

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நாய் 5 குட்டிகள் போட்டது. நாய்க்குட்டிகள் தாயிடம் பால் குடிப்பதை பார்த்த பூனைக்குட்டி தானும் நாயிடம் சென்று பால் குடித்தது. நாயும் பூனையை விரட்டாமல் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுப்பது போலவே பூனைக்கும் பால் கொடுத்தது.

பூனைக்கு, நாய் தாய்மை உணர்வுடன் பால் கொடுப்பதை அந்தப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்க்கிறார்கள். சிலர் அந்த காட்சியை தங்களுடைய செல்போனிலும் படம் பிடித்து செல்கிறார்கள். பூனை மீது நாய் காட்டும் தாய்ப்பாசத்தை கண்டு கிராமத்து மக்கள் வியப்போடு பார்த்து செல்கின்றனர்.