Pages

Saturday, July 2, 2011

மதுரையில் ஆட்டு இறைச்சி கிடைக்காது

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2011,02:06 ISThttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=268156

மதுரை : "கோரிக்கை நிறைவேறும் வரை, கடையடைப்பு தொடரும்,' என, ஆட்டு இறைச்சி வியாபாரிகள் அறிவித்துள்ளதால், மதுரையில் சில நாட்களுக்கு மட்டன் கிடைக்காது. கோர்ட் உத்தரவுப்படி, மதுரை நெல்பேட்டை ஆடுவதை கூடத்தை, ஜூன் 24ல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுப்பானடி நவீன ஆடுவதை கூடத்தை பயன்படுத்த, இறைச்சி வியாபாரிகளை அறிவுறுத்தினர். "ஷாக்' கொடுத்து ஆடு வதை செய்வதற்கு, சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜூன் 25 முதல், இறைச்சி வியாபாரிகள், கடையடைப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மதுரை மாநகர் ஆட்டு இறைச்சி சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் 1500 கடைகளும் நேற்று போராட்டத்தில் பங்கேற்றன. புறநகர் இறைச்சி கடைகள், இன்று முதல் கடையடைப்பில் பங்கேற்கின்றன. மதுரையில் நாள் ஒன்றுக்கு 2000 ஆடுகள் வதை செய்யப்படுகின்றன. ஞாயிறு அன்று 3000 ஆக உயரும். கடையடைப்பு காரணமாக, விடுமுறை தினமான இன்றும், நாளையும் ஆட்டு இறைச்சி கிடைக்காது.