Pages

Friday, October 5, 2012

குரங்குகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?.. ஜெ. தலைமையில் ஆலோசனை!


குரங்குகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?.. ஜெ. தலைமையில் ஆலோசனை!

Updated: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2012, 19:06 [IST]
http://tamil.oneindia.in/news/2012/10/05/tamilnadu-cm-chairs-meeting-on-controlling-the-stray-dogs-162681.html


சென்னை: அதிகரித்து வரும் குரங்குகள், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்ட்ம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் பச்சைமால், தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி, சுற்றுச்சூழல, வனத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தெருவில்திரியும் நாய்கள் மற்றும் குரங்குகளை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா.