Pages

Monday, November 28, 2011

சரணாலயத்தை விட்டு இடம் பெயரும் வெளிநாட்டு பறவைகள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=356491
பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2011,21:23 IST
 
ராமநாதபுரம் : சரணாலயங்களில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், அடைக்கலம் தேடி வந்த வெளிநாட்டு பறவைகள், வெளி இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேல செல்வனூர், கீழ செல்வனூர், தேர்த்தங்கால் ஆகிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயங்கள் கண்மாயை அடிப்படையாக கொண்டு அமைந்தவை. ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் சைபீரியா மற்றும் கடுங்குளிர் பிரதேசங்களிலிருந்து, பிளமிங்கோ, உள்ளான் வகை பறவைகள், உள்பட ஏராளமான வெளிநாட்டு மற்றும் வடநாட்டு பறவைகள் வருகின்றன. நவம்பர், டிசம்பரில் வரும் பறவைகள், ஜூன், ஜூலை வரை தங்கியிருந்து, இரண்டு முதல் மூன்று முறை வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

இந்த கண்மாய்கள் தூர்வாரப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 100 செ.மீ.,க்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 30 முதல் 40 செ.மீ.,க்குள்தான் மழை பெய்துள்ளது. கடந்தாண்டு மாவட்டம் முழுவதும் அக்டோபர் வரை 1180 மி.மீ. மழை பெய்திருந்தது. இந்தாண்டு அக்டோபர் வரை 461.71 மி.மீ., மற்றும் அக்டோபரில் 265.32 மி.மீ., மழை பெய்தது. இதனால் கண்மாய்களில் சிறு குட்டை போன்ற அளவில்தான் தண்ணீர் உள்ளது. இங்கு கூடு கட்டாமல் ராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம், உச்சிப்புளி போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. சில பறவைகள் வெளிநாடுகளுக்கு திரும்பி செல்கின்றன.