Pages

Monday, November 7, 2011

பக்ரீத் அன்று பசுக்களை கொல்லாதீங்க: துணைவேந்தர் நவ்மானி வேண்டுகோள்


பதிவு செய்த நாள் : நவம்பர் 06,2011,21:47 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=344535

தியோபந்த்:""இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகைக்காக, பசுக்களை கொல்வதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்,'' என, தாரூல் உலூம் தியோபந்த் பல்கலைக்கழக துணை வேந்தர் மவுலானா அபு காசிம் நவ்மானி கூறியுள்ளார்.

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நவ்மானி கூறியதாவது: இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பக்ரீத் பண்டிகைக்காக முஸ்லிம்கள் பசுக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும். பண்டிகையின் போது, சுகாதாரத்தை பேணி காக்க சுகாதாரத் துறையினருக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பிறந்த நாள் கொண்டாடுவது மேற்கத்திய கலாசாரம் என்பதால், அதை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். பிறந்த நாள் கொண்டாடுவது ஷரிஅத் சட்டத்திற்கு எதிரானது.இவ்வாறு அபு காசிம் நவ்மானி கூறினார்.