Pages

Wednesday, March 2, 2011

பிடிபட்ட சிறுத்தை பலி


பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2011,22:40 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=196962

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிதர்காடு சந்தக்குன்னு பகுதியை சேர்ந்த நிஷாத் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் சிறுத்தை புகுந்தது. இது குறித்து பிதர்காடு வனச்சரகர் நாகலிங்கம், புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ்ஸ்ரீவத்சவா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் கலைவாணன் சம்பவ இடத்துக்கு வந்த மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மயக்கமடைய செய்தார். பின்னர் தெப்பக்காடு பகுதிக்கு சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு காயமடைந்த சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுத்தை நேற்று காலை உயிரிழந்தது.