Pages

Tuesday, April 3, 2012

யானைகளை புரிந்து கொள்ள வேண்டும்!!


பதிவு செய்த நாள் : மார்ச் 28,2012,00:00 IST
http://www.dinamalar.com/districtevent_detail.asp?news_id=436569

யானை - மனித இன மோதலுக்கு, எல்லையோர மக்களிடம் உள்ள, அறியாமையே முக்கிய காரணம்; மனித இனம், யானைகளை புரிந்து கொள்ளும் வரை, எதை கொண்டு விரட்டினாலும், வீண்தான், " என, கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிகுமார் பேசினார்.

உலக வன நாளை முன்னிட்டு கோவை ஓசை சுற்றுச்சூழல் அடமப்பு சார்பில் சிறப்புச் சூழல் சந்திப்பு, தமிழ்நாடு ஓட்டல் அரங்கில் நடந்தது. மேற்கு வங்கத்தில் வன அதிகாரியாக பணியாற்றியவரும், தமிழகத்தைச் சேர்ந்த, அயற்பணியில், கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பணியாற்றியவரும், தமிழகத்தைச் சேர்ந்த, அயற்பணியில் கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக பணியாற்றுபவருமான சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.