Pages

Saturday, October 8, 2011

மாடுகளுடன் லாரிகள் பறிமுதல்


பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2011,21:31 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=326649

கோவை : அதிக மாடுகளை ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளை, இந்து முன்னணிக் கட்சியினர் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். நேற்று அன்னூரில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளை, கணபதி அருகே இந்து முன்னணி அமைப்பினர் மடக்கினர். லாரிகள் ஒவ்வொன்றிலும் சுமார் 35 அடிமாடுகள், கன்றுக் குட்டிகள் மற்றும் கறவை மாடுகள் நெருக்கமாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் தராமல் ஏற்றி வந்ததால் ஏற்பட்ட தாகம் காரணமாக சில கன்றுக் குட்டிகளுக்கு நாக்கு வெளியில் தள்ளியது. லாரிகளையும் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்து முன்னணியினர் ஓட்டிச் சென்றனர். அதிக லோடு ஏற்றிச் சென்றதற்காக, மூன்று லாரி உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.