Pages

Saturday, May 14, 2011

கோடை விழா முன்னிட்டுஊட்டியில் நாய் கண்காட்சி


பதிவு செய்த நாள் : மே 15,2011,02:52 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=241181

ஊட்டி:ஊட்டியில் நேற்று நடந்த நாய் கண்காட்சியில் பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.கோடை விழாவை முன்னிட்டு, ஊட்டியில் "சவுத் ஆப் இந்தியன் கென்னல் கிளப்' சார்பில் நாய் கண்காட்சி நேற்று முன்தினம் துவக்கப்பட்டது. ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில் துவங்கிய இந்த கண்காட்சியின் முதல் நாளில் கீழ்படிதல் போட்டிகள் நடத்தப்பட்டன.நேற்று நடந்த போட்டியில், ஜெர்மன் ஷெப்பெர்டு, பாக்சண்ட், டாபர் மென், மினியேச்சர் பின்சர், டால்மேஷன் உட்பட பலவேறு நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி நாளான இன்று, 400 நாய்கள் பங்குபெறும் அனைத்து ரக நாய்களுக்கான போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை "சவுத் ஆப் இந்தியன் கென்னல் கிளப்' மற்றும் இதனுடன் ஒருங்கிணைந்த சங்கங்கள் மேற்கொண்டுள்ளன. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளன.